சினிமா

பரோடா வங்கியின் உழவர்  திருவிழா இருவார கொண்டாட்டம் !

பரோடா வங்கியின் உழவர் திருவிழா இருவார கொண்டாட்டம் !

பரோடா உழவர் இருவார திருவிழா கொண்டாட்டம் என்பது 01.10.2019 முதல் 15.10.2019 வரை எங்களது வங்கியில், பாங்க் ஆப் பரோடா நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும், இது பொதுவாக தேச பொருளாதாரம் மற்றும் குறிப்பாக விவசாய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக விவசாயிகள் சமூகத்தை சென்றடைகிறது. இது குறித்து சென்னை பரோடா வங்கி பொது மேலாளர் ராமகிருஷ்ணன் மைலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரோடா உழவர் இருவார திருவிழா கொண்டாட்டத்தின் குறிக்கோள்: நாடு முழுவதும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் உணவு உற்பத்தியில் சுய இலக்கை அடைதல்.அரசாங்கத்தின் குறிக்கோளை ஆதரிக்க 2020 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான முயற்சிகள்.வேளாண் வளர்ச்சி மற்றும் விவசாயிகள் சமூகத்திற்கான வங்கி முயற்சிகள் குறித்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல். விவசாயிகளின் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக எங்கள் கடன் தயாரிப்புகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தல்.கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில்…
Read More
நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் !மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது !!

நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் !மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது !!

மின்சார வாகனங்களில் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை சார்ஜ் செய்வதற்கான இடங்கள் குறித்த வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்தபட்சம் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனும், நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும், பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தவும், இரண்டாம் கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களில் நடைமுறைப்படுத்தவும் எரிசக்தித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டே வழிமுறைகள் வகுக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டதால் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது.
Read More
ரூ.80,000 கோடி வராக் கடன் வசூல் !  நிறுவன திவால் சட்டத்தால் மீட்பு !!

ரூ.80,000 கோடி வராக் கடன் வசூல் ! நிறுவன திவால் சட்டத்தால் மீட்பு !!

இந்தாண்டு, பல்வேறு நிறுவனங்களின், 80 ஆயிரம் கோடி ரூபாய் வராக் கடன், என்.சி.எல்.டி., எனப்படும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மூலம் மீட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, 2016ல் அமல்படுத்திய திவால் சட்டம் மூலம், இது சாத்தியமாகியுள்ளது. இது குறித்து, மத்தியநிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: திவால் சட்டம் அறிமுகமான பின், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான, வாராக் கடன் வசூலாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், கடன் மறுசீரமைப்பு திட்டம் மூலமாகவும், என்.சி.எல்.டி.,யில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக வசூலிக்கப்பட்ட தொகையும் அடங்கும். என்.சி.எல்.டி., மற்றும் என்.சி.எல்.ஏ.டி., முன், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான புதிய வழக்குகள், திவால் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரிக்க, 11, என்.சி.எல்.டி., மன்றங்கள் தான் உள்ளன. எனவே, நாடு முழுவதும், மேலும் பல விசாரணை மன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த…
Read More
திவால் சட்டம் அமலுக்கு வந்த பின் வாராக் கடன்களுக்கு தீர்வு!

திவால் சட்டம் அமலுக்கு வந்த பின் வாராக் கடன்களுக்கு தீர்வு!

