அரசியல்

அதிமுகவைத் துரத்தும் பாஜக ?

அதிமுகவைத் துரத்தும் பாஜக ?

அதிமுகவைத் துரத்தும் பாஜக ? நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜக ஜெயிக்கணும்னா அதிமுகவுடன் கூட்டணி வச்சே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு பாஜக தள்ளப்பட்டிருக்குது. சசிகலாவை மையமாகக் கொண்டு அதிமுகவிற்குள் ஒரு புயல் உருவாகியிருக்குது இது எல்லாருக்கும் தெரியும். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமாக வாக்கு அறுவடை செய்யணும் அதற்கேற்ப பாஜக வியூகங்களை வகுத்து வருது.இதுவரை தோள் கொடுத்து வருகிற அதிமுகவுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்து பலமேற்ற பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுது. சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது, வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகத்தான் இருக்கும்ங்கிற கருத்து அதிமுகவுக்குள் இருக்குது.மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் மீதமிருக்கும் ஒருசில இடங்களிலும் தனது வெற்றிக் கொடியைப் பறக்கவிடணும்ங்கிற வெறியோட திட்டமிட்டு அதற்கேற்பக் காய் நகர்த்திவருது பாஜக. கோவா தொடங்கி கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் எம்.எல்.ஏ.க்களைக் கொள்முதல் செய்து அந்தக் கட்சி ஆட்சி பீடத்தில்…
Read More
இறையன்பு, சைலேந்திரபாபு திடீர் இடமாற்றமா?

இறையன்பு, சைலேந்திரபாபு திடீர் இடமாற்றமா?

இறையன்பு, சைலேந்திரபாபு திடீர் இடமாற்றமா?: பா.ஜ.க. போடும் அதிரடி ஸ்கெட்ச், பதறும் தி.மு.க..! தேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையில் யுத்தம் பட்டவர்த்தனமாக துவங்கிவிட்டது Ganesh Ramachandran Chennai, First Published Jan 31, 2022, 8:33 AM IST தேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையில் யுத்தம் பட்டவர்த்தனமாக துவங்கிவிட்டது. விளைவு, ஒருவருக்கு ஒருவர் எப்படியெல்லாம் செக் வைக்கலாம், என்னென்ன வகையில் அடிக்கலாம், திருப்பி அடிக்கலாம்! என்று முட்டி மோதிக் கொள்ள துவங்கியுள்ளனர். இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது தமிழகத்தை ஆளும் தி.மு.க. பெரியாரின் நாத்திக சித்தாந்தத்தை தாங்கி செயல்படுவதாக தன்னை முன்நிறுத்துகிறது. அதேவேளையில் இந்தியாவின் சிறுபான்மை மதத்தினராக சுட்டிக்காட்டப்படும் கிறுத்துவர் மற்றும் இஸ்லாமியர்களின் தமிழக காவலனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் பா.ஜ.க.வோ  தெய்வநம்பிக்கை, இந்து மத  தர்மம் ஆகியவற்றை அடிப்படையாக…
Read More
 அதிமுக பொதுச் செயலாளராகும் சசிகலா ?

 அதிமுக பொதுச் செயலாளராகும் சசிகலா ?

