அரசியல்

உளவுத்துறை பக்கம் கவனம் திருப்பிய முதல்வர் ஸ்டாலின்

உளவுத்துறை ஒரு ஆட்சியோட மூளைன்னு சொல்லலாம்.. தமிழ்நாடு முழுவதும் நடக்கிற விஷயங்களை உடனுக்குடன் முதல்வருக்கு தெரிவிக்கிறதுக்குத்தான் உளவுத்துறை பயன்படுத்தப்படுது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அதில சில பிரச்சினைகள் இருந்ததை விமர்சகர்கள் மட்டுமல்லாம ஸ்டாலினுக்கு நெருக்கமான பலரும் எடுத்துச் சொன்ன நிலையில உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை ஜெயலலிதா பாணியில் உளவுத்துறையில் அரங்கேற்றியிருக்கிறாருன்னு சொல்றாங்க. தமிழக அரசியல் வரலாற்றில் உளவுத்துறையை சிறப்பாக செயல்படுத்தியவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தான். ஆனால் கருணாநிதியின் உளவுத்துறை மேல்மட்ட அளவிலான விஷயங்களை மட்டும் கையிலெடுத்தது. அடிமட்டத்தில் வட்டச் செயலாளர்கள் முதல் வார்டு கவுன்சிலர்கள் வரை போட்ட ஆட்டங்களை கண்காணித்து உளவுத்துறை தகவல் அளிக்கவில்லையா, இல்லை அளிக்கப்பட்ட தகவல்களை சரியாக கவனிக்கப்படவில்லையான்னு தெரியலை. .இதன் விளைவு 2006-11 ஆட்சிக்குப்பின் திமுகவுக்கு பெருமளவில் பாதிப்பு வார்டு அளவிலான கட்சிக்காரர்களாலேயே ஏற்பட்டதுன்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க. உளவுத்துறையை முழுமையாக நம்பியவர் ஜெயலலிதா. எந்த அளவுக்குன்னா உளவுத்துறையை டிஜிபி அந்தஸ்து அதிகாரி…
Read More
உளவுத்துறை உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்

உளவுத்துறை உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்

உளவுத்துறை ஒரு ஆட்சியின் கண், காது, மூளை எனலாம். திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அதில் தொய்வு இருந்ததை விமர்சகர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை ஜெயலலிதா பாணியில் உளவுத்துறையில் அரங்கேற்றியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் உளவுத்துறையை சிறப்பாக செயல்படுத்தியவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தான். ஆனால் கருணாநிதியின் உளவுத்துறை மேல்மட்ட அளவிலான விஷயங்களை கையிலெடுத்தது. அடிமட்டத்தில் வட்டச் செயலாளர்கள் முதல் வார்டு கவுன்சிலர்கள் வரை போட்ட ஆட்டங்களை கண்காணித்து அளிக்கவில்லை, அல்லது அளிக்கப்பட்டது சரியாக கவனிக்கப்படவில்லை எனலாம்.இதன் விளைவு 2006-11 ஆட்சிக்குப்பின் திமுகவுக்கு பெருமளவில் பாதிப்பு வார்டு அளவிலான கட்சிக்காரர்களாலேயே ஏற்பட்டது எனலாம். உளவுத்துறையை முழுமையாக நம்பியவர் ஜெயலலிதா. எந்த அளவுக்கு என்றால் உளவுத்துறையை டிஜிபி அந்தஸ்து அதிகாரி கவனித்து வந்தபோதும், ஐஜி அந்தஸ்து அதிகாரியிடமும் நேரடியாக தகவலை கேட்டு வாங்கினார். டிஜிபி தனக்கு சில விஷயங்களை மறைக்கலாம் என்பதால் இருமுனை உளவுத்தகவல்களை பெற்றார்.…
Read More
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக சுனில்குமார் ஐபிஎஸ்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக சுனில்குமார் ஐபிஎஸ்

கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் இருந்த சுனில்குமார் ஐபிஎஸ் அண்மையில் ஓய்வுப் பெற்றார். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக அவரை தமிழக அரசு நியமித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் சாலை மறியல் நடந்தது அப்போ, காவல்துறையினரால் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிந்தாரிப்பேட்டை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போ அவங்களை பார்ப்பதற்காக அப்போதைய திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபத்திற்குச் சென்றார். அந்தநேரத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியான இதே சுனில்குமார் ஐபிஎஸ், மு.க.ஸ்டாலினை அனுமதிக்கலை. அப்போது நியாயம் கேட்டு, மண்டபத்திற்குள் நுழைய முயன்ற மு.க.ஸ்டாலினை நெஞ்சில் கை வைச்சு சுனில்குமார் ஐபிஎஸ். தள்ளிவிட்டதா சொல்றாங்க . அந்த சம்பவத்தோட படம் மறுநாள் ஒரு நாளிதழ்ல வெளி வந்தது. அப்போ சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துக்கிட்டு இருந்ததால், இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் அப்போ எதிரொலிச்சது. நாளிதழில் வெளியான புகைப்படத்தை பேரவையில் காட்டி,…
Read More
முதல்வரின் ஆலோசகராக அசோக்வர்தன் ஷெட்டி?

