அரசியல்

எதிர்கட்சித்தலைவர் ஆகிறார் ஓபிஎஸ் ! அமித்ஷா ஆலோசனையை ஏற்றார் ஈபிஎஸ் ?

எதிர்கட்சித்தலைவர் ஆகிறார் ஓபிஎஸ் ! அமித்ஷா ஆலோசனையை ஏற்றார் ஈபிஎஸ் ?

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இனி தன் வழி தனி வழி என்கிற முடிவிற்கு வந்துள்ளதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் காட்டுகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நீண்ட இழுபறிக்கு பிறகே அறிவிக்கப்பட்டார். முதலில் எடப்பாடி பழனிசாமியை ஏற்க தயக்கம் காட்டிய ஓபிஎஸ் பிறகு ஒரு வழியாக ஏற்றுக் கொண்டார். இதன் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு தொடர்பான முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமியே எடுத்தார். கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடங்கி, வேட்பாளர் தேர்வு வரை எடப்பாடியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. தென் மாவட்டங்கள் மற்றும் சில தொகுதிகளில் மட்டுமே ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுக்கு எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுக்க முடிந்தது. ஆனால் தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரும்பாலானவர்கள் தோல்வியை தழுவினர். அதிலும் ஓபிஎஸ் பொறுப்பில் இருந்த தென் மாவட்டங்களில் அதிமுக படு தோல்வியை…
Read More
தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள் – துறைகளின் பெயர் மாற்றம்”

தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள் – துறைகளின் பெயர் மாற்றம்”

"உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் கொண்டும், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள் - துறைகளின் பெயர் மாற்றம்" - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. ✍️👉தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1. தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்றத் துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும். 2.…
Read More
என்ன செய்யப் போகிறார்கள் பிரேமலதா விஜயகாந்தும் சதீஷும் ?

என்ன செய்யப் போகிறார்கள் பிரேமலதா விஜயகாந்தும் சதீஷும் ?

அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைப்பதில் சரியான முடிவெடுக்காமல் தனது பலமான வாக்கு வங்கியை இழந்த தேமுதிக, இந்தத் தேர்தலிலும் சரியான அரசியல் முடிவை எடுக்காததால் படுதோல்வியைச் சந்தித்தது. அதன் வாக்கு சதவீதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே சரிந்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் தனி மனிதராக ஒருவர் கட்சியைத் தொடங்கி (பலரும் தொடங்கியுள்ளனர்) அதை நல்ல வாக்கு சதவீதத்துடன் முன்னுக்குக் கொண்டுவந்து தமிழக எதிர்க்கட்சியாக அமர்த்திய பெருமை விஜயகாந்த் ஒருவரை மட்டுமே சாரும். திராவிடர் கழகம் பெரியாரால் வளர்த்தெடுக்கப்பட்டாலும் அது ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வந்தது. திமுக அண்ணாவால் உருவாக்கப்பட்டாலும் அது திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்தது. எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினாலும் அது திமுகவிலிருந்து பிரிந்து வந்தது. அதன்பின் தமாகாவை மூப்பனார் உருவாக்கி பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்தாலும் அதுவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த கட்சியே. ஆனால், நடிகராக அரசியலில் புகுந்து தனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கி எம்ஜிஆருக்குப்…
Read More
அவதூறுகளைக் கடந்து அரியணை ஏறும் மு.க.ஸ்டாலின் !

