சினிமா

பிரதான் மந்திரி யோஜானா திட்டத்தில் 14 கோடி மக்களுக்கு வங்கி கடன் ?

பிரதான் மந்திரி யோஜானா திட்டத்தில் 14 கோடி மக்களுக்கு வங்கி கடன் ?

மத்திய பிரதேசத்தில் வருகிற 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று நடந்த பிரசார பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, கரையான்களை ஒழிக்க நச்சு மருந்தினை நாம் பயன்படுத்துகிறோம். நாட்டில் ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கசப்பு மருந்து போன்று பயன்படுத்தினேன். தங்களது படுக்கை அடியில், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மக்கள் பணம் பதுக்கி வைத்தனர். அவர்கள் இன்று ஒவ்வொரு பணத்திற்கும் வரி கட்டி வருகின்றனர். இந்த பணத்தினை சாதாரண மக்களுக்கான சரியான திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார். மத்திய பிரதேச விவசாயிகள் காங்கிரசின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறினார். அது போலியானது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு முன் கடன் தள்ளுபடி வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது. ஆனால் அதற்கு பதிலாக விவசாயிகளை சிறைக்கு…
Read More
தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!

தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!

தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த , இந்தியாவின் மிகவும் இளைய குழந்தைகளில் ஒன்று , ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டது ! மிகவும் முன்னதாகவே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு டாக்டர் ராகுல் யாதவ் தலைமையிலான மருத்துவக்குழு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டது சென்னையை சேர்ந்த திருமதி கீதா அறிவழகன் அவர்களுக்கு , கருவுற்றதிலிருந்து 22 வாரம் என்ற இரண்டாவது பருவத்தின்போதே 510 கிராம் எடையுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு டாக்டர் ராகுல் யாதவ் தலைமையிலான பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் குழு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளித்ததை இன்று உலகிற்கு வெளிப்படுத்தினர் . பிரசவத்திற்கு முந்தைய நிலையில் கர்ப்பப்பையின் சவ்வு கிழிதல் ஏற்பட்டதன் காரணமாக திருமதி கீதா அறிவழகன் பிரசவகாலத்திற்கு முன்னதாகவே குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் . இக்குழந்தைகள் , வேறு மருத்துவமனையில் பிறந்து , தீவிர…
Read More
ஜியோ மீது மோசடி புகாரளித்த ஏர்டெல்!

ஜியோ மீது மோசடி புகாரளித்த ஏர்டெல்!

ஜியோ நிறுவனமானது தனது இன்கமிங் கால் ரிங் காலஅளவை 20 வினாடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுவாக நம் நாட்டில் அனைத்து இன்கமிங் ரிங் அளவு 45 விநாடிகள் ஆகும். அதனை ஜியோ நிறுவனம் 20 விநாடிகளாக குறைத்துள்ளது. இதன் காரணமாக தனக்கு வரும் இன்கமிங் கால்களில் அழைப்புகளில் 30 சதவீதம் மிஸ்டு கால்-ஆக மாற்றுகிறது என ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, ஒரு ஏர்டெல் அழைப்பாளர் ஜியோ நம்பருக்கு போன் செய்கையில் அவருக்கு 20 வினாடி மட்டுமே ரிங் செல்லும். அதன்பின் ஜியோ நிறுவனத்திற்கு அந்த அழைப்பு மிஸ்டு காலாக கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் ஜியோ நிறுவனத்திலிருந்து ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த நபர் போன் செய்வார். இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த அழைப்பு இன்கமிங் காலாக மாறிவிடும். இந்திய தொலைதொடர்பு விதிகளின்படி தன்னுடைய நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு இன்கமிங் சென்றால்…
Read More
தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !

தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் !

இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ’சியாம்’ கூறியுள்ளது. இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர், ராஜன் வதேரா கூறியுள்ளதாவது:வாகன துறையினர், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வரி குறைக்கப்படும் என, மிகவும் நம்பிக்கையோடு இருந்தனர். வாகனங்கள் மீதான, 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்படும் என, மிகவும் எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வாகனங்கள் மீதான வரியை குறைக்காத காரணத்தால், இனி சொந்தக் காலிலேயே நின்று, தேவையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க வேண்டியது தான். வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கமானது, ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்க கோரியதோடு மட்டுமின்றி, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட வாகன பிரிவுக்கு, இழப்பீட்டு கூடுதல் வரியை நீக்குமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு, 10 முதல், 13 இருக்கைகள் கொண்ட, 4 மீட்டருக்கும் குறைவான…
Read More
கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த ‘ஹெலியா’ என்ற மின்சார கார்!

கேம்பிரிட்ஜ் மாணவர்கள் வடிவமைத்த ‘ஹெலியா’ என்ற மின்சார கார்!

இனி மின் வாகனங்களுக்கே எதிர்காலம் என்பதால், பல புதுமைகள் தினமும் வரத்துவங்கிவிட்டன. பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள், மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தால் ஓடும் புதிய காரை வடிவமைத்துள்ளனர். காரின் கூரையில் சூரிய ஒளி மின் பலகைகளும், நான்கு இருக்கைகளும் கொண்ட, 'ஹெலியா' என்ற அந்த மின் கார், ஒரே மின்னேற்றத்தில், 900 கி.மீ., செல்லக்கூடியது. நான்கு பயணியர் இருக்கையுள்ள ஹெலியா, உபரி மின்சாரத்திற்காக, சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துகிறது. பயணிக்கும் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக, மாணவர்கள், கணினியில் அதன் வடிவத்தை உருவாக்கி சோதித்து, இறுதியில் காற்றுத்தடை குறைவாக உள்ள வடிவத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், அதிகபட்ச வேகமாக, 80 கி.மீ., வரை காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லக் கூடியது ஹெலியா. மின்சார வாகனங்கள் எடை அதிகமாக இருந்தால், செல்லும் துாரம் குறையும். இதற்காகவே, ஹெலியாவின் உடலை கார்பன் இழைகளால் கட்டமைத்துள்ளனர். பிரிட்டனின், 'மிகச் செயல்திறன் கொண்ட மின்சார கார்'…
Read More
ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்… ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்… ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

ஒன்றரை மாதம் வரை சார்ஜ் இருக்கக்கூடிய மொபைல் போனை ஆவெனிர் நிறுவனம் சந்தையில் விட்டுள்ளது. தற்போதைய காலத்தில் யாரிடம் தான் ஸ்மார்ட் போன் இல்லை.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள் அல்லவா..? அவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் எந்த அளவிற்கு சார்ஜ் நிற்கிறது..? எவ்வளவு நேரம் பயன்படுத்த முடிகிறது என்பதில் உள்ள மிக முக்கிய விஷயம். ஒருசிலர் வைத்துள்ள மொபைலோகளில் தொடர்ந்து அரை மணி நேரம் பயன்படுத்தினாலே போதும் உடனே சார்ஜ் ஏற்ற வேண்டிய நிலைக்கு வரும். ஒரு சில போன்கள் அப்படி இருக்காது.. சற்று கூடுதலான நேரம் சார்ஜ் நிற்கும். இந்த பிரச்சனையை போக்கும் வண்ணம், ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதும், ஒன்றரை மாதம் வரை அப்படியே சார்ஜ் இருக்கும் வகையில் ஆவெனிர் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது,18,000mAh சக்தி கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. அதாவது மற்ற ஸ்மார்ட் போனில் அதிகபட்சமாக…
Read More
நிதி பற்றாக்குறை ! 13,000 இணைப்பகங்களை மூடும் BSNL?

நிதி பற்றாக்குறை ! 13,000 இணைப்பகங்களை மூடும் BSNL?

நாடு முழுவதும் 13,000 BSNL தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்! ஊரகங்களில் உள்ள இந்த பெரும்பான்மை தொலைபேசி இணைப்பகங்களை மூடுவதால் BSNL நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மிச்சமாகும் என இதற்கு விளக்கமளித்துள்ளது. கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் BSNL நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவினை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. BSNL நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க 13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் BSNL கோரிக்கை வைத்துள்ளது. பொதுத்துறை தொலைத்…
Read More
எங்களைக் குற்றவாளிப் போல நடத்துகிறார்கள் – அச்சக சங்கத்தினர் ஆதங்கம் !

