05
Jun
*நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!* மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்துள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களின் அறிவிப்பு மற்றும் வெற்றிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘டியூட்’ போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறது. தற்போது அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான 'இருமுடி கட்டு' படத்தைத் தயாரித்துள்ளது. பான் இந்திய…
