சினிமா

ஜிஎஸ்டி ரிட்டர்னை  6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால்  இ-வே பில் தயார் தடை ? மத்திய அரசு திட்டம் !

ஜிஎஸ்டி ரிட்டர்னை 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் தயார் தடை ? மத்திய அரசு திட்டம் !

ஜிஎஸ்டி ரிட்டர்னை ஒருவர் தொடர்ந்து 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால், அவர் இ-வே பில் தயார் செய்வதில் இருந்து தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக ஜிஎஸ்டிஎன் தனது வலைதளத்தில் புதிய அம்சத்தைச் சேர்க்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதன்படி 6 மாதங்களாக ஒருவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால், தானாகவே இ-வே பில் உருவாக்கத்தில் இருந்து அவர் தடை செய்யப்படுவார். 1இது குறித்து ஜிஎஸ்டி வரி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாங்கள் உருவாக்கும் புதிய முறை மூலம் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யத் தகுதியுடைய ஒருவர், தொடர்ந்து இரு சுற்றுகள்(இரு 3 மாதங்கள்) ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாமல் இருந்தால், அவர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் இ-வே பில் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள். இதன் மூலம், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதும் தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து…
Read More
எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

AnyDesk என்ற செயலி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதுக்குறித்து RBI வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி இருக்கிறது. இந்தச் செயலியை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்தால், உங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வாலட் மற்றும் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை யுபிஐ (UPI) மூலம் திருடலாம் எனத்தெரிவித்துள்ளது. இந்த செயலியை தரவிறக்கம் செய்யும் போது 9 இலக்க கோடு உருவாக்கப்படும். அதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து விவரங்களும் அவர்களால் திருட முடியும். எனவே இந்த செயலியை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த செயலியை பயன்படுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
Read More
இலவச மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தில் தனியாரை ஈர்க்க ஒப்பந்தம் ?

இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியாரை ஈர்க்க ஒப்பந்தம் ?

ஆயுஷ்மான் பாரத்' என்ற, இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்த, 'நாட்ஹெல்த்' எனப்படும், இந்திய மருத்துவ சேவை கூட்டமைப்புடன், மத்திய அரசு அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.நாடு முழுவதும் உள்ள, ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம், கடந்தாண்டு, செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள,10 கோடி ஏழை எளிய குடும்பங்களுக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனை களில், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தோர், எவ்வித கட்டணமும் செலுத்தாமல், சிகிச்சை பெறலாம். மத்திய அரசின் புள்ளி விபரங்களின்படி, இதுவரை, 10 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த வும், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனால், 'நாட்ஹெல்த்' எனப்படும்,…
Read More
இனி ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்!

இனி ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்!

இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை கடந்த 2017 நவம்பரில் ஆரம்பித்தது.தற்போது யோனோ கேஷ் என்ற மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம். இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற யோனோ கேஷ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதில், 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். இந்த எண் பதிவு செய்யப்பட்ட மொபைல்…
Read More
லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது  ஃபேஸ்புக். !

லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக். !

குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம்.இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை மட்டுமல்லாது, அந்தந்த நாடுகளின் அடையாள அட்டைகள் இல்லாதவர்களை சரிபார்ப்பது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடினமானதாக இருக்கும்.ஊபெர், மாஸ்டர் கார்ட் மற்றும் பேபால் ஆகிய நிறுவனங்களும் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.ஏற்கெனவே உள்ள பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை ஆய்வு செய்துள்ளோம். லிப்ரா அவ்வாறாக இருக்காது என்கிறது ஃபேஸ்புக்.பிட்காயின் போல் மெய்நிகர் பணமாக இல்லாமல் லிப்ரா…
Read More
டெஸ்லாவுக்கு போட்டியாக  சீன மின்சார கார்கள்!

டெஸ்லாவுக்கு போட்டியாக சீன மின்சார கார்கள்!

