செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

கலப்பு திருமணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் !

கலப்பு திருமணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் !

உலகின் அனைத்து நாடுகளிலும் அவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப திருமணங்கள் செய்யப்படுகின்றன. எனினும் திருமண பந்தத்திற்கு உயர்வான இடம் அளிக்கும் இந்திய நாட்டு காலம் காலமாகவே ஒரு இனத்திற்ள்ளாகவே திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட்டு, சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனினும் கடந்த ஒரு நூற்றாண்டில் தொடங்கி தற்காலம் வரை பல புதிய தலைமுறையினர் அதிக அளவில் கலப்புத் திருமணம் செய்ய துவங்கியுள்ளனர். கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு கிடைக்கின்ற நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். கலப்பு திருமணம் நன்மைகள் சமமான சமுதாயம் அதிக அளவில் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவது சமுதாயத்தில் மக்களிடையே இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சமம் என்கிற சூழ்நிலையை உருவாக்க உதவுகிறது. கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் உறவுகள் அனைவரும் பிறரின் தனிமனித சுதந்திரத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ள தூண்டுகிறது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் உருவாக கலப்புத்…
Read More
சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் சட்டம் !

சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் சட்டம் !

சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் தற்போது தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதுடன், வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகத்தை யும் நேற்று முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். தமிழகத்தில் அனைவருக்கும் சொந்த வீடு என்பது இன்றளவும் நிறைவேறாத நிலையில், வாடகை குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு பணி நிமித்தமாக வருபவர்கள் வாடகை குடியிருப்புகளையே அதிக அளவில் நம்பியுள்ளனர். அதே நேரம், சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் அவர்களின் கடமைகளை முறைப்படுத்த சட்டம் ஏதும் இல்லை. முன்னதாக, வாடகை குடியிருப்புவசதிகள் குறைவாகவும், வீட்டுமனை வணிகம் வளர்ச்சியடையாமலும், சொத்துகள் ஒரு சிலரிடமே இருந்த காலகட்டத்தில் (அதாவது 1960-ல்) தமிழ்நாடு கட்டிடங்கள் மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சட்டம், அரசு சார்ந்த கட்டிடங்களையே கட்டுப்படுத்தும் நிலையில் இருந்தது. எனவே, தனியார் வாடகை வீடுகளும் அதிகமாக பெருகிவிட்ட நிலையில், தற்போதைய…
Read More
மனித உயிருடன் விளையாடும் ஆன்லைன்  மருந்து விற்பனை ?

மனித உயிருடன் விளையாடும் ஆன்லைன் மருந்து விற்பனை ?

ஸ்மார்ட்போன்களின் பெருக்கத்தால் எல்லாமே இணையவழி பரிவர்த்தனை என்றாகிவிட்டது. ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல், பதிவும் செய்யாமல், கண்காணிப்புக்கும் உட்படாமல் ஒரு தொழிலை புரியலாம் என்ற அளவுக்கு இந்தியா உள்ளது. ஆம், இணையதளம் மூலமான மருந்துகள் வர்த்தகத்துக்கு இது நாள் வரை எந்த ஒரு நிறுவனமும் முறையான பதிவை செய்யவில்லை. ஆன்லைன் மருந்து வர்த்தகத்துக்கு (இ-பார்மசி) தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மருந்து விற்பனையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மிகப் பெரிய கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை அரசின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர். இதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காத அரசு, இணையதள மருந்து விற்பனைக்கு உரிய கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31-ம் தேதிக்குள் வகுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரிகிறது. அதுவரையில் நாடு முழுவதும் ஆன்லைன் மூலமான மருந்து விற்பனைக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும்…
Read More
‘டிராய்’ உத்தரவை மீறும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் !

‘டிராய்’ உத்தரவை மீறும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் !

