சினிமா

வெஞ்சென்ஸ்–திரைவிமர்சனம்!

வெஞ்சென்ஸ்–திரைவிமர்சனம்!

ஏ.பி.அசோக் குமார் தயாரிப்பில் ராகுல் அசோக் எழுதி, இயக்கி உள்ள படம் வெஞ்சென்ஸ். இந்த படத்தில் அபர்நதி, இளவரசு, ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, டி.எம்.கார்த்திக் ஸ்ரீனிவாசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே. ஜேம்ஸ், சச்சு, மங்கல், சைதன்யா, ரேகா நாயர், சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர். எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அருண் ராஜ் பின்னணி இசை அமைக்க, இம்ரான் எடிட்டிங் பணிகளும், வைரபாலன் படத்தின் கலை பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்,. அரசியல் களத்தையும், அதிகார வர்க்கத்தின் ஆசைகளையும் மையமாகக் கொண்டு இந்த வெஞ்சென்ஸ் படம் உருவாகியுள்ளது. சிறுவயதில் இருந்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை எப்போதும் பெருமையாக பேச வேண்டும், புகழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக நாயகி அபர்நதி இருக்கிறார். இதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் படித்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி…
Read More
*”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!*

*”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!*

'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு காரணமாக, பார்வையாளர்கள் மத்தியிலும் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகிறது. தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி பல தனித்துவமான கதைக்களம் கொண்ட, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களை தொடர்ந்து ஊக்குவித்து,…
Read More
ஜேப்பியார் பல்கலைக்கழகம் நடத்தும் மானுட சாதனைகளின் உச்சம்

ஜேப்பியார் பல்கலைக்கழகம் நடத்தும் மானுட சாதனைகளின் உச்சம்

9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026' கொண்டாட்டம் மரபு, அறிவுத்திறன் மற்றும் நவீன காலத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விழாவான 9-வது பதிப்பு 'ஜேப்பியார் ஐகான் விருதுகள்' இன்று அதன் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது.தேசிய கலாச்சார வரைபடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ள இந்த விழா, புதுமை, தன்னலமற்ற தியாகம் மற்றும் தொழில்முனைவோர் மன உறுதி ஆகியவற்றின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய "சான்றோர்களையும்" "சாதனையாளர்களையும்" கௌரவிக்கிறது.பல்கலைக்கழகத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான தொலைநோக்கு பார்வையாளர்களான ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினர். தத்தமது துறைகளில் புதிய எல்லைகளை வகுத்த தலைச்சிறந்த ஆளுமைகளுக்கு அவர்கள் உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.2026-ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் நிகழ்த்திய சாதனைகளை…
Read More
‘வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜின் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜின் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ், இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும். கதையின் தேவையை பொருட்டு படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டன. கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெற்றது. கடும் வெப்பம் மற்றும் குளிர் என பல…
Read More
‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம்!

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம்!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புக் மை ஷோவில்…
Read More
‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு!

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு!

'லீடர்' டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'லீடர்' வெளியாகிறது.ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர்…
Read More
மாமல்லபுரம் மாசிமக திருவிழா..குவிந்த இருளர் பழங்குடியின மக்கள்..!

மாமல்லபுரம் மாசிமக திருவிழா..குவிந்த இருளர் பழங்குடியின மக்கள்..!

மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரி உற்சவ விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலக புகழ்பெற்ற கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் சார்பில், ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு மாசி மகத்தை முன்னிட்டு நேற்று காலை தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, ராஜ வீதிகள் வழியாக கடற்கரைக்கு வந்தனர். பின்னர், கடலில் புனித நீராட்டினர். இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராடினார்கள்.. இதேபோல் இருளர் இனமக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் 2 நாட்களுக்கு முன்பே மாமல்லபுரம் வந்து கடற்கரையில் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கினர். இதையடுத்து, இருளர்கள் நேற்று அதிகாலை எழுந்து கடலில் புனித நீராடிவிட்டு மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபட்டனர்.…
Read More
‘ஆழி ‘திரைப்பட விமர்சனம் !

‘ஆழி ‘திரைப்பட விமர்சனம் !

கடற் பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் முரட்டு தாதா மூர்த்தி (சரத்குமார்). இவரது மகள் முகிலா (தீபிகா சதீஷ்) கல்லூரியில் படிக்கும் சக மாணவர் அருள் (இந்திரஜித் ஜெகஜித்) மீது காதல் கொள்கிறார். இந்த விஷயம் முகிலா தந்தைக்கு தெரிய வர அவர் கோபமடைந்து அருளை தனியாக படகில் நடுக்கடலுக்கு கடத்திச் சென்று கொல்ல திட்டமிடுகிறார். அருளை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். எதிர்பாராத நிலையில் மூர்த்தி சிக்கலுக்குள்ளாகிறார். இருவருமே உயிருக்கு போராடும் நிலையில் என்ன நடக்கிறது என்பதுதான் ஆழி படத்தின் கதை. சரத்குமாரை இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் மட்டுமல்ல அவரது நடிப்பும் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கிறது.நடுக்கடலில் மகளின் காதலன் இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி வந்து அவரை ரத்தம் பீரீட சொட்ட சொட்ட அடித்து நொறுக்கும் போது சரத்குமாரா இவ்வளவு முரட்டுத்தனமாக நடித்திருக்கிறார் என அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள் ரசிகர்கள்.…
Read More
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் வெளியான‌ ‘ஜாக்கி’ திரைப்படம் நான்காவது வாரமாக வெற்றிநடை போடுகிறது!

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் வெளியான‌ ‘ஜாக்கி’ திரைப்படம் நான்காவது வாரமாக வெற்றிநடை போடுகிறது!

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் வெளியான‌ 'ஜாக்கி' திரைப்படம் நான்காவது வாரமாக வெற்றிநடை போடுகிறது ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியுள்ள 'ஜாக்கி' மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் என இயக்குநர் பெருமிதம் மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான 'மட்டி' திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவான திரைப்படம் 'ஜாக்கி'. கடந்த ஜனவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ஜாக்கி' நான்கு வாரங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கியுள்ள‌ 'ஜாக்கி', மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் ஆகும். மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் இப்படம் திகழ்கிறது. ரசிகர்கள்,…
Read More
“மைலாஞ்சி” – திரை விமர்சனம்!

“மைலாஞ்சி” – திரை விமர்சனம்!

அஜயன் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “மைலாஞ்சி” திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா கருப், முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பை இசைஞானி இளையராஜா மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை செழியன் கவனித்துள்ள நிலையில், தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் செய்துள்ளார். ஊட்டியில் ’மைலாஞ்சி’ என்ற பெயரில் பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப், தனக்கு பிடிக்காதவர் உடனான திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்ல நினைக்கும் போது, அவர் சென்னைக்கு சென்று விடுகிறார். வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அவருக்கு கிரிஷா குரூப் உடனான நட்பு கிடைக்கிறது. நட்பு காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கிரிஷா குரூப் தன் மனதில் உள்ள காதலை சொல்லி, தன்னை சென்னையில் இருக்கும்…
Read More