சினிமா

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சில  திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர், "நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. ராஜா கதை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்து விட்டது. 'டூரிஸ்ட் ஃபேமிலி' போல சின்ன பட்ஜெட்டில் வந்த நல்ல படங்கள் வெற்றியடைந்துள்ளது. அதுபோல, இந்தப் படமும் நல்ல கதைக்களம் கொண்டிருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரசிகர்கள்…
Read More
பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'மாறுவேஷம்'. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் வைபவ், திலக் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மர்மமான கொலை வழக்கு ஒன்றின் உண்மையை அவர் கண்டறிய முயலும்போது, அதில் மறைக்கப்பட்ட அடையாளங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் ஆகியவற்றை இப்படம் பேசுகிறது.…
Read More

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்க வைக்கும் கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'மாறுவேஷம்'. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் வைபவ், திலக் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மர்மமான கொலை வழக்கு ஒன்றின் உண்மையை அவர் கண்டறிய முயலும்போது, அதில் மறைக்கப்பட்ட அடையாளங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் ஆகியவற்றை இப்படம் பேசுகிறது.…
Read More
துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்!

துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்!

சென்னை மற்றும் துபாய் திரைப்படத் துறைகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான பாலத்தை உருவாக்கும் நோக்கில் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஸெனோஃபர் ஃபாத்திமா சென்னை: துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது திரைப்படப் பயணத்தின் அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். சென்னையில் தனது படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) திரைப்படத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அவர் ஆராய்ந்து வருகிறார். சென்னையில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வரும் ஸெனோஃபர், உளவியல் சார்ந்த த்ரில்லர்கள், சமூகப் பிரச்சினைகள், மனித நடத்தை மற்றும் சமகாலக் கருப்பொருட்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். Zen Film Productions நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஸெனோஃபர், இதுவரை 20-க்கும் மேற்பட்ட…
Read More
‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா!

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா!

தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களின் தனித்துவமான இசைப் பாணியில், உள்ளூர் கலாச்சாரம், நகைச்சுவை மற்றும் தமிழ் மொழியின் தனித்துவத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும், இந்தப் பாடல் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சமகால ஹிப்-ஹாப்புடன் கொண்டாடுகின்றனர். கூர்மையான வரிகள், மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் துடிப்பான இசை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழ் அடையாளம், சினிமாவின் பழைய நினைவுகள் மற்றும் தொடர்ந்து பரிணமித்து வரும் பிராந்திய ராப் இசை ஆகியவற்றை உற்சாகமாகக் கொண்டாடுகிறது. புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உருவாகியுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் பிரபலமான காட்சியமைப்பை இன்றைய தலைமுறைக்கேற்ற வகையில் மாற்றி வடிவமைத்துள்ளது. பாடலின் இசை வீடியோவில் பாரம்பரிய கச்சேரி அரங்கம், துடிப்பான ராப் அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. பாரம்பரிய…
Read More

திருக்கோயில் அறங்காவலர்கள் தெரிவு மாநிலக்குழு உறுப்பினராக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி நியமனம்!

முதலமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி நன்றி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து, உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் திருமதி. அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் ஐ ஏ எஸ் உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது: “இந்த நியமனத்தை எனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பொறுப்பாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் நமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வின் முக்கியமான அடையாளங்களாக விளங்குகின்றன. அவற்றின் சிறப்புக்கு…
Read More
விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon திரையை விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தும் 'AAA சினிமாஸ்' பார்வையாளர்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குகிறது! ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத்தில் 'AAA சினிமாஸை' பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார். விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள 'AAA சினிமாஸ்' இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon ஸ்கிரீனை அறிமுகப்படுத்தியுள்ளது. 70 அடி × 30 அடி அளவிலான இந்தத் திரை, ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய LED சினிமா திரை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விசாகப்பட்டினத்தில் திரையரங்க அனுபவத்திற்கான புதிய அளவுகோலை 'AAA சினிமாஸ்' உருவாக்கியுள்ளது. 'AAA சினிமாஸ்' என்பது அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டிய பயணத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களுக்கான சிறந்த சினிமா…
Read More
குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார். பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் முரளி ஷர்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில்…
Read More
ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்!

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்!

உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ONE MAN* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு ஆக்ஷன் படத்திற்கு இணையாகப் படமாக்கப்பட்டுள்ளன. சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்த…
Read More
## *சென்னை மாநகரில் 300 பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட சாலை பாதுகாப்பு ரோந்து ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி* ### *25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து படையில் இணைப்பு – 1,000 பள்ளிகளுக்கு விரிவுபடுத்த இலக்கு* *தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன்ஸ் அமைப்பின் (TPTWO) – சென்னை பெருநகரப் பிரிவு, நகரப் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை, **சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol – RSP)* பிரிவுகள் மூலம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. 49-வது ஆண்டில் செயல்பட்டு வரும் TPTWO, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு என்ற முன்னோடி முயற்சியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு, சென்னை மாநகரில் உள்ள *250 பள்ளிகளைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட RSP மாணவர் படையினர்* இம்முயற்சியில் இணைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை, TPTWO அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடைமுறைகள்…
Read More