 அதிமுக பொதுச் செயலாளராகும் சசிகலா ? முடிவுக்கு வருகிறது ஒற்றை தலைமை..இபிஎஸ் விட்டுக் கொடுப்பாரா ? ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அன்று அவர் தலைமையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்த கட்சி, இன்று ஒற்றைத் தலைமைக்காக போராடி வருது.  ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகளின் குரல்கள் எப்படியிருக்கும் என்பது கூட பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டசபையில் அவர்கள் பேசும் போது குரல்களை கேட்பதோடு சரி! மற்ற நேரங்களில் எல்லாமே ஜெயலலிதாதான். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளராக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போக வேண்டியதாயிடுச்சி..  அதிமுகவில் தலைமையே இல்லை.. செல்லூர் ராஜூ சொன்ன மறுநாளே.. சசிகலா பேச்சை கவனிச்சீங்களா? இதையடுத்து அதிமுகவில் அடிமட்ட நிர்வாகிகள் வரை எல்லாரும் வீதிக்கு வந்து பேச ஆரம்பிச்சிட்டாங்க.. சசிகலா, தினகரன் கட்சிக்குள் வராமல் இருக்க…
Read More
ஜீரணிக்கவே முடியாது".. ஒரே போடு.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸிடம் கொதித்த டாப் தலைகள்.. வருகிறார் சசிகலா?! By Shyamsundar I Updated: Wednesday, February 23, 2022, 17:31 [IST] சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அன்று அவர் தலைமையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்த கட்சி, இன்று ஒற்றைத் தலைமைக்காக போராடி வருகிறது.  ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகளின் குரல்கள் எப்படியிருக்கும் என்பது கூட பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டசபையில் அவர்கள் பேசும் போது குரல்களை கேட்பதோடு சரி! மற்ற நேரங்களில் எல்லாமே ஜெயலலிதாதான்.  ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளராக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கினால் சிறை செல்ல நேரிட்டுவிட்டது.  அதிமுகவில் தலைமையே இல்லை.. செல்லூர் ராஜூ சொன்ன மறுநாளே.. சசிகலா பேச்சை கவனித்தீர்களா? ஓஹோ! அதிமுக இதையடுத்து அதிமுகவில்…
Read More
அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆண்மையில்லைன்னு நெல்லை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபைல சூடா பேசுனதுனால அதிமுக பாஜக கூட்டணி உடைஞ்சது இனிமே தான் பாஜகவுக்கு சிக்கலே..இருக்குது! தனித்து களமிறங்கியதன் பலனை அதிமுக அறுவடை செஞ்சிட்டோம்னு.. அக்கட்சி மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாங்களாம்.. ஆனால், வரப்போகும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேருமா? என்ற சந்தேகம் இப்போதே கிளம்ப ஆரம்பித்துவிட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜகவின் ஆதரவாளராகவே இருந்துகிட்டு வர்றாருங்கிறது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.. பாஜக மேலிடத்துக்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையானவரும்கூட என்பதும் தெரிந்த விஷயம்தான். பாஜக மேலிடத்தை ஓபிஎஸ் பகைத்து கொள்ளாத அதேசமயம், தான் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மேலிடத்துக்கு சில விஷயங்களில் வளைந்து கொடுக்காமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதும் அறிந்த விஷயம்தான். ஆனால், சமீபகாலமாக ஓபிஎஸ்ஸிடம் மாறுதல் காணப்படுகிறதோ இல்லையோ எடப்பாடியிடம் நிறையவே மாற்றம் காண முடியுது.. குறிப்பாக பாஜகவுடனான உறவில் நெருங்கியே இருக்கிறாரோ என்ற பிம்பத்தையும் ஏற்படுத்த…
Read More
சென்னை மேயர் பதவியை தட்டி தூக்கப்போவது யார்.?

சென்னை மேயர் பதவியை தட்டி தூக்கப்போவது யார்.?

சென்னை மேயர் யார்.? மல்லுக்கட்டும் மாசுவும் சேகர் பாபுவும் ! மேயர் பதவியைக் கைப்பற்றுறதில அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபுவுக்கிடையே கடுமையான போட்டி இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. ஆனா, வடசென்னையைச் சேர்ந்த ஒருத்தருக்கு மேயர் பதவியைப் வாங்கிறணும்ங்கிறதுல அமைச்சர் சேகர்பாபு உறுதியாக இருப்பதா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்குது. சென்னை மாநகராட்சி மேயர் பதவியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகிய ஆதரவாளர்களில் யாருக்கு மேயர் பதவி கிடைக்கும்ங்கிற எதிர்பார்ப்பு திமுகவில் ஏற்பட்டிருக்குது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிச்சாச்சு.. சென்னையைப் பொறுத்தவரை 200 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில, 101 வார்டுகளில் வெற்றி பெறும் கட்சி மேயர் பதவியைக் கைப்பற்றும். ஆளுங்கட்சியான திமுக, வெற்றி நிச்சயம்ங்கிற எண்ணத்தில் இருக்குது. அதையும் தாண்டி,  மேயர் பதவிய யாருக்கு குடுக்கணும்ங்கிற ஆலோசனைகள் அறிவாலயத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியாச்சு. 1996, 2001-இல் மு.க. ஸ்டாலின், 2006-இல் மா.சுப்பிரமணியன், 2011-இல் சைதை துரைசாமி என மத்திய சென்னை, தென் சென்னையைச் சேர்ந்தவர்களே…
Read More
கோவை மேயர் யார்? முட்டி மோதும் செந்தில் பாலாஜி ! வேலுமணி ! ஸ்டாலின் திட்டம் பலிக்குமா ? கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடக்குது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் இருக்குது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி மாநகராட்சியில் 50 வார்டுகள் பெண்களுக்கும், 50 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்தல்ல பெண்களுக்கு 30%இட ஒதுக்கீடு கேட்டும் இதுவரை கிடைக்கலை. ஆனா திமுக அரசு 50% இட ஒதுக்கீடு குடுத்திருக்கு. அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர்கள் எல்லாருமே உற்சாகத்தோட தங்கள் வார்டுகளில் பிரசாரம் செஞ்சிட்டு வர்றாங்க. இதில் கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில் 11, தெற்கு மண்டலத்தில் 4, வடக்கு மண்டலத்தில் 14, மத்திய மண்டலத்தில் 13 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுபிரிவிலும் பெண்கள் போட்டியிடுறாங்க. இதன்படி கோவை…
Read More
டெல்லி “சிக்னல்”.. வெலவெலக்கும் அதிமுக.. ரெடியாகும் சசிகலா..!

