அரசியல்

இந்தியா முழுவதும்: பி.கே. போடும் மாஸ்டர் ப்ளான்!

இந்தியா முழுவதும்: பி.கே. போடும் மாஸ்டர் ப்ளான்!

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார். மக்களவைத் தேர்தலிலும் இதுபோன்ற மெகா கூட்டணியை அமைக்க அவரால் முடியும் என்கிறார்கள்.  பிரஷாந்த் கிஷோரால் மட்டுமே அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும். இதுபோன்ற கூட்டணியை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. ஏராளமான பிரதமர் முகங்கள் இருக்கும் இந்திய அரசியல் களத்தில் முக்கியமான நபராக திகழ்பவர் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோர். அதேபோல், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களுக்காகவும் பணியாற்றி முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு காரணமாகவும் இருந்துள்ளார். அண்மையில் பாஜகவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அவர் அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். பாஜக மீதான…
Read More
அதிமுக- பாமக கூட்டணியில் சிக்கல் ..? கூட்டணி தொடருமா உள்ளாட்சித் தேர்தலில் ?

அதிமுக- பாமக கூட்டணியில் சிக்கல் ..? கூட்டணி தொடருமா உள்ளாட்சித் தேர்தலில் ?

அதிமுக- பாமக கூட்டணியில் சிக்கல் ..? கூட்டணி தொடருமா உள்ளாட்சித் தேர்தலில் ? சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக- பாமக கூட்டணியில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு என அதிமுக பதிலடி கொடுத்துள்ளதால் அந்த கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சட்டசபை தேர்தல் பேச்சுகள் தொடங்கிய போதே பாமக, கூட்டணி பேரத்தை வன்னியர் இடஒதுக்கீடு மூலம் தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் இதற்கான போராட்டங்களை நடத்தியது. ..இது அதிமுகவை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியது.  இதனால் அதிமுக, பாமகவை தேடிப் போய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வன்னியர் தனி இடஒதுக்கீடு சாத்தியம் இல்லை என்கிற நிலையை அதிமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது என அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இந்த இடஒதுக்கீடு அறிவிப்பால்…
Read More
நாம் என்ன வணிகர் சங்கபேரமைப்பா ? இல்லை திமுகவின் வியாபாரிகள் அணியா ?

நாம் என்ன வணிகர் சங்கபேரமைப்பா ? இல்லை திமுகவின் வியாபாரிகள் அணியா ?

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஒரு சில விஷயங்களில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இதற்கு காரணம் அவரது மகன் பிரபாகர் ராஜா திமுகவில் இளைஞர் அணி பொறுப்பிற்கு வந்தது தான் . இப்போ விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் ஆயிட்டாரு. வெள்ளையனின் வணிகர் சங்கங்களின் பேரவை அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுதுன்னு புகார் வந்ததால சென்னை மாவட்டத்தில தலைவரா இருந்த விக்கிரமராஜா வெள்ளையனோட தொடர்ந்து ஏற்பட்ட மோதல்ல உருவானது தான் அவர் தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. தமிழகத்தில் ஒரே ஒரு வணிகர் சங்கமாக வெள்ளையனின் வணிகர் சங்க பேரவை இருந்தது ஆனால் அதனை உடைத்து விக்ரமராஜா வணிகர் சங்க பேரமைப்பை உருவாக்கினார் வெள்ளையன் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்கிற புகார் அப்போது இருந்தது . திமுக ஆட்சியில் அதிமுக விற்கு அனுசரனையாக வெள்ளையன் செயல்பட்டதால் பல்வேறு இடங்களில் வணிகர்களுக்கு…
Read More
அதிமுக மாஜிக்களை கலங்க வைத்த ஸ்டாலின் உத்தரவு!

அதிமுக மாஜிக்களை கலங்க வைத்த ஸ்டாலின் உத்தரவு!

கோட்…சூட்…வெளிநாட்டு பயணம்; அதிமுக மாஜிக்களை கலங்க வைத்த ஸ்டாலின் உத்தரவு! கோட், சூட் அணிந்து எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சரவையினரும் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் சென்றார்களா அல்லது இன்பச் சுற்றுலா சென்றார்களா என்ற அளவுக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அதிமுக ஆட்சியில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த விசயங்களையும் தூசு தட்டி, அதிமுக மாஜிக்களை அலற விடும் பணிகளையும் செய்து வருவதாக திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை தற்போதைய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதோடு, மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான லிஸ்டுகளையும் கை வசம் வைத்துள்ளது. ஆனால், கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரம் காட்டி வரும் ஸ்டாலின், தற்போது இந்த பிரச்னைகளை கிளறினால், மக்கள் மத்தியில் நமக்கிருக்கும் நன் மதிப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்பதற்காக, அதிகாரிகளை…
Read More
முகுல் ராயை வளைத்த.. மம்தா !  தடுமாறிய பாஜக ?

