அரசியல் அனாதையான தினகரன் ?முடிவெடுக்க முடியாமல் திணறிவர்றாரு ?திமுக அதிமுக ஆகிய இரண்டு முன்னணிக் கட்சிகளையும் எதிர்த்துத் தோற்கடித்த டிடிவி தினகரனை நாளைய தமிழகமாகவே பலரும் கணித்தார்கள்.
எடப்பாடி அரசைக் கவிழ்க்க தினகரன் அடுத்தடுத்து மேற்கொண்ட வியூகங்கள் தோல்வியில் தான் முடிந்தது. அவரை நம்பி அதிமுகவிலிருந்து வெளியே வந்த 28 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்ததுதான் மிச்சம்.
கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பெரும்பாலான குடும்ப உறவுகளின் அதிருப்தியையும் சம்பாதித்தது தினகரனின் சரிவுக்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுது.
தொடர் தோல்விகள், நிர்வாகிகள் விலகல் என அடுத்தடுத்து அதிர்ச்சிகளால் துவண்டு போன தினகரன் இப்போ தனியே களமாடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானபோது இந்தியாவே அவரைத் திரும்பிப் பார்த்தது. அதிகார பலமிக்க அதிமுக, அமைப்பு ரீதியாக பலம் பொருந்திய திமுக ஆகிய இரண்டு முன்னணிக் கட்சிகளையும் எதிர்த்துத் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டுப் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த டிடிவி தினகரனை நாளைய தமிழகமாகவே பலரும் கணித்தார்கள்.அவர் ஜெயிச்சதுக்கு பல காரணங்கள் இருக்கு . மறைந்த முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் இல்லண்ணா அவரால் ஜெயிச்சிருக்கவே முடியாது.தினகரன் ஜெயிக்கிறுதுக்காகவே திமுக வேட்பாளராக மருதுகணேஷை அறிவிச்சாரு.அவர வெற்றிவேல் சரிக்கட்டிட்டாரு.அது மட்டுமல்ல திமுக வேட்பாளர் மேல் அதிருப்தியில் இருந்த திமுக நிர்வாகிகள வெற்றிவேல் சரிக்கட்டிட்டாரு.அவர எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனன் ஜெயிக்கக் கூடாதுன்னு ஜெயக்குமார் உள்ளடி வேல பாத்து காலிபண்ணிட்டாரு.
அதேமாதிரி எல்லா சர்ச் பாதிரியாரையும் முஸ்லிம் ஜமாத்தையும் சரிக்கட்டுனாங்க.தெருவுக்கு தெருவுல இருந்த நலச்சங்கங்களுக்கும் சரியான கவனிப்பு.இவ்வளவு வேலையையும் வெற்றிவேல் செஞ்சதுனாலத்தான் தினகரனால ஜெயிக்க முடிஞ்சது.என்னவோ நமக்குத் தான் மக்கள் விரும்பி ஓட்டு போட்டதா தினகரன் நெனச்சதாலத்தான் அடுத்து வந்த தேர்தலில் கோவில்பட்டியில் தோத்தாரு.
தினகரன் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. ’டிடிவி த மாஸ்’ என்கிற முழக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் அவரது புகழ் கொடி கட்டிப் பறக்க ஆரம்பிச்சது.
நான்காண்டுகள் கடந்த நிலையில் இவை எல்லாமே மாயத் தோற்றங்களா என்கிற சந்தேகம் இப்போது ஏற்படுது.
தொடர் தோல்விகள், உடனிருந்த நிர்வாகிகள் விலகல் என அடுத்தடுத்து அதிர்ச்சிகளால் துளைத்தெடுக்கப்படும் தினகரன் இப்போ தனியே, தன்னந்தனியே களமாடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். உச்சம் தொட்ட தினகரன் சறுக்கியது ஏன், அவரது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்கிற கேள்விகளுக்கு விடைகாணக் கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போமா?
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எல்லாவற்றிலும், எல்லாமுமாக இருந்த சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மூன்று புதல்வர்களில் மூத்தவர்தான் தினகரன். ஆரம்ப நாட்களில் போயஸ் தோட்ட இல்லத்தில் உதவியாளராக இருந்துவந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் அருட்பார்வை கிடைத்தது.
அப்புறம் என்ன! 1999ஆம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ராஜ்யசபா எம்.பி. பரிசும் அளிக்கப்பட்டது. அதிமுக பொருளாளராகவும் மகுடம் சூட்டப்பட்டார்.
போயஸ் தோட்டத்தில் நிகழ்ந்த உள்நாட்டுக் குழப்பத்தால் 2011ஆம் ஆண்டு சசிகலா, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்களை அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.அதன் பிறகு சசிகலாவுக்கு மட்டும் ரீ-எண்ட்ரி கிடைத்தது. அதுவும் அருண் ஜெட்லி ரவிசங்கர் பிரசாத் புண்ணியத்துல.
