30
Oct
SCD எனப்படும் திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உகந்த சிகிச்சை வழங்குவதில் காவேரி மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கிறது.நடிகர் பத்மஸ்ரீ விவேக் முன்னிலையில் நடைபெற்ற திடீர் மாரடைப்புத் தடுப்பு நிகழ்ச்சியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 10 SCD சிகிச்சை பெற்று பயனுற்றவர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ நடிகர் விவேக் பேசியபோது கூறியதாவது: “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது. திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களிலிருந்து காக்க காவேரி மருத்துவமனை மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளை என்னால் காண முடிகிறது.விழிப்புணர்வு இல்லாததும், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தயங்குவதுமே, இந்தியாவில் திடீர் மாரடைப்பினால் மரணங்கள் (SCD) ஏற்பட முக்கியக் காரணங்களாகும். திடீரென மாரடைப்பினால் ஏற்படும் மரணம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் தேவை. பொதுமக்கள் திடீர் மாரடைப்பிலிருந்து காக்கும் சிறப்பு SCD மருத்துவமனைகளை அணுகி,…
