சினிமா

இனி ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்!

இனி ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்!

இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை கடந்த 2017 நவம்பரில் ஆரம்பித்தது.தற்போது யோனோ கேஷ் என்ற மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம். இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற யோனோ கேஷ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதில், 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். இந்த எண் பதிவு செய்யப்பட்ட மொபைல்…
Read More
லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது  ஃபேஸ்புக். !

லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக். !

குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பபது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும். ஒரு ஸ்மார்ட் ஃபோனும், இணைய வசதியும் இருந்தால் போதும் என்கிறது அந்த நிறுவனம்.இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை மட்டுமல்லாது, அந்தந்த நாடுகளின் அடையாள அட்டைகள் இல்லாதவர்களை சரிபார்ப்பது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடினமானதாக இருக்கும்.ஊபெர், மாஸ்டர் கார்ட் மற்றும் பேபால் ஆகிய நிறுவனங்களும் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.ஏற்கெனவே உள்ள பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை ஆய்வு செய்துள்ளோம். லிப்ரா அவ்வாறாக இருக்காது என்கிறது ஃபேஸ்புக்.பிட்காயின் போல் மெய்நிகர் பணமாக இல்லாமல் லிப்ரா…
Read More
டெஸ்லாவுக்கு போட்டியாக  சீன மின்சார கார்கள்!

டெஸ்லாவுக்கு போட்டியாக சீன மின்சார கார்கள்!

சீனாவை சேர்ந்த கீலி ஆட்டோமொபைல் நிறுவனம் வாகனத் தயாரிப்பில் பிரபலமாக விளங்குகிறது. ஸ்வீடனை சேர்ந்த வால்வோ வாகனத் தயாரிப்பு நிறுவனமும் தற்போது கீலி நிறுவனத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின்சார கார் தயாரிப்புக்காக புதிய நிறுவனத்தை துவங்கி இருக்கிறது.ஜியோமெட்ரி என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த நிறுவனத்தின் கீழ் புதிய மின்சார கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் 2025ம் ஆண்டிற்குள் 10 மின்சார கார்களை இந்த நிறுவனத்தின் கீழ் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், முதல் மின்சார கார் மாடலை ஜியோமெட்ரி என்ற பெயரிலேயே அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஜியோமெட்ரி மின்சார கார்கள் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோமெட்ரி மின்சார காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் ரேஞ்ச்தான். ஆம். இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். இந்த கார்…
Read More
விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை வழங்குவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய, அரசு செயலர்கள் கூட்டத்தை கூட்டும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.வாகன விபத்து இழப்பீடு கோரி, போலியாக தாக்கலாகும் வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, கே.சந்துரு தலைமையில், நிபுணர் குழுவை, உயர் நீதிமன்ற நீதிபதி, பி.என்.பிரகாஷ் நியமித்தார். இதையடுத்து, நீதிபதிசந்துரு குழு ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. இவ்வழக்கில், நீதிபதி, பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:விபத்து வழக்குகளில் ஆஜராகும், ஏழு வழக்கறிஞர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிக்கலாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. வழக்கின் சூழ்நிலையை கருதி, ஏழு பேருக்கு எதிரான புகார், பார் கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. சட்டப்படி, பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில், ௫௬ வழக்குகளின் ஆவணங்கள் காணாமல்…
Read More
புதிய வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட் !

புதிய வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட் !

ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டர் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட உள்ளன. இதனால் இவற்றை பதிவு செய்வது தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொருத்துவதை நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளில் 'பார்க்கோடு' இடம் பெற்றிருக்கும். பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேசிஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் இந்த வகை நம்பர் பிளேட்டுகளை நடைமுறைப்படுத்தும்போது வாகனங்களை திருடி ஒரே எண்ணை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும். மேலும் திருட்டு வாகனங்களை மீட்பது, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்களை பிடிப்பது ஆகியவற்றுக்கும் இத்தகைய நம்பர் பிளேட்டுகள் உதவும்.எனவே, ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில்…
Read More
முதலிடம் பிடித்த தென் சென்னை..! வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..!

முதலிடம் பிடித்த தென் சென்னை..! வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..!

ரியல் எஸ்டேட் துறை சூடுபிடித்து வரும் நிலையில் தற்போது தென் சென்னையில் அதிக வீடுகள் விற்பனை ஆகி உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சற்று தொய்வில் இருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது.மும்பை, புனே, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னை உள்பட இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்கள் 2017 ஆம் ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்தமட்டில் வழிகாட்டி மதிப்பை குறைத்தது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறை ஆக்கப்பட்டது ஆகிய மாற்றங்கள் மக்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் வீடு வாங்கும் எண்ணம் அதிகரித்து. 2017 ஆம் ஆண்டை காட்டிலும் 2018ஆம் ஆண்டு 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதிலும் 12 சதவீதம்…
Read More
ரெலிகேர் வழங்கும் புதிய காப்பீடு திட்டம் ‘சூப்பர் மெடிகிளைம்’ !