கேபிள், 'டிவி'யில், குறிப்பிட்ட சில கட்டண சேனல்களை உள்ளடக்கி, புதிய மாத கட்டணத்தை வசூலிக்க, தனியார் கேபிள், 'டிவி' நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக, ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.புகார்கள்விரும்பிய சேனல்களுக்கு மட்டும், கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, பிப்., 1 முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சேனலும், தங்கள் கட்டணத்தை விளம்பரப்படுத்தி வருகின்றன.ஆனால், தனியார் கேபிள், 'டிவி' நிறுவனங்கள், அவர்கள் விரும்பும் சில சேனல்களை, ஒரு தொகுப்பாக நிர்ணயித்து, மக்களிடம் திணிக்க திட்டமிட்டுள்ளனர் என, புகார்கள் வருகின்றன. இது குறித்து, கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கூறியதாவது:மக்கள், தாங்கள் விரும்பும் சேனல்களை பார்க்க வேண்டும் என்பதற்காக, புதிய கட்டண முறையை, 'டிராய்' அறிமுகப்படுத்தியது.இதன்படி, பலர் தாங்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கின்றனர்.இதற்கு, மக்களிடம் அதிகம் வரவேற்பு கிடைத்தாலும், கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி, சில குறிப்பிட்ட சேனல்களை மட்டும், ஒரு தொகுப்பாக நிர்ணயிக்க, தனியார்…
Read More
நார்வேயில் மிதக்கும் சோலார் பேனல்.! செல்லூர் ராஜூக்கு தெரியாம போச்சு.!

நார்வேயில் மிதக்கும் சோலார் பேனல்.! செல்லூர் ராஜூக்கு தெரியாம போச்சு.!

சூரியனில் இருந்து மின்சாரம் எடுப்பது கிரீன் எனர்ஜி எனப்படுகின்றது. இதில் சூரியன், கடல் அலை ஆற்றல் , காற்று , நீர் உள்ளிட்டவைகள் அடங்குகின்றன.இதில் சுற்றுப்புறத்திற்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்காது. மேலும், இயற்கை வளங்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, உலக நாடுகளிடம் வளர்ந்து வருகின்றது.இந்நிலையில், நடுக்கடலிலும், நீர் நிலைகள் மேல் சோலார் பேனலை பரப்பி அதன் மூலம் மின்சாரம் செய்யும் நடைமுறை பல்வேறு நாடுகளிடம் இருந்து இருக்கின்றது.இதன் மூலம் நீர் ஆவியாவதையும் தடுக்க என்று ஆய்வுகள் செல்கின்றன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கதையை போல, இரண்டு விடயங்களும் சிறப்பானதாக செய்ய முடிவும். இதில நார்வே ஈடுபட்டுள்ளது. இந்த விஷயம் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு முன்னாடி தெரியாம போச்சு என்று ஒரு சில கிண்டல் அடிக்கவும் துவங்கியுள்ளனர்.நாம் இயற்கைக்கு மாற்றாக பொருட்களை நவீன உலகத்தில் பயன்படுத்தி வருகின்றோம். மேலும் இதனால் உலகம் வெப்ப மயமாகி வருகின்றது. இதனால் ஆறு, ஏரி,…
Read More
இந்தியாவில் ரூ.4,999 விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்.இ.டி. டி.வி. அறிமுகம்  !

இந்தியாவில் ரூ.4,999 விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்.இ.டி. டி.வி. அறிமுகம் !

இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை டெல்லியை சேர்ந்த சமி இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சமி SM32-K5500 ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. விலை இந்தியாவில் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் டெலிவரி மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை.32-இன்ச் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இதனால் இதில் அனைத்து ஸ்மார்ட் செயலிகளும் சீராக இயங்கும். இந்த எல்.இ.டி. டி.வி.யில் 32-இன்ச் 1366x786 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் 10 வாட் ஸ்பீக்கர்கள், எஸ்.ஆர்.எஸ். டால்பி டிஜிட்டல் மற்றும் 5 பேண்ட் சவுண்ட் தரம் வழங்குகிறது.இந்த டி.வி.யில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து பாகங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதால் சுமார் 200 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சமி இன்ஃபர்மேடிக்ஸ் தெரிவித்திருக்கிறது. மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை சமி 32 இன்ச் ஆண்ட்ராய்டு டி.வி.யில் 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது.சமி 32 இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்.இ.டி.…
Read More
சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும்  ஏசி !

சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏசி !

