06
Mar
இந்தியாவை,மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கில், 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.உலகளவில், மொபைல் போன் தயாரிப்பில்,சீனா முதலிடத்திலும்,இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதேசமயம் , மொபைல் போன் ஏற்றுமதியில், இந்தியா, ‘டாப் 10’ பட்டியலில் கூட இடம் பெறாத அளவிற்கு மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், உள்நாட்டில் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, விற்பனை அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்கு, 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகம், ‘நிடி ஆயோக்’ ஆகியவை இணைந்து தயாரித்து உள்ள இந்த திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பில், சீனா, வியட்னாம் போன்ற நாடுகள் முன்னணியில்…
