சினிமா

ஜியோ ஃபைபர் சேவைகளின் விலைப்பட்டியல் இதுதான்!

ஜியோ ஃபைபர் சேவைகளின் விலைப்பட்டியல் இதுதான்!

டெலிகாம் சந்தையில் கொடியைப் பறக்கவிட்ட கையோடு ஜியோ அதன் அடுத்த அதிரடியைக் கடந்த மாதம் அறிவித்திருந்தது. ஆம், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் சேவைகள் பற்றிய அறிவிப்புதான் அது. 100 Mbps முதல் 1 Gbps வரை கிடைக்கும் இந்த ஜியோ ஃபைபர் சேவைகள், செப்டம்பர் 5 முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டாலும் அதன் விலை நிலவரம் தெளிவாக வெளியிடப்படவில்லை. மக்கள் ஜியோவின் இந்த பிராட்பேண்ட் சேவையைப் பெற விண்ணப்பித்துக்கொண்டிருக்க இன்று செப்டம்பர் 5-ம் வந்தது. ஆனால், விலைப்பட்டியல் வந்ததாக இல்லை. விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க விரும்புவார்கள் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்க தற்போது விலை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி அறிமுக சலுகையாக 6,400 ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் 4K செட்-அப் பாக்ஸும், 5,000 மதிப்புள்ள ஜியோ ஹோம் கேட்வே சாதனமும் இலவசமாகக் கிடைக்கும். முதல்கட்டமாக 2,500 ரூபாய் கட்டவேண்டியதாக இருக்கும். அதில் 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட்,…
Read More
அழிவைச் சந்திக்கிறதா, ஆட்டோமொபைல் சந்தை?

அழிவைச் சந்திக்கிறதா, ஆட்டோமொபைல் சந்தை?

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகள், மாற்றத்திற்குத் தயாராகத் துவங்கி விட்டார்கள்.டெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண்டிருந்தன. ₹35 லட்சம் கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என எண்ணின. ஆனால் டெஸ்லாவில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கூடி மூன்று வருடங்களுக்கு புக் ஆகி விட்டதைக் கண்ட போதுதான் மற்றவர்கள் விழித்துக் கொண்டனர்! டெஸ்லா மின் கார் வெளியானதும், மற்றவர்களிடமும் அவசரம் தொற்றிக் கொள்ள, தங்களின் புதிய வகை மின்சார காரை உலக ஆட்டோ எக்ஸிபிஷனில் வைக்கத் தொடங்கினர்... இதனிடையில் கூகுளின் ஆளில்லா கார் சற்றே புருவத்தை உயர்த்த வைத்தாலும், தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது போலத் தோன்றுகிறது. அதே நேரம் ஃபோக்ஸ்வேகன் கம்பெனி தனது நாட்டு சகாக்களான பிஎம்டபிள்யு,…
Read More
நகர்ப்புறங்களில் படித்த பெண்கள் 8.7 % பேருக்கு வேலையில்லை ?

நகர்ப்புறங்களில் படித்த பெண்கள் 8.7 % பேருக்கு வேலையில்லை ?

நாடு முழுவதும் வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.இந்தியாவில் பணி அமர்த்தலில் பாலின சேர்க்கை என்ற தலைப்பில் ஹார்வர்டு பல்கலை மாணவர்களான ரேச்சல் லெவன்சன் மற்றும் லயலா ஓகேன் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: நகர்ப் புறங்களில் படித்த பெண்களில் 8.7 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. வேலை தேடுவதில் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ள போதிலும் பாலின இடைவெளியும், உயர்கல்வி கற்ற பெண்கள் ஆண்களுடன் போட்டி போடும் போது கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. கல்வி தகுதி, அனுபவம், ஆட்தேர்வு, விண்ணப்ப தேர்வு, விண்ணப்ப நடைமுறை ஆகியவற்றில் பெண்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பெண்கள் தங்களுக்கு கல்வி மற்றும் அனுபவம் அதிகளவில் இருந்த போதிலும் பாலின வேறுபாடால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பெண்களை அதிகளவில் வேலை அமர்த்தும் பட்சத்தில் அவர்களால் இந்தியாவின் மொத்த…
Read More

