சினிமா

எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் ‘பேட்டில்’ (‘Battle’)!

எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் ‘பேட்டில்’ (‘Battle’)!

ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்' திரைப்படத்தில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா மற்றும் நடிகர் முனீஷ்காந்த் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் எலைட் டாக்கீஸ் பேனரில் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'பேட்டில்' ('Battle'). சமீபத்தில் வெளியான 'தண்டகாரண்யம்' படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது. ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்' திரைப்படத்தில் 'தங்கலான்' புகழ் அன்புடன் அர்ஜுன், 'காந்தி கண்ணாடி' படத்தில் சிறு வயது அர்ச்சனா பாத்திரத்தில் நடித்த ஆராத்யா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், சுருளி, 'இட்லி கடை' படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் 'பேட்டில்' படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு ராப் பாடகரின் வாழ்க்கையைப் பின்னி…
Read More
டாக்டர் ஐசரி கே. கணேஷின் பிறந்தநாள் விழா மற்றும் ’வேல்ஸ் மியூசிக்’ அறிமுக விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்!

டாக்டர் ஐசரி கே. கணேஷின் பிறந்தநாள் விழா மற்றும் ’வேல்ஸ் மியூசிக்’ அறிமுக விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்திய திரைத்துறை நட்சத்திரங்களுடன் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக சென்னையில் கொண்டாடினார். சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கு பெயர் பெற்ற டாக்டர் ஐசரி கணேஷ் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க இயலாத ஆளுமையாக வலம் வருகிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மாலை வேளையில் 'வேல்ஸ் மியூசிக்' அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பிரபலமான இசைக்கலைஞர்கள், சுயாதீன கலைஞர்கள் மற்றும் புது திறமையாளர்களுக்கான களத்தை உருவாக்கும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக்’ செயல்படும். மேலும் இந்தத் தளம் கிரியேஷன், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தையும் கவனிக்கும். இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ரவிச்சந்தர், பிரபுதேவா, இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், விஜய், சுந்தர் சி, விஜய் ஆண்டனி, நெல்சன், ஆர்.கே.செல்வமணி, மாரி செல்வராஜ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, லலித், நடிகர்கள் அருண் விஜய், கீர்த்தி ஷெட்டி, மீனா, பார்த்திபன், ஆர்.வி.உதயகுமார், தமிழ்குமரன், கே.பாக்யராஜ், வசந்த் ரவி, ரெஜினா கேசண்ட்ரா, ஆதித்யராம்…
Read More
நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ காதல், பொய் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய மூன்றின் ஐந்து அடுக்குகளை ஆராய்கிறது!

நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ காதல், பொய் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய மூன்றின் ஐந்து அடுக்குகளை ஆராய்கிறது!

விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது. இந்தத் தொடரில் ரகசியம், சந்தேகம் மற்றும் பல வகையான உணர்வுகளும் காட்டப்பட்டிருக்கிறது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் தொடர் சைபர்கிரைம் மிஸ்ட்ரியுடன் குடும்பங்களின் ஆழமான உணர்வுகளையும் பிரதிபலித்திருக்கிறது. நாம் பாதுகாப்பு எனக் கருதும் இடமே நமக்கு ஆபத்தாக மாறும்போது நம்பிக்கை, ஏமாற்றுதல் மற்றும் வாழ்தல் எப்படி சிக்கலாகிறது என்பதைப் பற்றிய கதையாகவும் இது இருக்கும். இந்த நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தொடர் இறுதிவரை உங்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘தி கேம்’ தொடரின் உண்மையான பவர் பிளேயர் ஷ்ரதா ஸ்ரீநாத் தான். அவர் கதையை முன்னெடுத்து செல்வது மட்டுமில்லாது, கதையில் அவர் ஆதிக்கமும் செலுத்துகிறார். காவ்யா கதாபாத்திரத்தில் அவர்…
Read More
ஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் 'மிராய்! ஃபேண்டஸி- ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள 'மிராய்' அக்டோபர் 10 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. எமோஷன், புராணம் மற்றும் ஆக்‌ஷன் ஆகியவற்றுடன் இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் படம் இருக்கும். விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள 'மிராய்', மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது. அற்புதமான காட்சியமைப்புகள், திறமையான நடிகர்கள் மற்றும் ஆழமான கதையுடன், ஜியோஹாட்ஸ்டாரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-சவுத் டிஜிட்டல் வெளியீடுகளில் ஒன்றாக 'மிராய்' இருக்கும். இந்தப் படத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ராணா…
Read More
”’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!

”’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!

டிஸ்னியின் வெளிவரவிருக்கும் அறிவியல் புனைக்கதை திரைப்படமான ’டிரான்: ஏரஸ்’ இந்த வாரம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், 'சரியான நேரத்தில் வெளி வருவதாக’ முன்னணி நடிகர் ஜாரெட் லெட்டோ தெரிவித்துள்ளார். லண்டன் திரையிடலின் போது, டிஜிட்டல் ஸ்பை பத்திரிகையிடம் ஜாரெட் கூறுகையில், "செயற்கை தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாக இருக்கும் வேளையில் இந்தப் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும். இந்த படத்தில் நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்யத் தொடங்கினோம். நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ அல்லது கல்வியாளராகவோ இல்லாதபட்சத்தில் அந்தசமயத்தில் பெரிதாக யாரும் செயற்கை தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசவில்லை. இப்போது ஏஐ தொழில்நுட்பம் பற்றி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எல்லோரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். செயற்கை தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. இப்படியான சமயத்தில் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்" என்றார்.…
Read More
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பின்னணி பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பின்னணி பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’!

