ஆன்மீகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் பற்றிய பகிர்வுகள் !

கன்னியாகுமரி பகவதி அம்மன் பற்றிய பகிர்வுகள் !

  முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்துள்ள குமரிகண்டத்தில் 2000-ஆண்டுகள் பழைமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. அம்மனின் 51-சக்தி பீடங்களில் இது குமரி பீடம் ஆகும். கடல் அருகே கோவில் இருந்தாலும் கிணற்றில் உள்ள நீர் உப்பு கரிப்பதில்லை என்பது அதிசயம். மூலவர் தேவி கன்னியாகுமரி, பகவதி அம்மன், உற்சவர் தியாக சவுந்தரி, பாலசுந்தரி, தீர்த்தம் பாபநாசம்.காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க கண்னியாகுமரிக்கு வரவேண்டும் என்கிறது புராணம். சிறந்த தீர்த்த  புண்ணிய கடற்கரை என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேள்வியில் தோன்றி கன்னியாகுமரியில் தவம் புரிந்த அம்பாள்: அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள். திருமால் தீத்திறன் கொண்ட பாணாசுரனைப் பராசக்தியால்…
Read More
முக்தி மண்டபம் உள்ள திருத்தலங்கள் மூன்று தான் ! அந்த மூன்று தலங்கள் எவை?

முக்தி மண்டபம் உள்ள திருத்தலங்கள் மூன்று தான் ! அந்த மூன்று தலங்கள் எவை?

முக்தி மண்டபம்' உள்ள திருத்தலங்கள் மூன்று தான். அது என்ன முக்தி மண்டபம்? அந்தத் திருத்தலத்தை நினைத்தாலோ, அதன் பெயரை கூறினாலோ, அங்கு பிறந்தாலோ அல்லது இறந்தாலோ முக்தி நிச்சயம். அந்த மூன்று தலங்கள் எவை? 01. காசி. காலத்தை நிர்ணயிக்கும் கால பைரவ க்ஷேத்திரம். சதாசிவன், சதா ராம நாமம் ஜெபிக்கும் தலம். ஆகையால் முக்தி. 02. திருவையாறு. அப்பர் பெருமானுக்கு இறைவன் கைலாயக் காட்சி தந்த இடம். பூலோக கைலாயமாதலால் முக்தி சர்வ நிச்சயம்! 03. நாகப்பட்டினம் சிவராஜதானி. அதாவது சிவாலயங்களுக்கெல்லாம் தலை நகரம். ஆதி புராணம். அதாவது உலகின் முதல் சிவஸ்தலம். காலபைரவர் காசியிலிருந்து தானே விரும்பி வந்து இங்கே எழுந்தருளி இருக்கிறார். ஆகவே முக்தி. இத்தகைய புண்ணிய பூமியில் நாம் இப்போது தரிசிக்கப்போகும் கோயிலின் வரலாறை அறிவதற்கு முன் ஒரு கூடுதல் செய்தி. சித்தர்களின் ஜீவசமாதி அமையப் பெற்ற ஊர்கள் அற்புதமான பலன்களைத் தரவல்லவை. புண்ணியமும்…
Read More
கோயில்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .

கோயில்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .

தமிழ் மாதங்கள் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான் . புரட்டாசி மாதத்தில் மட்டும் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . கொலு என்பது தெலுங்குச் சொல்லின் தமிழ் வடிவம் . வீற்றிருத்தல் என்பது இதன் பொருளாகும் . உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும் . புரட்டாசி அமாவாசை அன்றே கொலு வைப்பதற்குரிய செயல்கள் தொடங்கப் படுகின்றன . வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் சுத்தமாக்கிப் புனிதப் படுத்துகின்றனர் . மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும் , இடத்திற்கும் தகுந்தபடி அமைக்கின்றனர் . சுத்தமான துணிகளால் அந்தப் படிகளைப் போற்றுகின்றனர் . முதல் படியின் நடுவில் கலசத்தை வைக்கின்றனர் . ஒரு கலசத்தில் பச்சரிசியை நிரப்பி , ஐந்து மாவிலைகளை வட்டமாக…
Read More
குலதெய்வம் தெரியவில்லை தெரிந்து கொள்வது எப்படி ..?

