15
Jul
ஜிஎஸ்டி ரிட்டர்னை ஒருவர் தொடர்ந்து 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால், அவர் இ-வே பில் தயார் செய்வதில் இருந்து தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக ஜிஎஸ்டிஎன் தனது வலைதளத்தில் புதிய அம்சத்தைச் சேர்க்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதன்படி 6 மாதங்களாக ஒருவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால், தானாகவே இ-வே பில் உருவாக்கத்தில் இருந்து அவர் தடை செய்யப்படுவார். 1இது குறித்து ஜிஎஸ்டி வரி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாங்கள் உருவாக்கும் புதிய முறை மூலம் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யத் தகுதியுடைய ஒருவர், தொடர்ந்து இரு சுற்றுகள்(இரு 3 மாதங்கள்) ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாமல் இருந்தால், அவர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் இ-வே பில் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள். இதன் மூலம், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதும் தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து…
