சினிமா

உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்!

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் முக்கிய தளங்களில் வெளியானது இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில், ஒரு புதிய நவீன வடிவில் வெளியாகி உள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், இன்ஸ்டா ரீல்ஸ், டிக் டாக் போன்ற தளங்களில் மே 20 அன்று இது வெளியிடப்பட்டது. இதன் லிரிக்கல் வீடியோ மே 23 அன்று ராஜ்ஷ்ரி சோல் யூடியூப் சேனலில் வெளியிடப்படும். பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இப்பாடல், பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதன் புதிய வடிவம் அப்பாடலின் புனிதத்தன்மையை மதித்துப் போற்றுவதோடு, புதுமையான இசை அணுகுமுறையின் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட…
Read More
*”தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்*  !

*”தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்* !

சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் 'மண்டவெட்டி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி. இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, "'மண்டவெட்டி' திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு உடல்ரீதியாகவும் மாறி வாழ்ந்திருக்கிறார் கோமலி. மிகுந்த சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல் ரீதியாக கடினமான தருணங்கள் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு அவர் நடித்தார். இந்தக் கதை, தன்னைவிட பலமிக்க சக்தியுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் அனுபவிக்கும்…
Read More
*இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!*

*இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!*

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக  உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை தரவுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றி திரைப்படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜா பகிர்ந்து கொண்டதாவது, "எனக்கு சினிமாவும்…
Read More
’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் 'ஹபீபி' திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன்…
Read More
கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் RICS இணைந்து, இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் மேலாண்மை MBA படிப்பைத் தொடங்குகிறது!

கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் RICS இணைந்து, இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் மேலாண்மை MBA படிப்பைத் தொடங்குகிறது!

கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் RICS இணைந்து, இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் மேலாண்மை MBA படிப்பைத் தொடங்குகின்றன — நாளைய நகரங்களை வடிவமைக்கும் தொழில் வல்லுநர்களை உருவாக்குகின்றன. உலகம் உற்று நோக்கும் வேகத்தில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் நகரங்கள், ₹111 லட்சம் கோடியைத் தாண்டிய தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், மற்றும் 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதப் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, மேலாண்மை, தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் கட்டப்பட்ட சூழல் ஆகியவற்றின் சங்கமத்தை வழிநடத்தக்கூடிய தொழில் வல்லுநர்களுக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்த சங்கமத்திற்கு முறையான கல்வி மூலம் குறிப்பிடத்தக்க அளவில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை பாரம்பரியமாக, தங்கள் அனுபவத்தின் மூலம்…
Read More
*ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!*

*ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!*

ஜியோஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும். ஜியோஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான 'உப்பு புளி காரம்', 'ஹார்ட்பீட்' மற்றும் 'ரிசார்ட்' ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது. இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (நடிகர் போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் கலகலப்பும், உணர்வுப்பூர்வமான உறவுகளும், நகைச்சுவையான தருணங்களும் ஆரம்பத்தில் வெளியான புரோமோக்களில் காட்டப்பட்டது. பின்னர், சண்முக…
Read More
*திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*

*திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*

நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் 'ஹபீபி'. மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து 'யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புதிய திறமையாளர்களுடன் நடிகர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் சாம்…
Read More
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறைக்கப்பட்ட ரத்தினங்களையும் (Hidden Gems), சுயாதீன திரைப்படங்களையும் (Indie Films) அறிமுகப்படுத்தும் புதிய YouTube சேனல்!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறைக்கப்பட்ட ரத்தினங்களையும் (Hidden Gems), சுயாதீன திரைப்படங்களையும் (Indie Films) அறிமுகப்படுத்தும் புதிய YouTube சேனல்!

இரண்டு முறை தேசிய விருது பெற்ற எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான G. தனஞ்ஜெயன் தலைமையிலான Creative Entertainers and Distributors நிறுவனம், FRIDAY PREMIERE என்ற புதிய YouTube சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக தரமான தமிழ் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் தனித்துவமான தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதிய திரைப்படம் இலவசமாக வெளியிடப்படும். திரையரங்குகளில் போதிய வரவேற்பைப் பெறாமல் தவறவிட்ட சிறந்த படைப்புகள், சுயாதீன திரைப்படங்கள், கல்ட் கிளாசிக் படங்கள் மற்றும் நினைவில் நிற்கும் கதைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அனைத்து திரைப்படங்களும் HD தரத்தில் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடைய English Subtitles உடன் வெளியிடப்படும். FRIDAY PREMIERE — திரையரங்குகளைத் தாண்டி தரமான திரைப்படங்களை கண்டுபிடிக்க விரும்பும் ரசிகர்களுக்கான ஒரு புதிய இலக்கு. தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருந்து கவனமாகத்…
Read More
ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு !

ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு !

மலையாளத் திரைப்பட இசையின் மகத்தான இசை மேதையாக விளங்கிய G. Devarajan அவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள முதல் “ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026”, புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக் கலைஞர் T. V. Gopalakrishnan அவர்களுக்கு, தேவராஜன் மாஸ்டரின் அன்புத் துணைவியார் திருமதி Leelamani Devarajan அவர்களால் வழங்கப்படுகிறது. 1927 முதல் 2006 வரை வாழ்ந்த தேவராஜன் மாஸ்டர், மலையாளத் திரைப்பட இசை வரலாற்றின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கவிஞர் Vayalar Ramavarma அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்கள், மலையாளத் திரைப்பட இசையின் பொற்காலத்தை உருவாக்கியவை என்றும் கருதப்படுகின்றன. அவரது இசைப் பங்களிப்பிற்காக, கேரள அரசின் உயரிய திரைப்பட விருதான J. C. Daniel Award உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் Gangai Amaran அவர்கள் கலந்து கொள்கிறார்கள். தேவராஜன் மாஸ்டர் தனது இறுதிக்காலத்தில் உருவாக்கிய அரிய இசை…
Read More
*சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் ‘வேலும் மயிலும்’!*

*சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் ‘வேலும் மயிலும்’!*

சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார். புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும்  அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான 'தாய் கிழவி' திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, 'வேலும் மயிலும்' வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். 'தாய் கிழவி' மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து…
Read More