சினிமா

தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !

தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !

இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ’சியாம்’ கூறியுள்ளது. இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர், ராஜன் வதேரா கூறியுள்ளதாவது:வாகன துறையினர், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வரி குறைக்கப்படும் என, மிகவும் நம்பிக்கையோடு இருந்தனர். வாகனங்கள் மீதான, 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்படும் என, மிகவும் எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வாகனங்கள் மீதான வரியை குறைக்காத காரணத்தால், இனி சொந்தக் காலிலேயே நின்று, தேவையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க வேண்டியது தான். வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கமானது, ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க கோரியதோடு மட்டுமின்றி, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட வாகன பிரிவுக்கு, இழப்பீட்டு கூடுதல் வரியை நீக்குமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட, 4 மீட்டருக்கும் குறைவான…
Read More
கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த ‘ஹெலியா’ என்ற மின்சார கார்!

கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த ‘ஹெலியா’ என்ற மின்சார கார்!

இனி மின் வாகனங்களுக்கே எதிர்காலம் என்பதால், பல புதுமைகள் தினமும் வரத்துவங்கிவிட்டன. பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள், மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தால் ஓடும் புதிய காரை வடிவமைத்துள்ளனர். காரின் கூரையில் சூரிய ஒளி மின் பலகைகளும், நான்கு இருக்கைகளும் கொண்ட, 'ஹெலியா' என்ற அந்த மின் கார், ஒரே மின்னேற்றத்தில், 900 கி.மீ., செல்லக்கூடியது. நான்கு பயணியர் இருக்கையுள்ள ஹெலியா, உபரி மின்சாரத்திற்காக, சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துகிறது. பயணிக்கும் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக, மாணவர்கள், கணினியில் அதன் வடிவத்தை உருவாக்கி சோதித்து, இறுதியில் காற்றுத்தடை குறைவாக உள்ள வடிவத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், அதிகபட்ச வேகமாக, 80 கி.மீ., வரை காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லக் கூடியது ஹெலியா. மின்சார வாகனங்கள் எடை அதிகமாக இருந்தால், செல்லும் துாரம் குறையும். இதற்காகவே, ஹெலியாவின் உடலை கார்பன் இழைகளால் கட்டமைத்துள்ளனர். பிரிட்டனின், 'மிகச் செயல்திறன் கொண்ட மின்சார கார்'…
Read More
ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்… ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்… ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

ஒன்றரை மாதம் வரை சார்ஜ் இருக்கக்கூடிய மொபைல் போனை ஆவெனிர் நிறுவனம் சந்தையில் விட்டுள்ளது. தற்போதைய காலத்தில் யாரிடம் தான் ஸ்மார்ட் போன் இல்லை.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள் அல்லவா..? அவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் எந்த அளவிற்கு சார்ஜ் நிற்கிறது..? எவ்வளவு நேரம் பயன்படுத்த முடிகிறது என்பதில் உள்ள மிக முக்கிய விஷயம். ஒருசிலர் வைத்துள்ள மொபைலோகளில் தொடர்ந்து அரை மணி நேரம் பயன்படுத்தினாலே போதும் உடனே சார்ஜ் ஏற்ற வேண்டிய நிலைக்கு வரும். ஒரு சில போன்கள் அப்படி இருக்காது.. சற்று கூடுதலான நேரம் சார்ஜ் நிற்கும். இந்த பிரச்சனையை போக்கும் வண்ணம், ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதும், ஒன்றரை மாதம் வரை அப்படியே சார்ஜ் இருக்கும் வகையில் ஆவெனிர் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது,18,000mAh சக்தி கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. அதாவது மற்ற ஸ்மார்ட் போனில் அதிகபட்சமாக…
Read More
நிதி பற்றாக்குறை ! 13,000 இணைப்பகங்களை மூடும் BSNL?

நிதி பற்றாக்குறை ! 13,000 இணைப்பகங்களை மூடும் BSNL?

