05
Jan
தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் கோவில் இருக்கின்றது . இந்த கோவிலில் அருள்பாலிக்கும் கர்ப்ப ரட்சாம்பிகை திருமணம் ஆகாத பெண்களுக்கு , குழந்தை இல்லாத பெண்களுக்கு கண் கண்ட தெய்வமாய் கர்ப்பரட்சாம்பிகை விளங்குகிறார் .இந்த திருக்கருகாவூர் கோவிலின் கிழக்கு பகுதியில் ராஜகோபுரம் தெற்கு பகுதியில் கோவிலின் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கும். கோவிலின் உள்ளே நுழைந்த உடன் தென்புறம் மற்றும் பின்புறம் நந்தவனமும் , வடக்கு பகுதியில் வசந்த மண்டபமும் இருக்கிறது . அந்த திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலயம் முன்புறம் கொடிமரம் , பலிபீடம் , நந்தி போன்றவை காட்சி அளிக்கின்றன முல்லைவனமாக இந்த கோவில் தலத்தில் இரண்டு பேர் வாழ்ந்து வந்தனர் . நித்துருவர், வேதிகை என்ற தம்பதியர்கள் வாழ்ந்தனர். குழந்தை பேரு இல்லாத இவர்கள் முல்லைவனத்து நாதரையும் அம்மனையும் கும்பிட்டு வந்தனர் . இதனை அடுத்து வேதிகை கருவுற்றாள் , ஒரு நாள் நித்துருவர் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் வேதிகை…
