ஓபிஎஸ் vs இபிஎஸ் இதுல யார் பெஸ்ட். ஒரு கட்சிக்குள்ள இரண்டு தலைவர்கள்!
இரண்டுபேருமே ஒருத்தர ஒருத்தர் காலி பண்ணத் துடிக்கிறாங்க!
இரண்டுபேருக்குமே கட்சி மீதும் அக்கரையில்லை! ஆட்சி நிர்வாகத்திலும் அக்கரையில்லை!
இரண்டு பேருமே பாஜகவின் பாதந்தாங்கிகள்! இரண்டு பேருக்குமே தலைவனுக்குள்ள எந்தப் பண்பு நலனும்,தலைமை குணமும் அறவே இல்லாதவங்க.
இரண்டு பேருக்குமே சுய அடையாளம் கிடையாது!
இரண்டு பேருமே பொதுச் சொத்தை சூறையாடுறதுல மன்னர்கள்! இரண்டு பேருமே சுயநலத்தின் உச்சம்!
இருவருமே சசிகலா வந்தால் சரணாகதி அடையக் காத்திருப்பவங்க தான்!
ஆட்சி அதிகாரம் மட்டுமே இரண்டு பேரையும் இணைத்துள்ளது! அத்துடன் பாஜகவின் நிர்பந்தத்தால் மட்டுமே இவர்கள் இணைப்பு இறுக்கி பிடித்து காப்பாற்றப்பட்டு வருது! திமுகவை தடுக்க பாஜகவிற்கு கிடைத்த கருவி தான் அதிமுக!
பொதுமேடைகளில் பேசுறதுல ஓபிஎஸ் கொஞ்சம் பரவாயில்லை! சுயமாக பேச முடிந்தவர். எடப்பாடி எழுதி கொடுத்ததைக் கூட சரியாக படிக்க முடியாதவர்!
ஆனால்,ஆட்களை பணத்தால் வளைத்துப் போடுவதில் இபிஎஸ் கில்லாடி!ஆட்சி அதிகார பலத்தில் தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்துவதோடு ஓபிஎஸ்சை டம்மியாக்குவதில் குறியா இருக்காரு.
அந்த வகையில பன்னீர்செல்வத்தின் பல ஆதரவாளர்களைக் கூட தன்பக்கம் ஈர்த்துள்ளார்! அவ்வளவு ஏன்? திமுகவில் கூட தனக்கு சாதகமான ஆட்களை வைத்திருப்பவர் தான் எடப்பாடி!
கட்சி பொறுப்பில் ஓபிஎஸ் எடப்பாடியை விட ஒருபடி மேலாக உள்ளாருன்னாலும் கூட ஓபிஎஸ் தன்னிச்சையாக சிறிதளவு கூட செயல்படமுடியாதவாறு எடப்பாடி செக் வைச்சிட்டாரு.
கொட நாடு கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர் இபிஎஸ்! அதில் இவரை அழகாக உள்ளே தள்ளமுடியும்! அது பாஜக கைகளில் ஒரு துருப்பு சீட்டாகவச்சிருக்காங்க.அதிக சொத்து சேர்த்த விவகாரத்திலும் சம்மந்தப்பட்டவர் இபிஎஸ்!
இபிஎஸ்சுக்கு கொங்கு மண்டலத்தின் வசதிமிக்க கவுண்டர்கள் உறு துணையா இன்னமும் இருக்காங்க..அந்த லாபி மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கும் மேலாக தென்மாவட்ட முக்குலத்தோரையும் வளைத்துப் போட பார்க்கிறார்.
ஓபிஎஸ்சுக்கு அந்த அளவுக்கு லாபி செய்ய ஆளிருப்பதாகத் தெரியலை! ஆயினும் தென் மாவட்டங்களில் சற்று அதரவு உண்டு!முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்குண்டு! ஆனால்,சசிகலா வெளியில் வந்தால் என்னாகும்னு தெரியலை! இருவராலும் சசிகலாவை விரும்பவும் முடியவில்லை, தவிர்க்கவும் முடியவில்லை!
அதிமுகவின் தற்போதைய ஆட்சியில் இலவசத்திட்ட அறிவிப்புகளுக்கு மேலாக எந்த உருப்படியான மக்கள் நலன்,விவசாயிகள் நலன்,வியாபாரிகள் நலன்,தொழிலாளர் நலன்ங்கிற எதிலும் அக்கரை காட்டி தங்கள் ஆதரவை இவர்கள் வளர்த்துக் கொள்ளலை!
குறிப்பா மத்திய அரசு கொண்டு வந்த தீய நோக்கமுள்ள கல்விக் கொள்கையை எதிர்க்கலை! சுற்றுச்சூழல் மசோதாவை எதிர்க்கலை.தமிழகத்தின் மத்திய அரசு பணியிடங்களில் எல்லாம் வட நாட்டாரைக் கொண்டு வந்து நிரப்பியபோது எதிர்க்கலை.மத்திய அரசின் குடியுரிமை திருத்தமசோதாவை எதிர்க்கலை.சிறுபான்மை சமூகத்தவரை இரணாடாம் தரகுடிமக்களாக மாற்றும் கொடுமைகளையோ, மத தீவிரவாதத்தையோ கொஞ்சமும் எதிர்க்கலை.அதிமுகவை ஹெச்.ராஜாவோ,எஸ்வி.சேகரோ ஏளனமாக பேசுனப்போ கூட எதிர்க்கத் துணியலை.இதெல்லாம் சொந்த கட்சிகாரர்களிடமே இவர்களோட மரியாதை பறிபோக வைச்சிட்டது.
ஆட்சி அதிகாரமின்றி அதிமுகவை ஆறு மாதம் கூட இரண்டு பேராலும் கொண்டு போகவே முடியாது. ஆட்சி காலம் முடிந்ததும் ஒரு ஆறுமாதகாலம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடக்கும்ங்கிற நிலைமை வந்தால்,அதிமுகவிற்குள் என்ன நடக்கும் என யாராலும் யூகம் செய்ய முடியாது!
ஆக,அதிமுகவிற்கு அதை தாங்கி கொண்டு செலுத்தக் கூடிய வலிமையான ஒரு தலைவர் இல்லை! மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்த ஜெயலலிதா போல திறமை மிக்க தலைவர்கள் அதிமுகவில் இல்லை.அதாவது ஓட் கேப்ச்சரிங் பெர்சனாலிட்டி ஓபிஎஸ் கிட்டேயும் இபிஎஸ் கிட்டேயும் கிடையாது.இதையெல்லாத்தையும் விட வலுவான கூட்டணியும் இல்லை.மறைந்த தலைவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கூட தனித்து போட்டியிடலை.கூட்டணி வச்சுத்தான் போட்டியிட்டுருக்காங்க.பணத்தை வச்சு ஓட்டு வாங்கிறலாம்னு இ பிஎஸ் நினைக்கிறாரு.இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும்னு தெரியலை. வரப் போற பாராளுமன்றத்தேர்தல்ல தெரிஞ்சிரும். அதுவரை பொறுத்திருப்போம்.