11
Oct
'உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா, இல்லையா என்பதையும், 'டிவிஷன் பெஞ்ச்' பரிசீலிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரவி; இவரது மகள் சுபஸ்ரீ. இரு சக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்றபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர் சரிந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில், மரணம் அடைந்தார். இது, செப்., 12ல் நடந்தது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணையில் உள்ளது. பேனர் வைத்த, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமிலியாஸ், அரசு…