டெல்லி “சிக்னல்”.. வெலவெலக்கும் அதிமுக.. ரெடியாகும் சசிகலா..!

மேட்டரே வேறயாமே.. பறந்து வந்த டெல்லி "சிக்னல்".. வெலவெலக்கும் அதிமுக.. ரெடியாகும் சசிகலா..! By Hemavandhana Updated: Thursday, February 10, 2022, 14:33 [IST] சென்னை: சசிகலா செம தெம்பில் இருக்கிறாராம்.. சசிகலாவின் இந்த குஷியும், தெம்பும் அதிமுக மேலிடத்துக்கு கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறதாம். இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட் அதிரடிகளுக்கு எப்போதுமே பெயர் போனவர் சசிகலா.. ஆனால், சிறைக்கு போய் திரும்பி வந்ததில் இருந்தே வித்தியாசமான போக்கை கையாண்டு வருகிறார்.. எதிலும் பொறுமையை கையில் எடுத்துள்ளார்.. by TaboolaSponsored Links [New Batch Launch] M.Tech in Data Science SRM, Chennai முக்கியமாக, அதிமுக மேலிடத்தை அணுகாமல், மாறாக தொண்டர்களை அணுக தொடங்கினார்.. அமமுக நிர்வாகிகளைவிட, அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் கவனம் செலுத்தினார்.. பார்க்க வரட்டுமா அம்மா? நன்றி மறக்காத விஜயசாந்தி.. சசிகலா சொன்ன…
Read More

கோவை மேயர் பதவிஅடித்துக்கொள்ளும் 3 பேர்.. ?

கோவை மேயர் பதவி எனக்குதான்.. அடித்துக்கொள்ளும் 3 பேர்.. கோவை திமுக ரேஸில் முந்துவது யார் ? கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடக்கிறது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி மாநகராட்சியில் 50 வார்டுகள் பெண்களுக்கும், 50 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்கள் உற்சாகத்துடன் தங்கள் வார்டுகளில் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதில் கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில் 11, தெற்கு மண்டலத்தில் 4, வடக்கு மண்டலத்தில் 14, மத்திய மண்டலத்தில் 13 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுபிரிவிலும் பெண்கள் போட்டியிடுகின்றனர். இதன்படி கோவை கிழக்கு 63, மேற்கு 78, தெற்கு 43, வடக்கு 95, மத்திய மண்டலத்தில் 93 என மொத்தம் 372…
Read More
ஸ்டாலினின் நடவடிக்கைகளால் திமுகவை விட்டு விலகுது இஸ்லாமிய வாக்கு வங்கி?! ஏன்? எப்படி? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு வழக்கம்போல் முழுமையான ஆதரவினை இஸ்லாமியர்கள் வழங்குவார்களா? கர்நாடகாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ‘ஹிஜாப்’ விவகாரத்துக்கு எதிராக தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகள் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் பின் ‘தமிழகத்தை ஆள்வது தி.மு.க. அரசு. இது சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் அரசு. நாம் போராட்டம் நடத்த, அதை எதிர்த்து வேறு சிலர் குரல் கொடுக்க துவங்கினால் விவகாரம் வேறு மாதிரி போக துவங்கலாம். அது சட்டம் ஒழுங்குக்கு சிக்கல் தந்து அரசுக்கு சிரமம்  உருவாகிட கூடாது. அதனால் பொறுமை காப்போம்.’ என்று முடிவெடுத்து அமைதியாகி விட்டார்கள். இதுதான் இதுவேதான் தி.மு.க. மீது சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அதற்கு காரணம், கடந்த காலங்களில் அவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்காக குரல் கொடுத்த மிக…
Read More