முறையான முதலீடுகளை செய்திருந்தால் 9 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் !

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், நேற்று முன்தினம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நடுத்தர குடும்பங்களை சேர்ந்த, மூன்று கோடி பேர் பயன் பெறும் வகையில், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு, 18 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது:வேலைக்கு செல்லும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், ஆண்டு வருவாய், ஐந்து லட்சம் ரூபாய் வரை, தனி நபர் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும், எட்டு முதல் ஒன்பது லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கும் வரி சலுகை உள்ளது. ’80 சி’ பிரிவில் முதலீடு செய்வோர், கல்விக் கடன், வீட்டுக் கடன் வட்டி செலுத்துவோர், பென்ஷன் திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வோர் இந்த வரிச்சலுகைக்கு தகுதி பெறுகின்றனர்.

நடுத்தர மக்கள், குறிப்பாக சம்பளதாரர்கள், சுய தொழில் புரிவோர், சிறு வர்த்தகம் செய்வோர், மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள், இதனால் பயன்பெறுவர். வருமான வரி சட்டம் பிரிவு, ’80 சி’யின்படி, பொது சேமநல நிதி, ஆயுள் காப்பீடு முதலீடுகள், குழந்தைகள் கல்வி கட்டணம், வங்கி – தபால் அலுவலகங்களில் ஐந்தாண்டு முதலீடு ஆகியவற்றுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சலுகை பெறலாம்.வீட்டுக்கடன் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய், மருத்துவ காப்பீடு பிரிமியம் 75 ஆயிரம் ரூபாய் வரை, வரி சலுகை பெறலாம். சம்பளதாரர்களுக்கான நிரந்தர கழிவுக்கான உச்ச வரம்பு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக கணக்கிடும்போது, ஆண்டு வருமானம் ஒன்பது லட்சம் ரூபாய் வரை ஈட்டுவோர், வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.

Related posts:

ஊரடங்கு நடவடிக்கை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள ஓராண்டாகும் ?

பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் அகோரிகள் ஏன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

"Interactive Session" with H.E. RAMON S. BAGATSING Jr., Ambassador of Philippines to India.

உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!

மின் சாதனங்களில், 'போஸ்டர்' ஒட்டுவதை தடுக்க தனி சட்டம்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு ?

ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ் !

தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம்? பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வேதனை !

மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் !