05
Jan
முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்துள்ள குமரிகண்டத்தில் 2000-ஆண்டுகள் பழைமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. அம்மனின் 51-சக்தி பீடங்களில் இது குமரி பீடம் ஆகும். கடல் அருகே கோவில் இருந்தாலும் கிணற்றில் உள்ள நீர் உப்பு கரிப்பதில்லை என்பது அதிசயம். மூலவர் தேவி கன்னியாகுமரி, பகவதி அம்மன், உற்சவர் தியாக சவுந்தரி, பாலசுந்தரி, தீர்த்தம் பாபநாசம்.காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க கண்னியாகுமரிக்கு வரவேண்டும் என்கிறது புராணம். சிறந்த தீர்த்த புண்ணிய கடற்கரை என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேள்வியில் தோன்றி கன்னியாகுமரியில் தவம் புரிந்த அம்பாள்: அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள். திருமால் தீத்திறன் கொண்ட பாணாசுரனைப் பராசக்தியால்…
