சினிமா

போரூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் டிரை ஐ சூட் சாதன தொகுப்பு ! அமைச்சர்  D. ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். !!

போரூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் டிரை ஐ சூட் சாதன தொகுப்பு ! அமைச்சர் D. ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். !!

போரூரில் அமைந்தள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையில் டிரை ஐ சூட் என்ற புதிய சாதன தொகுப்பை மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.இந்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் 5-லிருந்து 15% வரையிலான நபர்களுக்கு உலர்ந்த கண் பிரச்சனை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.தரமான கண்ணீர் சுரப்பதை இப்புதிய தொழில்நுட்பம் தூண்டிவிடும் மற்றும் இதன்மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல், உலர்ந்த கண் பாதிப்பை சரிசெய்ய முடியும்.உலர்ந்த கண் பாதிப்பு அறிகுறியை கண்டறியவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் மிக நவீன தொழில்நுட்பத்தின் ஒரு விரிவான சாதன தொகுப்பை போரூரிலுள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தொடக்கவிழா நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் D. ஜெயக்குமார், கண் மருத்துவவியல் உட்பட, அனைத்து துறைகளுக்கும் தரம் மற்றும் சேவையை கருத்தில்கொண்டு இயங்குகின்ற பல உயர் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை கொண்டிருப்பதால் இந்நாட்டில் மருத்துவ சேவையை நாடி மக்கள் திரளாக வருகின்ற அமைவிடமாக சென்னை மாநகரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது…
Read More
ZEE5 app-ல் போலீஸ் டைரி 2.0 வெற்றி பெறும் ! தயாரிப்பாளர் குட்டிபத்மினி நம்பிக்கை !

ZEE5 app-ல் போலீஸ் டைரி 2.0 வெற்றி பெறும் ! தயாரிப்பாளர் குட்டிபத்மினி நம்பிக்கை !

இந்தியாவில் பெரிதாக வளர்ந்து வரும் பன்மொழி வாய்த்த ZEE5 app அத்துடைய புத்தம்புது தமிழ் தொடர் போலீஸ் டைரி 2.0வை வெளியேற உள்ளது. இத்தொடரில் வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ் மற்றும் பாலாஜி மோகன் நடித்துள்ளனர். வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் நடைபெரும் இத்தொடர் நவம்பர் ஒன்று முதல் ZEE5 appஇல் மட்டுமே பிரத்தியேகமாக ஒளிபெற உள்ளது. ZEE5 வெளியிட்ட மற்ற சுவாரசியமான தொடர்கள் கள்ளச்சிரிப்பு, ஆட்டோ ஷங்கர், சிகை, களவு, அலாரம், வாட்ஸ் ஆப் வேலைக்காரி, மிட்டா, திரவம், பிங்கர் டிப், போஸ்ட்மேன், இக்லூ மற்றும் நிஷா ஆகியன. இதுமற்றுமின்றி Zee5 இல் காணப்படும் வெற்றிபெற்ற தமிழ்ப்படங்கள், சிலவற்றை பெயரிட, தேவி 2, நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா, கோலமாவு கோகிலா, மெர்சல் மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகியன. குட்டி பத்மினி(அர்பாட் சினி பாக்டரி) தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0, ஒரு…
Read More
தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கம்!

தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கம்!

தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் "அம்மா" செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகை ஆக தேர்வு செய்தேன். அம்மா அவர்களை போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களை போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே "பரதநாட்டியம்"…
Read More
வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம் ? அதிர வைக்கும் மோசடி…?

வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம் ? அதிர வைக்கும் மோசடி…?

வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் என்னென்ன தந்திரங்களை செய்கின்றனர் என தெரியுமா? அந்த தில்லுமுல்லுகளை இந்த செய்தியில் அம்பலப்படுத்தியுள்ளோம். புதிய கார் வாங்குவது என்பது, ஒருவர் தன் வாழ்க்கையில் எடுக்கும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்வதே இதற்கு காரணம். பொதுவாக எந்த காரை வாங்க போகிறோம்? என்பதை முடிவு செய்த பின், டீலர்ஷிப் பணியாளர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வது நல்லது. ஏனெனில் நீங்கள் காரை தேர்வு செய்த பின் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக அவர்கள் சில தந்திரங்களை செய்வார்கள். இதனை நீங்கள் கவனமாக கையாளாவிட்டால், காரின் உண்மையான விலையை விட அதிக தொகையை கொடுக்க வேண்டியதாக இருக்கும். எனவே கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக, கார் டீலர்கள் செய்யும் தந்திரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்தியாவில் உள்ள கார் டீலர்ஷிப்களில் அரங்கேற்றப்படும் அதிர வைக்கும் மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாப்பதுடன்,…
Read More
தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !

தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !

சென்னையில் கிடைக்கும் கருப்பை இருப்புக்கள் மற்றும் சிகிச்சை விருப்பங்கள் குறித்து கவலை தெரிவித்த NOVA INI கருவுறுதல் மற்றும் கருவுறுதல் ஆலோசகர் டாக்டர் மதுப்ரியா , " தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்களில் கருவுறாமை வழக்குகளில் கணிசமான அதிகரிப்பு உள்ளது என்கிறார் குறைந்த தரமான விந்து முட்டைகள் பொதுவான வளர்ந்து வரும் கவலை கருவுறுதல் சிகிச்சைக்காக வரும் தம்பதிகளுக்கு ஐவிஎஃப் பற்றிய நியாயமான அறிவு மட்டுமே இருக்கலாம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் , பலர் ஐவிஎஃப் சுழற்சிகளை தோல்வியுற்றிருப்பார்கள் , இதனால் அவர்கள் மீண்டும் கருத்தரிக்க முடியாது என்று நம்புகிறார்கள் . இருப்பினும் , ஐவிஎஃப் உடன் , பல கருவுறுதல் சிகிச்சைகள் உள்ளன . அவை அவற்றின் சொந்த உயிரியல் உயிரணுக்களை பெற வழிவகுக்கும் . இந்த சுழற்சி தோல்வியுற்றால் , இந்த ஜோடி நன்கொடையாளர் உயிரணுக்கள் மூலம் சிகிச்சையை தொடரலாம் . தற்போதைய மருத்துவ நிலைமைகள் மற்றும்…
Read More
10 லட்சம் பேர் வேலை பறிபோகும் ? கார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