நாடு முழுவதும் 13,000 BSNL தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்! ஊரகங்களில் உள்ள இந்த பெரும்பான்மை தொலைபேசி இணைப்பகங்களை மூடுவதால் BSNL நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மிச்சமாகும் என இதற்கு விளக்கமளித்துள்ளது. கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் BSNL நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவினை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. BSNL நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க 13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் BSNL கோரிக்கை வைத்துள்ளது. பொதுத்துறை தொலைத்…
Read More
எங்களைக் குற்றவாளிப் போல நடத்துகிறார்கள் – அச்சக சங்கத்தினர் ஆதங்கம் !

எங்களைக் குற்றவாளிப் போல நடத்துகிறார்கள் – அச்சக சங்கத்தினர் ஆதங்கம் !

சுபஸ்ரீ விவகாரத்தில் சர்ச்சையானதை அடுத்து அச்சக சங்கத்தினர் இன்னல்களை அனுபவிப்பதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விஷயம் சர்ச்சையானதை அடுத்து லாரி டிரைவர் மற்றும் அச்சகக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேனர் வைத்தவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இது சம்மந்தமாக தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கிண்டியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் 'எங்கள் வேலை பிரிண்டிங் செய்வது மட்டும்தான். அதைக் கட்டுவது எங்கள் வேலை அல்ல. அதைக் கட்டுபவர்கள் செய்யும் தவறினால் எங்களுடைய ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் எங்களைக் குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதும் எங்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல' எனக்…
Read More
கடன் வாங்கைலையோ கடன் ! கூவி அழைக்கும் வங்கிகள்!!

கடன் வாங்கைலையோ கடன் ! கூவி அழைக்கும் வங்கிகள்!!

நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் பொதுத்துறை, மற்றும் தனியார் வங்கிகளில் அக்டோபர் 3 முதல் நான்கு நாள்களுக்கு கடன் முகாம் நடத்தப்படுகிறது.நாடு பெரும் பொருளாதார மந்தநிலையை அடைந்துள்ள நிலையில் பெரும்பாலான துறைகளில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் தொழிற்கூடங்களுக்கு வேலையில்லா நாள்களை அறிவித்துவருகின்றன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துவருகின்றனர். மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்துள்ளதே இந்த பொருளாதார மந்தநிலைக்கான காரணமாக சொல்லப்பட்டது. எனவே மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 400 மாவட்டங்களில் வங்கிகள் மூலம் கடன் முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் முதல்கட்டமாக அக்டோபர் 3 முதல் நான்கு நாள்களுக்கு 250 மாவட்டங்களில் கடன் முகாம் நடத்தப்படுகிறது. சில்லறை வர்த்தகர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்புவோர், கல்வி கடன் வாங்க விரும்புவோர், தனிநபர் கடன் வாங்க விரும்புவோர் ஆகியோருக்கு உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. விஜயதசமி…
Read More
நீரிழிவு நோயாளிகள் மத்தியில் உறுப்பு நீக்கம் ? எம்வி மருத்துவமனை கணக்கெடுப்பு !

நீரிழிவு நோயாளிகள் மத்தியில் உறுப்பு நீக்கம் ? எம்வி மருத்துவமனை கணக்கெடுப்பு !

ராயபுரத்தில் இயங்கிவரும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையம் மற்றும் நீரிழிவிற்கான எம்வி மருத்துவமனை, கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்காக நீரிழிவு நிலையில் சிறுநீரகம் மற்றும் பாதங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மீது இந்தியாவின் முதல் ஆவணத்தை இன்று வெளியிட்டது. தமிழ்நாடு, நீரிழிவுசார் உடலுறுப்பு நீக்க கணக்கெடுப்பு ஆய்வு (TAS), என்ற திட்டம் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, நீரிழிவின் காரணமாக உடல்உறுப்பு நீக்க விகிதாச்சாரம் மீதான ஒரு ஆய்வாகும். சர்வதேச நீரிழிவு நிலை கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புரொஃபசர் ஆண்ட்ரூ போல்ட்டன், ராயபுரத்திலுள்ள நீரிழிவுக்கான எம்.வி. மருத்துவமனை மற்றும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணர், டாக்டர். விஜய் விஸ்வநாதன் ஆகியோரால் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்த கணக்கெடுப்பு ஆய்வு செயல்பாடு தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை, ராயபுரத்தில் அமைந்துள்ள புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு…
Read More
ஜியோ ஃபைபர் சேவைகளின் விலைப்பட்டியல் இதுதான்!