சீனாவை சேர்ந்த கீலி ஆட்டோமொபைல் நிறுவனம் வாகனத் தயாரிப்பில் பிரபலமாக விளங்குகிறது. ஸ்வீடனை சேர்ந்த வால்வோ வாகனத் தயாரிப்பு நிறுவனமும் தற்போது கீலி நிறுவனத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின்சார கார் தயாரிப்புக்காக புதிய நிறுவனத்தை துவங்கி இருக்கிறது.ஜியோமெட்ரி என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த நிறுவனத்தின் கீழ் புதிய மின்சார கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் 2025ம் ஆண்டிற்குள் 10 மின்சார கார்களை இந்த நிறுவனத்தின் கீழ் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், முதல் மின்சார கார் மாடலை ஜியோமெட்ரி என்ற பெயரிலேயே அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஜியோமெட்ரி மின்சார கார்கள் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோமெட்ரி மின்சார காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் ரேஞ்ச்தான். ஆம். இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். இந்த கார்…
Read More
விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை வழங்குவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய, அரசு செயலர்கள் கூட்டத்தை கூட்டும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.வாகன விபத்து இழப்பீடு கோரி, போலியாக தாக்கலாகும் வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, கே.சந்துரு தலைமையில், நிபுணர் குழுவை, உயர் நீதிமன்ற நீதிபதி, பி.என்.பிரகாஷ் நியமித்தார். இதையடுத்து, நீதிபதிசந்துரு குழு ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. இவ்வழக்கில், நீதிபதி, பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:விபத்து வழக்குகளில் ஆஜராகும், ஏழு வழக்கறிஞர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிக்கலாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. வழக்கின் சூழ்நிலையை கருதி, ஏழு பேருக்கு எதிரான புகார், பார் கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. சட்டப்படி, பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில், ௫௬ வழக்குகளின் ஆவணங்கள் காணாமல்…
Read More
புதிய வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட் !

புதிய வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட் !

ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டர் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட உள்ளன. இதனால் இவற்றை பதிவு செய்வது தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொருத்துவதை நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளில் 'பார்க்கோடு' இடம் பெற்றிருக்கும். பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேசிஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் இந்த வகை நம்பர் பிளேட்டுகளை நடைமுறைப்படுத்தும்போது வாகனங்களை திருடி ஒரே எண்ணை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும். மேலும் திருட்டு வாகனங்களை மீட்பது, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்களை பிடிப்பது ஆகியவற்றுக்கும் இத்தகைய நம்பர் பிளேட்டுகள் உதவும்.எனவே, ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில்…
Read More
முதலிடம் பிடித்த தென் சென்னை..! வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..!

முதலிடம் பிடித்த தென் சென்னை..! வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..!

ரியல் எஸ்டேட் துறை சூடுபிடித்து வரும் நிலையில் தற்போது தென் சென்னையில் அதிக வீடுகள் விற்பனை ஆகி உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சற்று தொய்வில் இருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது.மும்பை, புனே, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னை உள்பட இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்கள் 2017 ஆம் ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்தமட்டில் வழிகாட்டி மதிப்பை குறைத்தது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறை ஆக்கப்பட்டது ஆகிய மாற்றங்கள் மக்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் வீடு வாங்கும் எண்ணம் அதிகரித்து. 2017 ஆம் ஆண்டை காட்டிலும் 2018ஆம் ஆண்டு 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதிலும் 12 சதவீதம்…
Read More
ரெலிகேர் வழங்கும் புதிய காப்பீடு திட்டம் ‘சூப்பர் மெடிகிளைம்’ !

ரெலிகேர் வழங்கும் புதிய காப்பீடு திட்டம் ‘சூப்பர் மெடிகிளைம்’ !

மருத்துவ காப்பீடுகளை வழங்கும் ரெலிகேர் நிறுவனம் சூப்பர் மெடிகிளைம் என்ற பெயரில் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் அபாயகரமான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு காப்பீடு தரும் வகையில் இந்த மருத்துவ காப்பீட்டுத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் அஷுதோஷ் சக்தி ஷ்ரோத்ரியா தெரிவித்தார். இந்த காப்பீட்டு திட்டத்தில் கேன்சர் மெடிகிளைம், ஹார்ட் மெடிகிளைம், கிரிடிகல் மெடிகிளைம், ஆபரேஷன் மெடிகிளைம் என நான்கு வகையான காப்பீட்டு வசதிகள் உள்ளன. கேன்சர் மெடிகிளைம் திட்டத்தில் ஆரம்ப நிலை புற்றுநோய் முதல் மிக முற்றிய நிலை வரையிலான சிகிச்சைக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. ஹார்ட் மெடிகிளைம் திட்டத்தில் 17 வகையான ஆபத்தான அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. குறிப்பாக ஹார்ட் அட்டாக், பைபாஸ் சர்ஜரி உள்ளிட்டவற்றுக்கு இந்த காப்பீடு தீர்வாக அமையும். கிரிடிகல் மெடிகிளைம் காப்பீட்டு திட்டமானது புற்றுநோய், ஹார்ட் அட்டாக், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பக்கவாதம் உள்ளிட்டவற்றுக்கு…
Read More