சினிமா

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது.!

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது.!

கிரெடிட் கார்ட் என்பது நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டண அட்டை. இதன் மூலம் சிறு கடன் பெறமுடியும். கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்வோம்... 1. கிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் சேவையும் கடன் பெறும் சேவையும் சேர்த்து அளிக்கிறது. தேவைக்கு ஏற்ப எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும். 2. கிரெடிட் கார்டில் பயன்பாட்டில் மற்றும் அதன் சலுகைகள் மூலம் சலுகை புள்ளிகள் வழங்கப் படுகின்றது. செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சில புள்ளிகள் வழங்கப்படுகின்றது. 3. கேஷ்பே கிரெடிட் கார்டுகள் அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தக் கிரெடிட் கார்டை கொண்டிருப்பவர்கள் சில சமயம் பணத்தைத் திரும்பப் பெற முடியும். 4. பெட்ரோலிய நிறுவனங்கள், சினிமா நிறுவனங்கள், இணையதள விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த சில சலுகைகளை இந்த கிரெடிட் கார்டு மூலம் விளம்பர படுத்துகின்றனர். 5. சில கிரெடிட் கார்டுகள் வட்டியில்லா கடன்…
Read More
வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி 15 லட்சம் !

வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி 15 லட்சம் !

வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான ஆண்டு பிரீமியம் 750 ரூபாயாக இருக்கும். சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, வாகன உரிமையாளர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, அவரின் வாரிசுகள் பெறலாம். இந்தத் திட்டம் 2002 ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்தது. அதற்கு முன், இந்த இழப்பீட்டு தொகையும் கிடையாது. இந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள தனிநபர் விபத்து பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் (15 லட்சம் ரூபாய்க்கு) 750 ரூபாயாகும். முன்னர் இது இரு சக்கர வாகனத்துக்கு 50 ரூபாயாகவும், நான்கு சக்கர வாகனத்துக்கு 100 ரூபாயாகவும் இருந்தது. 15…
Read More
“பிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

“பிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனால் அவர்கள் அளிக்கும் பிஎப் கணக்கில் உள்ள 6 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு பற்றி மட்டும் பலருக்குத் தெரியாது.1976-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்து வருபவர்களுக்கு EDLI எனப்படும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பிஎப் கணக்கு வைத்துள்ள எல்லா ஊழியர்களும் பயன்பெறமுடியும். எப்படி இந்தக் காப்பீட்டிற்கான பங்களிப்பை அளிப்பது? ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எப்படி ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் பங்களிப்புப் பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே போன்று EDLI-க்கான பிரீமியமும் செலுத்தப்படுகிறது.EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்தில் இருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது.…
Read More
உங்கள் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். !

உங்கள் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். !

தனிநபர் கடனுக்கான வட்டி உங்கள் பர்ஸை பதம் பார்க்கிறதா? உங்களுக்கு வாடகை வருமானம் வரக்கூடிய சொத்து இருந்தால், உங்களுடைய வட்டி சுமையைக் குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. உங்களுக்கு வரும் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். பாதுகாப்பான இந்தக் கடனில், தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன்களைக் காட்டிலும் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறது.அதாவது, வீடு அல்லது வணிக வளாகம் உள்ளிட்டவற்றிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தின் மீது வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதிகபட்ச கடன் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. ஆனால், கடன் தொகையானது, கடன் முதிர்ச்சியடையும் காலம் வரையிலான வட்டி வருமானம் மற்றும் சொத்தின் மறு விற்பனை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.பெரும்பாலான வங்கிகள் சொத்து மதிப்பில் அல்லது கடன் காலத்தில் ஈட்டப் படும் வாடகை வருமானத்தில் 80 சதவீதம் கடனாக வழங்குகின்றன. சில வங்கிகள் இதற்கு மேலும் வழங்குகின்றன. உதார ணத்துக்கு பெடரல் வங்கி, கடன் காலத்தில்…
Read More
இணை­ய­த­ளம் மூலம்  கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