ஜியோ ஃபைபர் சேவைகளின் விலைப்பட்டியல் இதுதான்!

டெலிகாம் சந்தையில் கொடியைப் பறக்கவிட்ட கையோடு ஜியோ அதன் அடுத்த அதிரடியைக் கடந்த மாதம் அறிவித்திருந்தது. ஆம், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் சேவைகள் பற்றிய அறிவிப்புதான் அது. 100 Mbps முதல் 1 Gbps வரை கிடைக்கும் இந்த ஜியோ ஃபைபர் சேவைகள், செப்டம்பர் 5 முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டாலும் அதன் விலை நிலவரம் தெளிவாக வெளியிடப்படவில்லை. மக்கள் ஜியோவின் இந்த பிராட்பேண்ட் சேவையைப் பெற விண்ணப்பித்துக்கொண்டிருக்க இன்று செப்டம்பர் 5-ம் வந்தது. ஆனால், விலைப்பட்டியல் வந்ததாக இல்லை. விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க விரும்புவார்கள் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்க தற்போது விலை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி அறிமுக சலுகையாக 6,400 ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் 4K செட்-அப் பாக்ஸும், 5,000 மதிப்புள்ள ஜியோ ஹோம் கேட்வே சாதனமும் இலவசமாகக் கிடைக்கும். முதல்கட்டமாக 2,500 ரூபாய் கட்டவேண்டியதாக இருக்கும். அதில் 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட்,…
Read More
அழிவைச் சந்திக்கிறதா, ஆட்டோமொபைல் சந்தை?

அழிவைச் சந்திக்கிறதா, ஆட்டோமொபைல் சந்தை?

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகள், மாற்றத்திற்குத் தயாராகத் துவங்கி விட்டார்கள்.டெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண்டிருந்தன. ₹35 லட்சம் கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என எண்ணின. ஆனால் டெஸ்லாவில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கூடி மூன்று வருடங்களுக்கு புக் ஆகி விட்டதைக் கண்ட போதுதான் மற்றவர்கள் விழித்துக் கொண்டனர்! டெஸ்லா மின் கார் வெளியானதும், மற்றவர்களிடமும் அவசரம் தொற்றிக் கொள்ள, தங்களின் புதிய வகை மின்சார காரை உலக ஆட்டோ எக்ஸிபிஷனில் வைக்கத் தொடங்கினர்... இதனிடையில் கூகுளின் ஆளில்லா கார் சற்றே புருவத்தை உயர்த்த வைத்தாலும், தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது போலத் தோன்றுகிறது. அதே நேரம் ஃபோக்ஸ்வேகன் கம்பெனி தனது நாட்டு சகாக்களான பிஎம்டபிள்யு,…
Read More
நகர்ப்புறங்களில் படித்த பெண்கள் 8.7 % பேருக்கு வேலையில்லை ?

நகர்ப்புறங்களில் படித்த பெண்கள் 8.7 % பேருக்கு வேலையில்லை ?

நாடு முழுவதும் வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.இந்தியாவில் பணி அமர்த்தலில் பாலின சேர்க்கை என்ற தலைப்பில் ஹார்வர்டு பல்கலை மாணவர்களான ரேச்சல் லெவன்சன் மற்றும் லயலா ஓகேன் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: நகர்ப் புறங்களில் படித்த பெண்களில் 8.7 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. வேலை தேடுவதில் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ள போதிலும் பாலின இடைவெளியும், உயர்கல்வி கற்ற பெண்கள் ஆண்களுடன் போட்டி போடும் போது கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. கல்வி தகுதி, அனுபவம், ஆட்தேர்வு, விண்ணப்ப தேர்வு, விண்ணப்ப நடைமுறை ஆகியவற்றில் பெண்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பெண்கள் தங்களுக்கு கல்வி மற்றும் அனுபவம் அதிகளவில் இருந்த போதிலும் பாலின வேறுபாடால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பெண்களை அதிகளவில் வேலை அமர்த்தும் பட்சத்தில் அவர்களால் இந்தியாவின் மொத்த…
Read More