20
Dec
அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கத் தயாராகும் பாஜக சீனியர் நிர்வாகிகள். அதிரடி அரசியல் செய்துவரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்குக் கட்சிக்குள்ள சமீப காலமாகடுமையான எதிர்ப்பு கிளம்பி வருது. அண்ணாமலையின் அசுர வேக வளர்ச்சியை மூத்த தலைவர்கள் விரும்பலை. பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்கள் அண்ணாமலையுடன் இணைந்து செயல்படுவதேயில்லை. கட்சிக்காகப் பாடுபட்ட மூத்த தலைவர்களை அண்ணாமலை போன்றவர்கள் கொஞ்சமும் மதிப்பதில்லைன்னு சொல்லப்படுது. ‘பொது வெளியில் புலி ; கமலாலயத்தில் எலி’. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள் அந்த கட்சியின் மூத்த புள்ளிகள். கூடவே இந்த மாஜி ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக டெல்லிக்கு புகார் கடிதங்களையும் வழக்கம் போல சீனியர்கள் அனுப்பி வருவதாகக் சொல்லப்படுது.தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டங்களில் பத்தோடு பதினொன்றாவது கட்சியாகத்தான் பாஜகவும் இருந்தது. தமிழிசை தலைவரான பிறகே அந்தக் கட்சி மக்கள் மத்தியில் பிரபலமடைய முடிஞ்சிது. நாள் தவறாமல் அவர் எதையாவது மீடியாக்களில் பரபரப்பாக பேசி மக்களின்…
