செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!!

உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!!

தற்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 4ஜி தொடங்கி தற்போது 5ஜி என தனது எல்லையை பரப்பிக்கொண்டுவரும் இந்த சுழலில் இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது.ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது. இந்த பகுதி முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது மற்றும் சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில்…
Read More
வருமான வரி  கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி !

வருமான வரி கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி !

வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனையை எளிமைபடுத்தும் வகையில், புதிய திட்டத்தை வடிவமைக்கும், 4,242 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் கூறியதாவது: வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனைக்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருள் மற்றும் நடைமுறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன் படி,புதிய நடைமுறையை வடிவமைத்து தரும்பணியை, இன்போசிஸ் நிறுவனத்துக்கு வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 4,242 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அடுத்த, 18 மாதங்களுக்குள், இந்த நிறுவனம், புதிய நடைமுறையை வகுக்கும். பரிசோதனைகளுக்குப் பின், அது பயன்பாட்டுக்கு வரும்.இந்த புதிய முறையின் மூலம், கணக்கு தாக்கல்…
Read More
வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் !

வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் !

வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாசுக்களை பாதுகாப்பற்ற முறையில் வெளிப்படுத்தியதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோல்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நாளை (ஜன.,18) மாலை 5 மணிக்கும் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், அப்படி அபராதம் செலுத்த தவறினால் வோல்ஸ்வேன் நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குனர் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். அத்துடன் வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
75 சதவீதம் இந்தியர்களுக்கு காப்பீடு இல்லை ? மத்திய அரசின் தகவல்

75 சதவீதம் இந்தியர்களுக்கு காப்பீடு இல்லை ? மத்திய அரசின் தகவல்

இந்தியாவில் 75 சதவீத மக்கள் காப்பீட்டு திட்டத்தில் இணையவில்லை என்ற தகவல் மத்திய அரசின் புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. ஐரோப்பியா நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் 75 சதவீத மக்கள் காப்பீட்டு திட்டத்தில் இணையவில்லை.வருவாய் ஈட்டுபவர் இறந்தபின், காப்பீட்டால் பயன்பெறும் குடும்பம் 8 சதவீதம் மட்டுமே உள்ளது.இது ஒழுங்குபடுத்தப்படாத துறையின் விஷயத்தில் மிகவும் கடுமையானது .ஒழுங்குபடுத்தப்படாத துறையில் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் வருமான ஏற்றத்தாழ்வு, அபாயகரமான பணியிட நிலைமைகள் மற்றும் வயது முதிர்ச்சி ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.அதேசமயம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் காப்பீட்டில் சேர்ந்தால், இத்தகைய பாதிப்பை தவிர்க்கலாம்.இவ்வாறு அரசின் புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.75 சதவீதம் இந்தியர்களுக்கு காப்பீடு இல்லை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு காப்பீடு தேவை
Read More
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்  இனி அதிரடி சலுகைகள் தொடருமா?

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இனி அதிரடி சலுகைகள் தொடருமா?

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக முறை பிரபலமாகி இருக்கிறது. இந்த வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் களம் இறங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதே நேரத்தில் உள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. ஆனால், உள்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதாவது சில குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே விற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்கின்றன. எனவே அந்த நிறுவனத்தில் மட்டுமே குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் சில பொருட்களுக்கு இஷ்டத்துக்கு விலை வைக்கிறார்கள். மேலும் உற்பத்தி நிறுவனங்களையும் தங்களுக்கு மட்டுமே அந்த பொருளை தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.இதுபோன்ற காரணங்களால் உள்ளூர் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களுக்கு…
Read More
பெண்கள் சொத்துக்கு வரி விலக்கு?

பெண்கள் சொத்துக்கு வரி விலக்கு?

மனைவி மற்றும் மருமகள் பெயர்களுக்கு மாற்றப்படும் சொத்துகளுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யும்படி, மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ''பெண்களுக்கு, நெருங்கிய உறவுகளிடம் இருந்து வழக்கப்படும் பரிசுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக, நிதி அமைச்சகத்தில், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதா,'' என, மதச் சார்பற்ற ஜனதா தள உறுப்பினர் குபேந்திர ரெட்டி, ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர், வீரேந்திர குமார் கூறியதாவது: தனிப்பட்ட நபர்களிடம் இருந்து, தங்கள் மனைவி மற்றும் மருமகள்களுக்கு வழங்கப்படும் சொத்துகள் மீது வரி விலக்கு அளிக்கும் சட்ட திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மீதான முடிவு, பட்ஜெட் நேரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More
ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது ?

ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது ?

ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆன் லைன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் போலியான பொருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர்.ஆனலைன் விற்பனையில் ஒவ்வொரு ஐந்து பொருட்களுக்கும் ஒன்று போலியாக உள்ளது என கூறப்படுகிறது இதில் அதிகமானவை ஒப்பனை மற்றும் வாசனை திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும். குறிப்பாக நறுமணம் மற்றும் ஒப்பனை பொருட்கள் 35 சதவீதம் போலியானவை என்றும் 22 சதவீதம் விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் என்றும், 5…
Read More
இனி நிலத்தடி நீரை பயன்படுத்தினாலும் கட்டணம் ..! மோடி அரசின் அடுத்த தாக்குதல்…!!

இனி நிலத்தடி நீரை பயன்படுத்தினாலும் கட்டணம் ..! மோடி அரசின் அடுத்த தாக்குதல்…!!

2019 ஜூன் மாதம் முதல் எந்த வகையில் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தினாலும் கட்டணம் செலுத்த வேண்டும். நம் வீட்டில் இருக்கும் சொந்த போர்வெல் ( ஆழ்குழாய் கிணறு ) மூலம் தண்ணீர் எடுத்தாலும் அரசிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என மோடி அரசு அறிவித்திருக்கிறது. இது மக்களிடைய கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என்ற பெயரில் வரும் 2019 ஜூன் மாதத்திலிருந்து, நிலத்தடியில் இருந்து யார் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) அறிவித்திருக்கிறது. அதற்கு நீர் பாதுகாப்பு கட்டணம் என பெயரிட்டிருக்கிறது. நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என்ற பெயரில் வரும் 2019 ஜூன் மாதத்திலிருந்து, நிலத்தடியில் இருந்து யார் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) அறிவித்திருக்கிறது. அதற்கு நீர்…
Read More
ஆன்லைன் ஆதிக்கத்தால் ஆட்டம் காணும் ‘மால்’ கலாச்சாரம்

ஆன்லைன் ஆதிக்கத்தால் ஆட்டம் காணும் ‘மால்’ கலாச்சாரம்

ஒரு காலத்தில் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் பல்பொருள் அங்காடி வைத்திருக்கும் அண்ணாச்சிக் கடைகள்தான் பிரபலம். அதன்பிறகு, பொருளாதார வளர்ச்சி காரணமாக முதலீடுகளும் வருமானமும் அதிகரிக்க, மெல்ல பொருள்கள் வாங்குவது மால் கலாச்சாரத்துக்கு மாறியது. மால்கள் வந்தபின் நகரங்களில் இருந்த அண்ணாச்சிக் கடைகளை எல்லாம் காலி செய்தன. இப்போது அதே நெருக்கடி மால்களுக்கும் வந்திருக்கிறது. இ-காமர்ஸ் துறை நாளுக்கு நாள் ஆக்டோபஸ் போல தன் கரங்களை நீட்டி வர்த்தக உலகை ஆக்கிரமித்து வருகிறது.அதிரடி ஆஃபர்கள், விளம்பரங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதனால். நினைத்துப் பார்க்க முடியாத விலையில் பொருள்கள் என ஆசையைத் தூண்டி புதுப்புது வாடிக்கையாளர்களை இழுத்துக்கொண்டே இருக்கின்றன. ஒருமுறை இ-காமர்ஸ் தளத்துக்குள் போய் பார்த்துவிட்டால் நிச்சயம் பொருளை வாங்காமல் வெளியே வரமாட்டீர்கள். அந்த அளவுக்கு ‘டேட்டா அனாலிட்டிக்ஸ்’ மூலம் வாடிக்கையாளர்களின் மனநிலையை அலசி ஆராய்ந்து வைத்திருக்கிறது. இதனால் மால்களில் கூட்டம் குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பொருள்கள் வாங்குவது குறைந்தது…
Read More
ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்?

ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்?

ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலைமை நம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் உள்ளது. இந்நிலையில் பிரபல வங்கிகள் கூடிய விரைவில் ஸ்மார்ட் போன் மூலம் பணம் எடுப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளன. அதாவது ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. ஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினை யூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தற்போது முழு வீச்சில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் இதற்கு…
Read More