20
Feb
எடப்பாடிக்கு எப்படி கிடைத்தது இந்த பவர்? ஓபிஎஸ்ஸின் டெல்லி சோர்ஸ் காலி - ஆட்டத்தின் போக்கு மாறிய புள்ளி! அதிமுக உட்கட்சி மோதலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த களேபரத்தில் ஓ.பன்னீர் செல்வம் மிகவும் அப்செட்டாகியுள்ளதாக கூறுகிறார்கள். ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வளவு விசேஷமாக இல்லை. தர்மயுத்தத்துக்குப் பிறகு ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைந்த போது துணை முதலமைச்சர் பதவியை மட்டுமே பெற முடிந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர் பதவி கிடைத்தாலும் அது உச்ச பதவியாக இல்லை, ஏனெனில் இணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலோடு தான் அவர் முடிவெடுக்க வேண்டியதாக இருந்தது. நான்கு ஆண்டு காலம் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து செயல்பட்டதாக காட்டிக் கொண்டாலும் உண்மையில் அப்படி இல்லை. எந்நேரமும் ஒரு விலக்கம் இருந்து கொண்டே இருந்தது. அப்போதே ஓபிஎஸ் தனித்து விடப்பட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகவே பெரும்பான்மையான அமைச்சர்கள் அப்போது இருந்தார்கள். கட்சியிலும் எடப்பாடியின்…