‘டியூட்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காகியுள்ளது. மேலும், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்காரி’ பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருப்பதன் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். பாடல் வெளியான ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை அடுத்து ஆல் ரவுண்ட் எண்டர்டெயினர் என்பதை நிரூபித்துள்ளார் பிரதீப். சஞ்சய் செம்வியின் எனர்ஜிட்டிக்கான பாடல் வரிகளும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கண்ணைக் கவரும் பாடல் உருவாக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் நிச்சயம் ஆடியோ- வீடியோ விஷூவல் ட்ரீட்டாக இந்தப் பாடல் அமையும் என்பதில் சந்தேகம்…
Read More
*நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!*

*நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!*

*ரஜினி- ஸ்ரீதேவி ஜோடி போல 'ட்யூட்' படத்தில் பிரதீப்- மமிதா~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!* மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ட்யூட்'. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர் 'ட்யூட்' பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார், "என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் 'ட்யூட்' படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை உடனே பிடித்து போனதால் பட வேலைகள் தொடங்கினோம். 'ட்யூட்' படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப்…
Read More
புரொடியூசர் பஜார்  தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025-ஐ நடத்தவுள்ளது

புரொடியூசர் பஜார் தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025-ஐ நடத்தவுள்ளது

புரொடியூசர் பஜாரின் புதிய பாய்ச்சல்: தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025-ஐ நடத்தவுள்ளது தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான TVAGA உடன் இணைந்து முக்கிய நிகழ்வை ஒருங்கிணைப்பதன் மூலம் பொழுதுபோக்குத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய அங்கமான புரொடியூசர் பஜார் தனது பயணத்தை தொடங்கிய நாள் முதலே தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்திய திரைத்துறை வர்த்தகத்தை செம்மைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் வெற்றிப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025ன் முக்கியப் பகுதியான இந்தியன்…
Read More
*வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தும் சீட்ஸ்டார் – மரங்களை நடும் உலகின் முதல் பட்டாசு!*

*வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தும் சீட்ஸ்டார் – மரங்களை நடும் உலகின் முதல் பட்டாசு!*

*இந்தியாவின் நம்பர் 1 பட்டாசு பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள உலகின் முதல் விதைப்பட்டாசான சீட்ஸ்டார் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது!* இந்த தீபாவளியில் சூழலுக்கு மாசு விளைவிக்காத விதைகளாக மாறும் பட்டாசுகள் வெடித்து, பசுமையான எதிர்காலத்தை சந்ததிகளுக்கு விட்டு செல்வோம். 84 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் முன்னணி பட்டாசு உற்பத்தியாளர்களில் ஒன்று. 1937 ஆம் ஆண்டு பிரீமியர் பட்டாசுகளாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தரமான மற்றும் புதுமையான பட்டாசு உற்பத்தியாளராக வளர்ந்துள்ளது. பாரம்பரியத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து இணைத்து, கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்கிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து அதாவது, 1945 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 84 ஆண்டுகளாக இயங்கி வரும் வடிவேல் பைரோடெக்ஸ், உலகின் புரட்சிகரமான கண்டுபிடிப்பான 'பசுமை பட்டாசு' வகையை சேர்ந்த சீட்ஸ்டார் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பட்டாசு வெடித்து…
Read More
‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேகமான முன்னோட்ட காட்சிகள் மற்றும் ரசிகர்களுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ஸ்பெஷல் மெசேஜ்!

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேகமான முன்னோட்ட காட்சிகள் மற்றும் ரசிகர்களுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ஸ்பெஷல் மெசேஜ்!

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் (அக்டோபர் 2) மறுவெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேகமான முன்னோட்ட காட்சிகள் மற்றும் ரசிகர்களுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ஸ்பெஷல் மெசேஜ்! ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. படம் தொடங்குவதற்கு முன்பாக அகாடெமி விருது வென்ற இயக்குநர்ஜேம்ஸ் கேமரூனின் தனிப்பட்ட குறுஞ்செய்தியும் ரசிகர்களுக்கு திரையிடப்படும். இதில் அவதாரின் அடுத்த அத்தியாயத்தின் திரைக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளையும் பார்ப்பார்கள். சல்லி குடும்பத்துடன் ஸ்பைடர் விண்ட்ரேடர்ஸைச் சேர்ந்த கம்பீரமான மெடுசாய்டுகள், பரந்த ஜெல்லிமீன் போன்ற உயிரினங்களில் பயணிப்பதில் இருந்து இந்த பிரத்யேக காட்சி தொடங்குகிறது. அவர்களுடன் ட்லாலிம் குல தலைவரான டேவிட் தெவ்லிஸின் பெய்லாக் இந்த ஃபிரான்சைஸில்…
Read More