சினிமா

அடுத்தப் படத்திலும் மிரட்டலுக்குப் பஞ்சம் இருக்காது ? இயக்குநர் மோகன் ஜி.!

அடுத்தப் படத்திலும் மிரட்டலுக்குப் பஞ்சம் இருக்காது ? இயக்குநர் மோகன் ஜி.!

நாடகக் காதலை மையமாக வைத்து திரவுபதி படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் மோகன் ஜி. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பெரும் சர்ச்சையில் சிக்கியது. இருந்தபோதும், அந்த சர்ச்சைகளே படத்துக்கு மிகப் பெரிய விளம்பரத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, ஜீவா ரவி, பாரதி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க, ஜுபின் படத்துக்கு இசையமைத்திருந்தார். கூட்டு முதலீட்டின் கீழ் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்றது. கிட்டதட்ட படம் பத்து கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்தது. படத்துக்கு முதலீடு என்பது மிகவும் குறைவுதான். ஒரு கோடி ரூபாக்கும் கீழாகவே செலவு இருந்தது.இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை யாரும் வாங்க முன் வரவில்லை எனக் கூறி, தன்னுடைய ஆதங்கத்தை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் மோகன் ஜி. இதையடுத்து, படம் சாட்டிலைட் டி.வி.,க்களில் வெளியிட முடியாத அளவுக்கு மோசமாக இருந்ததுதான் காரணம் என பலரும் இயக்குநர் மோகன்…
Read More
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் மாட்டித் தவிக்கும் Yes Bank, கடந்த ஆண்டு ரூ.1,500 கோடி இழப்பை சந்தித்தது. இதன் காரணமாக அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இதனால், Yes Bank-யுடன் கூட்டு வைத்திருந்த PhonePe போன்ற செயலிகளும் பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு Yes Bank நிர்வாகம் செயல்படும் என அறிவித்தது. இதையடுத்து வரும் ஏப்ரல்…
Read More
சொத்து வாங்குபவர்கள் கவனியுங்கள்!

சொத்து வாங்குபவர்கள் கவனியுங்கள்!

ஒரு முன்னோட்டம் அவிநாசி பாபு என்பவரிடமிருந்து ஆனந்த் என்பவர், கட்டடம் / காலி மனை போன்று ஒரு சொத்து வாங்க விரும்புகிறார். அதன் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இந்திய வருமான வரிச்சட்டப்படி, அசையா சொத்து விற்கும்போது மூலதன லாப வரி செலுத்துவதற்கு அவிநாசி பாபுதான் பொறுப்பாகிறார். ஆனால் சொத்தை வாங்கும் ஆனந்த் பணத்தை கொடுக்கும் போது அதற்குரிய வரி பிடித்தம் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.பின்னர் அந்த தொகையை பாபு பெயரில் வருமான வரியாக செலுத்த வேண்டும். பாபு தனது ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அதை கழித்துக்கொள்ளலாம். அசையா சொத்துக்கள் வாங்கும்போது பின்பற்றவேண்டிய வரி நடைமுறைகள் இவ்வளவு சிம்பிள்தாங்க. இனி வரி விவரங்களை பார்ப்போம்; 'கருப்பு' தடுக்க வரிப்பிடித்தம் இந்தியாவில் நடக்கும் கருப்பு பணப்புழக்கத்தில் கணிசமான தொகை அசையாச் சொத்து பரிவர்த்தனைகளில் நடைபெறுவதாக நம்பப்படுகிறது. வருமான வரித்துறை கருப்பு பணத்தின் பயன்பாட்டை…
Read More
மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி! 2 லட்சம் பேருக்கு வேலை !!

மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி! 2 லட்சம் பேருக்கு வேலை !!

இந்தியாவை,மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கில், 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.உலகளவில், மொபைல் போன் தயாரிப்பில்,சீனா முதலிடத்திலும்,இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதேசமயம் , மொபைல் போன் ஏற்றுமதியில், இந்தியா, ‘டாப் 10’ பட்டியலில் கூட இடம் பெறாத அளவிற்கு மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், உள்நாட்டில் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, விற்பனை அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்கு, 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகம், ‘நிடி ஆயோக்’ ஆகியவை இணைந்து தயாரித்து உள்ள இந்த திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பில், சீனா, வியட்னாம் போன்ற நாடுகள் முன்னணியில்…
Read More
என்னவாயிற்று தமிழர்களுக்கு? பணப்புழக்கம்  ஏன் இங்கு இல்லை.?.

என்னவாயிற்று தமிழர்களுக்கு? பணப்புழக்கம் ஏன் இங்கு இல்லை.?.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்கு காரணம் எது ஏன் ? பல நண்பர்கள் மோடி தான் காரணம் என்று சொல்கிறார்கள். எல்லா தொழில்களிலும்.தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை.... அதோடு மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூரு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன்.அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன். வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள் இப்பொழுது வேலை செய்வது இல்லை,…
Read More
‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் மூச்சு விட வழி பிறந்துள்ளது!

‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் மூச்சு விட வழி பிறந்துள்ளது!

