19
Feb
சாத்தியமாகுமா அதிமுக - அமமுக இணைப்பு? எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இணைப்பு சாத்தியமாகுமா என்ற கேள்வி தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில், குறிப்பாக காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் (பிறமலைக் கள்ளர், மறவர், அகமுடையார்) வாக்கு வங்கி கடந்த பல தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகவே இருந்து வந்திருக்கிறது. திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 50 முதல் 60 தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகள் வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு அடர்த்தியாக உள்ளன. தமிழகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி யை வழிநடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1957-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 1.3 சதவீத வாக்குகளையும், 1984-ஆம் ஆண்டு…
