10
Jul
ஆயுஷ்மான் பாரத்' என்ற, இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்த, 'நாட்ஹெல்த்' எனப்படும், இந்திய மருத்துவ சேவை கூட்டமைப்புடன், மத்திய அரசு அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.நாடு முழுவதும் உள்ள, ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம், கடந்தாண்டு, செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள,10 கோடி ஏழை எளிய குடும்பங்களுக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனை களில், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தோர், எவ்வித கட்டணமும் செலுத்தாமல், சிகிச்சை பெறலாம். மத்திய அரசின் புள்ளி விபரங்களின்படி, இதுவரை, 10 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த வும், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனால், 'நாட்ஹெல்த்' எனப்படும்,…
