சினிமா

சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரம், கொரோனா காலத்தில் உபகரணங்களை கொள்முதல் செய்ததுல முறைகேடுன்னு அதையும் தாண்டி இபபோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிச்ச வழக்குன்னு வசமாக சிக்கியிருக்காரு முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.  சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை மிக இழிவாக விமர்சனம் செய்தாருங்கிறதுக்காகவே விஜயபாஸ்கருக்கு 2013-ல் அமைச்சர் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா. 2011-ல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே குவாரி தொழில், கல்வி நிறுவனங்கள் என சகலத்திலும் கால் பதித்துவிட்டார் விஜயபாஸ்கர்.  2016 சட்டசபை தேர்தலில் அதிமுக ஜெயிச்சதும் சுகாதாரத்துறை அமைச்சரானார் விஜயபாஸ்கர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அங்கேயே முகாமிட்டு சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக, சசிகலா தரப்பின் ஆகப் பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் விஜயபாஸ்கர். சசிகலா தரப்பில் செல்வாக்கு தாம் உட்பட மூத்த அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்த்துவிடக் கூடாது என விஜயபாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் தடுத்தனர்…
Read More
    சென்னை அடேங்கப்பா! 4.87 கிலோ தங்கம், ரூ.23 லட்சம் ரொக்கம் பறிமுதல்.. விஜயபாஸ்கர் வீடுகளில் தொடரும் சோதனை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 23 லட்சம், 4.87 கிலோ தங்க நகைகள், 136 கன ரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.   அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, சென்னை, திருச்சி எனத் தமிழகம் முழுவதும்…
Read More

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக சுனில்குமார் ஐபிஎஸ்

கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் இருந்த சுனில்குமார் ஐபிஎஸ் அண்மையில் ஓய்வுப் பெற்றார். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக அவரை தமிழக அரசு நியமித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் சாலை மறியல் நடைபெற்ற போது, காவல்துறையினரால் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிந்தாரிப்பேட்டை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களை பார்ப்பதற்காக அப்போதைய திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபத்திற்குச் சென்றார். அந்தநேரத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியான இதே சுனில்குமார் ஐபிஎஸ், மு.க.ஸ்டாலினை அனுமதிக்கவில்லை. அப்போது நியாயம் கேட்டு, மண்டபத்திற்குள் நுழைய முயன்ற மு.க.ஸ்டாலினை நெஞ்சில் கைது தள்ளிவிட்டவரும் இதே சுனில்குமார் ஐபிஎஸ். அந்த நிகழ்வின் படம் மறுநாள் நாளிதழ் ஒன்றில் வந்தது. அப்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் அப்போது எதிரொலித்தது. நாளிதழில் வெளியான புகைப்படத்தை பேரவையில் காட்டி, போலீஸ் அதிகாரியை பணி…
Read More
பெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்…

பெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்…

  பெத்த பிள்ளைன்னுகூட பார்க்காம விஜய்க்காக எல்லாத்தையும் செஞ்சு குடுத்தேன்... வெளிப்படையாகப் பேசிய எஸ்.ஏ.சி! நானும் அவர் அம்மா ஷோபாவும் அவர் வீட்டுக்கு முன்னாடி போய் காரில் காத்திருந்தோம். அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னாருனு சொல்லி அழைப்பு வந்தது. அப்படியே நாங்க திரும்பி வந்துட்டோம். எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம்தன் கலைக்கப்பட்டுருக்கு. நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருதுன்னு விஜய் தரப்பு தெரிவிச்சிருக்கு.   இந்நிலையில் தான் விஜய்க்காக எவ்வளவு பாடுபட்டேன். அவரை எப்படி முன்னணி நடிகராக கொண்டு வந்தேன்னு எஸ்.ஏ.சந்திரசேகர் மனமுருகி தெரிவிச்சிருக்காரு. ’’விஜயகாந்த் அப்போது நம்பர் ஒன் ஹீரோ. அவரிடம் போய் ஒரு படத்தில் நீங்கள் கெஸ்ட் ரோல் பண்ணித் தரணும்னு சொன்னேன். என்ன கதை, என்ன கேரக்டர்னு எதுவும் கேட்கலை. எப்போ, எங்கே வரணும்னு சொல்லுங்க சார்ன்னாரு. பொள்ளாச்சியில் பதினெட்டு நாள் விஜி நடித்து கொடுத்தார். அந்தப் படம்தான்…
Read More
ஒரு வருமான வரித்துறை நோட்டீஸ், ஒட்டுமொத்த அ.தி.மு.க கூடாரத்தையும் கலகலக்கவைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 14 பேருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், சேகர் ரெட்டி வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது வருமான வரித்துறை. ‘நான்கு ஆண்டுகளாகத் தொடரும் சேகர் ரெட்டி வழக்கில், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்மீது நோட்டீஸ் அஸ்திரம் ஏவப்படுவதன் காரணமென்ன?’ என்பதுதான் அரசியல் புதிர் கடந்த 2016, டிசம்பரில் தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை 176 கிலோ தங்கம், 147 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியது. இந்தச் சோதனையைத் தொடர்ந்து சி.பி.ஐ மூன்று வழக்குகளையும், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மூன்று வழக்குகளையும் பதிவுசெய்தன. சி.பி.ஐ தொடர்ந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லையென இழுத்து மூடப்பட்டாலும், வருமான வரித்துறையிலும் அமலாக்கத் துறையிலும் வழக்குகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. சேகர்…
Read More
ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல அமமுக போட்டியிடுமா ? இல்லையா ? என்ன சொல்றார் டிடிவி? ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவது கஷ்டம்தான்னு அடிச்சி சொல்றாங்க.. அப்படியே போட்டியிட்டாலும் கூட பிரச்சாரத்திற்கு டிடிவி வருவது சாத்தியமேயில்லைன்னு சொல்றாங்க.. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 9 மாவட்டங்களிலும் விறுவிறுப்பா நடந்து வருது. திமுக முதல் நேற்று வந்த மக்கள் நீதி மய்யம் வரை வேட்பு மனு தாக்கலில் தீவிரமா இருக்கிறாங்க. திருவண்ணாமலையில் வைத்து தனது மகளின் திருமணத்தை முடித்த கையோடு டிடிவி தினகரன் தேர்தல் களத்திற்கு வருவார்ன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. இதனை அடுத்து திருமணத்தை முடித்து சென்னை திரும்பிய டிடிவியை பார்க்க ஒன்பது மாவட்டங்களின் நிர்வாகிகள் சிலர் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனா அவங்க யாரையும் டிடிவி பார்க்கலை. நேராக கட்சி அலுவலகம் போங்கன்னு மட்டும் அவங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களாக சென்னையில் தங்கியிருந்தும் ஊரக உள்ளாட்சித்…
Read More
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தத் தடையுமில்லை’ன்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 12 மணி நேரத்தில், வருமான வரித்துறை தரப்பிலிருந்து சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை கையகப்படுத்தப் போகிறதுங்கிற பரபரப்பு தகவல் லீக் ஆனது. தகவலை மெய்ப்பிக்கும்விதமாக, அடுத்த நாள் பையனூர் பங்களாவை முடக்கியது வருமான வரித்துறை. “கொடநாடு வழக்கு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ‘செக்’ வைக்கும் நிலையில், சசிகலாவுக்கு வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைத்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் இந்த விவகாரங்களை முழுவதுமாக அறிந்தவர்கள். ‘பையனூர் பங்களா முடக்கம் ஏன் நடந்தது... எடப்பாடிக்கு இருக்கும் சிக்கல் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். எடப்பாடிக்கு என்ன சிக்கல்? “கொடநாடு விவகாரத்தைத் தேவையில்லாமல் எடப்பாடி ஊதிப் பெரிதாக்குகிறார்” என்றபடியே நம்மிடம் பேசினார்கள் அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர். “கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை கேட்டு அ.தி.மு.க பிரமுகர்…
Read More

