சினிமா

‘உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா ? சென்னை உயர் நீதிமன்றம் கருத்து !

‘உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா ? சென்னை உயர் நீதிமன்றம் கருத்து !

'உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா, இல்லையா என்பதையும், 'டிவிஷன் பெஞ்ச்' பரிசீலிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரவி; இவரது மகள் சுபஸ்ரீ. இரு சக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்றபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர் சரிந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில், மரணம் அடைந்தார். இது, செப்., 12ல் நடந்தது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணையில் உள்ளது. பேனர் வைத்த, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமிலியாஸ், அரசு…
Read More
சென்னையின் முதல் ஞாபக சிகிச்சை மையம் ! காவேரி மருத்துவமனை துவங்கியுள்ளது !!

சென்னையின் முதல் ஞாபக சிகிச்சை மையம் ! காவேரி மருத்துவமனை துவங்கியுள்ளது !!

சென்னையில் முதல் முறையாக காவேரி மருத்துவமனை தனது முதல் ஞாபக சிகிச்சை மையத்தை துவங்கியுள்ளது . பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சிகிச்சையகத்தை துவங்கி வைத்தார் . மனசோர்வினால் ஏற்படும் டிமென்ஷியா குறித்து பரிசோதித்தல், கண்டறிதல் மற்றும் ஞாபகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கும், அவர்களின் பொறுப்பாளர்களுக்கும் தொடர் ஆலோசனை மற்றும் தேவையான தகவல்களை வழங்குதல், ஆகிய சேவைகளை இந்த ஞாபக சிகிச்சை மையமானது வழங்கும் முந்தைய நிலையிலேயே கண்டறியப்பட்ட டிமென்ஷியா உட்பட, ஞாபகம் தொடர்பான இடர்பாடுகள் உள்ள நபர்கள், எந்த வயது வரம்பை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த ஞாபக சிகிச்சை மையத்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் . காவேரி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் வல்லுனரும் & நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் ப்ரித்திகா சாரி, சிகிச்சையகத்தின் சேவைகள் குறித்து பேசுகையில் கூறியதாவது , " இந்த சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் ஞாபக பிரச்சனைகள் தொடர்பான சிகிச்சைகளில் , ஒருவரின் ஞாபகசக்தியானது…
Read More
ஜியோ இலவச அவுட் கோயிங் ரத்து !

ஜியோ இலவச அவுட் கோயிங் ரத்து !

'ஜியோ' தொலை தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், இனி, மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க, நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின், ஜியோ தொலை தொடர்பு சேவை நிறுவனம், அதிரடியான சலுகை அறிவிப்புகளுடன், ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஜியோ இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களை இலவசமாக அழைக்கலாம். இதற்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், நேற்றுடன் இந்த இலவச சேவையை, ஜியோ நிறுவனம் நிறுத்தியுள்ளது. இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜியோ வாடிக்கையாளர்கள், இனிமேல், மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க, நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, அதற்கு சமமான இணைய சேவையை, அவர்கள் பெறலாம். அதேநேரத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள், சக ஜியோ வாடிக்கையாளர்களை, வழக்கம்போல் இலவசமாக அழைக்கலாம்.…
Read More
டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ! 144 கிமீ பயணிக்கும் !!

டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ! 144 கிமீ பயணிக்கும் !!

இந்தியாவின் மின்சார கார் மார்க்கெட் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அண்மையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் தனிநபர் சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட்டது. அடுத்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இச்சூழ்நிலையில், அரசுத்துறை நிறுவனங்களுக்கு டிகோர் மின்சார கார்களை சப்ளை செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த வாரம் புதிய மாடல் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியானது 144 கிமீ வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது. ஆனால், புதிதாக வரும் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான சந்தையில் இது சிறந்ததாக இருக்கும். தற்போதைய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 72 வோல்ட் ஏசி இன்டக்க்ஷன் மின்மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின் மோட்டார் 40.23 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும்…
Read More
கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் !

கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் !