ஹீரோ எலெக்ட்ரிக் கம்பெனியின் இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் இரண்டு புதிய ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது . ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அண்மையில் பெங்களூரில் தனது புதிய வர்த்தக அலுவலகத்தைத் திறந்துள்ளது . இதன்மூலம் , நாட்டின் தென் பகுதியில் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது . வரும் 2020 - ஆம் ஆண்டுக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான சேவை மையங்களை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் பெற்றிருக்கும் . வணிகத்தில் இருந்து வணிகம் செய்யும் பிரிவிலும் தனது தயாரிப்புகளை விரிவாக்கம் செய்ய ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது . ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் இஆர் என்ற பெயர்களில் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை ஹரோ எலக்ட்ரிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிவேக மற்றும் கனரக என்ஜின் கொண்ட இருசக்கர வாகனப் பிரிவை விரிவுபடுத்தும் வகையில் இந்தப் புதிய இருசக்கர வாகனங்களை ஹரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது . ஆப்டிமா இஆர் வாகனம் ரூ 68 ,…
Read More

மருத்துவர்-நோயாளிக்கு இடையேயான உறவுகள் பற்றிய புத்தகம் ! டாக்டர் மோகன் வெளியிட்டார் !

மருத்துவர் - நோயாளிக்கு இடையேயான உறவுகள் பற்றிய ' டியர் பீப்புள் , வித் லவ் அன்ட் கேர் , யுவர் டாக்டர்ஸ் ' புத்தகம் புகழ்பெற்ற நீரிழிவு நிபுணர் டாக்டர் மோகன் வெளியிட்டார் இதயப்பூர்வமான கதைகளுடன் வெளிவந்துள்ள இந்தியாவின் முதல் புத்தகம் ' மருத்துவர் - நோயாளிகள் இடையே உள்ள உறவை குறிக்கும் வகையில் , இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் குழு இந்த புத்தகத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளது * ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது . இந்த புத்தகத்திற்கு தலாய்லாமா முன்னுரை எழுதியுள்ளார் . இந்த புத்தகத்தை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் தலைமை நீரிழிவு - நிபுணருமான டாக்டர் மோகன் வெளியிட்டார் . ' * மருத்துவ உலகில் புதிய கண்ணோட்டத்தை அளிக்கும் இந்த புத்தகத்தை அதன் ஆசிரியர்களான டாக்டர்கள் தேபராஜ் ஷோம் மற்றும் அபர்ணா கோவில் பாஸ்கர்…
Read More

தென் மாநிலங்களிலேயே தமிழகம் வாகனத்துறையில் முதலிடம் !

தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி ஆகியவற்றிற்கு முன்னோடியாக திகழ்கின்ற வகையிலான, சிறப்பு நடவடிக்கையில் தமிழக அரசு களமிறங்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதவில் காணலாம். நாடு முழுவதும் பெரும் அதிர்வைலையை ஏற்படுத்தியுள்ளது இந்திய வாகனத்துறை. இதற்கு, இத்துறை அண்மைக் காலங்களாக சந்தித்து வரும் மிகப் பெரிய வீழ்ச்சியே முக்கிய காரணம். மிகப் பெரிய வாகனச் சந்தையாக விலங்கி வந்த இந்திய வாகனத்துறை இத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்து வருவது, நாட்டின் வருவாயில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என துறைசார்ந்த வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப வகையில், பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பது, பணியாட்களை வேலையை விட்டு நீக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்திய வாகனத்துறையின் இத்தகைய சூழலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று மின் வாகன ஊக்குவிப்பு. மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு காரணங்கள்…
Read More
எந்த மாசும் இல்லாமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்! புதிய கண்டுபிடிப்பு !!!

எந்த மாசும் இல்லாமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்! புதிய கண்டுபிடிப்பு !!!

