அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கத் தயாராகும் பாஜக சீனியர் நிர்வாகிகள்

அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கத் தயாராகும் பாஜக சீனியர் நிர்வாகிகள்.
அதிரடி அரசியல் செய்துவரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்குக் கட்சிக்குள்ள சமீப காலமாகடுமையான எதிர்ப்பு கிளம்பி வருது.

அண்ணாமலையின் அசுர வேக வளர்ச்சியை மூத்த தலைவர்கள் விரும்பலை.
பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்கள் அண்ணாமலையுடன் இணைந்து செயல்படுவதேயில்லை.
கட்சிக்காகப் பாடுபட்ட மூத்த தலைவர்களை அண்ணாமலை போன்றவர்கள் கொஞ்சமும் மதிப்பதில்லைன்னு சொல்லப்படுது.
‘பொது வெளியில் புலி ; கமலாலயத்தில் எலி’. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள் அந்த கட்சியின் மூத்த புள்ளிகள். கூடவே இந்த மாஜி ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக டெல்லிக்கு புகார் கடிதங்களையும் வழக்கம் போல சீனியர்கள் அனுப்பி வருவதாகக் சொல்லப்படுது.தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டங்களில் பத்தோடு பதினொன்றாவது கட்சியாகத்தான் பாஜகவும் இருந்தது. தமிழிசை தலைவரான பிறகே அந்தக் கட்சி மக்கள் மத்தியில் பிரபலமடைய முடிஞ்சிது. நாள் தவறாமல் அவர் எதையாவது மீடியாக்களில் பரபரப்பாக பேசி மக்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். அவர் ஒவ்வொரு மேடையிலும் தாமரை மலர்ந்தே தீரும்னு சொல்லும்போது அவரை கிண்டல் பண்ணாதவங்களே கிடையாது.சமூக வலைதளங்கள்ல என்ன கிண்டல் பண்ணுனாலும் அதை சட்டை பண்றதேயில்லை. அடுத்து வந்த முருகனும் வேலைத் தூக்கி, இதே பாணியைப் பின்பற்றினார்.நெறைய பேரை கட்சிக்குள்ள சேத்தாரு.முருகன் தலைவராக இருக்கும் போது பாஜகவில் எம்எல்ஏக்கள் சினிமா விஐபிக்கள்லாம் சேந்தாங்க. அவங்க போட்டுத் தந்த பாதையில் தற்போதைய தலைவரான அண்ணாமலையும் நடைபோட, அதுவே அவருக்குச் சிக்கலாக உருவெடுத்திருக்குதுன்னு சொல்றாங்க.

கட்சியில் சேரும்போதே துணைத் தலைவர், ஓராண்டு காலத்தில் தலைவர்ங்கிற அண்ணாமலையின் மின்னல் வேக வளர்ச்சியை மூத்த தலைவர்கள் கொஞ்சமும் ரசிக்கலை. “ஆண்டுக்கணக்கில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணின்னு உழைச்ச பிறகுதான் பாஜகவில் மாநில அளவில் துணை, இணைன்னு நமக்கு பொறுப்புகள் கிடைச்சிது. ஆனால் இந்த மனிதருக்கு எல்லாம் ஜெட் வேகத்தில் கிடைக்குதே’’ன்னு பலரும் பொருமித் தள்ளுனாங்க.

இந்தப் பொருமல் காரணமாகவே பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்கள் அண்ணாமலையுடன் பட்டும் படாமலும் அரசியல் செய்துவர்றாங்க. அண்ணாமலையுடன் இவர்கள் இணைந்து பங்கேற்ற பொது நிகழ்ச்சிகளை விரல் விட்டு எண்ணிடலாம். அதுபோலவே அண்மையில் ஆளுநரை சந்தித்தபோது இந்த மூத்த தலைவர்களில் ஒருவர்கூட அண்ணாமலையுடன் போகலை.

