01
May
பாஜகவின் எதிர்கால முதலமைச்சராக கருதப்படும் அண்ணாமலையை எப்படியாவது சட்டசபைக்குள் இடம் பெற வைக்க மத்திய பாஜக அரசு சாம,பேத,தான,தண்டங்களை பிரயோகித்து வருகிறது…! பிரதமரே அரவக்குறிச்சி மீது தனிப்பட்ட அக்கரை காட்டுகிறாராம்…! திமுகவை மிரட்டி, முடக்கி அரவக்குறிச்சியை அடித்து, தூக்கி எடுத்துவிட பாஜக அரசு முயற்சித்து வருகிறதாம். ‘’முதல்ல அண்ணாமலை ஓட்டுக் கேட்டு வந்தப்ப உண்மையிலேயே ஒரு காமெடிப் பீஸாத் தான் தெரிஞ்சார்..! அவரோட பேட்டிங்க, காணொலிங்க..எல்லாம் பாத்தபோது அப்படித்தான் தோணுச்சு..! ஆனா, இப்ப எங்களுக்கே கொஞ்சம் அபிராயம் மாறிடுச்சு..’’ இப்படிச் சொன்னவரு அரவக் குறிச்சியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர். ‘’சார் பயங்கரமாக எலெக்ஷன் ஒர்க் பண்றார்! அவரு கூட பெரிய டீமே வர்றாங்க…தொகுதி பிரச்சினைகள் அனைத்தையும் எடுத்து எந்த இடத்துல எதைப் பேசணுமோ அதைப் பேசுறார். ஆறுகள் வற்றிக்கிடப்பது, தண்ணீர் பிரச்சினை, மணல் அள்ளி ஆற்றுப்படுகைகள் சூறையாடப்பட்டு இருப்பது, வேலை இல்லா திண்டாட்டம்..அதற்கு தோதாக தொழிற்சாலைகள் கொண்டு வர ஏற்பாடு செய்வதாகப்…
