சினிமா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டு திரும்பும் போது ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தூத்துக்குடி அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சீமான் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய நிலையில் தற்போது ரஜினிக்கும் அனுப்பியுள்ளனராம். அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூடு தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு…
Read More
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடு உள்ளது என்றும், தமிழகத்தில் எத்தனை பேருக்கு சொந்த் வீடு உள்ளது என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Read More
நாடோடிகள் 2… ஜாதியற்ற ஜனங்களாவோம்..!

நாடோடிகள் 2… ஜாதியற்ற ஜனங்களாவோம்..!

தமிழகத்தை உலுக்கிய சங்கர் கௌசல்யாவின் ஜாதி ஆணவக்கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது.இதில் தமிழ் சினிமாவுக்கே தேவையான காதல், சமூக பிரச்சினை, அதிரடி சண்டை காட்சிகள், நண்பர்கள், கிராம பஞ்சாயத்து, தோழர் கதை, மக்கள் போராட்டம், காப்பர் கேன்சர் என அனைத்தையும் கலந்து அசத்தியிருக்கிறது சமுத்திரக்கனி மற்றும் சசிகுமாரின் கூட்டணி ஊர் பிரச்சினைகளுக்கு தன் ஊதியத்தை செலவழிக்கும் நல்லவர் சசிகுமார்.இவரின் தோழர்கள் டாக்டர் அஞ்சலி ,பரணி மற்றும் சிலர்.ஊர் பிரச்சினைகளை சசிகுமார் கவனிப்பதால் உறவினர் ஞானசம்பந்தம் பெண் தர மறுக்கிறார். இதனால் வயது ஓடிக் கொண்டே இருக்கிறது.ஒரு கட்டத்தில் பெண் ஓகே சொல்லிவிட்டால் போதும் என் சம்மதம் கூட தேவையில்லை என சொல்கிறார் சசி,அப்போது அவர்களது ஜாதியை சேர்ந்த அதுல்யாவின் பெற்றோர் சம்மதிக்க திருமணம் நடக்கிறது.ஆனால் சாந்தி முகூர்த்த சமயத்தில் ஒரு அதிர்ச்சி குண்டை போடுகிறார் அதுல்யா.இதனால் சசியின் வாழ்க்கையே மாறுகிறது. நாடோடிகள் 2 படத்தை பொருத்தவரை பெரும்பாலான கேரக்டர்கள் படத்தின்…
Read More
ரூ.84 கோடியில், 240 புதிய பஸ்கள் ! முதல்வர் துவக்கி வைத்தார்.!

ரூ.84 கோடியில், 240 புதிய பஸ்கள் ! முதல்வர் துவக்கி வைத்தார்.!

சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக, 83.83 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட, 240 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, 37 பஸ்கள்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு, 103; விழுப்புரத்திற்கு, 25; சேலத்திற்கு, 10; கோவைக்கு, 20, கும்பகோணத்திற்கு, 35; மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு, தலா, ஐந்து பஸ்கள் என, மொத்தம், 240 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகன பராமரிப்பு துறை சார்பில், முதல் கட்டமாக, திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு, இரண்டு, 'அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்கள்' வாங்கப்பட்டுள்ளன.இவற்றை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். அத்துடன்,கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்,திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாரில், 1.55 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, பஸ் பணிமனை; கோவை போக்குவரத்துக் கழகம் சார்பில், ஊட்டியில், 2 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்பட்ட, பஸ் நிலையம் ஆகியவற்றை, முதல்வர், 'வீடியோ கான்பரன்ஸ்'…
Read More
உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. ! இந்நிகழ்ச்சியில் உற்றான் திரைப்படத்தின் இயக்குநர் ஓ.ராஜாகஜினி, மற்றும் கானா சுதாகர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க மாநிலத் தலைவரும், உற்றான் பட புதுமுக நாயகன் தந்தையுமான டி.எஸ்.ஆர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமாக பதிலளித்தார்.இயக்குநர் ஆக வேண்டும் என்று திரையுலகக்கு வந்த நீங்கள் நடிப்புத் துறைக்கு வந்தது பற்றி நிருபர் கேள்விக்கு பதிலளித்த ரோஷன்: நான் சிறுவயது முதற்கொண்டு சினிமாவை நேசித்தது வருகிறேன்.எனக்கென்று திரைத் துறையில் என்ன வேலையென்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவத்துடன் இருக்கிறேன்.நான் உதவி இயக்குநாகவும் பணியாற்றியிருக்கிறேன்.அடுத்து இயக்குநர், தயாரிப்பாளர் என எந்த பணி அமைத்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்வேன்.லைட் பாய் வேலை கிடைத்திருந்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்திருப்பேன். எக்காரணம் கொண்டும் நான் நேசிக்கும் சினிமாவை விட்டு விலகியிருக்க மாட்டேன். நான் சிறுவயதில் இயக்குநர்களை கண்டு…
Read More
எம் ஜி இசட் எஸ் எலக்ட்ரிக் எஸ் யூ வி காரை களமிறக்கியுள்ளது. !

எம் ஜி இசட் எஸ் எலக்ட்ரிக் எஸ் யூ வி காரை களமிறக்கியுள்ளது. !

பிரிட்டனை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டர் காருக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதனை தொடர்ந்து எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை களமிறக்கியுள்ளது. கடந்த மாதம் 21ல் முன்பதிவு துவங்கியது. முதல் கட்டமாக ரூ. 50,000 செலுத்தி 2,300 பேர் 'புக்கிங்' செய்துள்ளனர். ஜன. 23ல் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 44.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் தரும். பாஸ்ட் சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம். முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கி.மீ., துாரம் பயணிக்கலாம். 0 - 100 கி.மீ.,வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டும்.
Read More
‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார். ‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் 'நம்ம ஊரு ஹீரோ', எஸ் பி பாலசுப்பிரமணியம் - யேசுதாசுடன் 'வாய்ஸ் ஆப்…
Read More
இயக்குனர் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ !

இயக்குனர் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ !

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ…
Read More
நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது, மறு தேர்தலுக்கு உத்தரவு  !

நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது, மறு தேர்தலுக்கு உத்தரவு !

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ந் தேதி தேர்தல் நடந்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் நடந்தாலும் ஓட்டுக்களை எண்ண நீதிமன்றம் தடை விதித்திருந்தது.பதவிக்காலம் முடிந்த 6 மாதத்திற்கு பின்னரே தேர்தல் நடத்தினர். ஏகப்பட்ட குளறுபடி உள்ளன. எனவே இந்த தேர்தலே செல்லாது என அறிவிக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது: ஐகோர்ட் அதிரடி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ல் தேர்தல் நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடந்தாலும் ஓட்டுக்களை எண்ண சென்னை ஐகோர்ட்ட தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து நாசர், விஷால் வழக்கு தொடர்ந்தனர்.எந்த முறைகேடும் நடக்கவில்லை, தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஓட்டு எண்ணிக்கை…
Read More
ரூ.10 லட்சத்தில் தயாரான படம் !

ரூ.10 லட்சத்தில் தயாரான படம் !

ஒரு சினிமா படம் தயாரிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2 கோடி வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் வெறும் 10 லட்சத்தில் ஒரு படத்தை உருவாக்கி உள்ளனர். அதுவும் ஆஸ்திரேலியாவில். இதுபற்றிய விபரம் வருமாறு:அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், பின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் 'டே நைட்'. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர். படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறியதாவது:ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக…
Read More