குலதெய்வம் தெரியவில்லை தெரிந்து கொள்வது எப்படி ..?

#குலதெய்வம் தெரியவில்லை தெரிந்து கொள்வது எப்படி .. குலம் என்பது தலமுறைகளை குறிக்கும். ஒரு குலம் என்பது 13 தலைமுறைகள் சேர்ந்ததாகும். ஒரு அரசமரத்தை எடுத்துக்கொள்வோம் உச்சி கிளை என்பது முதல் தலைமுறை அதாவது அப்பா அவரின் மகன் இரண்டாவது தலைமுறை கிளைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஒரு அப்பாவுக்கு மூன்று நான்கு மகன்கள் இருக்கலாம் அதில் மூத்தமகன் இரண்டாவது தலைமுறையாக வருவார் இவருக்கு பிறக்கும் மூத்த மகன் மூன்றாவது தலைமுறையாகும் இப்படி 13 தலைமுறைகள் சேர்ந்ததே ஒரு வம்சம் என அழைக்கப்படுகிறது கடைசி தலைமுறை 13 வது தலைமுறையை சேர்ந்தவர் இறக்கும் பொழுது 781 வருடங்கள் என கணக்கில் வரும் இந்த 13 தலைமுறையை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக ஒரே தெய்வத்தை வணங்கி வருவார்கள் 13 தலைமுறையை சேர்ந்தவர்கள் எந்த பாப செயலையும் செய்யவில்லை என்றால் குலதெய்வ அருளுடன் எந்த இன்னல்களும் இல்லாமல் சந்தோஷமான வாழ்வு வாழ்வார்கள் ... #மண்ணாசை #பெண்ணாசை…
Read More
திருப்பதி வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் அற்புதங்கள் !

திருப்பதி வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் அற்புதங்கள் !

திருப்பதி வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் அற்புதங்கள் ! திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் மர்மங்கள் பற்றி நாம் இப்போது காணப்போகிறோம். உண்மையில் திருப்பதியில் உள்ள மர்மங்களை  நாம் அறிந்திருக்கமாட்டோம்.  தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார். 1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.…
Read More
புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு !

புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு !

புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு பற்றிய சிறப்பு மிக்க 40 குறிப்புகளை கீழே பார்க்கலாம். 1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். 2. ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். 3. புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. 4. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். 5. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. 6 . புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான…
Read More
மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோவில் வரலாறு

மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோவில் வரலாறு

சென்னைக்குப் பெருமை சேர்க்கும் அம்மன் கோயில்கள் பல இருந்தாலும், சொல்லும்போதே மனதில் வைராக்கியத்தையும், உற்சாகத்தையும், தைரியத்தையும்,  ஆறுதலையும் அளிக்கும் அம்பாள் என்று சொன்னால், 'மாங்காடு காமாட்சி அம்மனையும், திருவேற்காடு தேவி கருமாரியம்மனையும், திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், பாரிமுனை காளிகாம்பாளையும் தான் சொல்வார்கள். ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக்காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் தான் இந்த மாங்காடு. தேவி இங்கு மேற்கொண்ட கடுமையான தவத்தின் மூலம் மனம் இரங்கிய ஈசன், இதற்குப் பின்புதான் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரராக காமாட்சியை மணந்து கொண்டார் என்பது வரலாறு. காஞ்சிபுரத்தில் காஞ்சிகாமாட்சி அம்மனுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கின்றதோ, அப்படித்தான் மாங்காடுகாமாட்சி அம்மனும். இந்த கோவிலில் ‘அர்த்தமேருஸ்ரீசக்கரம்’ மிகவும் விசேஷமானது. தீப்பிழம்புகளுக்கு இடையே ஒற்றைக்காலில் நின்றுகொண்டு, ஈசனை நினைத்து கண்களை மூடிய நிலையில் அம்பாள் இருப்பதை இத்தளத்தில் காணலாம். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அம்பாளை நான்கு வடிவில் தரிசிக்க முடியும். ஸ்ரீ சக்கர வடிவில் அம்பாள், பஞ்சலோகத்தாலான காமாட்சியம்மன், அக்கினியில்…
Read More
கேட்காமலே வரம் தருவான் ஒப்பிலியப்பன்!

