சினிமா

பாத்ரூமிற்குள் செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள் !

பாத்ரூமிற்குள் செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள் !

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் தீய பழக்கங்களில் முக்கியமான ஒன்று கழிவறையில் செல்போன் உபயோகிப்பது. பெரும்பாலும் இளைஞர்கள் அனைவருமே இதனை செய்கிறார்கள் என்று கூறலாம். இந்நிலையில் சமீபத்திய ஆய்வு முடிவின்படி பாத்ரூமிற்கு செல்போனை எடுத்துச்செல்வது உங்கள் நேரத்தை வீணாக்குவது மட்டுமின்றி பல ஆரோக்கிய கேடுகளையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இளைஞர்கள் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போல செல்போன்களுக்கும் அடிமையாக மாறிக்கொண்டிருக்கின்றனர். எங்கு சென்றாலும், எந்த வேலை என்றாலும் அவர்களால் செல்போன் இன்றி இருக்கமுடிவதில்லை. இந்த சூழ்நிலையில் கழிவறைக்கு செல்போன் எடுத்துச்செல்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இங்கு பார்க்கலாம். கழிவறை என்பது அதிக பாக்டீரியாக்களும், கிருமிகளும் இருக்கும் இடம் என நாம் நன்கு அறிவோம். அப்படி இருக்கும்போது அங்கே செல்போனை எடுத்துச்செல்வது உங்களை கிருமிகள் தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். புத்தகமோ, செல்போனோ எதுவாக இருப்பினும் வலது கையால் உபயோகப்படுத்திவிட்டு ஃபிளஸ் செய்யும்போது இடதுகைக்கு மாற்றிவிட்டு பின்னர் கையை சோப்பு போட்டு கழுவவேண்டும். எங்காவது போனை…
Read More
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு ?

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு ?

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு. சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம். பலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும்,…
Read More
தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல் !

தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல் !

டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தில், புதிய முறையை இந்திய மாணவர்கள் கண்டுபிடித்துஉள்ளனர். இதனால் நேரம் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. போக்குவரத்து அதிகம் நடைபெறும் மூன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் சந்திக்கும் இடங்களில், டிராபிக் சிக்னல்கள் உள்ளன. போக்குவரத்து தங்கு தடையின்றி செல்வதற்காக உருவாக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் போக்குவரத்து காவலர்கள் கை அசைவு மூலம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தானியங்கி டிராபிக் சிக்னல்கள் வந்துவிட்டன. அதிலேயே டைமர் பொருத்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு திசைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் செட் செய்யப்பட்டு, தானாகவே பச்சை மற்றும் சிவப்பு ஒளி விளக்குகள் மாற்றப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் தான், இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. புதிய தொழில்நுட்பம்தலைநகர் டில்லி அருகேயுள்ள சேட்டிலைட் நகரான குர்கானைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், புதிய டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது டைமர் மற்றும் கம்ப்யூட்டர் அல்காரிதம் பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்களில், ஒவ்வொரு திசைக்கும் எவ்வளவு நேரம் என்பது முன்னரே பதிவு…
Read More
கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது.!

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது.!

கிரெடிட் கார்ட் என்பது நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டண அட்டை. இதன் மூலம் சிறு கடன் பெறமுடியும். கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்வோம்... 1. கிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் சேவையும் கடன் பெறும் சேவையும் சேர்த்து அளிக்கிறது. தேவைக்கு ஏற்ப எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும். 2. கிரெடிட் கார்டில் பயன்பாட்டில் மற்றும் அதன் சலுகைகள் மூலம் சலுகை புள்ளிகள் வழங்கப் படுகின்றது. செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சில புள்ளிகள் வழங்கப்படுகின்றது. 3. கேஷ்பே கிரெடிட் கார்டுகள் அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தக் கிரெடிட் கார்டை கொண்டிருப்பவர்கள் சில சமயம் பணத்தைத் திரும்பப் பெற முடியும். 4. பெட்ரோலிய நிறுவனங்கள், சினிமா நிறுவனங்கள், இணையதள விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த சில சலுகைகளை இந்த கிரெடிட் கார்டு மூலம் விளம்பர படுத்துகின்றனர். 5. சில கிரெடிட் கார்டுகள் வட்டியில்லா கடன்…
Read More
வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி 15 லட்சம் !

வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி 15 லட்சம் !

வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான ஆண்டு பிரீமியம் 750 ரூபாயாக இருக்கும். சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, வாகன உரிமையாளர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, அவரின் வாரிசுகள் பெறலாம். இந்தத் திட்டம் 2002 ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்தது. அதற்கு முன், இந்த இழப்பீட்டு தொகையும் கிடையாது. இந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள தனிநபர் விபத்து பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் (15 லட்சம் ரூபாய்க்கு) 750 ரூபாயாகும். முன்னர் இது இரு சக்கர வாகனத்துக்கு 50 ரூபாயாகவும், நான்கு சக்கர வாகனத்துக்கு 100 ரூபாயாகவும் இருந்தது. 15…
Read More
“பிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

“பிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனால் அவர்கள் அளிக்கும் பிஎப் கணக்கில் உள்ள 6 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு பற்றி மட்டும் பலருக்குத் தெரியாது.1976-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்து வருபவர்களுக்கு EDLI எனப்படும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பிஎப் கணக்கு வைத்துள்ள எல்லா ஊழியர்களும் பயன்பெறமுடியும். எப்படி இந்தக் காப்பீட்டிற்கான பங்களிப்பை அளிப்பது? ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எப்படி ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் பங்களிப்புப் பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே போன்று EDLI-க்கான பிரீமியமும் செலுத்தப்படுகிறது.EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்தில் இருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது.…
Read More
உங்கள் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். !

உங்கள் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். !

தனிநபர் கடனுக்கான வட்டி உங்கள் பர்ஸை பதம் பார்க்கிறதா? உங்களுக்கு வாடகை வருமானம் வரக்கூடிய சொத்து இருந்தால், உங்களுடைய வட்டி சுமையைக் குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. உங்களுக்கு வரும் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். பாதுகாப்பான இந்தக் கடனில், தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன்களைக் காட்டிலும் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறது.அதாவது, வீடு அல்லது வணிக வளாகம் உள்ளிட்டவற்றிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தின் மீது வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதிகபட்ச கடன் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. ஆனால், கடன் தொகையானது, கடன் முதிர்ச்சியடையும் காலம் வரையிலான வட்டி வருமானம் மற்றும் சொத்தின் மறு விற்பனை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.பெரும்பாலான வங்கிகள் சொத்து மதிப்பில் அல்லது கடன் காலத்தில் ஈட்டப் படும் வாடகை வருமானத்தில் 80 சதவீதம் கடனாக வழங்குகின்றன. சில வங்கிகள் இதற்கு மேலும் வழங்குகின்றன. உதார ணத்துக்கு பெடரல் வங்கி, கடன் காலத்தில்…
Read More
இணை­ய­த­ளம் மூலம்  கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