ரெலிகேர் வழங்கும் புதிய காப்பீடு திட்டம் ‘சூப்பர் மெடிகிளைம்’ !

மருத்துவ காப்பீடுகளை வழங்கும் ரெலிகேர் நிறுவனம் சூப்பர் மெடிகிளைம் என்ற பெயரில் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் அபாயகரமான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு காப்பீடு தரும் வகையில் இந்த மருத்துவ காப்பீட்டுத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் அஷுதோஷ் சக்தி ஷ்ரோத்ரியா தெரிவித்தார். இந்த காப்பீட்டு திட்டத்தில் கேன்சர் மெடிகிளைம், ஹார்ட் மெடிகிளைம், கிரிடிகல் மெடிகிளைம், ஆபரேஷன் மெடிகிளைம் என நான்கு வகையான காப்பீட்டு வசதிகள் உள்ளன. கேன்சர் மெடிகிளைம் திட்டத்தில் ஆரம்ப நிலை புற்றுநோய் முதல் மிக முற்றிய நிலை வரையிலான சிகிச்சைக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. ஹார்ட் மெடிகிளைம் திட்டத்தில் 17 வகையான ஆபத்தான அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. குறிப்பாக ஹார்ட் அட்டாக், பைபாஸ் சர்ஜரி உள்ளிட்டவற்றுக்கு இந்த காப்பீடு தீர்வாக அமையும். கிரிடிகல் மெடிகிளைம் காப்பீட்டு திட்டமானது புற்றுநோய், ஹார்ட் அட்டாக், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பக்கவாதம் உள்ளிட்டவற்றுக்கு…
Read More

வட இந்திய நகரங்களை விட சென்னையில் ரியல் எஸ்டேட் அபார வளர்ச்சி !

வீடுகள் விற்பனையில் டெல்லி உட்பட பல வட இந்திய நகரங்களைவிட சென்னை மிகவும் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அனராக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஓராண்டில் வீடுகள் விற்பனை 77% உயர்ந்துள்ளது எனவும் 2017ஆம் ஆண்டு 38,330 யூனிட் விற்படை நடைபெற்ற நிலையில் 2018ஆம் ஆண்டில் 67,850 யூனிட் விற்கப்பட்டிருக்கிறது எனவும் ரியல் எஸ்டேட் ஆலோசனைகள் வழங்கும் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள அனராக் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தோஷ் குமார், “2018ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறை ஏற்ற இறக்கங்களுடனேயே முடிந்தது. ரியல் எஸ்டேட் துறை கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வந்திருக்கிறது. தற்போது ரியல் எஸ்டேட் துறை மீண்டும் வளர்ச்சி அடைவதற்கான அறிகுறி தெரிகிறது.” என்றார்.குடியிருப்புகள் மட்டுமின்றி சிறு வணிகம் மற்றும் தொழில் அலுவலகப் பிரிவிலும் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய தென்னிந்திய நகரங்களில் சிறப்பான…
Read More
கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தகவல் திருட்டு ? அதிர்ச்சி தகவல் ?

கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தகவல் திருட்டு ? அதிர்ச்சி தகவல் ?

இணையதள தேடுபொறிக்கு பெயர்போன கூகுள் நிறுவனத்தின் மொழிப் பெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தி வரும் டிஜிட்டல் உலகில், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மிக பெரிய சவாலாகவே உள்ளது. சில போலி இணையதளங்களின் மூலம் பயனர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுவதாகவும் பணப்பரிவர்த்தனை மூலம் ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் மொழிப் பெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பயனர்களின் பெயர், ஈ மெயில் முகவரி, பாலினம், பணி செய்யும் இடம் போன்ற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்பாக கூகுள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் திருட்டு காரணமாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More
வாட்சப் பயன்படுத்துபவர்களுக்கு அசத்தலான ஐந்து வாட்ஸ் ஆப் டிப்ஸ்!

வாட்சப் பயன்படுத்துபவர்களுக்கு அசத்தலான ஐந்து வாட்ஸ் ஆப் டிப்ஸ்!

.சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் புகைப்படம், வீடியோ, பைல்கள் என அனைத்தையும் எளிதாக மற்றவர்களுடன் பகிர வாட்சப் வழிவகுக்கிறது. அத்தகைய வாட்ஸப்பில் உங்களுக்கே தெரியாமல் சில ஈஸியான ட்ரிக்ஸ் உள்ளது. அது என்னனு பாக்கலாம் வாங்க. 1 . ஒரே போனில் இரண்டு வாட்சப் நம்மில் பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசி எண்கள் உள்ளது. நம்மிடம் எத்தனை நம்பர் இருந்தாலும் ஒரு போனில் ஒரு வாட்ஸாப்த்தான் பயன்படுத்த முடியும். ஒருவேளை உங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வாட்சப் அக்கவுண்ட் தேவைப்பட்டால் Switch Me என்ற செயலி மூலம் நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட அக்கவுண்ட்டை பயன்படுத்த இயலும். 2 .…
Read More