அரசியல்

1996ல்கூறை வீட்டில் குடியிருந்த எஸ்.பி.வேலுமணியின் இன்றைய நிலையப் பாத்தீங்களா..! புகழ், பணம் சம்பாதிக்க வேண்டும்னா சினிமா அல்லது அரசியல் இரண்டு மட்டும் தான். சினிமா கைவிட்டுவிட்டது. அடுத்து அரசியல்தான் என முடிவுக்கு வந்தவர் அதிமுக ஆதரவாளராக மாறினார். சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி... இன்று செய்திகளில் பரபரப்பாக பேசப்படும் பெயர் எஸ்.பி.வேலுமணி. 5 அக்டோபர் 1969 ல், குனியாமுத்தூர் அருகே  உள்ள சுகுணாபுரத்தில் பிறந்தவர். அப்பா பழனிசாமி சாதாரண மில் தொழிலாளி. அதே நேரத்தில் குனியமுத்தூர் நகராட்சி கவுன்சிலராகவும் வெற்றி பெற்றவர். மயிலாத்தாள் சத்துணவு அமைப்பாளர். எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசன். தம்பி செந்தில்குமார். சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் எம்.ஏ.எம்.ஃபில் படித்து முடித்தவுடன் சினிமாவில் நுழைந்து பெரிய நட்சத்திரம் ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வண்டியேறினார். சென்னையில் தெருத்தெருவாக அலைந்து சினிமா வாய்ப்புத் தேடினார். சில படங்களில் துணை நடிகராகவும் தலைகாட்டியிருக்கிறார். பெரிய பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஏங்கினார். ஆனால் துக்கடா…
Read More
ஒரே கம்ப்யூட்டர்ல ஒரே ஐபி அட்ரஸ், ஒரே போன் நம்பரை கொடுத்து இரண்டு பேர் போட்டி போடுறது மாதிரி கணக்கு காட்டி ஒருத்தரே டென்டர் எடுத்ததாக அறப்போர் இயக்கம் சொல்லுது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ 811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி வருது.எஸ் பி வேலுமணி உள்பட 8 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செஞ்சிருக்கு. ஆன்லைன் டெண்டர் கட்டியதால் டெக்னிக்கலா ஒரே ஐபி அட்ரஸை பயன்படுத்தி 130 டெண்டர்கள் எடுத்ததாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கு இந்த ஊழல் சம்பந்தமா அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் என்ன சொல்றாரு ரத்னா இந்த சோதனை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுனேயே நடக்குது. இதுதான் விசாரணையின் ஆரம்பம்…
Read More
 அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் குறித்த ரேஸில் அனல் பறக்கும் என்கிறார்கள்

 அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் குறித்த ரேஸில் அனல் பறக்கும் என்கிறார்கள்