திவால் சட்டம் அமலுக்கு வந்த பின், வங்கிகள், நிதி நிறுவனங்களின் வாராக் கடன்களுக்கு தீர்வு காண்பது அதிகரித்துள்ளது.இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி சீனிவாஸ் கூறியதாவது:கடந்த, 2016ல் நிறுவன திவால் சட்டம் அறிமுகமான பின், வாராக் கடன்களுக்கு தீர்வு காண்பது அதிகரித்துள்ளது. அதேசமயம், வாராக் கடன் வசூலுக்கு, திவால் சட்டத்தின் கீழ், கடைசி கட்டமாகத் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதாவது, முதலில் கடன்களுக்கான பல்வேறு தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் முடிவு காண முடியாத பட்சத்தில், திவால் சட்டத்தை நாடலாம்.புதிய வாராக்கடன்கள் பெருகுவது குறைந்துள்ளது. அதேசமயம், ஒட்டுமொத்த வாராக் கடன் அளவும் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நல்ல முன்னேற்றம்.திவால் சட்டத்தின் கீழ், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், ஒரு வாராக்கடன் வழக்கில் தீர்வு காணப்பட்டால், தீர்ப்பாயத்திற்கு வெளியே, ஒன்பது வழக்குகளுக்கு தீர்வு கிடைப்பதாக, புள்ளி விபரம்…
Read More
பிரதான் மந்திரி யோஜானா திட்டத்தில் 14 கோடி மக்களுக்கு வங்கி கடன் ?

பிரதான் மந்திரி யோஜானா திட்டத்தில் 14 கோடி மக்களுக்கு வங்கி கடன் ?

மத்திய பிரதேசத்தில் வருகிற 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று நடந்த பிரசார பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, கரையான்களை ஒழிக்க நச்சு மருந்தினை நாம் பயன்படுத்துகிறோம். நாட்டில் ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கசப்பு மருந்து போன்று பயன்படுத்தினேன். தங்களது படுக்கை அடியில், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மக்கள் பணம் பதுக்கி வைத்தனர். அவர்கள் இன்று ஒவ்வொரு பணத்திற்கும் வரி கட்டி வருகின்றனர். இந்த பணத்தினை சாதாரண மக்களுக்கான சரியான திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார். மத்திய பிரதேச விவசாயிகள் காங்கிரசின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறினார். அது போலியானது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு முன் கடன் தள்ளுபடி வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது. ஆனால் அதற்கு பதிலாக விவசாயிகளை சிறைக்கு…
Read More
தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!

தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!

தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த , இந்தியாவின் மிகவும் இளைய குழந்தைகளில் ஒன்று , ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டது ! மிகவும் முன்னதாகவே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு டாக்டர் ராகுல் யாதவ் தலைமையிலான மருத்துவக்குழு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டது சென்னையை சேர்ந்த திருமதி கீதா அறிவழகன் அவர்களுக்கு , கருவுற்றதிலிருந்து 22 வாரம் என்ற இரண்டாவது பருவத்தின்போதே 510 கிராம் எடையுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு டாக்டர் ராகுல் யாதவ் தலைமையிலான பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் குழு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளித்ததை இன்று உலகிற்கு வெளிப்படுத்தினர் . பிரசவத்திற்கு முந்தைய நிலையில் கர்ப்பப்பையின் சவ்வு கிழிதல் ஏற்பட்டதன் காரணமாக திருமதி கீதா அறிவழகன் பிரசவகாலத்திற்கு முன்னதாகவே குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் . இக்குழந்தைகள் , வேறு மருத்துவமனையில் பிறந்து , தீவிர…
Read More
ஜியோ மீது மோசடி புகாரளித்த ஏர்டெல்!

ஜியோ மீது மோசடி புகாரளித்த ஏர்டெல்!

ஜியோ நிறுவனமானது தனது இன்கமிங் கால் ரிங் காலஅளவை 20 வினாடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுவாக நம் நாட்டில் அனைத்து இன்கமிங் ரிங் அளவு 45 விநாடிகள் ஆகும். அதனை ஜியோ நிறுவனம் 20 விநாடிகளாக குறைத்துள்ளது. இதன் காரணமாக தனக்கு வரும் இன்கமிங் கால்களில் அழைப்புகளில் 30 சதவீதம் மிஸ்டு கால்-ஆக மாற்றுகிறது என ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, ஒரு ஏர்டெல் அழைப்பாளர் ஜியோ நம்பருக்கு போன் செய்கையில் அவருக்கு 20 வினாடி மட்டுமே ரிங் செல்லும். அதன்பின் ஜியோ நிறுவனத்திற்கு அந்த அழைப்பு மிஸ்டு காலாக கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் ஜியோ நிறுவனத்திலிருந்து ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த நபர் போன் செய்வார். இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த அழைப்பு இன்கமிங் காலாக மாறிவிடும். இந்திய தொலைதொடர்பு விதிகளின்படி தன்னுடைய நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு இன்கமிங் சென்றால்…
Read More
தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !

தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !

இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ’சியாம்’ கூறியுள்ளது. இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர், ராஜன் வதேரா கூறியுள்ளதாவது:வாகன துறையினர், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வரி குறைக்கப்படும் என, மிகவும் நம்பிக்கையோடு இருந்தனர். வாகனங்கள் மீதான, 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்படும் என, மிகவும் எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வாகனங்கள் மீதான வரியை குறைக்காத காரணத்தால், இனி சொந்தக் காலிலேயே நின்று, தேவையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க வேண்டியது தான். வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கமானது, ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க கோரியதோடு மட்டுமின்றி, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட வாகன பிரிவுக்கு, இழப்பீட்டு கூடுதல் வரியை நீக்குமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட, 4 மீட்டருக்கும் குறைவான…
Read More
கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த ‘ஹெலியா’ என்ற மின்சார கார்!

கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த ‘ஹெலியா’ என்ற மின்சார கார்!

இனி மின் வாகனங்களுக்கே எதிர்காலம் என்பதால், பல புதுமைகள் தினமும் வரத்துவங்கிவிட்டன. பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள், மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தால் ஓடும் புதிய காரை வடிவமைத்துள்ளனர். காரின் கூரையில் சூரிய ஒளி மின் பலகைகளும், நான்கு இருக்கைகளும் கொண்ட, 'ஹெலியா' என்ற அந்த மின் கார், ஒரே மின்னேற்றத்தில், 900 கி.மீ., செல்லக்கூடியது. நான்கு பயணியர் இருக்கையுள்ள ஹெலியா, உபரி மின்சாரத்திற்காக, சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துகிறது. பயணிக்கும் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக, மாணவர்கள், கணினியில் அதன் வடிவத்தை உருவாக்கி சோதித்து, இறுதியில் காற்றுத்தடை குறைவாக உள்ள வடிவத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், அதிகபட்ச வேகமாக, 80 கி.மீ., வரை காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லக் கூடியது ஹெலியா. மின்சார வாகனங்கள் எடை அதிகமாக இருந்தால், செல்லும் துாரம் குறையும். இதற்காகவே, ஹெலியாவின் உடலை கார்பன் இழைகளால் கட்டமைத்துள்ளனர். பிரிட்டனின், 'மிகச் செயல்திறன் கொண்ட மின்சார கார்'…
Read More
ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்… ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்… ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

ஒன்றரை மாதம் வரை சார்ஜ் இருக்கக்கூடிய மொபைல் போனை ஆவெனிர் நிறுவனம் சந்தையில் விட்டுள்ளது. தற்போதைய காலத்தில் யாரிடம் தான் ஸ்மார்ட் போன் இல்லை.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள் அல்லவா..? அவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் எந்த அளவிற்கு சார்ஜ் நிற்கிறது..? எவ்வளவு நேரம் பயன்படுத்த முடிகிறது என்பதில் உள்ள மிக முக்கிய விஷயம். ஒருசிலர் வைத்துள்ள மொபைலோகளில் தொடர்ந்து அரை மணி நேரம் பயன்படுத்தினாலே போதும் உடனே சார்ஜ் ஏற்ற வேண்டிய நிலைக்கு வரும். ஒரு சில போன்கள் அப்படி இருக்காது.. சற்று கூடுதலான நேரம் சார்ஜ் நிற்கும். இந்த பிரச்சனையை போக்கும் வண்ணம், ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதும், ஒன்றரை மாதம் வரை அப்படியே சார்ஜ் இருக்கும் வகையில் ஆவெனிர் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது,18,000mAh சக்தி கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. அதாவது மற்ற ஸ்மார்ட் போனில் அதிகபட்சமாக…
Read More