எங்களைக் குற்றவாளிப் போல நடத்துகிறார்கள் – அச்சக சங்கத்தினர் ஆதங்கம் !

சுபஸ்ரீ விவகாரத்தில் சர்ச்சையானதை அடுத்து அச்சக சங்கத்தினர் இன்னல்களை அனுபவிப்பதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விஷயம் சர்ச்சையானதை அடுத்து லாரி டிரைவர் மற்றும் அச்சகக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேனர் வைத்தவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இது சம்மந்தமாக தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கிண்டியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் 'எங்கள் வேலை பிரிண்டிங் செய்வது மட்டும்தான். அதைக் கட்டுவது எங்கள் வேலை அல்ல. அதைக் கட்டுபவர்கள் செய்யும் தவறினால் எங்களுடைய ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் எங்களைக் குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதும் எங்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல' எனக்…
Read More
கடன் வாங்கைலையோ கடன் ! கூவி அழைக்கும் வங்கிகள்!!

கடன் வாங்கைலையோ கடன் ! கூவி அழைக்கும் வங்கிகள்!!

நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் பொதுத்துறை, மற்றும் தனியார் வங்கிகளில் அக்டோபர் 3 முதல் நான்கு நாள்களுக்கு கடன் முகாம் நடத்தப்படுகிறது.நாடு பெரும் பொருளாதார மந்தநிலையை அடைந்துள்ள நிலையில் பெரும்பாலான துறைகளில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் தொழிற்கூடங்களுக்கு வேலையில்லா நாள்களை அறிவித்துவருகின்றன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துவருகின்றனர். மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்துள்ளதே இந்த பொருளாதார மந்தநிலைக்கான காரணமாக சொல்லப்பட்டது. எனவே மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 400 மாவட்டங்களில் வங்கிகள் மூலம் கடன் முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் முதல்கட்டமாக அக்டோபர் 3 முதல் நான்கு நாள்களுக்கு 250 மாவட்டங்களில் கடன் முகாம் நடத்தப்படுகிறது. சில்லறை வர்த்தகர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்புவோர், கல்வி கடன் வாங்க விரும்புவோர், தனிநபர் கடன் வாங்க விரும்புவோர் ஆகியோருக்கு உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. விஜயதசமி…
Read More
நீரிழிவு நோயாளிகள் மத்தியில் உறுப்பு நீக்கம் ? எம்வி மருத்துவமனை கணக்கெடுப்பு !

நீரிழிவு நோயாளிகள் மத்தியில் உறுப்பு நீக்கம் ? எம்வி மருத்துவமனை கணக்கெடுப்பு !

ராயபுரத்தில் இயங்கிவரும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையம் மற்றும் நீரிழிவிற்கான எம்வி மருத்துவமனை, கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்காக நீரிழிவு நிலையில் சிறுநீரகம் மற்றும் பாதங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மீது இந்தியாவின் முதல் ஆவணத்தை இன்று வெளியிட்டது. தமிழ்நாடு, நீரிழிவுசார் உடலுறுப்பு நீக்க கணக்கெடுப்பு ஆய்வு (TAS), என்ற திட்டம் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, நீரிழிவின் காரணமாக உடல்உறுப்பு நீக்க விகிதாச்சாரம் மீதான ஒரு ஆய்வாகும். சர்வதேச நீரிழிவு நிலை கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புரொஃபசர் ஆண்ட்ரூ போல்ட்டன், ராயபுரத்திலுள்ள நீரிழிவுக்கான எம்.வி. மருத்துவமனை மற்றும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆய்வு மையத்தின் தலைவர் மற்றும் தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணர், டாக்டர். விஜய் விஸ்வநாதன் ஆகியோரால் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்த கணக்கெடுப்பு ஆய்வு செயல்பாடு தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை, ராயபுரத்தில் அமைந்துள்ள புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு…
Read More