தென்மாவட்ட மூத்த தலைவர், ஒருத்தர் என்ன சொல்றாருன்னா “வாஜ்பாய், அத்வானி காலங்களில் பின்பற்றப்பட்ட விதிமுறைகள் கட்சியில் இப்போது சுத்தமாகப் பின்பற்றப்படுறதில்லை. அதனால்தான் எவ்வித முன் அனுபவமும் உழைப்பும் இல்லாதவர்களுக்குக்கூட உயர் பதவிகள் கிடைச்சிடுது. இதன் காரணமாகத்தான் அண்ணாமலை போன்றவர்கள் கட்சிக்காகப் பாடுபட்ட மூத்தவர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. கட்சி விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனையும் கேக்கிறதில்லை. எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் கட்சியை விமர்சிப்பதில் தவறில்லைதான்.ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் பண்ணுனாத்தான் நம்ம கட்சிய வளர்க்க முடியும். ஆனால் அதற்குக் கொஞ்சமாவது அடிப்படை விஷயங்கள் வேண்டுமல்லவா!

மின் வாரியத்தில் ஊழல் நடந்ததாக அண்ணாமலை சொல்ல, 24 மணிநேரத்தில் ஆதாரங்களைத் தருமாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டார். ஆனால் ஆதாரங்களைக் கொடுக்க முடியாமல் அண்ணாமலை திணறியதைப் பார்த்துக் கட்சியினர் தலையில் அடிச்சிக்கிட்டாங்க. அரசியல்வாதிகளை விமர்சிப்பது சரி. ஆனால் அரசியலுக்கு சம்மந்தமில்லாத உயரதிகாரிகளைச் சகட்டுமேனிக்கு விமர்சிப்பது எப்படி சரியாகும்? ‘போட்டோ எடுக்கத்தான் லாயக்குன்னு தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை அண்ணாமலை தனிப்பட்ட ரீதியில் விமர்சித்ததை யாருமே ரசிக்கவில்லை. மீடியாக்களில் ஹைலைட் ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் இவர் வாய்க்கு வந்தபடி எதையாவது சொல்ல, அது கட்சியின் இமேஜை டேமேஜ் செய்யுது. மற்றபடி நிர்வாக ரீதியாகவும் ஏகப்பட்ட தவறுகளைச் செய்துவருகிறார். இது பற்றியெல்லாம் டெல்லிக்கு புகார்கள் அனுப்பிவர்றோம்னு சொல்றார்.

சினிமாவுடன் தொடர்புடைய பாஜக பிரமுகர் ஒருவர், “தான் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டுகிற கரு.நாகராஜன் போன்ற ஒருசிலரை மட்டும் பக்கத்தில் வைச்சுகிட்டு மூத்தவர்களை அண்ணாமலை மட்டம் தட்டிவர்றார். இளைஞர் பிரிவு, கலை கலாச்சாரப் பிரிவு உட்பட கட்சியில் ஏகப்பட்ட துணை அமைப்புகள் இருக்குது. ஆனால் யாருமே செயல்பட முடியலை. செயல்பட விடலை. சகலமும் நானே என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவதில் அண்ணாமலை குறியாக இருக்காரு. தமிழக பாஜகவுக்கு அடித்தளமாக இருந்துவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார். பாஜக தலைமையைப் பற்றி இவருக்குச் சரியாகத் தெரியாது. எடியூரப்பா போன்ற ஜாம்பவான்களையே நிமிடங்களில் பதவியிலிருந்து கழற்றிவிட்டவர்கள். இந்த அண்ணாமலை எம்மாத்திரம்?’னு ரொம்பவே ஆவேசப்பட்டு பேசினாரு.

அடுக்கடுக்காக நீளும் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அண்ணாமலை தரப்பில் என்ன சொல்றாங்கன்னா, “நாங்கள் செய்துவரும் பணிகள் டெல்லி தலைமைக்குப் பிடித்திருக்கின்றன. எனவே உள்ளுர் வயிற்றெரிச்சல் கோஷ்டிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் பாஜகவை முதலிடத்திற்குக் கொண்டுவருவதற்காக அண்ணாமலை தொடர்ந்து அதிரடிகளை அரங்கேற்றுவார்’’ என்றார்கள்.

இதனிடையே சீனியர்களின் இந்தக் கொந்தளிப்பு அண்ணாமலையையும் எட்டியுள்ளது. இதனால் வெளியில் தாம் தூமென ஆவேச அரசியல் செய்யும் அவர் கமலாலயத்திற்குள்ளே சற்று அடக்கியே வாசிக்கிறாராம்.