எந்த மாசும் இல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிக்க எடுத்து கொண்ட முயற்சியை டி.என்.ஏ.வை அழித்தல். முத்துகிருஷ்ணன் மற்றும் லயன் இந்தியா ஆராய்ச்சி பிரைவேட் லிமிடெட் கோபிநாத் இருவரும் சேர்ந்து நிருபித்தனர். இதுகுறித்து இருவரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, இருவரும் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிக்க எடுத்து கொண்ட முயற்சியை பற்றி கூறுகிறோம். உலகத்தில் எல்லாரும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம் . இது எல்லா இடங்களிலும் உள்ளது. சுமார் 6 . 3 பில்லியன் மெட்ரிக் டன் தோராயமாக பிளாஸ்டிக் கழிவுகள் , 1 . 8 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் உலகெங்கிலும் குவிந்து மனிதன், நிலம் , நீர் , விலங்குகள் , கடல்வாழ் உயிரினங்கள் இதனுடைய நச்சு தன்மையால் பாதிப்பு அடைகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க முதலில் பிளாஸ்டிக்கின் டிஎன்ஏ வை அழித்து , மிகவும் எதிர்பார்த்த புதுமையான சூத்திரத்தை உருவாக்கி எம்பிஜி - 6…
Read More

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம் ? ஏழு லட்சம் மனுக்கள் தேக்கம் ?

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்தில், ஏழு லட்சம் மனுக்கள், அதிகாரிகள் முடிவுக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 2018 நவம்பர், 3ல் முடிந்தது.இதில், பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தொழில்நுட்ப அனுமதி வழங்க வேண்டியது, நகர் மற்றும் ஊரமைப்பு துறையின் பணி.இதன்பின், தொழில்நுட்ப அனுமதி அடிப்படையில், வளர்ச்சி கட்டணங்களை வசூலித்து, வரன்முறை உத்தரவை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும். தொழில்நுட்ப அனுமதி வழங்குவதில், ஆரம்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. கள ஆய்வுக்கு செல்லும் நிலையில் உள்ள அலுவலர்களுக்கே, இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது.இருப்பினும், வரன்முறை மனுக்கள் மீதான முடிவுகளை எடுப்பதில், டி.டி.சி.பி., அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், தனி மனைகள், உட்பிரிவு மனைகள், லே - அவுட்கள் என, மொத்தம், 7.97 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.விண்ணப்ப பதிவு கட்டணமாக,…
Read More
விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சி

விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சி

விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், மூன்று முக்கிய விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தம், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை, அதானி குழுமம் சமீபத்தில் பெற்றது. இந்நிலையில், ஆமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு விமான நிலையங்களையும், தனியார் மூலம் பராமரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Read More

வாகனங்களில் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் ! மத்திய அரசு திட்டம் !!

வாகனங்களில் முக்கியமான விஷயங்கள் பல காணப்பட்டாலும், மிக முக்கியமானதாக நம்பர் பிளேட் இருக்கின்றன. அது, ஒவ்வொரு வாகனத்திலும் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், பயன்பாட்டிற்கு வரும் ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் சேஸிஸ் எண்ணை அடிப்படையாகக் கொண்டு பிரத்யேக பதிவெண்களைப் பெறுகின்றன. இதனை, மாவட்டம் வாரியாக செயல்படும் ஆர்டிஓ அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. இவை மற்ற வாகனங்களுடன் ஒத்துப் போவதில்லை. மோட்டார் வாகனங்களுக்கு பதிவெண் வழங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், மிக முக்கியமாக வாகனங்களை இனங் காண்பதற்காகவே இம்முறை கையாளப்படுகின்றது. இந்த எண்கள் அசாதாரமானதாக காணப்படலாம். ஆனால், அதில் பல்வேறு நுணுக்கங்கள் கையாளப்பட்டு வருகின்றது. இருப்பினும், வாகன பதிவெண் விவகாரத்தில் பல முறைகேடுகள் நிகழ்வதாக, புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன. அதிலும் முக்கியமாக, போலி பதிவெண்தான் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஒரு வாகனத்தின் பதிவெண்ணைப் பயன்படுத்தி, வெறொரு வாகனத்தைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு முறைகேடுகள் நாட்டில் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதனை…
Read More