முதல்வரின் ஆலோசகராக அசோக்வர்தன் ஷெட்டி?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசகராக மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கோட்டை வட்டாரத்தில பரபரப்பாக பேசப்பட்டு வருது.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தலைமை செயலாளர், முதல்வரின் ஆலோசகர்கள் என ஒவ்வொரு பொறுப்பிலும் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டாங்க. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் இந்த தொடக்கமே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.இருந்தபோதும் முதல்வர் தரப்பில் ஆலோசகர் பதவிக்கு என ஒரு தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு மாஜி அதிகாரிக்குதான். அவர்தான் தமிழகம் நன்கு அறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி.திமுகவின் 2006-2011 ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தாரு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போ உள்ளாட்சித்துறை செயலாளராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டிதான். மு.க.ஸ்டாலினுக்கு அரசு நிர்வாகம் குறித்த முழுமையான ஆலோசகராகவும் அசோக்வர்தன் ஷெட்டி செயல்பட்டார்.யார் இந்த அசோக் வரதன் ஷெட்டி. 1973 S.S.L.C முடிக்கிறாரு. அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும்…
Read More
தமிழக அமைச்சரவையில் மாற்றம்…புதிய அமைச்சர்கள் பட்டியல்..?

தமிழக அமைச்சரவையில் மாற்றம்…புதிய அமைச்சர்கள் பட்டியல்..?

திமுக ஆட்சி அமைத்தவுடன் ஆறு மாத காலம் முடிந்ததும் அமைச்சர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களின் இலாகாக்களை மாற்றலாம் அல்லது புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற வைக்கலாம்னு திமுக திட்டமிட்டிருந்தது. ஆரம்ப காலம் தொட்டு அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி வந்தது திமுக தலைமை. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்னு சொல்லப்படுது. அந்தவகையில் அமைச்சரவையின் புதிய பட்டியலை மாற்ற இருப்பதாக திமுக மேல்மட்ட நிர்வாகிகளிடையே பேச்சுக்கள் வர ஆரம்பிச்சிருக்கு. அந்தப் பட்டியலில் திமுக சீனியர் அமைச்சரான ஐ.பெரியசாமி, ’’தான் எதிர்பார்த்த துறை தனக்கு கிடைக்கவில்லை’னு ரொம்பவே மன வருத்தத்தில் இருந்து வந்தார். ஸ்டாலினிடமும்  நேரடியாக எடுத்துச் சொல்லியிருந்தாரு. இந்நிலையில் செந்தில்பாலாஜியிடம் இருக்கிற மின்சாரத்துறையை கூட்டுறவு துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமியிடம் கூடுதல் பொறுப்பாக குடுக்கப் போறாங்க. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை மட்டுமே அமைச்சர் செந்தில்பாலாஜி கவனிப்பார்னு சொல்றாங்க. சீனியர் அமைச்சர் துரைமுருகனும்,…
Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக எங்கள் காரை நிறுத்துவதா..? நீதிபதி கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக எங்கள் காரை நிறுத்துவதா..? நீதிபதி கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக எங்கள் காரை நிறுத்துவதா..? நீதிபதி கேள்வி! நடிகர் சிவாஜிகணேசனின் 96-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் பலர் கலந்துகிட்டாங்க.. கூகுள் நிறுவனம் கூட தனது டூடுளில் சிவாஜி கணேசன் படத்தை இடம்பெறச் செய்து கவுரவம் வழங்கியது. தமிழக அரசு சார்பிலும், சிவாஜி கணேசனை நினைவுகூறும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில், உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் வைத்துதான் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலர் இதில் பங்கேற்றனர். சிவாஜி குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மொத்தமே 20 நிமிட நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சாலையில் காத்திருந்ததோ பல ஆயிரம் வாகனங்கள். முதல்வர் வருகை தந்ததால், போலீசார் அந்த சாலையில் பிற வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து…
Read More
போதை பொருள் விவகாரத்தில் பிரபலமான அரசியல்வாதி ஒருவர் சிக்கி இருக்கிறாரு  !

போதை பொருள் விவகாரத்தில் பிரபலமான அரசியல்வாதி ஒருவர் சிக்கி இருக்கிறாரு !

