செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வரம்பு தளர்வு !

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வரம்பு தளர்வு !

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. அத்துடன் முதலீட்டு வரம்பை ரூ. 25 கோடியாக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும். இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சலுகையாக அமைந்துள்ளது.இதற்கு முன்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை ரூ. 10 கோடியாக இருந்தது.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் முதலீடுகளுக்கு 1961-ம் ஆண்டைய வருமான வரிசட்டம் 56 (2) பிரிவின் கீழ் வரி விலக்கு அளிப்பதற்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து 7 ஆண்டுகள் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இத்தகைய வரிச் சலுகை கிடைக்கும் என முன்னர் இருந்த விதிமுறை தற்போது 10 ஆண்டுகள் வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதேபோல ஸ்டார்ட் அப் நிறுவனமாக பதிவு செய்த நிறுவனத்தின்…
Read More
பிளிப்கார்ட் அமேசான்  நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

பிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மூலம் பொருட்களை வாங்குவதில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர், செல்போன் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்வது எளிதாகவும், விலை குறைவாகவும், டோர் டெலிவரி செய்யப்படுவதுமே ஆன்லைன் ஆர்டர் குவிய காரணமாக உள்ளது. இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நாள்தோறும் ஆன்லைனில் ஆர்டர்களை பெற்று பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனமும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகமாகி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்தது. அதேபோல் ஜியோ பிரெளசர் அறிமுகமாகி கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ் ஆகிய பிரெளசர்களுக்கு ஆப்பு வைத்தது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கி அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More
தடையிலிருந்து விலக்கு பெற்றது சாரிடான் மாத்திரை!

தடையிலிருந்து விலக்கு பெற்றது சாரிடான் மாத்திரை!

தடை விதிக்கப்பட்ட மருந்து பொருட்களின் பட்டியலிலிருந்து சாரிடான் மாத்திரைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மருந்துகள் என்ற பட்டியலில் சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகள் இடம்பெற்று அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சாரிடான் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தடைக்கு இடைக்கால விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணை முடிவில் கடந்த ஆண்டு சாரிடான் மாத்திரைக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களின் பட்டியலிலிருந்து சாரிடான் மாத்திரைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Read More
மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் !

மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் !

எந்திரங்கள் ஒரு நாள் உலகை ஆளப் போகின்றன. மனிதர்களை எல்லாம் அழிக்கப் போகின்றன. பல அறிவியல் கட்டுரைகளிலும், சினிமாக்களிலும் இவை அடிக்கடி சொல்லப்பட்டு வருகின்றன. எந்திரங்களை மனிதனைப் போல் உருவாக்கும் முயற்சிகளும் மிகத் தீவிரமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்போதைய கணினிமய உலகில் எந்திரங்களால் மனிதனுக்கு வேலைவாய்ப்புகளும் கூட பறிபோகப் போகின்றன என்ற அச்சம் நிலவிக் கொண்டிருக்கிறது. ஐபிஎம் நிறுவனம் ஆறு ஆண்டுகால கடும் உழைப்பில், பல கோடி முதலீட்டில் ஒரு செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டரை உருவாக்கியது. விவாதம் செய்வதில் மனிதனை இந்த எந்திரம் வெல்லும் என்பதை நிரூபிக்கும் வகையில் உருவாக்கியது. ஆனால், 25 நிமிடம்தான். மனித மூளையிடம் தோற்றுப்போய்விட்டது. அதைத் தோற்கடித்தவர் ஒரு இந்தியர். மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் என்ன அற்புதத்தை நிகழ்த்தப் போகிறது என்பதைக் காண, நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், தொழில்நுட்ப துறை அதிபர்கள், மென்பொருள் வல்லுநர்கள் சான் பிரான்சிஸ்கோவில் கூடியிருந்தனர். மேடையில் ஆறடி…
Read More
துணை மின் நிலையங்களில், ‘சோலார்’! மின்வாரியம் தீவிரம் !!

துணை மின் நிலையங்களில், ‘சோலார்’! மின்வாரியம் தீவிரம் !!