இணை­ய­த­ளம் மூலம் கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

வங்­கி­களும், நிதி நிறு­வ­னங்­களும் இணை­ய­த­ளம் மூலம் உட­னடி கடனை வழங்­கு­கின்­றன. நிதி நுட்ப நிறு­வ­னங்­கள் ஸ்மார்ட்­போன் வாயி­லாக கடன் பெறும் வச­தியை அறி­மு­கம் செய்­துள்­ளன. இந்த வகை டிஜிட்­டல் கடன் வச­தியை, இளம் தலை­மு­றை­யி­னர் அதி­கம் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். எளி­தாக கிடைப்­பது சாத­க­மாக அமைந்­தா­லும், இந்த வகை கடன் பெறும் போது, வழக்­க­மாக பல­ரும் செய்­யும் தவ­று­களை தவிர்ப்­பது நல்­லது.எளி­தாக கிடைக்­கிறது என்­ப­தற்­காக மட்­டுமே, கடன் வச­தியை கண்ணை மூடிக்­கொண்டு பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. மொத்­த­மாக பார்க்­கும் போது, கடன் வசதி அதிக செல­­வு இல்லாத­தாக தோன்­ற­லாம். ஆனால் வட்­டியை கணக்­கிட்டு பார்க்க வேண்­டும். பல நேரங்­களில் வட்டி விகி­தம், செயல்­பாட்டு கட்­ட­ணத்­தில் உள்­ள­டங்­கி­யி­ருக்­க­லாம். பல­ரும் கடன் பெறும் அவ­ச­ரம் அல்­லது ஆர்­வத்­தில் விதி­மு­றை­களை பொறு­மை­யாக படிப்­ப­தில்லை. இணை­ய­த­ளம் அல்­லது செயலி வாயி­லாக கடன் பெறும் போது, தொடர்ந்து தக­வல்­களை சமர்­ப்பித்து, கடன் அனு­மதி பெறும் நிலை­யில், நிபந்­த­னை­களை அறி­வ­தில் நேரம் செல­வி­டு­வதில்லை; இது பாத­க­மாக…
Read More
கடன் வாங்கப் போறீங்களா… இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கடன் வாங்கப் போறீங்களா… இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

கடன் வாங்கும் முன், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும். கடன் வாங்கும் சூழல் ஒருவருக்கு எப்போது, எதனால் வரும் என்றே சொல்லமுடியாது. மகனுக்கோ, மகளுக்கோ பள்ளி/கல்லூரிக் கட்டணம், வீட்டில் எதிர்பாராமல் நடக்கும் சுபநிகழ்ச்சிகள், குடும்பத்தில் யாராவது திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், விபத்து போன்ற பல விஷயங்களுக்காக பணத்தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அத்தகைய சூழலில் கையில் பணம் இல்லாதபோது செலவுகளைச் சமாளிக்க, பலரும் வாங்குவது கடன்தான். தொகை பெரிதோ, சிறிதோ கடன் வாங்கி, அப்போதைய அவசரத்தைச் சமாளித்துவிடுவதுதான் பலருக்கும் இன்று வாடிக்கையான விஷயமாகிவிட்டது. கடன் இத்தகைய சூழலில், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அவர்கள் கூறும் சில ஆலோசனைகள் இங்கே... 1) குறுகிய காலக்…
Read More
மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

மின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி?

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மின்னணு பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. எனவே இத்தகைய பரிவர்த்தனைகளில் நிகழ வாய்ப்புள்ள மோசடிகள் குறித்தும், அதுசார்ந்து கிடைக்கும் உதவிகள் குறித்தும் ‘ ஜாங்கார் பானியே, சதார்க் ராஹியே’ முன்னெடுப்பின் மூலம் ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துவருவதைப் பார்க்கமுடிகிறது. ஆன்லைன் முறையில் நடக்கக்கூடிய இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்றவற்றை மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளின் மூலம் நடைபெறும் ஏடிஎம் அல்லது பாயிண்ட் ஆஃப் சேல் பரிவர்த்தனைகளையும் மின்னணு பரிவர்த்தனைகள் எனலாம். இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். மின்னணு பரிவர்த்தனை முறையில் நீங்கள் மோசடிக்கு உள்ளானது வங்கியின் குறைபாடு மற்றும் அலட்சியத்தால் நிகழ்ந்தால் அதற்கு சட்டப்படி நீங்கள் பொறுப்பாளி அல்ல. இந்த மோசடி குறித்து நீங்கள் வங்கிக்கு தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும் நீங்கள் பொறுப்பாளி அல்ல. எது எப்படி இருந்தாலும், இழந்த தொகையை முழுமையாக…
Read More