மொபைல் கோபுர வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களான, ‘இண்டஸ் டவர்ஸ் மற்றும்பார்தி இன்ப்ராடெல்’ ஆகியவற்றின் இணைப்புக்கு, தொலைதொடர்பு துறை அனுமதி வழங்கி இருக்கிறது. இதையடுத்து, ‘வோடபோன் ஐடியா’ மூச்சு விடுவதற்கு வழி பிறந்து உள்ளது.இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்கு, தொலைதொடர்பு துறை அனுமதி வழங்கி இருப்பதை அடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனம், அதன் வசம் இருக்கும், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டிக்கொள்ளும்வாய்ப்பு உருவாகி இருக்கிறது.வோடபோன் ஐடியாவிடம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின், 11.15 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக, வோடபோன் ஐடியா, 4,500 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள். இரு நிறுவனங்களின்இணைப்புக்கு அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், ‘பார்தி இன்ப்ராடெல்’ நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம், நாளை அன்று கூடி, இணைப்பு பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளது.இந்த இணைப்பை அடுத்து, புதிய நிறுவனம் உருவாகும். புதிய நிறுவனத்தின் வசம் இருக்கும்…
Read More
செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!

செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!

இணையதளம் முழுக்கவே வோடோபோன், ஏர்டெல் நெட்வொர்க் தனது சேவையைத் தொடர முடியாமல் தத்தளித்து வருகிறது என்று செய்திகள் வாட்ஸ்-அப், ட்விட்டர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கிறது. 92,000 கோடி ரூபாய் பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அதிரடியாக வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் நிலையில், இந்த செல்போன் நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரு நெட்வொர்க் சேவைக்கு மாறி வரும் அளவிற்கு செல்போன் பயனாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், பேராசையுடன் காத்திருக்கும் நில உரிமையாளர்களுக்கு பொறி வைத்து ஏமாற்றுவதற்கு ஒரு கும்பல் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. பிரபல செல்போன் நிறுவனங்களின் டவர் வைப்பதற்கு ஒன்றிலிருந்து, ஒன்றரை செண்ட் வரையில் நிலம் தேவைப்படுகிறது. காலி இடமாக இருந்தாலும் சரி, அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் சரி. அபார்ட்மெண்ட்டாக இருந்தால், குடியிருப்பவர்கள் அத்தனைப் பேரும் வாடகையைப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளைச் சொல்லி வலை விரிக்கிறார்கள். குறைந்தது 15லிருந்து 20…
Read More
‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ – மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு –

‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ – மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு –

ஈரோஸ் இண்டர்நேஷனல் ஹாட்ரிக்!! ‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு - பிரபு சாலமன் இயக்கத்தில் நாயகனாக ராணா தக்குபதி, முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால். வெள்ளித்திரையில் உலகமெங்கும் 02 ஏப்ரல் 2020 முதல்!நம் நாட்டின் பிரசித்திப்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஈரோஸ் இண்டர்நேஷனல், தனித்துவமான மற்றும் முக்கியமான உள்ளடக்கத்தை ஆதரிப்பதிலும், இந்திய சினிமாவை ஒரு முற்போக்கான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதிலும் முன்னணி வகிக்கிறது.தற்போது ஈரோஸ் இண்டர்நேஷனல் ஒரே நேரத்தில், தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘அரண்யா’ மற்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என மூன்று படங்களின் டீஸரை வெளியிட்டு இருக்கிறது! இம்மூன்று படங்களுமே ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த மும்மொழி திரைப்படம் உருவாகியிருக்கிறது என்பதால் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.மிகுந்த எதிர்பார்ப்புகளைப்…
Read More
“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு  – ஹைலைட்ஸ்!

“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு – ஹைலைட்ஸ்!

வரும் பிப்ரவரி 14ல் திரைக்கு வர இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அசோக் செல்வன்–ரித்திகா சிங் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து உள்ளனர். ஜி.டில்லிபாபு தயாரிக்க அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி டில்லி பாபு “காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்துக் கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. ‘ஓ மை கடவுளே’ படம் இன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இதில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ் கர், வாணி போஜன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.. சிம்பிளாக சொல்வதானால் எல்லோருடமும் இளமை மாறாத ஒரே…
Read More
சென்னையில் 3 நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை !

சென்னையில் 3 நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை !

( CBT Therapeutic Supervision Masterclass ) பயிற்சியளிப்பவர் மருத்துவர் Dr . ANDREW BECK , UK , DclinFsych , President - Elect of the British Association of Cognitive and Behavioural Psychotherapists ( BABCP ) , Consultant Clinical Psychologist & BABCP accredited supervisor , UK . மன நலம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் வகையில் , மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை , 2020 பிப்ரவரி 06 , 07 & 08 ஆகிய தேதிகளில் , சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள “ வெல்கம் ஹோட்டலில் " ( Member ITC ' s Hotel group ) நடைபெற உள்ளது . இங்கிலாந்தில் புகழ்பெற்ற உளவியல் மருத்துவர் மற்றும் BABCP தலைவருமான Dr . ANDREW BECK தலைமையில்…
Read More