அரசியல்

எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த செங்கோட்டையன் ! எடப்பாடியே எதிர்பார்க்கலை இந்த அதிர்ச்சிய.அதுவும் இவ்வளவு நாளாக அமைதியா இருந்திட்டு இப்ப திடீர்னு பிரச்சினையக் கிளப்புறாரேன்னு எடப்பாடி புலம்புறாராம்.அதிமுக கூட்டத்தின் அனல் இன்னமும் அடிச்சிகிட்டே தான் இருக்குது.. இதையடுத்து அக்கட்சிக்குள் என்னதான் நடக்குது? சீனியர்களின் அடுத்தடுத்த மூவ்கள் என்னங்கிற எதிர்பார்ப்புகளும் எகிறி வருது. அதிமுகவின் மா. செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கடந்த 24-ம் தேதி நடந்து முடிந்தது.. ஏகப்பட்ட முட்டல் மோதல்கள், கருத்து வேறுபாடுகள், களேபரத்துடன் இந்த கூட்டம் நடந்து முடிந்தாலும், அப்படியெல்லாம் எதுவுமே நடக்கலை, கூட்டம் நல்ல முறையில் மிக அமைதியாக நடந்து முடிஞ்சுதுன்னு ஜெயக்குமார் அப்படியே பேசி சமாளிச்சத நாம் பார்த்தோம். வழக்கமாக எந்த கூட்டம் நடத்தப்பட்டாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்துமோதல்களும், அதிருப்திகளும் வர்றது சகஜம்தான்.  ஆனால், இந்த முறை கட்சியின் சீனியர்கள் அன்வர் ராஜா செங்கோட்டையனின் ஸ்டண்ட்கள் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுது. இவங்கள்ல எடப்பாடி…
Read More
அன்வர் ராஜா எடுக்கும் அதிரடி முடிவு!

அன்வர் ராஜா எடுக்கும் அதிரடி முடிவு!

அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜாவை திமுகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அதிமுவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி.யான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருக்காரு. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், சசிகலா பக்கம் இருந்தவர், பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். ஆனாலும், கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சிக்கவும் இவர் தயங்கியதில்லை. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறிய மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு, எம்.பி., பதவி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தற்போதைய அதிமுக இரட்டை தலைமை மீது…
Read More
முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மேல நீதிமன்றத்தில் வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா வழக்கு ! ரெய்டு வருமா ? தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் நிலங்கள், கட்டிடங்கள், மருத்துவமனைகள் என 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் அவருடைய பினாமி பெயர்களில் சொத்துகள் உள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 600 கோடி வரை சொத்து சேர்த்த புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளதுன்னு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறாரு.. அதில், “தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தன்னுடைய பதவி காலத்தில், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.…
Read More
தேர்தலுக்குத் தயாராகும் விஜய் மக்கள் இயக்கத்தினர்?!

தேர்தலுக்குத் தயாராகும் விஜய் மக்கள் இயக்கத்தினர்?!

விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முடிவில் இருக்கிறாராம். அதற்காகவே கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்திகிட்டு வர்றாராம். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்குது. ``மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக விஜய் அறிவிக்கவிருக்கிறாராம். அதற்கான முன்னோட்டமே இது” எனப் பேசப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது. தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தனது போட்டோ, மக்கள் இயக்கக்கொடி எல்லாத்தையும் பயன்படுத்த விஜய் அனுமதி கொடுத்தது அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மொத்தம் 115 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் 129 பேர் வெற்றிபெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர் விஜய் மக்கள் இயக்கத்தினர். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இடங்களை விஜய்…
Read More
மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது திமுகவா ? அல்லது அதிமுகவா

மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது திமுகவா ? அல்லது அதிமுகவா

