ஆன்மீகம்

 குழந்தை இல்லாத பெண்களுக்கு கண் கண்ட தெய்வம் திருக்கருகாவூர் கர்ப்ப ரட்சாம்பிகை !

 குழந்தை இல்லாத பெண்களுக்கு கண் கண்ட தெய்வம் திருக்கருகாவூர் கர்ப்ப ரட்சாம்பிகை !

தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் கோவில் இருக்கின்றது . இந்த கோவிலில் அருள்பாலிக்கும் கர்ப்ப ரட்சாம்பிகை திருமணம் ஆகாத பெண்களுக்கு , குழந்தை இல்லாத பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாய் கர்ப்பரட்சாம்பிகை விளங்குகிறார் .இந்த திருக்கருகாவூர் கோவிலின்   கிழக்கு பகுதியில் ராஜகோபுரம் தெற்கு பகுதியில் கோவிலின் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கும். கோவிலின் உள்ளே நுழைந்த உடன் தென்புறம் மற்றும் பின்புறம் நந்தவனமும் , வடக்கு பகுதியில் வசந்த மண்டபமும் இருக்கிறது . அந்த திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலயம் முன்புறம் கொடிமரம் , பலிபீடம் , நந்தி போன்றவை காட்சி அளிக்கின்றன முல்லைவனமாக இந்த கோவில் தலத்தில் இரண்டு பேர் வாழ்ந்து வந்தனர் . நித்துருவர், வேதிகை என்ற தம்பதியர்கள் வாழ்ந்தனர். குழந்தை பேரு இல்லாத இவர்கள் முல்லைவனத்து நாதரையும் அம்மனையும் கும்பிட்டு வந்தனர் . இதனை அடுத்து வேதிகை கருவுற்றாள் , ஒரு நாள் நித்துருவர் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் வேதிகை…
Read More
அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் வரலாறு !

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் வரலாறு !

குழந்தைக்கு பேச்சு வரலனு புலம்பும் தாய்மார்கள் இந்த கோயிலுக்கு போயிட்டு வந்தால் நன்மை உண்டாகும்! அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் மதுரை மாவட்டத்தில் இருக்கும் சிம்மக்கல் பகுதியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது. எத்தனையோ தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பேச்சு வரவில்லை என்று தவிக்கிறார்கள். அவர்கள், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் அளித்திருப்பார்கள். அப்படியும் பேச்சு வரவில்லை என்று கருதும் தாய்மார்கள், இந்த கோயிலுக்கு சென்று வந்தால், கண்டிப்பாக பலன் கிடைக்கும்.கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்றொரு பழமொழி கூட இருக்கிறது. அந்தளவிற்கு முன்னோர்கள் மட்டுமில்ல பழங்காலந்தொட்டே இறை வழிபாடு என்பது நமது பண்பாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு பழக்கம். இறைவன் அனைத்திலும் இருக்கிறார் என்பது இறை நம்பிக்கையாளர்களின் கருத்தாகும். மிக பழங்காலந்தொட்டே பெண் தெய்வ வழிபாடு நமது பண்பாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் மிகப்பழமையான நகரமும், 51 சக்திபீடங்களில் ஒன்றான மதுரை மாநகரத்தில் பழமையான பல பெண் தெய்வ கோயில்கள் இருக்கின்றன. அதில் ஒன்று…
Read More
திருப்பாம்புரம் கோவில் தல வரலாறு :

திருப்பாம்புரம் கோவில் தல வரலாறு :

சோழர்கள் எழுப்பிய தேவாரத் திருத்தலங்களில் 59 வதாக இருக்கிறது திருப்பாம்புரம் கோவில். சைவம் வளர்த்த நால்வரில் “திருஞானசம்பந்தர்” இத்தல ஈசன் மீது பாடலியற்றியுள்ளார். புராண காலத்தில் விநாயகர் தனது தந்தையான சிவபெருமானை வழிபடும் போது, அவர் கழுத்தில் இருந்த நாகம் தன்னையும் விநாயகர் பூஜிப்பதாக எண்ணி கர்வம் கொண்டது. இதையறிந்த சிவபெருமான் அனைத்து நாகங்களும் துன்புறுமாறு சாபமளித்து விட்டார். ஆதிசேஷன் உட்பட எல்லா நாகங்களும் இந்த திருப்பாம்புரம் கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமானை ஒரு மகா சிவராத்திரி தினத்தன்று வணங்கி சாப விமோச்சனம் பெற்றனர். இத்தலத்திற்கு “சர்பபுரி” என மற்றொரு பெயர் உண்டு. இங்கு வீற்றிருக்கும் இறைவனை “பாம்புரநாதர்” என்றும் “சேஷபுரீஸ்வரர்” மற்றும் “சர்பேஸ்வரர்” என்றும் அழைக்கின்றனர். தலத்தின் சிறப்பு இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூறுகின்றனர். ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்பகுதிகளில் மல்லி…
Read More
ராகு-கேது உருவான வரலாறு

ராகு-கேது உருவான வரலாறு

ராகுவும், கேதுவும் ‘சாயா கிரகங்கள்’ என்றும், ‘நிழற்கிரகங்கள்’ என்றும் வர்ணிக்கப்படுகின்றன. நம்மை நிழல்போல் தொடரும் துன்பங்கள் விலகிச்செல்ல சர்ப்ப ப்ரீதிகள் செய்வது நல்லது. தேவர்கள் அமுதம் பெற பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப் பெற்றது. பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பற்றி இருந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். விஷம் அவரது கண்டத்துக்கு (கழுத்துக்கு) கீழே போகவிடாமல் பார்வதி தடுத்தாள். பின்னர் அமுதத்தை வழங்க விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியாக அமரும்படி மோகினி கூறினாள். அப்போது ஸ்வர்பானு என்ற அரக்கன், தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதத்தை உண்டான். அவனது சூழ்ச்சி பின்னர் தெரிய வந்தது. கோபம் கொண்ட மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணு, ஸ்வர்பானுவை கட்டுவத்தால் அடித்தார். அப்போது அவன் உடல் தலை வேறு, உடல் வேறானது.…
Read More
நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது !

நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது !

தீபம்  என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர்  மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும்.  ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும். இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின்வழியாகக் கூறுகின்றனர். இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது  பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக்  கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது. நரகாசுரனின் பெயர் காரணம்:  நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது…
Read More
கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே சுக்ரனாக காட்சி தருகிறார்

கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே சுக்ரனாக காட்சி தருகிறார்

திருநாகேஸ்வரத்தில் இராகு பகவானே அநுக்கிரஹ மூர்த்தியாய் உள்ளார்..!!! திங்களூரில் சந்திரபகவான்..!!! திருநள்ளாற்றில் சனீஸ்வரர்..!!! சூரியனார் கோவிலில் சூரியன் என நவக்கிரக தலங்களில் உள்ள 8 தலங்களிலும் அந்தந்த கிரக தேவதைகள் உள்ளனர்...?? ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே சுக்ரனாக காட்சி தருகிறார் என்று என்னைக்காவது நாம் யோசித்துப் பார்த்ததுண்டா..!!! அதற்கான பதில் கஞ்சனூர் ஸ்தல மஹாத்மியத்திலிருந்து கிடைக்கிறது. அதனால் தான் இந்த பதிவு. திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அருந்த எண்ணிய தேவர்களுக்கு மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்...!! இறுக்கம் தாங்காமல் வாசுகியானது விஷத்தை உமிழ்ந்தது பாம்பின் கொடிய விஷத்தின் உஷ்ணத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்களும் வால்பாகத்தில் தாங்களும் பிடித்துக்கொண்டு கடையத் துவங்கினார்கள் நீண்ட முயற்ச்சிக்கு பின் அமுதம் வெளியே வந்தது...!!! மனம் மகிழ்ந்த தேவர்கள் திருமாலின் மோஹினி உருவத்தால் அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தாங்களே உண்டனர்...!!! இதனால் கோபமுற்ற…
Read More
அழகும் அற்புதமும் நிறைந்தவர் புன்னைநல்லூர் ராமர்!

அழகும் அற்புதமும் நிறைந்தவர் புன்னைநல்லூர் ராமர்!

அழகும் அற்புதமும் நிறைந்தவர் புன்னைநல்லூர் ராமர்! ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா ! தஞ்சாவூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம், கோதண்டராமர் திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர். இது வேறெங்கும் காண்பதற்கு அரிதான ஒன்று சொல்லி சிலாகித்துப் பூரிக்கின்றனர் பக்தர்கள்! வைஷ்ணவ சம்பிரதாயத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசி மாடத்தையும் சாளக்ராமத்தையும் பெண் வீட்டார் அந்தக் காலத்தில் வழங்கி வந்தனர். இது ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது. சாளக்ராமம் எனும் கல், ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது. நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்றுவதாகச் சொல்வார்கள். நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒருகட்டத்தில் சம்பந்தியானார்கள்; நேபாள மன்னர், மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு ஏராளமான சீர்வரிசைகள் வழங்கினார்.தங்கமும் வெள்ளியும் வழங்கினார். பட்டாடைகள் வழங்கினார்.…
Read More
படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் குழந்தைப்பேறு வேண்டுவோர் திருவெண்காடு சென்று புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.

படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் குழந்தைப்பேறு வேண்டுவோர் திருவெண்காடு சென்று புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.

படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் குழந்தைப்பேறு வேண்டுவோர் திருவெண்காடு சென்று புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது. பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். இந்த கோயில் தமிழ்நாட்டின் ஒன்பது நவகிரக கோயில்களில் ஒன்றாகும், இது மாநிலத்தில்…
Read More
திருமணத் தடைகள் நீக்கும் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஷ்வரர்!

திருமணத் தடைகள் நீக்கும் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஷ்வரர்!

திருமணத் தடைகள் நீக்கும் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஷ்வரர் திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த ஊர் என்று அர்த்தம். அதாவது, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த தெய்வ சக்தி நிறைந்த பூமி இது. கன்னிகா தானம் செய்து நடத்தி வைத்தவர் ஸ்ரீமகாவிஷ்ணு. இந்த தெய்வத் திருமணத்திற்குப் பின் சிவனும் - பார்வதியும், விஷ்ணுவும் - லட்சுமியும் நால்வருமாக அங்கேயே வாசம் செய்கிறார்கள் என்று ஐதீகம்! தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் உள்ளவர்களுக்குக் கூட கல்யாண வரம் தரும் திருமணஞ்சேரி திருத்தலத்தை தெரியும். புராதனமான இந்த ஆலயம், இன்றைக்கும் சாந்நித்தியத்துடனும் புகழுடனும் திகழ்கிறது. இப்படிப் பெருமை பெற்ற தலம் திருமணஞ்சேரி. கிழக்கே விக்கிரமன் என்னும் காவிரியாறு, மேற்கில் கிளை நதியான காளி வாய்க்கால். இரண்டுக்கும் நடுவில் அமைந்த திருத்தலமே திருமணஞ்சேரி. பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றாள். அப்படி பசுவான பார்வதிதேவி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணுவும் உடன்…
Read More
கொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்

கொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்

மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர். கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்ஜலி செய்கிறார்கள். அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள். கலைஞர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் கலைப்பயணத்தில் முழுமையான வெற்றி அடைய தங்கள் கலைப்பணியை அன்னை மூகாம்பிகைக்கு அர்ப்பணித்து தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாகும். அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.…
Read More