சினிமா

*மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் திரைப்படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!*

*மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் திரைப்படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!*

*என்டிஆர் நடிப்பில், ஜூன் 11, 2027 அன்று வெளியாகவுள்ள 'NTRNeel' திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் என்டிஆர் பிறந்த தினமான மே 20 அன்று வெளியாகிறது!* 'NTRNeel' திரைப்படம் 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் மற்றும் 'கேஜிஎஃப்', 'சலார்' படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல் ஆகியோர் இணையும் இந்த படம் ரசிகர்களுக்கு தனித்துவமான திரையுலக அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'NTRNeel' திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளான என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் ஆகிய இருவரும் இணைவது, இந்தப் படத்தை 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவில், படக்குழு அதிரடியான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், என்டிஆர் பிறந்தநாளான மே 20 ஆம் தேதி படத்தின் முதல் கிளிம்ப்ஸ்…
Read More
*“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்..ஜி.வி. பிரகாஷ் குமார்!*

*“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்..ஜி.வி. பிரகாஷ் குமார்!*

‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – பன்முகத் திறமையும் தொடர் வெற்றிகளும்தான் திரைத்துறையில் ஒருவர் நீடித்து நிலைக்க முக்கிய காரணம். அந்த வகையில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பல மொழிகளிலும் பல்வேறு வகை படங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது ஸ்பெஷலான அனுபவம். ’ஆனந்த தாண்டவம்’ என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் வந்த படம். அந்தப் படத்தில் என்னை நம்பி, ரசிகர்களை…
Read More
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

மாடலிங் துறையில் தடம் பதித்து, அதே நம்பிக்கையுடன் சினிமாத்துறையிலும் தடம் பதிக்க இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ரோஸ்மின். இந்தப் படத்தில் அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. 'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே தனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளதாக ரோஸ்மின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படத்தில் தனது அனுபவம் பற்றி ரோஸ்மின் பகிர்ந்து கொண்டதாவது, "'செல்லமே' படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், 'ஆனந்ததாண்டவம்' படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின்…
Read More
*”மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!*

*”மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!*

சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், 'பிக் பாஸ் சீசன்8' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராணவ் பகிர்ந்து கொண்டதாவது, "காந்தி கிருஷ்ணா சாரின் இயக்கத்தில் அறிமுகமாவது எனக்கு கனவு நனவான தருணம். தமிழ் சினிமாவில் அவரது பயணம் இன்ஸ்பயரிங்கானது மட்டுமல்ல, மனித உணர்வுகளை கொண்டாடும்படியான படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய படம் வெளியாகிறது. அதில் நான் கதாநாயகன் என்பது எனக்கு இன்னுமே ஸ்பெஷல். உறவுகளில்…
Read More
*நடிகர்கள் அஜித்குமார்- ஷாலினி இணைந்து நடித்த ரொமாண்டிக் கதையான ‘அமர்க்களம்’ திரைப்படத்தின் மறுவெளியீடு!

*நடிகர்கள் அஜித்குமார்- ஷாலினி இணைந்து நடித்த ரொமாண்டிக் கதையான ‘அமர்க்களம்’ திரைப்படத்தின் மறுவெளியீடு!

நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான 'அமர்க்களம்' திரைப்படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. அஜித்குமாரின் 25 ஆவது திரைப்படமான 'அமர்க்களம்' ஆக்‌ஷன், காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்கள் என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளது. பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய டிரெய்லர் பல அழகிய தருணங்களைக் கொண்டுள்ளது. ஆன்-ஸ்கிரீனில் மலர்ந்த அஜித் மற்றும் ஷாலினியின் காதல் நிஜ வாழ்க்கையிலும் சாத்தியமாகியதால் ரசிகர்களுக்கும் இந்தப் படம் ஸ்பெஷலான ஒன்று. படம் அஜித்-ஷாலினியின் திருமண நாளன்று மீண்டும் வெளியாவது கூடுதல் சிறப்பு. ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் மறு  வெளியீடு செய்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய டிரெய்லர் பல உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் படத்தை மீண்டும் பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு கூட புது அனுபவத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. இந்த டிரெய்லர் ஆக்ஷனை…
Read More
’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது, "படத்தின் தலைப்பு 'பிரேக்ஃபாஸ்ட்' என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு  எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது" என தெரிவித்தார். நடிகை அமிதா, "காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப்…
Read More
மூன்று முறை கிராமி விருது வென்ற Ricky Kej, தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவான ‘கெவி’ திரைப்படத்திற்காக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.!

மூன்று முறை கிராமி விருது வென்ற Ricky Kej, தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவான ‘கெவி’ திரைப்படத்திற்காக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky Kej, நிர்வாகத் தயாரிப்பாளர் சுமதி ராம், ஸ்டார்ஸ் மியூசிக் ஸ்டுடியோ மற்றும் சன்மூன்ஸ்டார்ஸ் ஃபிலிம் ஸ்டுடியோவுடன் இணைந்து பணியாற்றுகிறார். பெங்களூரு, இந்தியா: மூன்று முறை கிராமி விருது வென்ற Ricky Kej, தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவான ‘கெவி’ திரைப்படத்திற்காக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ‘செட் மீ ஃப்ரீ!’ என்ற சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சுமதி ராம் முன்னெடுத்த இந்த முயற்சி, உள்ளூர் கதைக்கும் உலகளாவிய பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமைகிறது. ஆஸ்கார் கேம்பைன் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு தற்போது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான வெள்ளகெவி கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட ‘கெவி’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இருமொழிப் பாடல்கள்…
Read More
*ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ பட தோற்றம்!*

*ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ பட தோற்றம்!*

'ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வையை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டபோது அது சாதாராண அறிவிப்பாக இல்லாமல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தருணமாக மாறியது. இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜூனின் ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. ‘புஷ்பா2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மீண்டும் ஒருமுறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு ‘ராக்கா’ திரைப்படத்தில் அவருடைய முற்றிலும் புதிய தோற்றமே சான்று. அவருடைய இந்த புதிய தோற்றத்தின் பின்னால் இருக்கும் கடின உழைப்பை படக்குழு வியந்து பாராட்டி வருகிறது. ‘ராக்கா’ படத்திற்காக அல்லு அர்ஜூனின் கதாபாத்திர தோற்றத்தை கொண்டுவர தினமும் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நட்சத்திரமான இருந்தபோதிலும் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அல்லு அர்ஜூன் செயல்படுகிறார்.…
Read More
*நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!*

*நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!*

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ‘டிமாண்டி காலனி3- தி எண்ட் இஸ் டூ ஃபார்’ இந்த வருடம் கோடையில் வெளியாகிறது. அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முந்திய இரு பாகங்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தப் படத்தை, ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது படத்தின் வெற்றி வாய்ப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. திரையரங்கு விநியோகத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்கள் கொடுத்து திரைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில். ’டிடி ரிட்டர்ன்ஸ்’, ’கருடன்’, ’மகாராஜா’ மற்றும் ’பைசன் காளமாடன்’ உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றி பெற்ற பல…
Read More
*நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!*

*நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!*

காலத்தால் அழியாத கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘அமர்க்களம்’. நடிகர் அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்ட தருணமாக மாறியுள்ளது. இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது. இந்த படத்தில்தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் தம்பதிகளாக மாறினர்.  இதனால், ‘அமர்க்களம்’ திரைப்படம் ரசிகர்களின் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளது.  ஏப்ரல் 24 அஜித்- ஷாலினி ஜோடியின்…
Read More