10 லட்சம் பேர் வேலை பறிபோகும் ? கார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம் குறைந்தது, ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட டீலர்கள் தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.இந்நிலையில், விற்பனை சரிந்ததால், கார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த லட்சக்கணக்கான கார்கள் தேக்கம் அடைந்தன. இதன் காரணமாக, தற்போது கார் உற்பத்தியை குறைக்க அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதை தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது, தற்காலிக பணியாளர்கள்…
Read More
விலை ஒரு மேட்டரே இல்ல..! கார் ஸ்டைல்தான் ரொம்ப முக்கியம்.! அதிரடியாக மாறும் இந்தியர்களின் அணுகுமுறை !

விலை ஒரு மேட்டரே இல்ல..! கார் ஸ்டைல்தான் ரொம்ப முக்கியம்.! அதிரடியாக மாறும் இந்தியர்களின் அணுகுமுறை !

இந்திய கார் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. புதிய கார் வாங்கும்போது இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது உலகம் அறிந்த சங்கதி. ஆனால் நிலைமை தற்போது தலை கீழாக மாறி வருவது உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. ஆம், இந்திய கார் வாடிக்கையாளர்கள் விலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக காரின் ஸ்டைலுக்குதான் இந்தியர்கள் சிறப்பு கவனம் கொடுக்கின்றனர். மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனமான ஜேடி பவர் இதனை தெரிவித்துள்ளது. ஜேடி பவர் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்து காரின் லுக் மற்றும் ஸ்டைலிங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்திய வாடிக்கையாளர்களின் அணுகுமுறை மாறி வருவது தெரியவந்துள்ளது. அதுவே விற்பனை திருப்தி என வந்து விட்டால் ஹூண்டாய் முதலிடம் பிடிக்கிறது. மஹிந்திரா மற்றும் டொயோட்டா அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. புதிய மாடலை…
Read More
டிரைவிங் லைசென்ஸ் பெற வந்துவிட்டது தொழில்நுட்பம் !

டிரைவிங் லைசென்ஸ் பெற வந்துவிட்டது தொழில்நுட்பம் !

மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் வாகனம் ஓட்டும் திறனை மதிப்பீடு செய்து லைசென்ஸ் வழங்கப்படும் முறை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் லைசென்ஸ் பெறுவதற்கு '8' அல்லது 'S' போட்டால் போதும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது தகுதியான ஓட்டுநர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சில சோதனை முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் (HAMS) என்ற தொழில்நுட்பத்தை சோதனை முயற்சியாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவேற்றி, அதை வாகன ஓட்டிகளின் முன்பக்கமாய் பொருத்துகின்றனர். இந்த செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், போனின் முன் மற்றும் பின்பக்க கேமராக்கள், சென்சார்கள் ஆகியவற்றின் மூலம் வாகன ஓட்டுபவரின் திறனை துல்லியமாக கண்காணிக்கிறது. மேலும், வாகனைத்தை பின்நோக்கி சென்று நிறுத்துதல் (ரிவர்ஸ் பார்க்கிங்), 'S'…
Read More
திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து  100 உயிர்களை காப்பாற்றியுள்ளது காவேரி மருத்துவமனை !

திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை காப்பாற்றியுள்ளது காவேரி மருத்துவமனை !

SCD எனப்படும் திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உகந்த சிகிச்சை வழங்குவதில் காவேரி மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கிறது.நடிகர் பத்மஸ்ரீ விவேக் முன்னிலையில் நடைபெற்ற திடீர் மாரடைப்புத் தடுப்பு நிகழ்ச்சியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 10 SCD சிகிச்சை பெற்று பயனுற்றவர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ நடிகர் விவேக் பேசியபோது கூறியதாவது: “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது. திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களிலிருந்து காக்க காவேரி மருத்துவமனை மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளை என்னால் காண முடிகிறது.விழிப்புணர்வு இல்லாததும், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தயங்குவதுமே, இந்தியாவில் திடீர் மாரடைப்பினால் மரணங்கள் (SCD) ஏற்பட முக்கியக் காரணங்களாகும். திடீரென மாரடைப்பினால் ஏற்படும் மரணம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் தேவை. பொதுமக்கள் திடீர் மாரடைப்பிலிருந்து காக்கும் சிறப்பு SCD மருத்துவமனைகளை அணுகி,…
Read More
‘அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

‘அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

'அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா? ஒவ்வொரு முறையும் உயிர் பலி தரப்பட வேண்டுமா?' என, 'போர்வெல்' விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம், சாட்டையடி கேள்வி எழுப்பியது. இதற்கு முன், சட்டவிரோத பேனர் பிரச்னையில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது போல், ஆழ்துளை கிணறு விஷயத்திலும், சரமாரியான உத்தரவுகளை, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. திருச்சி, மணப்பாறை அருகே, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுஜீத் வில்சன், மாலை விழுந்தான். உயிருடன் சிறுவனை மீட்பதற்கு, எவ்வளவோ முயற்சிகள் செய்தும், பலன் அளிக்கவில்லை. கடைசியில், நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான். இதற்கிடையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய, விஞ்ஞானி பொன்ராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது:ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும், ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில், சிறப்பு சட்டம்…
Read More