03
Nov
போரூரில் அமைந்தள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையில் டிரை ஐ சூட் என்ற புதிய சாதன தொகுப்பை மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.இந்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் 5-லிருந்து 15% வரையிலான நபர்களுக்கு உலர்ந்த கண் பிரச்சனை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.தரமான கண்ணீர் சுரப்பதை இப்புதிய தொழில்நுட்பம் தூண்டிவிடும் மற்றும் இதன்மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல், உலர்ந்த கண் பாதிப்பை சரிசெய்ய முடியும்.உலர்ந்த கண் பாதிப்பு அறிகுறியை கண்டறியவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் மிக நவீன தொழில்நுட்பத்தின் ஒரு விரிவான சாதன தொகுப்பை போரூரிலுள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தொடக்கவிழா நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் D. ஜெயக்குமார், கண் மருத்துவவியல் உட்பட, அனைத்து துறைகளுக்கும் தரம் மற்றும் சேவையை கருத்தில்கொண்டு இயங்குகின்ற பல உயர் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை கொண்டிருப்பதால் இந்நாட்டில் மருத்துவ சேவையை நாடி மக்கள் திரளாக வருகின்ற அமைவிடமாக சென்னை மாநகரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது…
