திருப்பதி வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் அற்புதங்கள் !

திருப்பதி வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் அற்புதங்கள் !

திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் மர்மங்கள் பற்றி நாம் இப்போது காணப்போகிறோம். உண்மையில் திருப்பதியில் உள்ள மர்மங்களை  நாம் அறிந்திருக்கமாட்டோம்.  தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை. கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது. 1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

திருப்பதி ஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன உலகத்திலேயே இந்த பாறைகள் இந்த இடத்தில மட்டுமே கிடைக்கும். இந்த பாறைகளின் வயது 250கோடி வருடங்கள் ஆகும். ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு பச்சை கற்பூரம் சாத்துகின்றனர். இந்த பச்சை கற்பூரம் ஒரு ரசாயனம். இது அரிப்பை கொடுக்கும் ரசாயனமாகும்.இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் அந்த கல்லானது வெடித்துவிடும்.
ஏழுமலையான் திரு உருவ சிலைக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் தடவுகின்றனர். ஆனாலும் இந்த சிலையில் எந்த ஒரு வெடிப்பும் இதுவரை வந்ததில்லை.

எந்த கருங்கல் சிலை ஆனாலும் எங்காவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் அடையாளம் தெரியும் அல்லது உலோக சிலையானாலும் அதை வடிவமைத்த அடையாளம் தெரியும். ஆனால் இந்த சிலையில் எந்த ஒரு அடையாளமும் இதுவரை தெரிந்ததில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சொரசொரப்பாக இருக்கும் ஆனால் இச்சிலையில் வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போட்டதுபோல இருக்கின்றன.

காலையில் சிறப்பு அபிஷேகம் கோவிலில் வழக்கமாக நடைபெறும். அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்சம் ருபாய் செலவிடப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்றும் ஏழுமலையான் அணிந்திருக்கு நகையின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடியாகும். ஏழுமலையானின் சாலக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை ஆகும்.இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி 5கிலோ ஆகும். இத்திருக்கோவிலுக்கு பல மன்னர்கள் காணிக்கை வழங்கியிருக்கிறார் கள். திருப்பதியில் காணப்படும் ஓவியங்கள் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அபிஷேகத்தின் போது . ஏழுமலையான் திருஉருவ சிலையில் எந்த ஒரு ஆயுதமும் இருக்காது.அவர் நிராயுதபாணி அதனால் தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேந்தன் எனஅழைக்கப்பட்டார் எனவே பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வழிபட்டு எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.