முகுல் ராயை வளைத்த.. மம்தா ! தடுமாறிய பாஜக ?

இது வெறும் ஆரம்பம்தான்.. முகுல் ராயை வளைத்த.. மம்தாவின் சீக்ரெட் "வேட்டையன்" ஆபரேஷன்.. தடுமாறிய பாஜக கடந்த 40 நாட்களாக தொட்டதெல்லாம் வெற்றி என்று அடுத்தடுத்து மேற்கு வங்க அரசியலிலும், தேசிய அரசியலிலும்மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாஸ் காட்டிக்கொண்டு இருக்கிறார். அதிலும் இன்று மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் முகுல் ராய் "மீண்டும்" திரிணாமுல் கட்சியில் இணைந்தது எல்லாம் மம்தா செய்த மிகப்பெரிய அரசியல் சம்பவமாக பார்க்கப்படுகிறது. மேற்கு வங்க தேர்தலில் இமாலய வெற்றிபெற்றது, பிரதமர் மோடி நடத்திய யாஸ் புயல் மீட்டிங்கை தன்மானத்திற்காக புறக்கணித்தது, மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாவை டெல்லி அனுப்ப மறுத்து, அவரை பதவியில் இருந்தே விலக வைத்து தனக்கு ஆலோசகராக நியமித்தது என்று மம்தா பானர்ஜி கடந்த 40 நாட்களாக தேசிய அரசியலில் பல சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை நிகழ்த்திவிட்டார். அதில் தற்போது நிகழ்த்தப்பட்ட "சம்பவம்"தான் முகுல் ராய் மீண்டும்…
Read More
கனிமொழிக்கு தரப்படும் முக்கியமான டாஸ்க்.. திமுக பிளான்?

கனிமொழிக்கு தரப்படும் முக்கியமான டாஸ்க்.. திமுக பிளான்?

திமுக எம்பி கனிமொழிக்கு கட்சியில் விரைவில் முக்கிய பொறுப்பு ஒன்று வரப்போகிறது ஏற்கனவே பல தகவல்கள் வெளியான நிலையில்.. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் கசிந்து இருக்கின்றன. அதிமுகவில் நடக்கும் கோஷ்டி மோதலை வைத்து திமுக முக்கியமான சில திட்டங்களை போட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில்தான் கனிமொழிக்கு முக்கிய டாஸ்க் கொடுக்கப்பட உள்ளதாம்! முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பு பணிகள் முடிந்த பின் திமுக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்கும் என்கிறார்கள். முக்கியமாக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்த சில தொகுதிகளில் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்த உள்ளனர். கட்சியில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டங்களும் உள்ளன. அதிலும் ஊராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து அதற்கு ஏற்றபடி…
Read More
திமுக+தேமுதிக+பாமக+நாம்தமிழர்?..கூட்டணிக்கான அச்சாரமா?

திமுக+தேமுதிக+பாமக+நாம்தமிழர்?..கூட்டணிக்கான அச்சாரமா?

மெகா கூட்டணிக்கு அஸ்திவாரம் போடும் திமுக ! வரப் போற உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியே வித்தியாசமாக இருக்க போவதாகவும், அந்த கூட்டணி, கண்டிப்பாக அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் இருக்கும்னு பரபரப்பான பேச்சு ஓடிகிட்டிருக்குது.நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை திமுக, அபார வெற்றியை பெறவில்லை.. அதேபோல அதிமுக மோசமான தோல்வியையும் பெறவில்லை.. அடுத்தடுத்து உள்ளாட்சி தேர்தல், எம்பி தேர்தல்கள் இனி,  நடைபெற உள்ள நிலையில், இந்த 2 கட்சிகளும் தங்கள் பலத்தை எப்படி பெருக்கி கொள்ள போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக ஸ்டாலின் வைத்துள்ள முதல் குறியே எடப்பாடி பழனிசாமிதான்.. மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் அரசியலை "ராஜதந்திரம்" என்பார்கள்.. ஆளுமையுடன், அனுபவமும், நுணுக்கங்களையும் கையாண்டதாலேயே ராஜதந்திரியாகவே இருந்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள். இப்போது அதுபோலவே ஒரு மூவ் எடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமி யைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவர் பதவி…
Read More
கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கொங்குமண்டல பொறுப்பாளராக கனிமொழி நியமனம் !

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கொங்குமண்டல பொறுப்பாளராக கனிமொழி நியமனம் !