 வரப்போகும் மாநகராட்சி தேர்தலில் கோவையில் வெற்றி பெறுவது திமுகவா ? அல்லது அதிமுகவா ? என்ற நிலைமை மாறி, செந்தில் பாலாஜியா ? அல்லது வேலுமணியா ? ங்கிற எதிர்பார்ப்பு கோவையில் ஏற்பட்டுள்ளது. வரப்போகின்ற மாநகராட்சி தேர்தலுக்கு தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத எதிர்பார்ப்பு கோவையில் ஏற்பட்டுள்ளதுக்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், இன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் மோதிக்கொள்வதுதான் கோவையின் தற்போதைய ‘ஹாட்’ டாபிக். எஸ்.பி  வேலுமணியின் கோட்டையான கோவையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்தல் வேலை படு ஸ்பீடா நடந்துக்கிட்டு வருது. கோவை நகரைச் சுற்றிலும் உள்ள பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்,மேம்பாலம்,தெருக்கள்,கடை வீதி என எல்லா இடங்களிலும் போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பேனர்கள் என செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஒட்டி ‘அண்ணனின்’ செல்வாக்கை பாருங்கள் என்கிறார்கள். இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, ‘முதல்வர் மு.க ஸ்டாலின் செந்தில் பாலாஜியை தேவையில்லாமல், கோவையின்  பொறுப்பாளராக நியமிக்கவில்லை. அமைச்சர்கள்…
Read More
ஆளை விடுங்க… சரண்டரான அமைச்சர் எ.வ.வேலு… நாட்டாண்மை பண்ணும் அமைச்சர் துரைமுருகன்.. அண்ணா அறிவாலயம் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு எதிரான புகார்கள் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி செய்த பஞ்சாயத்தை கூட பொறுத்துக் கொண்ட அந்த துறை அமைச்சர் எ.வ.வேலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து நாள்தோறும் வரும் பிக்கல், பிடுங்கல்களை கண்டுதான் அதிகமாக எரிச்சல் அடைஞ்சிருக்காருங்கிறாங்க அவரது நலம் விரும்பிகள். அவர் வசம் உள்ள இரண்டு துறைகளில்தான் கமிஷன் தொல்லை அதிகமாக இருப்பதாக வெளியுலகில் பரப்பப்படும் வதந்திகளை கண்டு நொந்து போய்ட்டாராம் அமைச்சர் எ.வ.வேலு. துறை ரீதியான பஞ்சாயத்துகளால் தாங்க முடியாத தலைவலியை அனுபவித்து வரும் அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, சரண்டரான நிகழ்வை மிகுந்த வருத்தத்தோடு பேசுகிறார்கள் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள். கடந்த பல நாட்களாக அமைச்சர் எ.வ.வேலு நிம்மதியின்றி தவித்து வர்றாராம்.கடந்த பத்தாண்டு காலம் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்…
Read More
' எடப்பாடிக்கு சட்டரீதியாகச் சிக்கல் வந்தால், அன்று கட்சியின் முழுக் கட்டுப்பாடும் தன் கைக்குள் வந்துவிடும். எதற்குத் தேவையில்லாமல் சசிகலா பக்கம் சாய வேண்டும் என்கிற எண்ணமும் பன்னீரிடம் உள்ளது ``சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர் மாறிவருகிறார்” என்று செய்திகள் பரவிவந்த நிலையில், நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்து மீண்டும் பழனிசாமி பக்கம் சாய்ந்திருக்கிறார் பன்னீர். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு அந்தக் கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்தன. சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற குரல்கள் எழுந்தன. அதற்குத் தோதாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், ``கட்சியின் தலைமை சசிகலாவைக் கட்சிக்குள் இணைப்பது குறித்து முடிவெடுக்கும்” என்றது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவரக் கூடாது என்பதில் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தீவிரமாக இருந்தனர். அவர்கள் பன்னீர் தரப்பிடம், `சசிகலாவுக்கு ஆதரவான நிலையில் இருந்தால், எதிர்காலத்தில் உங்களுக்கே சிக்கல் வந்துவிடும்’ என்று…
Read More
ரூட்டை மாற்றும் ஸ்டாலின்…? பிரதமர் மோடி ஆதரவாளருக்கு பதவி… தலைமை செயலாளர் இறையன்பு அண்ணனும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்தவரான திருப்புகழுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய பொறுப்பு ஒன்றை கொடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக மழை விடாமல் தொடர்ந்து பெய்து வருது. வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தலைநகர் சென்னை, தென் மாவட்டங்கள் என எல்லா இடங்களிலும் மழை மக்களை பாடாய்படுத்தி வருகிறது.அதிலும் தலைநகர் சென்னையின் நிலைமையோ ரொம்ப பரிதாபமா இருக்குது. மற்ற நகரங்களில் வசிப்போர் புண்ணியவான்கள் என்று டுவிட்டரில் வச்சு செய்யும் அளவுக்கு சென்னை மழை மக்களை கதற வைத்திருக்கிறது. மழைக்குள் சென்னை, வெள்ளத்தில் சென்னை, மிதக்கும் சென்னை என்று டிசைன், டிசைன் பெயர்களுடன் சமூக ஆர்வலர்களும், வெகு ஜனங்களும் டுவிட்டரில் அதிகார வர்க்கத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டு வர்றாங்க. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் எந்த அரசின் உதவியும் வரலைன்னு கதறி கொண்டிருக்க ஆளும் அரசை…
Read More
சசி., ஆதரவு ஓ.பி.எஸ். மீது ஒழுங்கு நடவடிக்கை?பதவி பறிப்பா? டிஸ்மிஸ்ஸா? எடப்பாடி கோஷ்டி அவசர ஆலோசனை! சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு அக்கட்சியில் மீண்டும் ஒரு புதிய பிளவுக்கு அச்சாரம்போட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் இரட்டை தலைமைகளான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்து செயல்படுவது நீண்டகாலத்துக்கு சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். தற்போது சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற குரலை ஓ.பி.எஸ். மறைமுகமான முன்வைக்க அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர். "மோதல் ஓயாது?" "ஓபிஎஸ்-ன் தம்பி, டிடிவி தினகரன் வீட்டு திருமண வரவேற்பில் பங்கேற்றும் இருக்கிறார். தற்போதைய நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் கோஷ்டிகள் இடையேயான மோதல..." ஓபிஎஸ்-ன் தம்பி,…
Read More
அரசியல் அனாதையாகிறதா அதிமுக? பாமகவைத் தொடர்ந்து கூட்டணியை முறிக்கும் பாஜக..? ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கூட்டணியிலிருந்து வெளியேறுவது பற்றி பாஜக தலைவர்கள் வெளிப்படையாக கருத்துக் கூறினர். பின்னர் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் அதிமுகவை எதிர்த்து பாஜகவினர் களமிறங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நோக்கில் தான் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பேசப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தங்கள் கட்சியில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து நாளை முதல் விருப்ப மனுக்களை பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி. தேர்தல்களுக்கு முன் அனைத்து கட்சிகளும் செய்யும் வழக்கமான நடைமுறை தா இது என்றாலும், பாரதிய ஜனதா கட்சித் தலைமையிடமான கமலாலயத்திலிருந்து வரும் தகவல் வேறு விதமாக உள்ளது. சட்டசபை தேர்தல் சமயத்தில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற மனக்கசப்பு…
Read More