இணை­ய­த­ளம் மூலம் கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

வங்­கி­களும், நிதி நிறு­வ­னங்­களும் இணை­ய­த­ளம் மூலம் உட­னடி கடனை வழங்­கு­கின்­றன. நிதி நுட்ப நிறு­வ­னங்­கள் ஸ்மார்ட்­போன் வாயி­லாக கடன் பெறும் வச­தியை அறி­மு­கம் செய்­துள்­ளன. இந்த வகை டிஜிட்­டல் கடன் வச­தியை, இளம் தலை­மு­றை­யி­னர் அதி­கம் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். எளி­தாக கிடைப்­பது சாத­க­மாக அமைந்­தா­லும், இந்த வகை கடன் பெறும் போது, வழக்­க­மாக பல­ரும் செய்­யும் தவ­று­களை தவிர்ப்­பது நல்­லது.எளி­தாக கிடைக்­கிறது என்­ப­தற்­காக மட்­டுமே, கடன் வச­தியை கண்ணை மூடிக்­கொண்டு பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. மொத்­த­மாக பார்க்­கும் போது, கடன் வசதி அதிக செல­­வு இல்லாத­தாக தோன்­ற­லாம். ஆனால் வட்­டியை கணக்­கிட்டு பார்க்க வேண்­டும். பல நேரங்­களில் வட்டி விகி­தம், செயல்­பாட்டு கட்­ட­ணத்­தில் உள்­ள­டங்­கி­யி­ருக்­க­லாம். பல­ரும் கடன் பெறும் அவ­ச­ரம் அல்­லது ஆர்­வத்­தில் விதி­மு­றை­களை பொறு­மை­யாக படிப்­ப­தில்லை. இணை­ய­த­ளம் அல்­லது செயலி வாயி­லாக கடன் பெறும் போது, தொடர்ந்து தக­வல்­களை சமர்­ப்பித்து, கடன் அனு­மதி பெறும் நிலை­யில், நிபந்­த­னை­களை அறி­வ­தில் நேரம் செல­வி­டு­வதில்லை; இது பாத­க­மாக…
Read More
கடன் வாங்கப் போறீங்களா… இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கடன் வாங்கப் போறீங்களா… இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கடன் வாங்கும் முன், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும். கடன் வாங்கும் சூழல் ஒருவருக்கு எப்போது, எதனால் வரும் என்றே சொல்லமுடியாது. மகனுக்கோ, மகளுக்கோ பள்ளி/கல்லூரிக் கட்டணம், வீட்டில் எதிர்பாராமல் நடக்கும் சுபநிகழ்ச்சிகள், குடும்பத்தில் யாராவது திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், விபத்து போன்ற பல விஷயங்களுக்காக பணத்தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அத்தகைய சூழலில் கையில் பணம் இல்லாதபோது செலவுகளைச் சமாளிக்க, பலரும் வாங்குவது கடன்தான். தொகை பெரிதோ, சிறிதோ கடன் வாங்கி, அப்போதைய அவசரத்தைச் சமாளித்துவிடுவதுதான் பலருக்கும் இன்று வாடிக்கையான விஷயமாகிவிட்டது. கடன் இத்தகைய சூழலில், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அவர்கள் கூறும் சில ஆலோசனைகள் இங்கே... 1) குறுகிய காலக்…
Read More
மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மின்னணு பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. எனவே இத்தகைய பரிவர்த்தனைகளில் நிகழ வாய்ப்புள்ள மோசடிகள் குறித்தும், அதுசார்ந்து கிடைக்கும் உதவிகள் குறித்தும் ‘ ஜாங்கார் பானியே, சதார்க் ராஹியே’ முன்னெடுப்பின் மூலம் ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துவருவதைப் பார்க்கமுடிகிறது. ஆன்லைன் முறையில் நடக்கக்கூடிய இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்றவற்றை மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளின் மூலம் நடைபெறும் ஏடிஎம் அல்லது பாயிண்ட் ஆஃப் சேல் பரிவர்த்தனைகளையும் மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். மின்னணு பரிவர்த்தனை முறையில் நீங்கள் மோசடிக்கு உள்ளானது வங்கியின் குறைபாடு மற்றும் அலட்சியத்தால் நிகழ்ந்தால் அதற்கு சட்டப்படி நீங்கள் பொறுப்பாளி அல்ல. இந்த மோசடி குறித்து நீங்கள் வங்கிக்கு தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும் நீங்கள் பொறுப்பாளி அல்ல. எது எப்படி இருந்தாலும், இழந்த தொகையை முழுமையாக…
Read More
பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!

பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!

ஒரு நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம் என்பது ஒரு சொத்தானது ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய அடிப்படை ஆவணமே. பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும். எனவே சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக பத்திரத்தைப் பதிவு செய்வது எப்படி? பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். பத்திரப்பதிவின் நோக்கம் ஒரு வீட்டை, ஒரு கடையை, ஒரு நிலத்தை, ஒரு சொத்தை இன்னாரிடமிருந்து இன்னார் பெற்றுக்கொண்டார் என்பதற்கான அடிப்படை ஆதாரமே. அதாவது பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டதற்கான ஆவணம். ஆனால் பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா மாறுதல் செய்துகொள்ளும்போதே அது முழுமையாகும். சொத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.விற்பவர், வாங்குபவர் இருவரின் முகவரிச் சான்று விற்பவர், வாங்குபவர் இருவரின் அடையாளச் சான்று விற்பவர், வாங்குபவர் இருவரும் ஆளுக்கொரு சாட்சியை அழைத்துவர வேண்டும் அல்லது வாங்குபவர் மட்டுமே இரண்டு…
Read More
சொத்தை வைத்து  கொண்டு  சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

சொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

பெரும்பாலும் சொத்துக்களை வாங்கி மட்டும் போடுவது அல்லது பூர்வீக சொத்துக்களை கவனிக்காமல் அப்படியே போட்டு விடுவது என பலர் இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு பலவிதமான சிக்கல்கள் எழும்பி அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் கரைத்து பதங்குலைந்து கொண்டு இருக்கின்றனர். ஒரு நபர் சென்னைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விட்டார் பட்டா வாங்கி விட்டார். வேலி போட்டு விட்டார். அடிக்கடி சொத்தை நேரடியாக பார்த்து விட்டும் வருவார். இவருக்கு என்ன பிரச்சனை வர போகுது என்று நினைக்கிறீர்களா? அரசு எந்திரம் சமீபத்தில் கம்ப்யூட்டரில் இருக்கிற பட்டாவை எல்லாம் ஆன்லைன்னுக்கு மாற்றியது அப்படி இவரின் இடத்தில் பட்டாவை ஆன்லைனுக்கு மாற்றிய போது வேறு நபர் பெயருக்கு பட்டாவை மாற்றி விட்டது. பட்டாவில் பெயர் வந்த நபர் மேற்படி பட்டா எண்களை எல்லாம் சேர்த்து விவசாய கடனும் வாங்கி விட்டார். ஆன்லைன் ஈசி யிலும் மேற்படி நபரின் பெயர் வந்து விட்டது. அந்த நில…
Read More