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கொங்குமண்டல பொறுப்பாளராக கனிமொழி நியமனம் ! மேலோட்டமா பாத்தா கொரோனாவை ஒழிக்கிறதுன்னு சொன்னாலும் அதிமுக கோட்டைன்னு சொல்லப்படுற கொங்கு மண்டலத்த திமுக கோட்டையா மாத்துறதுக்காகத்தான் இந்த நியமனம்.கொங்கு மண்டலத்தில அவருக்கு என்னென்ன சவால்கள் இருக்குன்னு பாப்போம்! தமிழகத்தில் கொரோனா அலை வீசத் துவங்கியதும், துாத்துக்குடி மாவட்டத்தில், எம்.பிங்கிற முறையில, கொரோனா தடுப்பு பணிகள்ல தீவிரம் காட்டி வந்தாரு கனிமொழி.மைக்ரோ சிஸ்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில, ஊராட்சி வாரியாக, ஆய்வு கூட்டங்கள் நடத்தினாரு. தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்தும் ஏற்பாடுகளை செய்தார்.கிராம மக்களை சந்தித்து தடுப்பூசி போட்டால் தான் உயிரை பாதுக்கும்னும் அதனோட பயன்களை அவர்களிடம் விளக்கிக் கூறி, விழிப்புணர்வு முகாம்களும் நடத்தி சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக, தமிழகத்தில் முதல்முறையாக டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் அடங்கிய நடமாடும் தடுப்பூசி மையத்தை துாத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி தான் துவக்கி வைத்தார். நடமாடும் தடுப்பூசி மையத்திற்கு கிராம மக்கள் ஆர்வமாக வந்து…
Read More
மத்திய அரசா? ஒன்றிய அரசா? – என்ன சொல்லுது இந்திய வரலாறு ? “இந்திய அரசியலமைப்புச் சட்டம்  என்ன சொல்லுது ?

மத்திய அரசா? ஒன்றிய அரசா? – என்ன சொல்லுது இந்திய வரலாறு ? “இந்திய அரசியலமைப்புச் சட்டம்  என்ன சொல்லுது ?

மத்திய அரசா? ஒன்றிய அரசா? – என்ன சொல்லுது இந்திய வரலாறு ? “இந்திய அரசியலமைப்புச் சட்டம்  என்ன சொல்லுது ? இந்தியாவை ஒன்றிய அரசுன்னு அழைக்கிறதா அல்லது மத்திய அரசுன்னு அழைக்கிறதாங்கிற சர்ச்சை இப்போ தமிழகத்தில் வீரியமடைஞ்சிருக்குது. இந்த சூழலில் இந்தியா வரலாற்று ரீதியா எப்படி அழைக்கப்பட்டதுன்னு பார்ப்போமா ? இந்தியா உருவான கதை: 1600 ம் ஆண்டு வரை இந்திய துணைக்கண்டம் பல பேரரசுகளாலும், சிற்றரசுகளாலும் ஆளப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் இந்தியா ஒருங்கிணைந்த நாடாக இல்லை. அதன்பின்னர் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயேர்கள் என பல பேரும் பல பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்ற ஆரம்பிச்சாங்க. இதில் இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் பெருவாரியான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. சென்னை, மும்பை, கல்கத்தா என இந்தியாவின் பல பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆண்டாலும் ஒவ்வொரு மாகாணமும் தனித்தனியான ஆட்சிப்பகுதியாகவே இருந்தது. இந்த மாகாணங்கள் அனைத்தும் தனித்தனியாக இங்கிலாந்து கிழக்கிந்திய…
Read More
துவரம் பருப்பை ரூ 85.99 க்கு கொள்முதல் செய்ய உத்தரவு ! அரசுக்கு 115 கோடி ரூபாய் மிச்சம். !!

துவரம் பருப்பை ரூ 85.99 க்கு கொள்முதல் செய்ய உத்தரவு ! அரசுக்கு 115 கோடி ரூபாய் மிச்சம். !!

தமிழ்நாடு முழுவதுமுள்ள ரேசன் கடைகள்ல விநியோகம் செய்ய அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ பருப்பு ரூபாய் 143.50 க்கு  கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் வெறும் ரூ .85.99 க்கு கொள்முதல் செய்து சுமார் 115 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிச்சமாக்கியுள்ளார் . . தமிழகத்தில் ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு பருப்புகள் விற்பனை செய்யப்பட்டுகின்றன . இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக ஆண்டு தோறும் டெண்டர் விடப்பட்டு மொத்தமாக பருப்பு கொள்முதல் செய்யப்படும் . அந்த வகையில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் டன் பருப்பு ரேசன் கடைகளுக்காக தமிழக அரசு கொள்முதல் செய்கிறது . இப்படி கொள்முதல் செய்யப்படும் பருப்புகள் ரேசன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன . இதற்கான டெண்டரில் விலை கோரப்படுவது தான் கடந்த அதிமுக ஆட்சியில் சர்ச்சையானது . தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில்(TNCSC) ரேஷன்…
Read More