செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

டிவி, போன் உட்பட பல சேவைகள் ! ரிலையன்ஸ்  ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம்  ..!

டிவி, போன் உட்பட பல சேவைகள் ! ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் ..!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன.இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆககுறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ரூட்டர், சிங்கிள் பேண்டில் மிக அதிகமான இண்டர்நெட் வேகத்தை தரும். அதாவது 50 Mbps வேகத்தில் இருந்து 100 Mbps வேகம் வரை இண்டர்நெட் வேகம் பெறக்கூடியது இந்த ஆப்டிக்கல் நெட்வொர்க்…
Read More

சென்னையில் 24,000 சதுர அடியில்அமேசான்.இன் விநியோக நிலையம் !

அமேசான்.இன் தனது மிகப்பெரிய விநியோக நிலையத்தை தமிழகத்தில் தொடங்குவதாக  அறிவித்திருந்தது. சென்னையில் உள்ள புதிய நிலையம்அமேசானுக்கு அதன் கடைசி மைல் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், நகரம் முழுவதும் விரைவான விநியோகங்களை உறுதி செய்யவும் உதவும். டெலிவரி நிலையங்கள்அமேசான் லாஜிஸ்டிக்ஸை திறனை நிரப்பவும், வாடிக்கையாளர் ஆர்டர்களின் வளர்ந்து வரும் அளவை ஆதரிக்க அமேசானின் விநியோக திறன்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கவும் உதவுகின்றன.நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்களில் தனது விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதாக அமேசான் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், அமேசான்.இன் 120 க்கும் மேற்பட்ட பிரபலமான மற்றும் விநியோக சேவை கூட்டாளர் நிலையங்களையும், மாநிலம் முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட ‘எனக்கு இடம் உள்ளது’ கூட்டாளர்களையும் கொண்டிருக்கும்.டெலிவரி நெட்வொர்க்கின் இந்த 2x வளர்ச்சியானது அமேசான் தமிழ்நாடு முழுவதும் சிறியநகரங்களுக்குள் மேலும் ஊடுருவி, மாநிலத்தின் 1200 க்கும் மேற்பட்ட பின் குறியீடுகளில் நேரடிவிநியோக இருப்பைக்…
Read More
டிஜிட்டல் பண பரிவர்த்தனை!இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் ! சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை!இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் ! சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரொக்கப் பண பரிவர்த்தனையை முற்றிலும் போக்கும் வகையில், பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் எளிதான  டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள யுபிஐ வசதி கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான், கூகுள் பே என 80க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ்கள் செயல்படுகின்றன.இதுதவிர, பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளத்திலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் முழுமையாக கொண்டு வரப்பட உள்ளது. இவ்வளவு இருந்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சீனாவுடன் இந்தியா போட்டி போட இன்னும் வெகு தூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சீனா டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.  அங்கு இந்தியாவைப்…
Read More
கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் பணம் செலுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்

கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் பணம் செலுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்

உ.பி மாநிலத்தில் தில்லி அருகே உள்ள நொய்டா நகரில் கிரேட் இண்டியன் பேலஸ் ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு தினமும் பலர் வந்து செல்வர். இங்கு உள்ள பர்கர் கிங் உணவு விடுதியில் சுமித் என்ற சேல்ஸ் மேனேஜர் ஏடிஎம் பணத் திருட்டுல் ஈடுபட்டு கைதாகியுள்ளார். ஸ்கிம்மிங் என்ற பழைய முறையை கையாண்டு கிட்டத்தட்ட 500 கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து ஐம்பது லட்சம் ரூபாய்வரை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக ஸ்கிம்மிங் முறையில் கார் மெஷினில் இந்த மென்பொருள் பொருத்தப்படும். பணம் செலுத்த காட்டை உள்ளே நுழைத்ததும் கார்ட் தகவல்கள் அனைத்தையும் இது வாங்கிக்கொள்ளும். மேலும் கஸ்டமர் அழுத்தும் 4 டிஜிட் பின் நம்பரையும் கார்ட் மெஷினில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவேற்றிக் கொள்ளும். இந்த தகவல்களைக் கொண்டு ஒரிஜினல் கார்ட் போலவே அச்சு அசலாக போலி கார்ட் தயாரிக்கப்படும். இதனைக் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஏடிஎம்-ல் அவர்களது வங்கிக் கணக்கில்…
Read More
கிரீன் கார்டு வேணுமா? அதிகமா சம்பாதியுங்க – அமெரிக்கா அறிவிப்பு!