கேட்காமலே வரம் தருவான் ஒப்பிலியப்பன்!

ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள ஸ்ரீஒப்பிலியப்பனை தரிசித்திருக்கிறீர்களா? கோயில் நகரம் என்று கும்பகோணத்தைச்  சொல்லுவார்கள்.   கும்பகோணம்  முழுக்க கோயில்கள்தான். திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள்தான் இருக்கும். எந்தத் தெருவில் நுழைந்தாலும் அங்கே கோபுரத்தையும் கோயிலையும் பார்க்கலாம். கும்பகோணம் மட்டுமின்றி கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் திருக்கோயில். அற்புதமான ஆலயம். இங்கே, இந்தத் தலத்தில் அழகும் அருளும் ததும்ப சாந்நித்தியத்துடன் காட்சி தருகிறார் பெருமாள். இந்தத் தலத்தின் பெருமாளுக்கு ஸ்ரீஒப்பிலியப்பன் என்பதுதான் திருநாமம். ஒப்பிலியப்பன் என்றால் ஒப்பில்லா அப்பன். ஒப்பில்லாத தகப்பனாக, அருள் பொழியும் தந்தையாக, ஆனந்தத்தைத் தரும் ஞானத் தகப்பனாக இங்கே குடிகொண்டிருக்கிறார் பெருமாள். ஒப்பிலியப்பன் கோயில் பெருமாளை தரிசிப்பது ரொம்பவே விசேஷமும் மகத்துவமும் மிக்கது. இங்கே... ஈடு இணையில்லாத நாயகனாக, ஒப்பு உயர்வற்ற இறைவனாக... ஒப்பிலியப்பனாக அருள்பாலிக்கிறார் பெருமாள். புராணத்தில், இந்தத் தலத்துக்கு திருவிண்ணகரம் என்று பெயர். 108 திவ்விய தேசங்களில்…
Read More
நல்லதைப் படைத்த அந்த ஆண்டவன், எதற்காக, இந்த பூமியில் கெட்டதையும் படைத்தான்?

நல்லதைப் படைத்த அந்த ஆண்டவன், எதற்காக, இந்த பூமியில் கெட்டதையும் படைத்தான்?

சில கேள்விகளுக்கு, நாம் என்ன தான் சிந்தித்தாலும் அதற்கான விடையை முழுமையாக ‘தெரிந்து’ கொள்ள முடியாது. ஆனால், ஆனால் அந்த கேள்விகளுக்கான விடையை ‘புரிந்து’ கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு தான், இந்த பதிவின் மூலம் பதிலை, புரிந்து கொள்ளப் போகின்றோம். ‘இந்த பூமியில் நல்லதை படைத்த ஆண்டவன் தான், கெட்டதையும் படைத்திருக்கின்றான்! நல்லதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது, எதற்காக கெட்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’? என்றாவது இந்த கேள்வியை நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா? இன்றைக்கு கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமா? ஒரு சிறிய கதையோடு! குருவிடம் ஒரு மாணவன், இதே கேள்வியை கேட்டான்! அதற்கு, அந்த குரு என்ன விளக்கம் அளித்தார்? என்பதை நாம் தெரிந்து கொண்டால், தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா? நல்லதை மட்டும்…
Read More
மரணம் நோக்கி ஒரு பயணம்-

மரணம் நோக்கி ஒரு பயணம்-

உலகிலேயே மரணத்தை கொண்டாடும் ஒரே நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளி வைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக தான். ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள்னா அந்த இடம் தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளிஅளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது. இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திருப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள்.…
Read More