சினிமா

திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து  100 உயிர்களை காப்பாற்றியுள்ளது காவேரி மருத்துவமனை !

திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை காப்பாற்றியுள்ளது காவேரி மருத்துவமனை !

SCD எனப்படும் திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உகந்த சிகிச்சை வழங்குவதில் காவேரி மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கிறது.நடிகர் பத்மஸ்ரீ விவேக் முன்னிலையில் நடைபெற்ற திடீர் மாரடைப்புத் தடுப்பு நிகழ்ச்சியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 10 SCD சிகிச்சை பெற்று பயனுற்றவர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ நடிகர் விவேக் பேசியபோது கூறியதாவது: “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது. திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களிலிருந்து காக்க காவேரி மருத்துவமனை மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளை என்னால் காண முடிகிறது.விழிப்புணர்வு இல்லாததும், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தயங்குவதுமே, இந்தியாவில் திடீர் மாரடைப்பினால் மரணங்கள் (SCD) ஏற்பட முக்கியக் காரணங்களாகும். திடீரென மாரடைப்பினால் ஏற்படும் மரணம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் தேவை. பொதுமக்கள் திடீர் மாரடைப்பிலிருந்து காக்கும் சிறப்பு SCD மருத்துவமனைகளை அணுகி,…
Read More
‘அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

‘அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

'அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா? ஒவ்வொரு முறையும் உயிர் பலி தரப்பட வேண்டுமா?' என, 'போர்வெல்' விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம், சாட்டையடி கேள்வி எழுப்பியது. இதற்கு முன், சட்டவிரோத பேனர் பிரச்னையில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது போல், ஆழ்துளை கிணறு விஷயத்திலும், சரமாரியான உத்தரவுகளை, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. திருச்சி, மணப்பாறை அருகே, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுஜீத் வில்சன், மாலை விழுந்தான். உயிருடன் சிறுவனை மீட்பதற்கு, எவ்வளவோ முயற்சிகள் செய்தும், பலன் அளிக்கவில்லை. கடைசியில், நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான். இதற்கிடையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய, விஞ்ஞானி பொன்ராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது:ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும், ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில், சிறப்பு சட்டம்…
Read More
ஏர்டெல், வோடபோன் கடன் பிரச்னையால் பதறும் வங்கிகள்..?

ஏர்டெல், வோடபோன் கடன் பிரச்னையால் பதறும் வங்கிகள்..?

சில தினங்களுக்கு முன், உச்ச நீதிமன்றம், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருப்பதை அறிவோம். இந்த பிரச்னை ஏதோ டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் டெலிகாம் துறைக்கு இடையில் நடந்த பிரச்னையாக மட்டும் தானே நமக்குத் தெரியும்..! ஆனால் இப்போது இந்த தீர்ப்பினால், வங்கிகள் தங்கள் தலையில் கை வைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ஏர்செல் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக வெளி வந்த தீர்ப்புக்கு இவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்று கேட்டால்... கடன் என்கிறார்கள். அட ஆமாங்க. நம் ஏர்டெல், வொடாபோன் ஐடியா தொடங்கி பல முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் பெரிய அளவில் கடன் கொடுத்து இருக்கிறார்கள் நம் வங்கிகள். ஏர்டெல் நிறுவனம், தன்னுடைய கடந்த ஜூன் 2019 காலாண்டு நிதி நிலை…
Read More
ரூ.1.54 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனை!

ரூ.1.54 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனை!

ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மொத்தம் 2.02 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.சென்னையில் ரூ.5,580 கோடி மதிப்புக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் வீடு விற்பனை 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் ரூ.1.54 லட்சம் கோடிக்கு புதிய வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் பிராப்பர்ட்டி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மொத்தம் 2.02 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 1.78 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. மதிப்பு அடிப்படையில் இந்த ஆண்டில் ரூ.1.54 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 16 சதவீத வளர்ச்சியாகும். இந்திய நகரங்களிலேயே அதிகபட்சமாக மும்பையில் ரூ.62,970 கோடி மதிப்புக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2018ஆம்…
Read More
போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !

போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான, போக்ஸ்வேகன் குழுமம், அதன் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிறுவனமாக மாற்றப் போவதாகவும், புதிய நிறுவனம், ‘ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா’ என, அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், இந்த இணைப்பு மற்றும் புதிய நிறுவனம் சம்பந்தமான அனைத்து அனுமதிகளையும், ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.‘போக்ஸ்வேகன் இந்தியா, போக்ஸ்வேகன் குழுமம் விற்பனை இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா’ ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைகின்றன.தற்போது உள்நாட்டு சந்தையில் மிகக்குறைந்த பங்களிப்புடன் இருக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம், தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த மூன்று கார் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முடிவை எடுத்துள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக குர்பிரதாப் போபராய் இருப்பார். போபராய், தற்போது போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.’இந்தியா 2.0’ எனும், 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின்படி, இந்த இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன் மூலம், 2025ல்…
Read More
லாரி ஓட்டுவது எளிதல்ல? ‘கைதி’ பற்றி கார்த்தி !

