சினிமா

அசுரன்-விமர்சனம் !

அசுரன்-விமர்சனம் !

வடக்கூடாரானுக்கும் சிவசாமிக்கும் இடையே நிலத்தகராறு. சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்பட அதற்கு பழி தீர்க்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்ய அதற்கு பழிக்குப் பழி வாங்க வடக்கூரானின் ஆட்கள் கத்தியை தூக்க பரபரப்பாக டாப் கியரில் கிளம்புகிறது அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நான்காவது படம் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷ் - ஜி.வி கூட்டணி இணைந்துள்ளது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள அசுரன் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார் தணுஷ். எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது அசுரன். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தூள். வெற்றிமாறன் - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி என்பது அனைவரும் அறிந்ததே. இப்படமும் அந்த…
Read More
வீடுகளை வாடகைக்கு விடுவோர்,2 மாத வாடகையைத்தான் முன்பணமாக வாங்கணும்!

வீடுகளை வாடகைக்கு விடுவோர்,2 மாத வாடகையைத்தான் முன்பணமாக வாங்கணும்!

வீடுகளை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகையை மட்டுமே, முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக பெற வேண்டும்' என,மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், வாடகை வீட்டு வசதியை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கியுள்ளது.இதில், வாடகை வீட்டு வசதி மாதிரி சட்ட வரைவை, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு அனுப்பியுள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், 'நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள், பொறுப்புகள் சட்டம் - 2017' நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், பல்வேறு திருத்தங்களுக்கு பின், பிப்ரவரி, 22ல் அமலுக்கு வந்துள்ளது.இதற்காக, 32 மாவட்டங்களிலும் வாடகை வீட்டுவசதி ஆணையம், வாடகை தொடர்பான வழக்குகளுக்காக, 32 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வாடகை தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதற்குமான மாதிரி வாடகை வீட்டுவசதி சட்டத்தை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மீது, பொது மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.இந்த மாதிரி சட்டத்தில், வாடகைதாரர்களின் உரிமைகளுக்கு…
Read More
ஓஹோவென படங்கள் ஓடிய சேலம் ஓரியண்டல் தியேட்டர்…!

ஓஹோவென படங்கள் ஓடிய சேலம் ஓரியண்டல் தியேட்டர்…!

சேலத்திலேயே,ஏன் தமிழகத்திலேயே மிக முக்கியமான திரையரங்கமாக திகழ்ந்தது சேலம் பழைய பஸ் நிலையம் அருகிலிருந்த ஓரியண்டல் தியேட்டர்..!1-11-1926 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பழைமையான தியேட்டரில் முதல் 5 ஆண்டுகள் மெளனமொழி படங்கள் திரையிடப்பட்டு வந்தன.! பின்பு 31-10-1931 முதல் பேசும் படங்கள் திரையிடப்பட்டன..! முதல்படமாக அந்தந்த மொழி கலைஞர்கள் அந்தந்த மொழி பேசி நடித்த காளிதாஸ் படம் திரையிடப்பட்டு சிறப்பாக ஓடியது..!பின்பு கிருஷ்ணலீலா,வள்ளி,பிரகலாதா, சத்தியவான் சாவித்திரி,ஸ்ரீநிவாசா கல்யாணம்,லவகுசா,போன்ற போன்ற ஆரம்பகால பழைய படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர் ஓரியண்டல் ஆகும்..!குறவஞ்சி படம் காலைகாட்சியாக 52 வாரம் ஓடியது..! எம்.ஜி.ஆரின் முதல்படம் சதிலீலாவதி ஒரியண்டலில் தான் 28-3-1936 இல் ரிலீசானது..! கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா ஓரியண்டலில் தான் ரிலீஸானது..!சிவாஜி,ஜெயலலிதா நடித்த சுமதி என் சுந்தரி 1971 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது…!சிவாஜி 3 வேடங்களில் நடித்த திரிசூலம் 200 நாட்கள் ஓடியது சாதனை சரித்திரம்..!கல்தூண் படமும் நன்கு ஓடியது..!அமிதாப்பச்சன் நடித்த…
Read More
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு விரைவில் அனுமதி ! இனி பைக் வச்சிருந்தாலே சம்பாதிக்கலாம்..!!

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு விரைவில் அனுமதி ! இனி பைக் வச்சிருந்தாலே சம்பாதிக்கலாம்..!!

தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இன்றைக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்கு கார் டாக்ஸியை போல் பைக் டாக்ஸி சேவைகளுக்கும் மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட சில நகரங்களில் பைக் டாக்ஸி சேவை உள்ளது. குறிப்பாக சென்னையில் இளைஞர்கள் பலர் பைக் டாக்ஸி சேவையை விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவு ஆனாலும் வணிக ரீதியாக பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்த தமிழகத்தில் அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக பைக் டாக்ஸி சேவை தற்போதைய நிலையில் தொடர்கிறது. இதற்கு தமிழகத்தில் விதிமுறை வகுக்கும் வரை தடையில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்து இருந்தது. இதையடுத்து பைக் டாக்ஸிக்கு விதிமுறைகளை வகுக்க அரசு முடிவு செய்துள்ளது. விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…
Read More
தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 19,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஆயுத பூஜையை முன்னிட்டு முதன்முறையாக 6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையிலுள்ள தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. சென்னை மற்றும் பிற நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருக்கும் மக்கள், ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சிறப்பு பேருந்துகளை இந்த ஆண்டும் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார். இதேபோல் பிற ஊர்களிலிருந்து…
Read More
சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் சார்பில் இதய பராமரிப்பு உச்சி மாநாடு !

சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் சார்பில் இதய பராமரிப்பு உச்சி மாநாடு !

சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதய பராமரிப்பு மாநாடு” என்ற உச்சிமாநாட்டை சென்னையில் நடத்தியது. இதய நோய்களை ஒழிப்பது மற்றும் அவை வராமல் தடுப்பது தொடர்பான கண்ணோட்டங்கள் மற்றும் நுண்ணறிவை இந்த மாநாடு வழங்கியது. இந்த இதய நோய் சிகிச்சைத் துறையில் உள்ள அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வந்த இந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதய பராமரிப்பு என்ற உச்சிமாநாடு, முக்கிய பங்குதாரர்கள், சிறந்த சிகிச்சை வல்லுநர்கள், நோய்த் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளது. இதய நோய்கள் அதிகரிப்பதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் கால அளவுடன் கூடிய பரிந்துரைகளை உருவாக்கவும் இந்த ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன இதய பராமரிப்பு முறை மற்றும் தொழில் நுட்ப ஏற்பு ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நோயற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு இந்த உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதில் பேசிய அப்பல்லோ…
Read More
பரோடா வங்கியின் உழவர்  திருவிழா இருவார கொண்டாட்டம் !

பரோடா வங்கியின் உழவர் திருவிழா இருவார கொண்டாட்டம் !

பரோடா உழவர் இருவார திருவிழா கொண்டாட்டம் என்பது 01.10.2019 முதல் 15.10.2019 வரை எங்களது வங்கியில், பாங்க் ஆப் பரோடா நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும், இது பொதுவாக தேச பொருளாதாரம் மற்றும் குறிப்பாக விவசாய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக விவசாயிகள் சமூகத்தை சென்றடைகிறது. இது குறித்து சென்னை பரோடா வங்கி பொது மேலாளர் ராமகிருஷ்ணன் மைலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரோடா உழவர் இருவார திருவிழா கொண்டாட்டத்தின் குறிக்கோள்: நாடு முழுவதும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் உணவு உற்பத்தியில் சுய இலக்கை அடைதல்.அரசாங்கத்தின் குறிக்கோளை ஆதரிக்க 2020 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான முயற்சிகள்.வேளாண் வளர்ச்சி மற்றும் விவசாயிகள் சமூகத்திற்கான வங்கி முயற்சிகள் குறித்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல். விவசாயிகளின் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக எங்கள் கடன் தயாரிப்புகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தல்.கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில்…
Read More
நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் !மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது !!

நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் !மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது !!

மின்சார வாகனங்களில் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை சார்ஜ் செய்வதற்கான இடங்கள் குறித்த வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்தபட்சம் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனும், நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும், பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தவும், இரண்டாம் கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களில் நடைமுறைப்படுத்தவும் எரிசக்தித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டே வழிமுறைகள் வகுக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டதால் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது.
Read More
ரூ.80,000 கோடி வராக் கடன் வசூல் !  நிறுவன திவால் சட்டத்தால் மீட்பு !!

ரூ.80,000 கோடி வராக் கடன் வசூல் ! நிறுவன திவால் சட்டத்தால் மீட்பு !!

இந்தாண்டு, பல்வேறு நிறுவனங்களின், 80 ஆயிரம் கோடி ரூபாய் வராக் கடன், என்.சி.எல்.டி., எனப்படும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மூலம் மீட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, 2016ல் அமல்படுத்திய திவால் சட்டம் மூலம், இது சாத்தியமாகியுள்ளது. இது குறித்து, மத்தியநிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: திவால் சட்டம் அறிமுகமான பின், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான, வாராக் கடன் வசூலாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், கடன் மறுசீரமைப்பு திட்டம் மூலமாகவும், என்.சி.எல்.டி.,யில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக வசூலிக்கப்பட்ட தொகையும் அடங்கும். என்.சி.எல்.டி., மற்றும் என்.சி.எல்.ஏ.டி., முன், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான புதிய வழக்குகள், திவால் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரிக்க, 11, என்.சி.எல்.டி., மன்றங்கள் தான் உள்ளன. எனவே, நாடு முழுவதும், மேலும் பல விசாரணை மன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த…
Read More
திவால் சட்டம் அமலுக்கு வந்த பின் வாராக் கடன்களுக்கு தீர்வு!

திவால் சட்டம் அமலுக்கு வந்த பின் வாராக் கடன்களுக்கு தீர்வு!

திவால் சட்டம் அமலுக்கு வந்த பின், வங்கிகள், நிதி நிறுவனங்களின் வாராக் கடன்களுக்கு தீர்வு காண்பது அதிகரித்துள்ளது.இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி சீனிவாஸ் கூறியதாவது:கடந்த, 2016ல் நிறுவன திவால் சட்டம் அறிமுகமான பின், வாராக் கடன்களுக்கு தீர்வு காண்பது அதிகரித்துள்ளது. அதேசமயம், வாராக் கடன் வசூலுக்கு, திவால் சட்டத்தின் கீழ், கடைசி கட்டமாகத் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதாவது, முதலில் கடன்களுக்கான பல்வேறு தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் முடிவு காண முடியாத பட்சத்தில், திவால் சட்டத்தை நாடலாம்.புதிய வாராக்கடன்கள் பெருகுவது குறைந்துள்ளது. அதேசமயம், ஒட்டுமொத்த வாராக் கடன் அளவும் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நல்ல முன்னேற்றம்.திவால் சட்டத்தின் கீழ், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், ஒரு வாராக்கடன் வழக்கில் தீர்வு காணப்பட்டால், தீர்ப்பாயத்திற்கு வெளியே, ஒன்பது வழக்குகளுக்கு தீர்வு கிடைப்பதாக, புள்ளி விபரம்…
Read More