அவதூறுகளைக் கடந்து அரியணை ஏறும் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலின் ஒரு நீண்ட, கடினமான பயணத்தின் முடிவில் இந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். மிக நெருக்கடியான சூழலில் கட்சியை வழிநடத்திய பொறுமையும் துணை முதல்வராக இருந்த அனுபவமும் அவரது புதிய பதவியில் உதவக்கூடும். 1960களின் பிற்பகுதியில் சென்னை கோபாலபுரத்தில் அப்பகுதி இளைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்தியதில் துவங்கி, தி.மு.கவின் தலைவராகவும் முதலமைச்சராகவும் உயர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலினின் பயணம் மிக நீளமானது, கடினமானது என்பதை அவரது அரசியல் எதிரிகள்கூட ஒப்புக்கொள்வார்கள். மு.க.ஸ்டாலின் சென்னையின் மேயராகவும் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது அவரது செயல்பாடுகள் பல மட்டங்களிலும் கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றன. இதன் தொடர்ச்சியாக, 2016ன் பிற்பகுதியில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உடல்நலம் குன்றிய பிறகு, கட்சியின் பொறுப்பை மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துக்கொண்டபோது, கட்சித் தொண்டர்களின் கவனம் மட்டுமல்லாமல் அரசியல் எதிரிகளின் பார்வையும் அவர் மீது தீவிரமாகக் குவிந்தது. 2018ல் மு.கருணாநிதி மறைந்த பிறகு, தி.மு.கவின் தலைவராக…
Read More
20 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த அ.ம.மு.க.,

20 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த அ.ம.மு.க.,

சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., கடும் தோல்வியை சந்தித்த போதிலும், அக்கட்சி பெற்ற ஓட்டுகளால், 20 தொகுதிகளில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பறிபோயுள்ளது. அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கி, நடத்தி வருகிறார். இக்கட்சி, 2019 லோக்சபா தேர்தலில், சில முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், சில தொகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றது.அதைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., உட்பட, பல்வேறு கட்சிகளுடன் இணைந்து களம் இறங்கியது. லோக்சபா தேர்தலை போல, ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட தினகரனும் தோல்வியை தழுவினார். பெரும்பாலான தொகுதிகளில், ஓட்டு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரம், 20 தொகுதிகளில், அ.ம.மு.க., பெற்ற ஓட்டுகளால், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: *கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், 977 ஓட்டுகள் வித்தியாசத்தில்…
Read More
கொங்கு மண்டலத்தின்  வெற்றி கவுண்டர்களின் வர்க்க அரசியலின் வெற்றி!

கொங்கு மண்டலத்தின் வெற்றி கவுண்டர்களின் வர்க்க அரசியலின் வெற்றி!

கொங்கு மண்டலத்தில் எடப்பாடியாரின் வெற்றிக்கு என்ன காரணம் ? கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதியில 9 ல அதிமுக ஜெயிச்சிருக்கு. கோவைத் தெற்கில மட்டும் பிஜேபி வானதி ஜெயிச்சாங்க. திருப்பூர் மாவட்டத்தில (8 – இல் 5 வெற்றி), ஈரோடு மாவட்டத்தில (8 -இல் 5 வெற்றி), சேலம் மாவட்டத்தில (11 -இல் 10 வெற்றி) என 29 தொகுதியில அ.தி.மு.க அணி கொடி நாட்டியிருக்குது. ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைமையில் தி.மு.க அணி 158 இடங்களை கைப்பற்றியிருக்கும் அலைக்கு நேர் எதிரான அலை இது. இந்த கொங்கு மண்டல அலைங்கிறது கவுண்டர் சாதி அலையாகப் பார்க்கப்படுது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் தான். இதில் ஒரு முரண்பாடு இருக்குது. என்னன்னா எடப்பாடியார் கவுண்டர் தலைமையின் வெற்றியாக மட்டும் இதை கணக்கில் கொண்டால் தி.மு.க மட்டும் சாதிக்கு அப்பாற்பட்டா வேட்பாளர்களை நிறுத்துச்சு ? இல்லையே! அதுவும் பெரும்பாலான…
Read More
அ.தி.மு.க.,வின் ‘தப்புக்கணக்கான’ ஜாதி கணக்கு ?

அ.தி.மு.க.,வின் ‘தப்புக்கணக்கான’ ஜாதி கணக்கு ?

