சினிமா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.?

அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ,டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம் மக்களுக்கும்,அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும்,நாட்டின் ஒற்றுமை ஒருமைப் பாட்டிற்கும் எதிரானதாகும். இந்தியாவை ,இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இந்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.இந்தியா முழுவதும் 20 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது.இது பெண்கள் மத்தியில் அச்சத்தையும்,பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உட்பட அனைத்து வன்முறைகளையும் தடுத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்திட வேண்டும்.நிர்பயா நிதியில் 91 % பயன்படுத்தப்பட வில்லை.அந்நிதியை உரிய முறையில்…
Read More
அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கும் இலவசம் அறிவித்த ஏர்டெல்.!

அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கும் இலவசம் அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம், தற்பொழுது புதிய மூன்று ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மூன்று திட்டங்களின் படி ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க்கிற்கும் ஆலிமிடெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது ரூ.219, ரூ.399 மற்றும் ரூ.449 என்ற மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ரூ.219 திட்டம் ஒரு மாத வேலிடிட்டியுடனும். ரூ.399 மற்றும் ரூ.449 ஆகின திட்டங்கள் இரண்டு மாத வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து நெட்வொர்க்களுக்கான ஆலிமிடெட் வாய்ஸ் கால் இந்த மூன்று திட்டங்களுக்கும் அனைத்து நெட்வொர்க்களுக்கான ஆலிமிடெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டங்களின் விலை மதிப்பிற்கு ஏற்றார் போல டேட்டாவின் அளவில் சில மாற்றங்களை ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி…
Read More
ஏர்டெல், வோடபோன்,  ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!

ஏர்டெல், வோடபோன், ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!

பல்லாயிரம் கோடி பெரும் கடனில் சிக்கி தவித்து வந்த நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இனி தங்களால் இந்தக் கடன் சுமையைத் தாங்க முடியாது என ஒரு வழியாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். ஏற்கனவேநாட்டில் முன்னணி தொலைத் தொடர்ப்பு நிறுவங்களாக ஏர்டெல், வோடபோன், ஆகிய நிறுவங்கள் தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துவிட்ட நிலையில் இன்று ஜியோ தனது கட்டணத்தை அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடபோன், ஆகிய நிறுவங்கள், வரும் 6 ஆம் தேதி முதல் தங்களின் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளன. இந்தக் கட்டண உயர்வானது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத் தொடர்பு நிறுவனங்களால் அமல்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது.வரும் 6 ஆம் தேதி தனது புதிய கட்டணத்தை வெளியிடுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்த நிலையில், இன்று, தனது புதிய கட்டண விவரத்தை அறிவித்துள்ளது.மேலும், மற்ற நொட்வொர்க்கில் இல்லாத வகையில் NEW ALL IN ONE PLANS" என்ற புதிய திட்டத்தையும் ரிலையன்ஸ்…
Read More
‘கடலில் கட்டுமரமாய்’ விவசாயிகளுக்கான திரைப்படம் !

‘கடலில் கட்டுமரமாய்’ விவசாயிகளுக்கான திரைப்படம் !

‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் முழுக்க முழுக்க விவசாயிகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். நடன இயக்குநர் ஸ்ரீதர் இப்படத்தைப் பற்றி கூறும்போது, ஒரு நல்ல கருத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள் என்றார். அதேபோல், ‘ஜாகுவார்’ தங்கமும் வெளியிலிருந்து வரும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுப்போம். ‘தோல உரிச்சுப் போட்ருவேன் நிலத்துல கால வெச்சா’ என்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் அனைத்து விவசாயிகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார். மேலும், இப்படத்தைப் பற்றியும் இப்படத்தின் பாடல்களைப் பற்றியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது கதாநாயகி ரித்திகா பேசும்போது, இப்படம் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படி அமைந்திருக்கும் படம். இப்படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் நீ தான் நடிக்க வேண்டும், நீ தான் இதற்கு பொருத்தமாக இருப்பாய் என்று இயக்குநர் என்னிடம் கூறினார். படப்பிடிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கு நன்றி என்றார். நடன இயக்குநர்…
Read More
’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, PG Media Works பி.ஜி.முத்தையா மற்றும் எம். தீபா இவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான், ‘டேனி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் லா.சி.சந்தானமூர்த்தி இயக்கியிருக்கிறார். படத்திற்கான ஒளிப்பதிவில் ஆனந்த்குமார், படத்தொகுப்பில் எஸ்.என்.ஃபாசில், பின்னணி இசையில் சாய் பாஸ்கர், பாடல்களில் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள். ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே, ஐந்து வித்தியாசமான போஸ்டர்களில் வெளிவந்து, தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தது. தற்போது ’டேனி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறார்.
Read More
இயக்குனர் சச்சின் இயக்கத்தில்,ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ !

இயக்குனர் சச்சின் இயக்கத்தில்,ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ !

*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ - ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்* ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’. அதனைத் தொடர்ந்து, கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு வல்லமைமிக்க சக்தியாகவும், புதிய சிந்தனைகளையும் தொழிட்நுட்ப யுக்திகளையும் கொண்டு அனைத்து வகை திரைப்படங்களையும் மொழி வேறுபாடுகளையும் கடந்து வெற்றிப் பெற செய்வதில் முனைப்புடன் செயல்படுபவராகவும் திகழ்கிறார். அவரது முதல் திரைப்படத்தை…
Read More
ஆன்லைனில் உடனே பான் கார்டு ! எங்கேயும் அலைய வேண்டாம்!

ஆன்லைனில் உடனே பான் கார்டு ! எங்கேயும் அலைய வேண்டாம்!

ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ரகசிய பாஸ்வேர்ட் (OTP) மூலம் தகவல்களை உறுதிசெய்தால் போதும். ஆன்லைனில் கட்டணமின்றி ஈ-பான் கார்டு வாங்கும் வசதி விரைவில் அறிமுகம்.ஆதார் எண் இருந்தால் உடனே பான் கார்டு கிடைத்துவிடும்.ஆன்லைன் வழிமுறையில் உடனடியாக பான் கார்டுகளை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.ஆதார் தகவல்கள் மூலம் உடனடியாக ஆன்லைனில் பான் கார்டு பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய மத்திய அரசு ஆயத்தம் செய்துவருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த வசதி நடைமுறைக்கு வரும் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் கார்டு தொலைந்துவிட்டால்,மாற்று பான் கார்டு வாங்குவதும் மிக எளிதாகவிடும்.மேலும் ஈ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் பெறப்படாது. ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ரகசிய பாஸ்வேர்ட் (OTP) மூலம்…
Read More