`கொங்குமண்டலத்தின் ஆதிக்கம் ஏற்கெனவே அதிகமாக இருக்கு. இதுல அவைத்தலைவர் பதவியையும் கேட்கிறார்களா?” என்று அ.தி.மு.க-வில் அடுத்தகட்ட பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது எனப் புலம்புகிறார்கள் அ.தி.மு.க-வின் ர.ர-க்கள். அதிமுக-வின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இரண்டு தினங்களுக்கு முன்பாக மறைந்துவிட்டார். அதிமுக-வில் நீண்டகாலம் அவைத்தலைவர் பதவியை அலங்கரித்த மதுசூதனனின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தில் யாரை அமரவைப்பது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தநிலையில் அ.தி.மு.க-வில் குறிப்பிட்ட சில அதிகாரங்களைக் கொண்டுள்ள அவைத்தலைவர் பதவிக்குக் கடும் போட்டி எழுந்துள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.க-வில் உள்ள இரட்டைத் தலைமையால் கட்சிக்குள் காரம் அதிகமாக இருந்துவரும் நிலையில், அடுத்தகட்ட ஆட்டம் அவைத்தலைவர் பதவியைவைத்து ஆரம்பித்திருக்கிறது. அவைத்தலைவர் ரேஸில் நடப்பது என்ன என்று அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். ``மதுசூதனனின் உடல்நிலை நலிவுற்றிருந்தபோதே, அ.தி.மு.க தலைவர்கள் மத்தியில் அவைத்தலைவர் குறித்த பேச்சு எழுந்துவிட்டது. தற்போது அவைத்தலைவர் பதவிக்குப் போட்டி ஏற்படக் காரணம், அ.தி.மு.க-வின் இரட்டை இலை குறித்த வழக்கில் தேர்தல் ஆணையம்…
Read More
ஜெயலலிதாவை சிறையில் தள்ளிய நல்லம நாயுடுவை களம் இறக்கும் ஸ்டாலின்..! நல்லம நாயுடு... தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி-யாக இருந்தப்போ தான் இவர் போட்ட கேஸ்ல தான் ஜெயலலிதாவையும், அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ள முடிஞ்சது. வழக்கு யார் வேணும்னாலும் போடலாம் ஆனா கேஸ் நிக்கணும்னா அடிப்படை முகாந்திரம் இருக்கணும்.ஜெயலலிதா மேலப் போட்ட வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்தாகப் போடப்பட்ட வழக்கு நிக்கிறதுக்கு காரணமே அவர் முதலமைச்சரா இருக்கும் போது மாசம் 1 ரூ தான் சம்பளம் வாங்குனாரு.ஒரு ரூபாய் சம்பளம் வாங்குனவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது.இந்த கேள்விக்கு ஜெயலலிதா வால் பதில் சொல்ல முடியல.சரி ஒரு நல்ல ஆடிட்டர வச்சு கணக்க எழுத வேண்டியது தானேன்னு நீங்க கேட்கிறது எனக்கும் புரியுது.அந்த காலகட்டத்தில அவங்க யார் பேச்சையும் கேக்கமாட்டாங்களே. அதோட பலனத்தான் அனுபவிச்சாங்க.அதுக்கு ஒரு சம்பவத்தை உதாரணமா சொல்லலாம். கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும்…
Read More
அ.ம.மு.க.,வுக்கு தலைமை ஏற்பு? சசிகலாவின் ‘சைலன்ஸ்’ பின்னணி

அ.ம.மு.க.,வுக்கு தலைமை ஏற்பு? சசிகலாவின் ‘சைலன்ஸ்’ பின்னணி

'சசிகலாவால் ஒருபோதும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது' என, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அதிரடியாக தெரிவித்த பின், சசிகலா ஒரு வாரமாக, 'வீடியோ, ஆடியோ' வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார். சமீபத்தில், டில்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., சந்தித்து பேசினர். அப்போது, ஓ.பி.எஸ்.,சிடம், 'சசிகலா மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்படுவாரா?' என்ற கேள்விக்கு, 'சசிகலாவால் ஒருபோதும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது' என, அதிரடியாக தெரிவித்தார். சசிகலாவுக்கு திரைமறைவில் ஆதரவு அளித்து வந்ததாக கூறப்பட்ட ஓ.பி.எஸ்., டில்லி பயணத்திற்கு பின், அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, சசி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், அவர் ஒரு வாரமாக, ஆடியோ, வீடியோவில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்., திரும்பியதற்கு கைமாறாக, மத்திய அமைச்சரவையில், அவரது மகன் ரவீந்திரநாத்திற்கு பதவி வழங்க, பா.ஜ., மேலிடத்திடம் இ.பி.எஸ்.,…
Read More
ஜெ.,வை சிறையில் தள்ளிய நல்லம நாயுடுவை களம் இறக்கும் ஸ்டாலின்..!

ஜெ.,வை சிறையில் தள்ளிய நல்லம நாயுடுவை களம் இறக்கும் ஸ்டாலின்..!

5 முன்னாள் அமைச்சர்களுக்கு குறி... ஜெ.,வை சிறையில் தள்ளிய நல்லம நாயுடுவை களம் இறக்கும் ஸ்டாலின்..! நல்லம நாயுடு... தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி-யாக இருந்தபோது இவர் போட்ட வலுவான அடித்தளம்தான் ஜெயலலிதாவையும், அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ளியது. நல்லம நாயுடு... தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி-யாக இருந்தபோது இவர் போட்ட வலுவான அடித்தளம்தான் ஜெயலலிதாவையும், அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ளியது. கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகாரிகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் நல்லம நாயுடு. ஜெயலலிதாவை கைது செய்து ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார். இது தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தனது முதலமைச்சர் பதவியையே இழக்க காரணமாக இருந்தது. 1997ம் ஆண்டே நல்லம நாயுடு ஓய்வு பெற்றுவிட்டாலும் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும். இதன் காரணமாக ஜெயலலிதா…
Read More
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி !

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி !

  காங்கிரஸ் கட்சியை திமுக மதிக்கவில்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வேண்டாம் தனித்துப் போட்டியிட்டு நம்முடைய பலத்த காண்பிப்போம்னு கே.எஸ்.அழகிரி சொல்றாராம். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. காங்கிரஸின் மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், திமுகவுக்கு செக் வைக்கும் விதத்தில் பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி. அவரது பேச்சு திமுக ஆதரவு கதர்சட்டையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதுன்னு பேசிக்கிறாங்க. முன்னாள் தலைவர் தங்கபாலு பேசும் போது, "50 ஆண்டு கால அரசியலில் கூட்டணியிலும், கூட்டணி இல்லாமலும் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. அதனாலேயே என்னவோ, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காங்கிரசுக்கான வெற்றி, செல்வாக்கு இப்போது இல்லை. இனி…
Read More
 திமுகவுடன் கை கோர்க்க  தயாராகி வரும் தேமுதிக

 திமுகவுடன் கை கோர்க்க தயாராகி வரும் தேமுதிக

கடந்த அதிமுக ஆட்சியில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது புதிதாக உருவாக்கப்பட்டிருந்த திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கும், எந்த மாவட்டங்களிலிருந்து அவை பிரிக்கப்பட்டனவோ அந்த மாவட்டங்களுக்கும், அதாவது வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்கள் என மொத்தம் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.நடக்கப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் எஞ்சிய 9 மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்  தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஆரம்பக் கட்ட வேலைகளைத் தொடங்கிட்டாங்க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தொண்டர்களை களப்பணியாற்ற முடுக்கி விட்டுருக்காங்க.. அடுத்து வரும் தேர்தலை பொறுத்தவரையில் ரொம்ப முக்கியமானது கூட்டணி தான்..கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணியை இருபெரும் திராவிடக் கட்சிகளும் தொடருமா? இல்லை ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்பட்டு வருது. இந்த…
Read More
பெகாசஸ் என்றால் என்ன? இஸ்ரேலில் இருந்து ஸ்பைவேர் எப்படி வேலை செய்கிறது? பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் உட்பட உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மீண்டும் பெகாசஸ் பற்றிய விவாதமும் சர்ச்சையும் எழுந்துள்ளது. பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன. இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன. ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், அவை மக்களை வேவு பார்க்க இந்த…
Read More
லாட்டரி தொழில் நடத்தி நிதி சேர்க்கும் எண்ணமே திமுக அரசிடம் இல்லை!- PTR பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்!

லாட்டரி தொழில் நடத்தி நிதி சேர்க்கும் எண்ணமே திமுக அரசிடம் இல்லை!- PTR பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்!

லாட்டரி தொழில் நடத்தி நிதி சேர்க்கும் எண்ணமே திமுக அரசிடம் இல்லை!- PTR பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்! இன்றைய எதிர்கட்சியான அதிமுக தனது மோசமான ஆட்சியால் நெருக்கடி மிகுந்த நிதிநிலைமையை விட்டுச் சென்றிருந்தாலும் – சிதிலமடைந்த நிதி நிலைமையைச் சரிசெய்யும் கடும் நெருக்கடி மிகுந்த சூழலை இந்த அரசுக்கு ஏற்படுத்தி விட்டுச் சென்றிருந்தாலும் – மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே திமுக அரசுக்கு இல்லை. நிதிப் பேரழிவில் மாநிலத்தை அ.தி.மு.க. விட்டுச் சென்றிருந்தாலும் – அதை சரிசெய்ய நாங்கள் சிந்திக்கும் சூழலில் கூட- லாட்டரி எங்கள் சிந்தனை வட்டத்திற்குள்ளேயே இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.   இது குறித்து பழனிவேல் தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கை விபரம் இதோ:, “லாட்டரி சீட்டை மீண்டும் தி.மு.க. அரசு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம்” என்று உண்மைக்கும் தனக்கும்…
Read More