ஆனாலும் தினகரன் உள்ளிட்டவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு காட்சிகள் தலைகீழாக மாறுச்சு. அதிமுக சசிகலா வசமானது. அதிமுக பொதுச் செயலாளராகவும், பிறகு அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சமயத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்ல, துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார் தினகரன்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய தமிழக அரசை 2017, பிப்ரவரி 18 அன்று சட்டமன்றத்தில் வெற்றிபெறச் செய்ததில் தினகரனுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தச் சமயத்தில் நடந்த கூவத்தூர் களேபரங்களை இந்திய அரசியலின் இருண்ட பக்கங்கள் என்றே சொல்லலாம்.
எதிர்பாராத திருப்பங்கள்லாம் ஏற்பட்டுச்சு.
இதன் பின்னர் அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறுச்சு.
எதிரும், புதிருமாக இருந்த பன்னீரும் பழனிசாமியும் ஒண்ணா சேந்ததுனால தினகரன் தனித்து விடப்பட்டார். ஆனாலும் ஆர்.கே. நகரில் அடுத்து நடைபெற்ற இடைத் தேர்தலில் அவர் அமோக வெற்றிபெற்றார்.
எடப்பாடி அரசைக் கவிழ்க்க தினகரன் அடுத்தடுத்து மேற்கொண்ட வியூகங்கள் தோல்வியைத் தழுவியது. அவரை நம்பி அதிமுகவிலிருந்து வெளியே வந்த 28 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்ததுதான் மிச்சம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தினகரனின் அம்மா முன்னேற்றக் கழகம் வெற்றிபெறாமல் மண்ணைக் கவ்வ, உச்சத்திலிருந்த தினகரனின் இமேஜ் சடசடவென சரியத் தொடங்கிடுச்சி
இதன் எதிரொலியாக முக்கிய நிர்வாகிகள் அணிமாறத் தொடங்கினார்கள். லேட்டஸ்டாக தர்மபுரி பழனியப்பனும் அறிவாலயத்தில் சங்கமம் ஆகிவிட்டார். இப்போது குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கியப் புள்ளிகள் யாரும் தினகரன் பக்கம் இல்லை.
தளபதிகள் இல்லாமல் தவிக்கும் தினகரனிடம் முன்புபோல நிதியாதாரங்களும் இல்லைன்னு அவருக்கு நெருக்கமானவர்கள் உதட்டைப் பிதுக்கிறார்கள். இதனால் கட்சி நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்க முடியாமல் தினகரன் திணறுவதாகவும் சொல்லப்படுது.
கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி சசிகலா உட்பட பெரும்பாலான குடும்ப உறவுகளின் அதிருப்தியையும் சம்பாதிச்சது, தினகரனின் சரிவுக்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுது.
“மற்றவர்களுடைய கருத்துக்களை கொஞ்சமும் கேட்க மாட்டார், யாரையும் எடுத்தெறிஞ்சி பேசுவார்’’ என தினகரனுக்கு எதிராக அடுக்கடுக்காக புகார் சொல்கிறார்கள்.
இதற்கெல்லாம் மேலாக ‘எல்லாமே தன்னால்தான்’ என்கிற மிதமிஞ்சிய கர்வத்தால்தான் தினகரனின் மவுசு பாதாளத்திற்கு போனதாக அவரது முன்னாள் சகாக்கள் சொல்றாங்க.
அதேநேரம் சோதனைகளை வெல்லும் சாதுர்யமும், சாமர்த்தியமும் தினகரனுக்கு உண்டு என அவரைச் சுத்தியிருப்பவர்கள் சொல்வதை ஒரேடியாக ஒதுக்கி வைக்கவும் முடியலை.
அமமுகவைத் தொடர்வதா, அல்லது சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவதாங்கிற தீராத மனக் குழப்பத்தில் இருக்கும் தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம் இதப்பத்தி ஆலோசனை நடத்திவருவதாகச் சொல்லப்படுது. இதில் குடும்ப உள் உறவுகள், “இந்தப் பாழாய்ப்போன அரசியலால் நீங்கள் பட்ட பாடுகள் போதும். அரசியலுக்கு குட்பை சொல்லிடுங்கன்னு வற்புறுத்துவதாகவும் சொல்றாங்க.
முடிவெடுக்க முடியாமல் தினகரன் ரொம்பவே திணறிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் இப்போதைய நிலவரம்.அரசியல்ல எப்பவும் பொறுமையும் நிதானமும் தேவை.எனக்கு எல்லாமே தெரியும்ன்னு தெனாவட்டா இருந்ததுனோட விளைவை தினகரன் இப்போ அனுபவிக்கிறாரு.