பாமக தேமுக தனித்துப் போட்டி! அதிர்ச்சியில் அதிமுக ?

பாமக தேமுக தனித்துப் போட்டி! அதிர்ச்சியில் அதிமுக ? தேமுதிக தனித்துப் போட்டியிடுறதப் பத்தி அதிமுகவுக்கு கவலையேயில்ல.ஆனா கூட்டணியிலேருந்து பாமக விலகுனதுனால நஷ்டம் அதிமுகவுக்குத்தான். சட்டப்பேரவையில் பாமக தரப்பிலேருந்து எந்த ஒரு பிரச்சனையும் எழுப்பப்படலை. முழுக்க முழுக்க திமுகவிற்கு மிகவும் இணக்கமாகவே பாமக சட்டப்பேரவையில் நடந்துச்சு. இதுக்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப்போகுதுன்னு தான் பேச்சுகள் ஓடிக்கிட்டு இருந்துச்சு . ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ராமதாஸ். கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக நீடித்துவந்தது. கூட்டணியில் வேறு எந்த கட்சிகளுக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை பாமகவிற்கு அதிமுக தலைமை கொடுத்து வந்தது. இந்த காரணத்தினால தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தே விலகிய போது கூட பாமக இருக்குதுன்னு தெம்பா இருந்தாரு எடப்பாடியார். சட்டப்பேரவை…
Read More
கோடநாடு வழக்கு: 'குற்றவாளியை நெருங்கிய காவல்துறை' - அதிர்ச்சியைக் கிளப்பும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பட மூலாதாரம்,KODANAD ESTATE கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபராகக் கருதப்பட்ட கனகராஜ் என்பவர் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார். மற்றொரு குற்றவாளி எனக் கூறப்படும் சயான் தனது குடும்பத்தினருடன் கேரளா செல்லும் வழியில் சாலை விபத்தை…
Read More
செப்டம்பர் 7-ம் தேதி இரவு. சென்னையிலுள்ள மிக முக்கியப் பத்திரிகையாளர்களின் வாட்ஸ்அப்களுக்கு ஒரு மெசேஜ் வந்தது. ‘சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை கையகப்படுத்தப் போகிறது’ என்பதே அந்தத் தகவல். ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தத் தடையுமில்லை’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 12 மணி நேரத்தில், வருமான வரித்துறை தரப்பிலிருந்து இப்படியொரு பரபரப்பு தகவல் லீக் ஆனது. தகவலை மெய்ப்பிக்கும்விதமாக, அடுத்த நாள் பையனூர் பங்களாவை முடக்கியது வருமான வரித்துறை. “கொடநாடு வழக்கு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ‘செக்’ வைக்கும் நிலையில், சசிகலாவுக்கு வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைத்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் இந்த விவகாரங்களை முழுவதுமாக அறிந்தவர்கள். ‘பையனூர் பங்களா முடக்கம் ஏன் நடந்தது... எடப்பாடிக்கு இருக்கும் சிக்கல் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். எடப்பாடிக்கு என்ன சிக்கல்? “கொடநாடு விவகாரத்தைத் தேவையில்லாமல் எடப்பாடி ஊதிப்…
Read More