கிரீன் கார்டு வேணுமா? அதிகமா சம்பாதியுங்க – அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்காவில் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள், அதிக வருமானம் பெறுபவர்களாக இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு துறை பிறப்பித்த உத்தரவில், உணவு, மருத்துவம், வீடு போன்ற அரசின் சலுகைளை சார்ந்திருப்பவர்கள், கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படும். அமெரிக்க குடிமக்களுக்காக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை, அவர்கள் பயன்படுத்த முடியாது. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருபவர்கள், அரசின் சலுகைகளை எதிர்பாராமல், தங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிக வருமானம் கிடைக்கிறது என்பதை அவர்கள் உறுதிபடுத்த வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக, அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Read More
நிறைவேறியது அணைகள் பாதுகாப்புச் சட்டம் பறிபோகுமா பெரியாறு 999 ஆண்டு உரிமை?

நிறைவேறியது அணைகள் பாதுகாப்புச் சட்டம் பறிபோகுமா பெரியாறு 999 ஆண்டு உரிமை?

124 ஆண்டு தமிழக உரிமை, தேசிய ஆணையத்துக்கு மாறுகிறது 142 அடி இனி தேக்க முடியுமா; 152க்கு உயர்த்த முடியுமா?மதுரை: மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி விட்டதால், பெரியாறு அணையில் 999 ஆண்டு ஒப்பந்தப்படியான பல உரிமைகளை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு சொந்தமாக இருந்த அணை 124 ஆண்டுக்குப் பிறகு தேசிய ஆணைய கட்டுப்பாட்டுக்கு மாறுவதால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இனி 142 அடி வரை தேக்க முடியுமா, அடுத்து 152 அடி தேக்கும் கனவு என்னாகும் என்ற கேள்விகள் பூதாகரமாக எழுந்துள்ளன. ‘அணைகள் பாதுகாப்பு மசோதா’ 1987ல் மத்திய அரசு கொண்டு வந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கிடப்பில் போடப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்தபோது, மாநிலங்களின் எதிர்ப்பை தொடர்ந்து, மக்களவை நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதில் மாநில விருப்பத்தை கேட்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.மீண்டும் இந்த மசோதா 2016ல்…
Read More
கலப்பு திருமணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் !

கலப்பு திருமணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் !

உலகின் அனைத்து நாடுகளிலும் அவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப திருமணங்கள் செய்யப்படுகின்றன. எனினும் திருமண பந்தத்திற்கு உயர்வான இடம் அளிக்கும் இந்திய நாட்டு காலம் காலமாகவே ஒரு இனத்திற்ள்ளாகவே திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட்டு, சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனினும் கடந்த ஒரு நூற்றாண்டில் தொடங்கி தற்காலம் வரை பல புதிய தலைமுறையினர் அதிக அளவில் கலப்புத் திருமணம் செய்ய துவங்கியுள்ளனர். கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு கிடைக்கின்ற நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். கலப்பு திருமணம் நன்மைகள் சமமான சமுதாயம் அதிக அளவில் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவது சமுதாயத்தில் மக்களிடையே இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சமம் என்கிற சூழ்நிலையை உருவாக்க உதவுகிறது. கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் உறவுகள் அனைவரும் பிறரின் தனிமனித சுதந்திரத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ள தூண்டுகிறது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் உருவாக கலப்புத்…
Read More
சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் சட்டம் !

சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் சட்டம் !

சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் தற்போது தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதுடன், வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகத்தை யும் நேற்று முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். தமிழகத்தில் அனைவருக்கும் சொந்த வீடு என்பது இன்றளவும் நிறைவேறாத நிலையில், வாடகை குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு பணி நிமித்தமாக வருபவர்கள் வாடகை குடியிருப்புகளையே அதிக அளவில் நம்பியுள்ளனர். அதே நேரம், சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் அவர்களின் கடமைகளை முறைப்படுத்த சட்டம் ஏதும் இல்லை. முன்னதாக, வாடகை குடியிருப்புவசதிகள் குறைவாகவும், வீட்டுமனை வணிகம் வளர்ச்சியடையாமலும், சொத்துகள் ஒரு சிலரிடமே இருந்த காலகட்டத்தில் (அதாவது 1960-ல்) தமிழ்நாடு கட்டிடங்கள் மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சட்டம், அரசு சார்ந்த கட்டிடங்களையே கட்டுப்படுத்தும் நிலையில் இருந்தது. எனவே, தனியார் வாடகை வீடுகளும் அதிகமாக பெருகிவிட்ட நிலையில், தற்போதைய…
Read More
மனித உயிருடன் விளையாடும் ஆன்லைன்  மருந்து விற்பனை ?

மனித உயிருடன் விளையாடும் ஆன்லைன் மருந்து விற்பனை ?

ஸ்மார்ட்போன்களின் பெருக்கத்தால் எல்லாமே இணையவழி பரிவர்த்தனை என்றாகிவிட்டது. ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல், பதிவும் செய்யாமல், கண்காணிப்புக்கும் உட்படாமல் ஒரு தொழிலை புரியலாம் என்ற அளவுக்கு இந்தியா உள்ளது. ஆம், இணையதளம் மூலமான மருந்துகள் வர்த்தகத்துக்கு இது நாள் வரை எந்த ஒரு நிறுவனமும் முறையான பதிவை செய்யவில்லை. ஆன்லைன் மருந்து வர்த்தகத்துக்கு (இ-பார்மசி) தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மருந்து விற்பனையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மிகப் பெரிய கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை அரசின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர். இதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காத அரசு, இணையதள மருந்து விற்பனைக்கு உரிய கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31-ம் தேதிக்குள் வகுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரிகிறது. அதுவரையில் நாடு முழுவதும் ஆன்லைன் மூலமான மருந்து விற்பனைக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும்…
Read More
‘டிராய்’ உத்தரவை மீறும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் !

‘டிராய்’ உத்தரவை மீறும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் !

கேபிள், 'டிவி'யில், குறிப்பிட்ட சில கட்டண சேனல்களை உள்ளடக்கி, புதிய மாத கட்டணத்தை வசூலிக்க, தனியார் கேபிள், 'டிவி' நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக, ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.புகார்கள்விரும்பிய சேனல்களுக்கு மட்டும், கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, பிப்., 1 முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சேனலும், தங்கள் கட்டணத்தை விளம்பரப்படுத்தி வருகின்றன.ஆனால், தனியார் கேபிள், 'டிவி' நிறுவனங்கள், அவர்கள் விரும்பும் சில சேனல்களை, ஒரு தொகுப்பாக நிர்ணயித்து, மக்களிடம் திணிக்க திட்டமிட்டுள்ளனர் என, புகார்கள் வருகின்றன. இது குறித்து, கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கூறியதாவது:மக்கள், தாங்கள் விரும்பும் சேனல்களை பார்க்க வேண்டும் என்பதற்காக, புதிய கட்டண முறையை, 'டிராய்' அறிமுகப்படுத்தியது.இதன்படி, பலர் தாங்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கின்றனர்.இதற்கு, மக்களிடம் அதிகம் வரவேற்பு கிடைத்தாலும், கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி, சில குறிப்பிட்ட சேனல்களை மட்டும், ஒரு தொகுப்பாக நிர்ணயிக்க, தனியார்…
Read More