சினிமா

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிப்பு

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிப்பு

ஜான்சன் அண்ட் ஜான்சன் வாடிக்கையாளர்களிடமிருந்து தவறாக பணம் வசூலித்ததால் ரூ .230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு உற்பத்தியாளரான ஜான்சன் அண்ட் ஜான்சன், வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி (GST) விலக்கின் பயனை வழங்காததற்காக தேசிய மிகை லாப தடுப்பு (The National Anti-profiteering Authority) அபராதம் விதித்துள்ளது. தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்தின் தலைவர் பி.என்.ஷர்மன் தனது உத்தரவில், 15 நவம்பர் 2017 முதல் டிசம்பர் 2018 வரை வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் ஜிஎஸ்டி (GST) விகிதத்தை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அரசாங்கம் குறைத்தது. ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. மேலும் மூன்று மாதங்களுக்குள் நிறுவனம் 230 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அபராதத்தை நிறுவனம் செலுத்தாவிட்டால், இந்த பணம் ஜிஎஸ்டி அதிகாரத்தால்…
Read More
ஜி.எஸ்.டி.தாக்கல் செய்யாதவர்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் ?

ஜி.எஸ்.டி.தாக்கல் செய்யாதவர்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் ?

சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது, நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை தான் இது. ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், ஒருவர் மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில், 20 சதவீதம் பேர் கணக்கை தாக்கல் செய்வதில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜி.எஸ்.டி., வருமான வசூலை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்வதில் போதாமைகள் இருக்கிற காரணத்தால், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம், ஒரு வசதியை வழங்குகிறது. இதன்படி, கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு, கெடு தேதிக்குப் பின், ‘மெயில்’ அல்லது குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும்.அடுத்த, ஐந்து நாட்களுக்குப் பின், 15…
Read More
QR கோடு மோசடி ? ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே உஷார்!

QR கோடு மோசடி ? ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே உஷார்!

சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். கடந்த சில வாரங்களாக இதேபோல் பணத்தை இழந்த பல பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத்திலும், பெங்களுரிலும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக…
Read More
சிடிசி குழுமத்திலிருந்து ரூ. 215 கோடி நிதியை திரட்டியிருக்கும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் .!

சிடிசி குழுமத்திலிருந்து ரூ. 215 கோடி நிதியை திரட்டியிருக்கும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் .!

தாக்கம் ஏற்படுத்தும் உலகின் முதல் முதலீட்டாளர் என்ற பெருமையினை கொண்டிருக்கும் சிடிசி குழுமத்திடமிருந்து டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் லிமிடெட் ( DAHCL ) ரூ.215 கோடி கடன் தொகையை திரட்டியிருக்கிறது. ஆஃப்ரிக்கா, தெற்காசியா மற்றும் இந்தியாவெங்கும் கண் சிகிச்சைக்கான தனது சங்கிலித்தொடர் நிறுவனங்களின் செயல்பாட்டை விரிவாக்குவதற்காகவும் மற்றும் உயர்தர சிறப்பு கண் சிகிச்சைக்காக சமீபத்திய தொழில்நுட்பங்களின் மீது கணிசமான முதலீடுகளை செய்வதற்காகவும் இந்த முதலீட்டுத்தொகை பயன்படுத்தப்படும். இக்குழுமமானது. அட்வான்ஸ்டு ஐ இன்ஸ்டிடியூட்உ டனான கூட்டுவகுப்போடு அதன் முதல் மருத்துவமனையை சமீபத்தில் நிறுவியிருக்கிறது. சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஒரு உலகளாவிய முதலீட்டு நிறுவனமான டெமாசெக் நிறுவனத்திடமிருந்து, டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் லிமிடெட் , இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.270 கோடி முதலீட்டைப் பெற்றிருந்தது. முதலீட்டைப் பெற்றிருந்தது. சிடிசி குழுமம் என்பது. யுகே அரசின் நிதியுதவியோடு இயங்குகின்ற மேம்பாட்டுக்கான நிதி அமைப்பாகும். சுகாதாரம், நிதிசார் சேவைகள், உட்கட்டமைப்பு, உற்பத்தி, உணவு மற்றும் விவசாயம், கட்டுமானத்துறை…
Read More

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.?

அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ,டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம் மக்களுக்கும்,அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும்,நாட்டின் ஒற்றுமை ஒருமைப் பாட்டிற்கும் எதிரானதாகும். இந்தியாவை ,இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இந்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.இந்தியா முழுவதும் 20 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது.இது பெண்கள் மத்தியில் அச்சத்தையும்,பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உட்பட அனைத்து வன்முறைகளையும் தடுத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்திட வேண்டும்.நிர்பயா நிதியில் 91 % பயன்படுத்தப்பட வில்லை.அந்நிதியை உரிய முறையில்…
Read More