அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்துச்சு. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செஞ்சாங்க.. அப்போ சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை செஞ்சாங்க. 

சென்னை பெருநகராட்சியில் ரூ. 1, 000 கோடி கமிஷன் மற்றும் லஞ்சம் வாங்கிக் கொடுத்ததைப் பாராட்டி சென்னை பெருநகர தலைமை பொறியாளர் நந்தகுமாருக்கு பதவி உயர்வு கிடைக்கும்னு பெருமூச்சு விடுறாங்க. சென்னை பெருநகராட்சி அதிகாரிகள். இத்தனைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்தப்போ. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செஞ்சாங்க. அப்போ சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை பண்ணுனாங்க. அமைச்சருடன் சேர்ந்து ஒரு அதிகாரி வீட்டில் ரெய்டு நடக்குதுன்னா, அந்த அதிகாரி யார்? இவருக்கு அப்படி என்ன முக்கியத்துவம்? யார் இந்த நந்தக்குமார்? என்ற பல சந்தேகங்கள் வருதா இல்லையா ?. டெண்டர் முறைகேடுகள்ல வேலுமணிக்கு உதவி செஞ்சாருங்கிற புகாரின் அடிப்படையில் சோதனை நடந்ததுன்னாலும், நந்தகுமார் ஒரு வகையில் வேலுமணிக்கு உறவினர்னு சொல்றாங்க. திமுகவில் கட்டிட தொழிலாளர் சங்க தலைவராக இருக்கிற பொன்.குமாரின் மைத்துனரும்கூட..! கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட, சென்னை மாநகராட்சி சிவில் என்ஜினியர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை வைச்சாங்க. அதில், அதிகாரத்தை மீறி பதவி உயர்வு பெற்று பல நூறு கோடிகளை ஊழல் மூலம் சேர்த்த சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை வச்சாங்க. ஆனா ஒரு நடவடிக்கையும் ஸ்டாலின் எடுக்கலை. இதுக்கிடைல நந்தகுமார் குறித்த சில தகவல்களும் கசிந்தபடியே வெளிவருது. 1993-ல் சென்னை டிப்போவில் லாரி ரிப்பேர் பார்க்கும் உதவி பொறியாளராக வேலையில் சேர்ந்தவர் நந்தகுமார்.. லாரிகளை மட்டுமே கவனிப்பதுதான் இவரது முக்கிய வேலையாம்.. பிறகு தான் அதிகார மையத்தின் உதவியுடன் அடுத்தடுத்த போஸ்டிங்கில் மேலே வந்துள்ளாரு.. அதாவது சென்னை பெருநகராட்சியின் மழைநீர் வடிகால், பேருந்து சாலைகள், சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட துறைகளின் தலைமை பொறியாளர் நந்தகுமார், பொதுப்பிரிவில் தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டார்… இதில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பேருந்து சாலை பிரிவில் கண்காணிப்பு பொறியாளரா வேல் செஞ்சப்போ, 200 கோடி ரூபாய் ஊழலில் நந்தகுமார் சிக்கினாராம்.. அதற்கு பிறகுதான் மழைநீர் வடிகால் பிரிவின் சிறப்பு திட்டத்திற்கு மாறி வந்துள்ளாரு சென்னை நகரத்துக்கு தனியாக மழைநீர் வடிகால் அமைக்க, ரூ.1720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் நந்தகுமார் கைங்கரியத்தை காட்டியிருக்காரு… இந்த டெண்டர் இப்போ ரத்து செய்யப்பட்டு விட்டாலும், எந்த துறையில் ஊழல் செய்ய முடியுமோ அங்கே ஜம்ப் ஆகிவிடுவாராம் இந்த நந்தகுமார்..

இதுசம்பந்தமா சென்னை பெருநகராட்சி அதிகாரிகள் தங்களோட மனககுமுறலை கொட்டியிருக்காங்க.என்னன்னா. ‘’திமுக ஆட்சிக்கு வந்ததும் எத்தனையோ நேர்மையான உயரதிகாரிகள் பணியிடமாற்றம், பதவி மாற்றம் செய்யப்பட்ட போதும் இந்த நந்தகுமார் மட்டும் அதே பணியிடத்தில் ஆணி அடிச்ச மாதிரி உக்காந்திட்டு வர்றாரு. இத்தனைக்கும், திமுக ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசிய இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணியும் அவரது அமைச்சரவை சம்பந்தப்பட்டவர்கள், டெண்டர்கள்ல முறைகேடு பண்ணியிருக்காங்க அவர்கள் மேல திமுக ஆட்சி அமைந்தவுடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன்னு கொங்கு கோட்டையில் மார்தட்டினார்.இப்ப என்னாச்சு.