வளரும் நாடுகளில் கூட, நடுத்தர குடும்பங்கள் வேக்காட்டிலிருந்து தப்பிக்க, 'ஏசி' வாங்கி மாட்டுகின்றனர். இந்த நிலையில், அவை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று தடுக்க முடியாது. எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, எளிய குளிர்ச்சி தரும் சாதனங்களை உருவாக்க, 2018 நவம்பரில், வர்ஜின் குழும தலைவர் ரிச்சர்ட் 'உலக குளிர்ச்சிப் பரிசு' ஒன்றை அறிவித்தார். 21.35 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தப் பரிசுப் போட்டிக்கு இன்னும் கெடு முடியவில்லை. அதற்கு சரியான போட்டியாளராக 'சவுண்ட் எனர்ஜி' தயாரித்துள்ள 'தியாக்-25' என்ற, 'ஏசி' கருவி உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பேண்டு வாத்தியக் கருவி போலத் தெரியும் தியாக், 'ஏசி' வெப்பத்தை ஒலியாக மாற்றி, பின், அந்த ஒலி ஆற்றலை குளிர் ஆற்றலாக மாற்றும் 'தெர்மோ அக்குஸ்டிக்' தொழில் நுட்பத்தைக் கொண்டது. தொழிற்சாலைகளில் உள்ள அனல் கக்கும் பெரிய இயந்திரங்களில் வெளிப்படும் வெப்பத்தை உள்வாங்கி, காற்றையோ, தண்ணீரையோ குளிர்விக்க முடியும் என்கிறது, சவுண்ட் எனர்ஜி. தற்போது சவுண்ட்…
Read More
தாமிரபரணி தண்ணீர் 20 ஆண்டுகளில் நஞ்சாக மாறும் அபாயம் ? நீரியல்  விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

தாமிரபரணி தண்ணீர் 20 ஆண்டுகளில் நஞ்சாக மாறும் அபாயம் ? நீரியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதும், அழுக்கு துணிகள் வீச்சும் தொடர்கதையாவதால் இன்னும் 20 ஆண்டுகளில் நீரை பயன்படுத்த முடியாத நஞ்சாக மாறும் வாய்ப்புள்ளதாக நீரியல் ஆய்வு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவநதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து வளம்கொழிக்கும் தாமிரபரணி புண்ணிய நதிகளில் முதன்மையானதாகத் திகழ்கிறது. நதிநீர் பயன்பாட்டுக்காக அண்டை மாநிலங்களின் தயவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாதது, அனைவரது பாவங்களையும் தானே சுமந்து போக்கும் கங்கையே, தன்பாவம் நீங்க இங்கு புனித நீராடி செல்வது உள்ளிட்ட பல்வேறு புராண சிறப்புகள் தாமிரபரணியை சாரும்.நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த பொதிகை மலையில் உற்பத்தியாகி சுமார் 120 கி.மீ. தொலைவு பாய்ந்து பல லட்சக்கணக்கான விளை நிலங்களை வளப்படுத்தி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. பல்லாண்டுகளாக பரந்து விரிந்து பாய்ந்த நதி, முறையான பராமரிப்பின்றியும், இருகரைகளிலும் ஆக்கிரமிப்புகளாலும் காலப்போக்கில் சுருங்கிக் கொண்டே வருகிறது. தாமிரபரணி…
Read More
இன்னும் 100 நாட்களில் இந்தியாவில்  5ஜி சேவை.!

இன்னும் 100 நாட்களில் இந்தியாவில் 5ஜி சேவை.!

இன்னும் 100 நாட்களில் இந்தியாவில் 5ஜி சோதனை முறையை துவங்கப்படும் என்று தெரிகின்றது. இதற்காக சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்தியாவுக்கு வந்தாச்சு 5ஜி சேவை- இனி 100 நாட்களில் துவங்குகின்றது.! அமெரிக்காவின் தடையால் கடும் நெருக்கடியில் ஹூவாய் சிக்கிய இருக்கின்றது. இதை சமாளிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது.இந்நிலையில் இந்தியாவுக்கும் 5ஜி சோனைதனை தொடர்பாக சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ராணுவ ரகசியங்களையும் ஓட்டு கேட்டு சீனாவுக்கு தெரிவிப்பதாக ஹூவாய் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து அமெரிக்கா சிறப்பு குழுவின் விசாரணையிலும் ஹுவாய் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவும் வர்த்தக சண்டையில் ஈடுபட்டன. அப்போது ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களையும் திருடுவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஹூவாய் நிறுவனத்தின் மீது இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டது.மேலும், ஹூவாய் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய அரசின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்…
Read More
டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம். !

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம். !

பிளிப்கார்ட் நிறுவனம் அதன் டெலிவரி வாகனங்களில் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் முன்னணி நிறுவங்களாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இ-காமர்ஸில் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும், இந்த இரு நிறுவனங்களே இந்தியாவின் பிரபலமான நிறுவனங்களாக இருக்கின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், அவர்களின் வீட்டின் வாசலுக்கே கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகின்றன. இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் அதன் டெலிவரி வாகனத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்நிறுவனம் பயன்படுத்தி வரும் டெலிவரி வாகனங்களில், 40 சதவிகிதம் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக் கொண்டு வரவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகயை வருகின்ற 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யவிருப்பதாக அது இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக…
Read More