ஆன்மீகம்

10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால்  திருப்பதியில் விஐபி தரிசனம் !

10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் திருப்பதியில் விஐபி தரிசனம் !

10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் செய்யலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டி, தூபதீப நைவேத்தியம், அர்ச்சகர்களுக்கு நிதியுதவி, கோயில் புனரமைப்பு, இந்து தர்ம பிரச்சாரத்திற்காக  வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் அவர்களுக்கு ஒரு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும். ரூ.500 மதிப்புள்ள இந்த விஐபி டிக்கெட்டில் காலையில் நடக்கும் விஐபி வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இதற்கு சிபாரிசு கடிதங்கள் தேவையில்லை. இதுபோல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.99 ஆயிரம் வரை நன்கொடை வழங்கி 9 டிக்கெட்கள் பெறலாம். பின்னர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சத்திற்கும்…
Read More
தலையெழுத்தை திருத்தி எழுதி அருளும் திருப்பட்டூர் பிரம்மா !

தலையெழுத்தை திருத்தி எழுதி அருளும் திருப்பட்டூர் பிரம்மா !

குருப்பெயர்ச்சியில் குருபகவானுக்கு விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். குரு பகவான் என்பவர் பிரகஸ்பதி. தேவர்களின் குரு. குருவுக்கெல்லாம் குருவெனத் திகழ்பவர் தேவ குரு. அதனால்தான் இவருக்கு, நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, நல்ல கிரகமாக இருக்கும் வரத்தைத் தந்தருளினார் சிவபெருமான். அந்தக் குருவுக்கு குருவாக இருப்பவர்... அதிதேவதையாக இருப்பவர்... பிரம்மா.குருவுக்கு அதிதேவதையாக இருந்து அருள்பாலிப்பவர் ஸ்ரீபிரம்மா. அந்த பிரம்மாவின் கர்வத்தைப் போக்கி, அவர் ஏற்றிருந்த சாபத்தைப் போக்கி, இழந்த படைப்புத் தொழிலையும் தந்தருளினார் சிவபெருமான்.மேலும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு தரவும் தலையெழுத்தையே திருத்தி எழுதவும் வரம் வாங்கியிருந்தார் பிரம்மா. சிவனார் வரம் தந்ததும், அங்கேயே அந்தத் தலத்திலேயே இருக்கப் பணித்தார். அந்தத் திருத்தலம்... திருப்பட்டூர். புராண காலத்தில், திருப்பிடவூர், திருப்படையூர் என்றெல்லாம் திருப்பட்டூருக்கு பெயர்கள் உள்ளதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 28 வது கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில்…
Read More
அன்னபூரணியை மையப்பொருளாக கொண்ட சிறப்பு கொலு !அபிராமி ராமநாதன் இல்லத்தில் !!

அன்னபூரணியை மையப்பொருளாக கொண்ட சிறப்பு கொலு !அபிராமி ராமநாதன் இல்லத்தில் !!

மயிலாப்பூரில் உள்ள தங்கள் இல்லத்தில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 இல் "அன்னபூரணியை மையப்பொருளாக கொண்ட சிறப்பு கொலுவை " அமைத்து நவராத்ரி திருவிழாவை சிறப்பித்தார் கலைமாமணி அபிராமி ராமநாதன் அவர்களின் துணைவியார் திருமதி. நல்லம்மை ராமநாதன் "அருணகிரண மணிகொடிகள் ஒளிச்செய்ய அமுத மதுரமலர் அரியணை மீதிநில் அகிலம் முழுவதும் கொலு வீற்றிருந்து அருள்தரும் அன்னபூரணி தாயே சரணம்" கொலுவின் சிறப்பம்சங்கள் : 👉கோவிலின் கற்பகிரஹத்தில் உள்ள அன்னபூரணி அம்மனின் திருஉருவ சிலை போன்று மெய்யாய் தோன்றும் வெண்கல சிலைகள். 👉கோவிலின் நுழைவாயிலை போன்ற தோற்றம் கொண்ட நுழைவாயிலும் அலங்காரமும் கண்கொள்ளா காட்சியாயிருந்தது. 👉 அம்மன் சிலைக்கு அணிவித்துள்ள அணிகலன்களும் அன்னப்பூரணி ஆலயத்தில் அம்மனுக்கு அணிவிக்க பட்டுள்ள அணிகலன்களை ஒத்துள்ளது இந்த கொலுவின் சிறப்பம்சம். கண்களுக்கு விருந்தும், மனதுக்கு பக்தி பரவசத்தையும் அளிக்கும் இந்த அருமையான அன்னபூரணி தாயாரை மையமாக கொண்ட இந்த கொலுவை கண்டுகளித்தவர்கள் ஆனந்த பரவசமடைந்து பெரிதும்…
Read More
காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!

காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!

காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது? இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?அனைவரும் தங்கலாமா?இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்: Sri Kasi Nattukkottai Nagara Satram Godowlia, Varanasi - 221 001 (U.P) Telephone Nos: 0542 - 2451804, Fax No: 0542 - 2452404 (ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்) Naat Koat Satram Location Godowlia, Tanga Stanad Behind Sushil Cinema Varanasi கட்டணம் உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு…
Read More
27- நட்சத்திரங்களுக்கும் ஒரே பரிகார தலம்!

27- நட்சத்திரங்களுக்கும் ஒரே பரிகார தலம்!

தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனுக்கு அகிலம் எல்லாம் எண்ணற்ற திருத்தலங்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனின் திருமாளிகைகள்தான். ஆனாலும், அவற்றிலெல்லாம் வேறுபட்டு, தனித்தன்மைமிக்க திருத்தலமாக நட்சத்திர கிரி சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது.வளத்தாலும், வனத்தாலும் எழில்பொங்கும் ஜவ்வாது மலையில் பிரவாகமாகி, வங்கக்கடலில் சங்கமமாகும் செய்யாற்றின் கரையோரமாக இக்கோயில் உள்ளது. மலையே மகேசனாக அருள்தரும் திருவண்ணாமலையில் கலசப்பாக்கம் அருகே வில்வாரணி நட்சத்திரகிரியின் மலையின் நாயகனாக வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி அருள் பாலிக்கிறார்.முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில் கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருகின்றனர்.27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும், முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு இந்த கோயிலை தவிர வேறெங்கும் இல்லை. வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோயில். எனவேதான் இக்கோயிலுக்கு நட்சத்திர கிரி கோயில் எனும் சிறப்பு பெயரும் வந்தது.27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் 1,200 ஆண்டுகள் பழமை…
Read More
ராசி பலன்கள்!

ராசி பலன்கள்!

மேஷ ராசி நேயர்களே...! மறதியால் சில பிரச்சினைகள் அவ்வப்போது வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டாலும் அதற்காக கவலைப்பட வேண்டாம். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர்கள். ரிஷப ராசி நேயர்களே...! நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். முதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். மிதுன ராசி நேயர்களே...! தெளிவான முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தினரிடம் நன்கு பழகி சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடக ராசி நேயர்களே...! திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடிவரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். சிம்ம ராசி நேயர்களே...! பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிக்கு உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆசைகளை நிறைவேற்ற ஆயத்தமாவீர்கள். கன்னி ராசி நேயர்களே...! வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. புண்ணிய…
Read More
கடன் பிரச்சனையை தீர்க்கும் பைரவர் வழிபாடு!!

கடன் பிரச்சனையை தீர்க்கும் பைரவர் வழிபாடு!!

பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப்போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர். ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும், பைரவரின் காட்சி பெறவும், உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும், உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற இவ்வாறு செய்தால் போதும். அடுத்தடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு சென்று. இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி, குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர், அந்த டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். மீதியை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும்.…
Read More