ஆன்மீகம்

மறக்கக்கூடாத மஹாளய அமாவாசை.!

மறக்கக்கூடாத மஹாளய அமாவாசை.!

  மகாளயபட்ச துவக்கத்தில் பூமிக்கு வந்து தங்கும் பித்ருக்கள், மகாளயபட்ச முடிவில் அமாவாசையன்று தில (எள்) தர்ப்பணம் பெற்றுக்கொண்டு, மீண்டும் மேலுலகத்திற்கு சென்று விடுவதாக ஐதீகம். அவர்கள் மறுஜென்மம் எடுத்திருந்தாலும், வாரிசுதாரர் செய்யும் பிதுர்பூஜையால் அவர்களுக்கு பசித்த வேளையில் உணவு கிட்டுமென்பது விதியாகும். அன்றைய முன்னோர்களுக்கான வழிபாட்டினை மேற்கொள்ளும்போது, வேதவிற்பன்னர் ஒரு மந்திரம் சொல்வார். அது... "ஏஷா நமாதா, நபிதா, நப்ராதாநபந்து நாந்ய கோத்ரிணஹ தே ஸர்வே திருப்தி மாயாந்தும் மயோத் ஸ்ருஷ்டை ஹிகு சோதனஹ.' அதாவது, "என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும்…
Read More
முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் !

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் !

தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுள்களில், தமிழ்க் கடவுளான  முருகப்  பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படும் ஆறு கோயில்கள் உள்ளது. ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவைகள் என்னென்ன என்று பார்ப்போம். கந்தக்கடவுள் குடியிருந்து அருள்புரியக்கூடிய அற்புதமான இடங்களை அறுபடை வீடுகளாக குறிப்பிடுகின்றோம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு தனிச்சிறப்பும், வரலாறும் உண்டு. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது மரபு. கந்தக்கடவுள் குடியிருந்து அருள்புரியக்கூடிய அற்புதமான இடங்களைத் தான் அறுபடை வீடுகளாக குறிப்பிடுகின்றோம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு தனிச்சிறப்பும், வரலாறும் உண்டு. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவை அறுபடை வீடுகளாகும். திருப்பரங்குன்றம்.:(மதுரை மாவட்டம்) முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி…
Read More
சனீஸ்வரனைப்போல்கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை

சனீஸ்வரனைப்போல்கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை

நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர வைக்கும் சனிபகவான் பற்றிய பகிர்வுகள் : நவகிரகங்களில் சனி கிரகம் பலமான சக்திபெற்ற கிரகம் மட்டுமல்ல, ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகமுமாகும். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு.ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிளையும் (ராசி மண்டலத்தை) ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும்,நாட்டிலும், தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும்இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள். சனீஸ்வரனைப்போல்கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பதும் சோதிடப் பழமொழி.ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி என்பன சனீஸ்வரனின் சஞ்சாரத்தினால் (கோசரநிலை) ஏற்படுவனவாகும். சனி மகா தெசை பிறப்பில் இருந்து கணிக்கப்பெறுவதாகும்.அவரவர்…
Read More

குலதெய்வ வழிபாடு !

ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வம்சம் செழிக்க விரதம் இருந்து குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு வருடமும் குலதெய்வம் கோவிலுக்கு ஆடி மாதத்தில் சென்று அவரவர்களின் குலதெய்வத்தை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது பாரம்பரியமாக நடக்கும் ஒரு விஷயமாகும். அப்போது குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி, மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற சடங்குகளை விமரிசையாக நடத்துவர். உயிர் பலி இடுதலும் அப்போது நிகழ்த்தி, கிடா வெட்டி குலதெய்வத்திற்கு விருப்பமான பொருட்களை எல்லாம் படைத்து குடும்பத்துடன் வம்சம் செழிப்பதற்கு வேண்டுதல் வைத்து வழிபாடுகள் செய்வர். இதற்கென்றே வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கூட நிறைய பேர் படையெடுத்து தங்களின் சொந்த ஊர்களுக்கும், குலதெய்வ கோவில்களுக்கும் செல்ல துவங்குவர். ஆனால் இப்போது பெரும்பாலானோர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்தகையவர்கள் எளிமையாக வீட்டிலேயே எப்படி குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது என்பதை பார்ப்போம்…
Read More
பித்ரு தோஷம் நீக்கும் ஆலயம் !

பித்ரு தோஷம் நீக்கும் ஆலயம் !

பித்ரு தோஷம் நீக்கும் ஆலயம் குறித்து இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். பித்ரு கடமையிலிருந்து தவறியவர்களுக்கு பெருமாளே திதி செலுத்தும் ஆலயம்! செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரக்ஷ்ண பெருமாள். இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரக்ஷ்ண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு பூஜைகள் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள். இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலை 09 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வெறும் வயிற்றில் டிபன்…
Read More
டிசம்பர் மாதம்  ‘உலகிற்கு ஆபத்து’ ? இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எச்சரிக்கை !

டிசம்பர் மாதம் ‘உலகிற்கு ஆபத்து’ ? இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எச்சரிக்கை !

உலகம் முழுவதும், கொரோனா வைரசின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பேரழிவு குறித்து, இந்தியாவை சேர்ந்த இளம் ஜோதிடர், அபிக்யா ஆனந்த், கடந்த ஆகஸ்ட் மாதமே, சமூக வலைதளத்தில் ஒரு, 'வீடியோ' வெளியிட்டார். 'நவ., 2019 முதல் ஏப்., 2020வரை உலகிற்கு மிகப்பெரும் ஆபத்து' என, தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தி வரும், கொரோனா வைரசின் தாக்குதல், மே, 31ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என, கூறி இருந்தார். அடுத்தகட்டமாக, 'மே, 31ம் தேதியில் வைரஸ் பரவல் முடிவுக்கு வராது; இரண்டு நாட்கள் குறைந்து பின், ஜூன்,30ம் தேதி வரை பாதிப்பு தொடரும். அது வரையிலும் மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்காது' என, கூறியிருந்தார்.இந்நிலையில், அபிக்யா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், 'இந்த ஆண்டு, டிச., 20ம் தேதி, உலகிற்கு மற்றொரு பேரழிவு ஏற்படும்' என, தெரிவித்து உள்ளார்.வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது: வரும், டிச., 20ம்…
Read More