03
Oct
தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இன்றைக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்கு கார் டாக்ஸியை போல் பைக் டாக்ஸி சேவைகளுக்கும் மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட சில நகரங்களில் பைக் டாக்ஸி சேவை உள்ளது. குறிப்பாக சென்னையில் இளைஞர்கள் பலர் பைக் டாக்ஸி சேவையை விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவு ஆனாலும் வணிக ரீதியாக பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்த தமிழகத்தில் அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக பைக் டாக்ஸி சேவை தற்போதைய நிலையில் தொடர்கிறது. இதற்கு தமிழகத்தில் விதிமுறை வகுக்கும் வரை தடையில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்து இருந்தது. இதையடுத்து பைக் டாக்ஸிக்கு விதிமுறைகளை வகுக்க அரசு முடிவு செய்துள்ளது. விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…
