புதிய வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட் !

ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டர் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட உள்ளன. இதனால் இவற்றை பதிவு செய்வது தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொருத்துவதை நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளில் ‘பார்க்கோடு’ இடம் பெற்றிருக்கும். பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேசிஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் இந்த வகை நம்பர் பிளேட்டுகளை நடைமுறைப்படுத்தும்போது வாகனங்களை திருடி ஒரே எண்ணை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

மேலும் திருட்டு வாகனங்களை மீட்பது, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்களை பிடிப்பது ஆகியவற்றுக்கும் இத்தகைய நம்பர் பிளேட்டுகள் உதவும்.எனவே, ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அதனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படாத நிலையில் ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பதிவு தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. அதற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

Related posts:

MSME-க்கு 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதி -மத்திய அரசு திட்டம்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது.!

"ஓம் காளி ஜெய் காளி' வெப் சீரிஸில் என்னைக் கவர்ந்ததே அதன் புராணங்களும் சடங்குகளும்தான் " - நடிகை சீமா பிஸ்வாஸ்!

மிஸஸ் அண்ட் மிஸ்டர் விமர்சனம்!

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட ‘கண்ணப்பா’ படக்குழு!

பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது!