பொதுச் செயலாளராகும் எடப்பாடி ! சசிகலா மறைமுக ஆதரவு ?

பொதுச் செயலாளராகும் எடப்பாடி ! சசிகலா மறைமுக ஆதரவு ? அப்போ ஓபிஎஸ் கதி ?

சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வெளிவந்த பிறகு அவரது அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கணும்? எடப்பாடி பழனிசாமி என்ன செஞ்சுகிடடிருக்கிறாருங்கிறதப் பத்தி விரிவா பார்க்கலாம்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான்னு சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. சசிகலாவை நீக்கி பிறப்பிக்கப்பட்ட தீர்மானம் செல்லும்னு உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்குது. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் சசிகலாவுக்கு இந்த தீர்ப்பு சரிவையும், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான க்ரீன் சிக்னலையும் கொடுத்திருக்குது.

நான்காண்டு சிறை தண்டனை நிறைவடைந்து சென்னை திரும்பிய சசிகலா நம்மை நோக்கி அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வருவாங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தாரு ஆனா ஏமாந்து போய்ட்டாரு. டிடிவி தினகரனும் இந்த கருத்தை தொடர்ந்து பொது வெளியில் பேசிக்கிட்டு வந்தாரு. ஓ.பன்னீர் செல்வமே வரவேற்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லைன்னும் சொன்னாரு. ஆனால் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த பக்கம் தலைகாட்ட மறுத்துட்டாங்க ஆனா அமமுக தொண்டர்கள் அளித்த வரவேற்பில் சென்னை வந்து சேந்தாரு. சசிகலா.

வந்தவுடன் அதிரடி
தான்னு எதிர்பார்த்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஏன்னா அதுக்கு முன்னாடியே அவருக்கு அதிமுக நிர்வாகிகள், அவரால் கை காட்டப்பட்டு பதவிகளை வாங்குவாங்க ஷாக் கொடுத்துட்டாங்க. தேர்தலுக்கு பிறகு பார்ப்போம், பதவியை காப்பாற்றுறதற்காக வர மறுக்கிறாங்கன்னு தனக்கு தானே சசிகலா ஆறுதல் சொல்லிக்கிட்டாரு.

தேர்தல் தோல்விக்குப் பிறகும் அதிமுகவினர் தன் பக்கம் வராத நிலையில் ஒவ்வொருவருக்காக போனப் போட்டு பேசி அதை பொது வெளியில் வெளியிட்டு வந்தார். மதுசூதனன் மறைவு, ஓபிஎஸ் மனைவி மறைவுன்னு சில துக்க நிகழ்ச்சிகளுக்கு போய் ஆறுதல் சொன்னாரு. இருந்தபோதும் அதிமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்த முடியலை. இதற்குள்ளாக டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமா அமமுகவினர் யாரும் அவருடன் போகக்கூடாதுன்னு டிடிவி தனது நிர்வாகிகளுக்கு ஒரு ஆர்டர் போட்டார்.

தனித்துவிடப்பட்டதாக உணர்ந்த சசிகலா இப்போ கோயில் கோயிலாக சுற்றுப் பயணம் போய்க்கிட்டு வர்றாரு. அவரது ஆதரவாளர்கள் சிலர் சில இடங்களில் வரவேற்பு கொடுத்துட்டு வர்றாங்க
. இது அவரது அரசியல் மைலேஜை உயர்த்துமான்னு விசாரிச்சா என்ன சொல்றாங்கன்னா “தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம், கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம்னு சொல்லிக்கிட்டாலும் இதனால் அரசியல் ரீதியாக எந்த பலனும் சசிகலாவுக்கு கிடைக்கப்ப்போவதில்லை”ங்கிறாங்க அரசியல் விமர்சகர்கள்.

சசிகலாவுக்கு என்ன தான் வழி, அவர் செய்ய வேண்டியது என்னன்னு விசாரிச்சா “தேவர் குருபூஜை நிகழ்சிக்கு சசிகலா போனப்போ அமமுக தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் அளித்த வரவேற்பைக் கடந்து இந்த ஓர் ஆண்டில் அவர் கவனம் ஈர்க்கும் வகையில் எந்த செயல்லயும் ஈடுபடலை, அதற்காக முயற்சிக்க கூட இல்லை. சசிகலா வெறுப்பு அதிமுவுக்குள் அதிகமாக இருக்கிறதான்னா அதுவும் இல்லை, எடப்பாடி பழனிசாமி தான் தலைவராகணும்னு கட்சிக்காரங் நினைக்கிறாங்களான்னா அதுவும் இல்லை. அப்படீன்னா ஒவ்வொரு நகர்வும் சசிகலாவுக்கு எதிராகவும், இபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும் இருக்குதுன்னா, தனக்கான ஆதரவை அதிகரிக்க இபிஎஸ் முயற்சி எடுக்கிறார், ஆனா சசிகலா அதை செய்யலைங்கிறது தான் உண்மை.

கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமி மீது மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பலருக்கும் அதிருப்தி இருக்குது. ஆனால் இதை சசிகலா தனக்கு சாதகமாக பயன்படுத்த தவறி விட்டார்.. கட்சிக்கு வெளியே இருந்துகிட்டு, எந்த பதவியும் இல்லாத போதே சசிகலா துணிச்சலான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கிறார். எப்படி இவரை நம்பி கட்சி பதவிகளை விட்டுட்டு நிர்வாகிகள் எப்படி வருவாங்க?

தொண்டர்கள் கவனத்தையும் , மீடியா கவனத்தையும் திருப்பும் வகையில் சசிகலா உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடணும். அது மிக எளிதானதாகக் கூட இருக்கலாம். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் சிறிது நேரம் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தாரே அது போலகூட இருக்கலாம். அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள் வருவதற்கு ஒரு மேடையோ, முகாமோ வேண்டாமா? ஒதுங்க இடம் இல்லாமல் எப்படி வருவார்கள்?

தி.நகர் இல்லத்துக்குள் முடங்கிக்கிட்டா கோயில் கோயிலாக போய் வழிபாடு நடத்துனா மட்டும் எதையும் சாதிக்க முடியாது, மக்களை சந்திக்கணும். சசிகலா பெங்களூரிலிருந்து சென்னை வந்த போது அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு போடப்பட்டுச்சு. ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது. சசிகலா இதையெல்லாம் செயவாருன்னு எடப்பாடி நினைச்சிருக்காரு… ஆனால் சசிகலாவோ இன்னும் அதில் எதையும் செய்ய யோசிக்ககூட செய்யலை.

அதிமுக உட்கட்சித் தேர்தலில் சத்தமில்லாமல் தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அடுத்த சில நாள்களில் நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திலும் முழுக்க எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியிருக்கும். ஆதரவாளர்களை தக்க வைக்காமல் சசிகலாவை காட்டி எடப்பாடியை மிரட்டி வந்த ஓ.பன்னீர் செல்வமும் இனி ஓரங்கட்டப்பட்டு ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வருவதற்கான வேலைகள் துரித கதியில் நடந்து வருது. இரட்டை இலையை வெற்றி பெற வைக்க எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என அதிருப்தியாளர்கள் கூட சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய சசிகலா தான் தற்போது அவரை பொதுச் செயலாளராக்கவும் மறைமுகமாக உதவியிருக்கிறாருன்னு சொல்றாங்க.? என்ன நடக்கப் போகுதுங்கிறதப் பொறுத்திருந்து தான் பாக்கணும்.