  தமிழகத்தை சேர்ந்த மிக பிரபல அரசியல்வாதி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வசமா சிக்கி இருக்கிறார்னு தகவல் வந்துருக்குது !!! இப்போது தெரியுதா ஒரு காவல்துறை அதிகாரிய ஆளுநரா போட்டதன் காரணம் என்னன்னு. கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத் துறைமுகத்தில் 21000 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டுச்சி ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை இந்தியாவில் விநியோகம் செய்ய இருந்த நிலையில் பதுங்கியிருந்து கைது செய்தது போதை பொருள் தடுப்பு பிரிவு. இந்நிலையில் அதில் சென்னையில் தங்கி இருந்த தம்பதியினர் பிடிபட்டிருக்காங்க. அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மிக பிரபலமான அரசியல்வாதி ஒருவர் சிக்கி இருக்கிறாருங்கிற தகவல் வெளியாகியிருக்குது. ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பல் மூலமா இரண்டு கன்டெய்னர்களில் ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குநரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் ஒண்ணு கிடைச்சது. அதன்பேரில் கடந்த வாரம், இரானிலிருந்து குஜராத்…
Read More
கவலைப்படாதீங்க”.. தைரியப்படுத்திய முதல்வர் !. பிடிஆரின் அதிரடி முடிவு !

கவலைப்படாதீங்க”.. தைரியப்படுத்திய முதல்வர் !. பிடிஆரின் அதிரடி முடிவு !

கவலைப்படாதீங்க".. தைரியப்படுத்திய முதல்வர் !. பிடிஆரின் அதிரடி முடிவு ! "நான் யாருடன் நேரத்தை செலவிடணுங்கிறத முடிவுசெய்யணும். இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு மட்டும் பதில் தருவேன்"னு இப்ப இருக்கிற குழப்பமான சூழ்நிலையில தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிடிஆர் ஒரு அதிரடி முடிவை அறித்துள்ளார். ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பங்கேற்காதது குறித்த விவாதங்கள் சமீபகாலமாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.. இதற்கு பதிலடியாக பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டாரு அதுவும் வழக்கம் போல பரபரபபாக்கப்பட்டுச்சு... ஆனால் அதுக்கும் சலசலப்பு கிளம்புச்சு.. ஒருபக்கம் பாஜகவின் அண்ணாமலையும் அதிமுகவில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் பிடிஆரை விமர்சித்து மாறி மாறி பேட்டிகளை தந்தாங்க.அதேசமயம், பிடிஆர் அளித்து வரும் பேட்டிகளும் பரபரப்பை கிளப்பி விடுறதால திமுகவுல தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டதா செய்திகள் கசிஞ்சது.. டிகேஎஸ் இளங்கோவனைப் பத்தி   பிடிஆர் சொன்ன கருத்தை வைச்சே அவருக்கு செக் வைக்கவும் திமுகவுக்குள்…
Read More
பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?’ லூஸ்-டாக் வேண்டாம்”..

பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?’ லூஸ்-டாக் வேண்டாம்”..

பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?' லூஸ்-டாக் வேண்டாம்".. ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்- பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக தலைமை எச்சரிக்கை? இளங்கோவன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் செயல்படும் விதம் திமுக மேலிடத்தை அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாக தெரியுது. இதுபோன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கக் கூடாதுன்னு கட்சி மேலிடம் அவருக்கு எச்சரிக்கை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்குது.  திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ்.இளங்கோவன், அளித்துள்ள ஒரு பேட்டி இதை உறுதி படுத்துற மாதிரி இருக்குது.  தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் பிற அமைச்சர்களை விடவும், எப்போதும் செய்திகளில் அடிபடக் கூடிய அமைச்சர் பெயர்ன்னா நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர்தான். மெத்த படித்தவர், பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருங்கிறதுனாலேயே நாட்டிலேயே இவர் அளவுக்கு தகுதியான நிதியமைச்சர் இல்லைங்கிற ரீதியில் ஆரம்பத்தில் அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தது. தேசிய ஊடகங்கள் கூட இதில் விதி…
Read More
 எதிர்க்கட்சிகளால் டார்கெட் செய்யப்படும் பிடிஆர்..?

 எதிர்க்கட்சிகளால் டார்கெட் செய்யப்படும் பிடிஆர்..?

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வளைகாப்பு பேச்சையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டிவியா சமீபத்தில் செய்த செயல்பாடுகளையும் ஒப்பிட்டு இந்தியா முழுவதும் இதுதான் உங்கள் திராவிட ஸ்டாக்கான்னு கிண்டல் பண்ணிட்டு வர்றாங்க நெட்டிசன்ஸ். சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த GST கூட்டத்தில் ஏன் கலந்துக்கலைங்கிற கேள்வியை தமிழக நிதி அமைச்சரிடம் கேட்க, நிகழ்ச்சி அழைப்பு லேட்டாக வந்ததாகவும், அதற்குள் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால கூட்டத்துக்கு போகலைன்னு சொல்லியிருந்தாரு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். GST கூட்டம்ங்கிறது 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு மாதிரி. முக்கியமான கூட்டம் இங்குதான் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை, வரி வருவாய் பங்கீடு, வரி மாற்றம் எல்லாத்தையும் பேச முடியும் ஆனால் அதை விட்டுட்டு வளைகாப்பு முக்கியமான்னு நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப இந்தியா முழுவதும் திமுக அரசாங்கத்தின் செயல்பாடு கடும் விமர்சனத்தை உண்டாக்கிடுச்சு. இந்த நிலையில் மத்திய சுகாதார துறை…
Read More