லாரி ஓட்டுவது எளிதல்ல? ‘கைதி’ பற்றி கார்த்தி !

'கைதி' படம் வெளிவந்துள்ளதற்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் நடிகர் கார்த்தி.அப்போது அவர் பேசுகையில்,''கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஓட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம்.லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்குத்தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல, லாரியில்…
Read More
ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை !

ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை !

சென்னையின் புகழ் பெற்ற முதுகெலும்பு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை வல்லுனர்களில் ஒருவரான டாக்டர் பாலமுரளி அவர்களின் தலைமையில் , முதுகெலும்பு மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஹம்ஸா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் ஹம்ஸா மையம் துவங்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மறுவாழ்வு மையத்தில் 20 படுக்கைகள் உள்ளன, இங்கு தண்டுவட பாதிப்புகள், மூளை பாதிப்புகள், பக்கவாதம், கழுத்து மற்றும் முதுகு வலி, செரிபிரல் பால்ஸி என்னும் பெருமூளை வாதம், மற்றும் பல நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும் இருபது உள்நோயாளிகளுக்கான படுக்கைகளைக் கொண்ட ஹம்ஸா மையம், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் தினசரி பராமரிப்பு சேவைகளை வழங்கும். சென்னையில் முதல் முதலில் இம்மாதிரியான சேவைகளை பிரத்தியேகமாகவும் முழுமையாகவும் ஹம்ஸா மையம் வழங்குகிறது. மறுவாழ்வு சேவைகளோடு சேர்த்து கூடுதலாக பேச்சு மற்றும் முழுங்கும் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, சக ஆலோசகர், சமூக சேவகர், அறிவாற்றல் சிகிச்சை மற்றும் மனநல…
Read More
எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி ! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி ! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

செல்லிடப்பேசிகளில் ( Mobile Phone ) பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்கும், சூடாகும் என்று புகார்கள் இருந்து வரும் நிலையில், எளிதில் தீப்பிடிக்காத லித்தியம்-அயன் பேட்டரிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாக்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசி முதல் கார் வரை அனைத்திலும் பேட்டரி பயன்பாடு உள்ளது. இத்தகைய பேட்டரிகள், மின்னணு சாதனங்களின் ஆற்றல் சேமிப்பு கலனாக இருக்கின்றன. செல்லிடப்பேசிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் மூலப்பொருள்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களாக உள்ளதால், செல்லிடப்பேசிகள் வெடித்து தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து அந்த பேட்டரிகளில் எந்தவித எச்சரிக்கை குறியீடுகளும் வெளியிடப்படுவதில்லை. இத்தகைய பேட்டரிகளினால், பல செல்லிடப்பேசிகளை விமானங்களில் எடுத்துச் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க கடற்படையில், கப்பல்களில் இ-சிகரெட் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இவற்றைக்…
Read More
கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகள் பறிமுதல்! அமைச்சா் விஜயபாஸ்கா் தகவல் !!

கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகள் பறிமுதல்! அமைச்சா் விஜயபாஸ்கா் தகவல் !!

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சாா்பாக 3 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் 21,586 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாதவரம், கே.கே.நகா், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து ஏராளமானோா் முன்பதிவு செய்தும், நேரடியாகவும் பயணம் செய்கின்றனா். மேலும், பலா் தனியாா் பேருந்துகளில் பயணத்துக்காக பதிவு செய்துள்ளனா். நிகழாண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்கு 8 லட்சம் போ் பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்துத் துறை சாா்பில் செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக…
Read More
ரீமேக் ஆகும் அஜித்தின் உல்லாசம் ! 22 ஆண்டுகளுக்கு பின்..!!

ரீமேக் ஆகும் அஜித்தின் உல்லாசம் ! 22 ஆண்டுகளுக்கு பின்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரது நடிப்பில் வெளியான விசுவாசம், வீரம் போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், 1997-ம் ஆண்டு அஜித், விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் 'உல்லாசம்'. இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து உல்லாசம் படத்தை இயக்கிய, ஜேடி - ஜெரி இயக்குனர்களே இந்த ரிமேக் படத்தையும் இயக்கவுள்ளார்களாம். மேலும், இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில், விக்ரம் பிரபுவும், விக்ரம் கதாபாத்திரத்தில், துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More