30
Aug
நாடு முழுவதும் வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.இந்தியாவில் பணி அமர்த்தலில் பாலின சேர்க்கை என்ற தலைப்பில் ஹார்வர்டு பல்கலை மாணவர்களான ரேச்சல் லெவன்சன் மற்றும் லயலா ஓகேன் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: நகர்ப் புறங்களில் படித்த பெண்களில் 8.7 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. வேலை தேடுவதில் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ள போதிலும் பாலின இடைவெளியும், உயர்கல்வி கற்ற பெண்கள் ஆண்களுடன் போட்டி போடும் போது கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. கல்வி தகுதி, அனுபவம், ஆட்தேர்வு, விண்ணப்ப தேர்வு, விண்ணப்ப நடைமுறை ஆகியவற்றில் பெண்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பெண்கள் தங்களுக்கு கல்வி மற்றும் அனுபவம் அதிகளவில் இருந்த போதிலும் பாலின வேறுபாடால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பெண்களை அதிகளவில் வேலை அமர்த்தும் பட்சத்தில் அவர்களால் இந்தியாவின் மொத்த…