அவர் சொன்னதுபோல் போக்குவரத்து துறை அமைச்சர்எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து எஸ்.பி.வேலுமணி இல்லத்திலும் நெருங்கிய நட்பு வட்டாரங்களின் இடங்களிலும் சோதனைகள் நடந்துச்சு. ஆனா வேலுமணி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். அவரது நட்பு வட்டாரங்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறாங்க. அவர்களது விவகாரம் வேற. தலைமை பொறியாளராக உயர்பதவியில் இருந்த, இருக்கிற நந்தகுமாரின் விவகாரம் வேற. நந்தகுமாரை மேலே சொன்னது போல் பணியிடம், பதவி மாற்றம் செய்திருக்கலாம் இந்த திமுக அரசு. ஆனா அதற்கு பதிலாக மேலும் பதவி உயர்வு கொடுக்க இந்த திமுக அரசு தயாரா இருக்குதுன்னு சொல்றாங்க. . நந்தகுமார் ஐ.ஏ.எஸ் பதவிக்கு இணையாக சென்னை மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் என்ற பலகையை மாட்டி விரைவில் கிளம்பி விடுவார் போல.

எம்எல்ஏவா இல்லாமலேயே முதல்வர் ஆயிரலாம் அப்புறம் ஆறு மாதத்தில் எம்எல்ஏ ஆக சட்டமன்றத் தேர்தலில் நின்னு ஜெயிச்சா போதும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முதல்வர் ஆகலாம். ஆனால், ஐ.ஏ.எஸ்., பதவி, அல்லது அதற்கு ஈடான பதவியை அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் அவரது தொடர்புகளை வைத்து இந்த பதவியை அடைந்து விடத்துடிக்கிறார் நந்தகுமார். இதற்கெல்லாம் திமுக அரசு வளைந்து கொடுக்க காரணம் என்ன ? நேர்மையான அதிகாரியான ககந்தீப் சிங் பேடி நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க தயாராகத் தான் இருக்காரு. ஆனா அவரோட கைகள் கட்டப்பட்டு இருக்கு. மேலிடத்தில் இருந்து ககந்தீப்சிங் பேடிக்கு அழுத்தம் கொடுத்துக்கிட்டே இருக்காங்க.. எஸ்.பி.வேலுமணியும், அவரது சகோதரர் அன்பரசுவும் சிக்கிக்கொள்ளக் கூடாதுங்கிறதுக்காக, கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பொ.குமாரின் மைத்துனரான இந்த நந்தகுமாரை வைத்து திமுகவுடன் எஸ்.பி.வேலுமணி பேரம் பேசுறாராம். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசுக்கு நெருக்கமானவர் தான் இந்த நந்தகுமார்.

தான் சம்பாதித்த பலநூறு கோடிகளில் பாதியை நந்தகுமார் கொடுக்க முன் வந்திருக்காராம்‌. அதே போல அன்பரசனும், அவரது சகோதரரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் சில கோடி ரூபாய்களை திமுக ஆட்சித் தலைமைக்கு கொடுக்க பேரம் பேசப்பட்டு வருது. அந்த டீல் பாதி முடிஞ்சிடுச்சாம்.. அதனால்தான் நந்தகுமாருக்கு பதவி உயர்வு குடுத்திருக்காங்க.. இந்த டீல் ஒத்துவராவிட்டால் நந்தகுமார் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அப்ரூவராக மாறவும் தயாராக இருந்தாராம். ஆனா, அதிமுக ஆட்சியில் சம்பாதித்தவர், திமுக ஆட்சியிலும் சம்பாதித்து நாளை திமுக ஆட்சிக்கும்  துரோகம் விளைவிக்க மாட்டாராங்கிறத இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் எடுத்துக்கணும்ங்கிறாங்க சென்னை பெருநகராட்சியில் பணிபுரியும் நேர்மை அதிகாரிகள்.என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்.