துணை மின் நிலையங்களில், 'சோலார்' எனப்படும், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணியை, மின் வாரியம், முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.மின் வாரியத்திற்கு சொந்தமாக, மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உள்ள, காலி இடங்களில், சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரியசக்தி மின் நிலையங்களை, மின் வாரியம் அமைத்து வருகிறது.தற்போது, தர்மபுரி மாவட்டம், பாலவாடி துணை மின் நிலையத்தில், 50 கிலோ வாட்; அதே மாவட்டம், கரிமங்கலம் துணை மின் நிலையத்தில், 18 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மத்திய அலுவலகத்தில், 30 கி.வாட்; ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் செயற்பொறியாளர் அலுவலகங்களில், தலா, 10 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
Read More
மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 3 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதில் முதல் இடத்தில் ஸியோமி இருக்கிறது. இந்த நிறுவனம் மட்டுமே ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் 30 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சாம்சங், விவோ உள்ளிட்டவை வருகின்றன. இதனிடையே நம் இந்திய மாணவர்கள் தங்கள் போனுக்கு வரும் எந்த தகவல்களையும் தவற விட்டுவிடகூடாது என்ற பதற்றம், மாணவர் கள் மத்தியில் அதிகம் காணப்படு கிறது. இதன் காரணமாக, அவர்கள், தினமும், 150 முறைக்கும் மேல், தங்கள் மொபைல்…
Read More
முறையான முதலீடுகளை செய்திருந்தால்  9 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் !

முறையான முதலீடுகளை செய்திருந்தால் 9 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் !

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், நேற்று முன்தினம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நடுத்தர குடும்பங்களை சேர்ந்த, மூன்று கோடி பேர் பயன் பெறும் வகையில், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு, 18 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது:வேலைக்கு செல்லும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், ஆண்டு வருவாய், ஐந்து லட்சம் ரூபாய் வரை, தனி நபர் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும், எட்டு முதல் ஒன்பது லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கும் வரி சலுகை உள்ளது. '80 சி' பிரிவில் முதலீடு செய்வோர், கல்விக் கடன், வீட்டுக் கடன் வட்டி செலுத்துவோர், பென்ஷன் திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வோர் இந்த வரிச்சலுகைக்கு தகுதி பெறுகின்றனர். நடுத்தர…
Read More
உலோகக் கழிவுகள் இனியும் வேஸ்ட் இல்லை..! அதிலிருந்து கான்க்ரீட் தயாரிக்கலாம் !!

உலோகக் கழிவுகள் இனியும் வேஸ்ட் இல்லை..! அதிலிருந்து கான்க்ரீட் தயாரிக்கலாம் !!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கழிவு உலோகங்களைக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு கான்கிரீட் தயாரித்து, அதில் பல்வேறு கட்டுமான வடிவங்களை காட்சிக்கு வைத்து அசத்தி உள்ளது, தனியார் கட்டுமான நிறுவனம்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இரும்பு, காப்பர், அலுமினியம், ஈயம் உள்ளிட்ட உலோகக் கழிவுகளைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று சென்னையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் கான்கிரீட் தொழில்சார் நிறுவனம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்து காண்பித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்தான் இந்த டெமோவை அது காட்டியது. சென்னையைச் சேர்ந்த இந்த கட்டுமான நிறுவனம் தங்களது பிரத்யேகத் தயாரிப்பு ரசாயனத்தின் மூலம் உலோகக் கழிவுகளைக் கொண்டு கான்கிரீட் தயாரித்து வருகிறது. இது வெளி நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இதன் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும், இதனால் சுற்றுச்…
Read More
பேட்டரி கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு !  தமிழக அமைச்சரவை ஒப்புதல் !!

பேட்டரி கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு ! தமிழக அமைச்சரவை ஒப்புதல் !!

இந்தியாவில் இரண்டாவதுபெரியகார் தயாரிப்பு நிறுவனமானத் திகழும் ஹூண்டாய் நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆலை தற்போது இருங்காட்டுக் கோட்டையில் செயல்படுகிறது. இந்த ஆலையின் விரிவாக்கம் மற்றும் பேட்டரி கார் தயாரிப்புக்கு ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்டரி கார் தயாரிப்பு திட்டத்துக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுச் சூழலை பாதிக்காத வாகனங்கள் தயாரிப்புக்கு ஊக்கத் தொகை அளிக்கும் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் இந்த முதலீட்டுக்கு சலுகைகள் கிடைக்கும். இந்த விரிவாக்க நடவடிக்கை மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே உற்பத்தியாகும் கார்களின் எண்ணிக்கையை மேலும் ஒரு லட்சமாக உயர்த்தவும் இந்த…
Read More
ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ் !

ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ் !

சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்.கணக்கில் வராத பணம், கருப்புப்பணம் மற்றும் சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவ்வகையில், இனிமேல் சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Read More