04
Sep
மகாளயபட்ச துவக்கத்தில் பூமிக்கு வந்து தங்கும் பித்ருக்கள், மகாளயபட்ச முடிவில் அமாவாசையன்று தில (எள்) தர்ப்பணம் பெற்றுக்கொண்டு, மீண்டும் மேலுலகத்திற்கு சென்று விடுவதாக ஐதீகம். அவர்கள் மறுஜென்மம் எடுத்திருந்தாலும், வாரிசுதாரர் செய்யும் பிதுர்பூஜையால் அவர்களுக்கு பசித்த வேளையில் உணவு கிட்டுமென்பது விதியாகும். அன்றைய முன்னோர்களுக்கான வழிபாட்டினை மேற்கொள்ளும்போது, வேதவிற்பன்னர் ஒரு மந்திரம் சொல்வார். அது... "ஏஷா நமாதா, நபிதா, நப்ராதாநபந்து நாந்ய கோத்ரிணஹ தே ஸர்வே திருப்தி மாயாந்தும் மயோத் ஸ்ருஷ்டை ஹிகு சோதனஹ.' அதாவது, "என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும்…