அ.தி.மு.க.,வின் 'தப்புக்கணக்கான' ஜாதி கணக்கு பா.ம.க.வின் செல்வாக்கை நம்பிய அ.தி.மு.க. தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. தி.மு.க.வுக்கு மிகப் பெரிய வெற்றியை வட மாவட்டங்கள் கொடுத்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பெரிய அடித்தளமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகள்; திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகள்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் முழுமையாக தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுஉள்ளது. மற்ற தொகுதிகளை தி.மு.க. கூட்டணி முழுமையாக கைப்பற்றியது. வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் இந்த மாவட்டங்களில் எல்லாம் எளிதாக வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. கணக்கு…
Read More
6 மாவட்டங்களில் அதிமுகவை வாஷ் அவுட் செய்த திமுக

6 மாவட்டங்களில் அதிமுகவை வாஷ் அவுட் செய்த திமுக

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. 15 தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் வாகை சூடியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி உள்பட 10 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளையும் திமுக தன்வசப்படுத்தியுள்ளது. லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர்,மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறி, என அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதன்மூலம் திருச்சி மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவினாலும், அதிமுகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதனால் பரமகுடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் திமுக வசமானது. அரியலூர் மாவட்டத்தின் 2…
Read More
திமுக ஆட்சி சீர் செய்ய வேண்டிய ஏகப்பட்ட விஷயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

திமுக ஆட்சி சீர் செய்ய வேண்டிய ஏகப்பட்ட விஷயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

பத்து வருடங்கள் கழித்து மீண்டும் அரியணையில் திமுக அமர்வதால் உடன்பிறப்புகள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். கடந்த தேர்தலில் வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்த திமுக அரியணையை அதிமுகவிடம் பறிகொடுத்தது. அதனால், இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டுமென்பதில் திமுக மிகத் தீவிரமாகக் களமாடி வெற்றியையும் பெற்றிருக்கிறது.இப்படிப்பட்ட நிலையில், கடந்த காலத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற கதை எப்படி என்பதை நினைவுகூர்வது உடன்பிறப்புகளுக்கு மேலும் இதமான மனநிலையை கொடுக்கும். 1957ஆம் ஆண்டு தேர்தலில் திமுக முதல்முதலில் வாக்கு அரசியலுக்குள் நுழைந்து 14 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. அதற்கடுத்து நடந்த 1962ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியின் வாக்குவங்கி 27 விழுக்காடாக உயர்ந்தது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கும் திமுக நகர்ந்தது.அதன் பிறகு நடந்த 1967 தேர்தல், திமுகவின் வரலாறை மட்டுமல்ல தேசியக் கட்சியான காங்கிரஸின் வரலாறையும் மாற்றி அமைத்தது. அதுவரை தமிழ்நாட்டில் உயர்ந்திருந்த கை, உதயசூரியனின் அனலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தலை மேல்…
Read More
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில் சாதித்து காட்டி உள்ளார்னு தான் சொல்லணும்.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில் சாதித்து காட்டி உள்ளார்னு தான் சொல்லணும்.

ரஜினி அரசியலுக்கு வராமலேயே எப்படி ரிட்டையர் ஆனாரோ, அந்த மாதிரி சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில் சாதித்து காட்டி உள்ளார்னு தான் சொல்லணும். அதிமுகவுக்கு ஒரு பெரிய ஷாக்கை சசிகலாவின் அரசியல் விலகலின் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நேற்றைக்கு எக்ஸிட் போல்கள் வெளியாச்சு.. அதில், பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமான கணிப்புகள் கூறப்பட்டுள்ளன.. இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், தென் மண்டலங்களில் யாருக்கு சாதகமான சூழல் அமைய போகிறது என்ற ஆவல் அதிகரித்தபடியே இருந்தது. இதற்கு 2 காரணம் உண்டு.. ஒன்று சசிகலா அரசியலில் இருந்து விலகியது.. மற்றொன்று, அமமுக துணிந்து களம் இறங்கியதுதான். சசிகலாவை பொறுத்தவரை 30 வருடம் ஜெ.வுடன் சேர்ந்து லாபி செய்தவர்.. அரசியல் ஞானம் தெரிந்தவர்.. அனுபவம் மிக்கவர்.. தன் சமூக வாக்குகளை அபரிமிதமாக அள்ளக்கூடிய திறன் படைத்தவர்..  இவ்வளவு சாணக்கியத்தனம் நிறைந்தவரை, விட்டுவிட வேண்டாம், இவர் மட்டும் உங்களுடன் இருந்தால் தென்மண்டலங்களை வாரிசுருட்டி கொண்டு…
Read More