கடந்த 1978ம் ஆண்டு தமிழில் வெளியான படம் பைரவி. கலைஞானம் தாயரித்த இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், தனி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி, கதாசிரியராகவும் கலைஞானம் பணியாற்றினார். 70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என திறமையை வெளிப்படுத்திய கலைஞானத்திற்கு தற்போது 90 வயதாகும் நிலையில், ஆனால், சொந்த வீடு கூட இல்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், இவருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், கூறியபிறகுதான் கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் வாடகை வீட்டில் இருப்பது தனக்கு இப்போது தான் தெரியும் என்றும், தானே அவருக்கு சொந்த வீடு வாங்கித் தருவேன் என்றும் உறுதி அளித்தார். இதன்படி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 3 படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீட்டை கடந்த வாரம்…
Read More
நான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் !  நடிகை நயன்தாரா !!

நான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் ! நடிகை நயன்தாரா !!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிற நிலையில், இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று நயன்தாராவின் காதலனான விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார். இந்நிலையில், நடிகை நயன்தாராவின் புகைப்படம், பிரபலமான ஆங்கில பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அந்த இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எப்போது வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Read More
தி நகரில் அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி முகாம் !

தி நகரில் அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி முகாம் !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அனைத்து வங்கிகளோடு இணைந்து வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி என்கிற ஒருங்கிணைந்த நிகழ்ச்சி திநகர் பாண்டிபஜாரில் உள்ள விஜயா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநரும், முதன்மைச் செயல் அலுவலருமான கர்ணம் சேகர் துவக்கிவைத்தார். மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் முத்ரா கடனுதவி திட்டம் மற்றும் இதர கடனுதவித் திட்டங்களின் கீழ் சில்லரை விற்பனையகம்.விவசாயம்.சுயஉதவிக்குழு வாகனக்கடன், வீட்டுக்கடன், சிறுகுறு தொழில்முனைவோர் கடன், கல்விக்கடன், தனி நபர் கடன் சுமார் 1150 பேருக்கு வழங்க அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டது.நேற்று தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது.இன்றைய நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரி சுசில் சந்தா மொஹந்தா நன்றி கூறினார்.
Read More
வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி!

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி!

தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான மற்றொரு நடவடிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் (5.40 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாக) குறைத்துள்ளது! இதுதொடர்பாக இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் 'இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் 5.40%-லிருந்து 5.15% வரை) குறைக்கிறது. அதேவேளையில் தலைகீழ் ரெப்போ வீதம் 4.90% ஆகவும், வங்கி வீதம் 5.40% ஆகவும் சரிசெய்யப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் 6.9%-லிருந்து, 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பார்வை 6.1%- மாகத் திருத்தப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பார்வை 7.2% ஆக மாற்றப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்கான நான்காவது இரு மாத நாணயக் கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (MPC) தனது…
Read More
சயீரா நரசிம்ம ரெட்டி – விமர்சனம் !

சயீரா நரசிம்ம ரெட்டி – விமர்சனம் !

உய்யலவாடா பகுதியின் நிர்வாக மற்றும் இராணுவ ஆட்சியாளராக இருக்கும் நரசிம்ம ரெட்டி தனது குரு கோசாய் வெங்கண்ணாவின் ஆலோசனையின் படி, எப்படி ஒரு போர் வீரராகவும் தலைவராகவும் மாறி எப்படி குடிமக்களுக்கு நல்லது செய்கிறார் என்பது பற்றின உண்மை கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. இதில் நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவியும் குரு கோசாய் வெங்கண்ணாவாக அமிதாப் பச்சனும் அற்புதமாக நடித்துள்ளார். நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வீரபாண்டிய கட்ட பொம்மன் என்றால் எப்படி நமக்கு சிவாஜி நினைவிற்கு வருவாரோ அதே போல இனி நரசிம்ம ரெட்டி என்றாலே சிரஞ்சீவிதான் கண் முன் வருவார் என்று சொன்னால் மிகையாகாது.சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரிப்பில் 200 கோடி பட்ஜெட்டில் மிக மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்ட வரலாற்று காவியம்தான் சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம். நாட்டின்…
Read More
நம்ம வீட்டு பிள்ளை – விமர்சனம் !

நம்ம வீட்டு பிள்ளை – விமர்சனம் !

சிவகார்த்திக்கேயன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு கிராமத்து கதையில் நடித்து ரசிகர்களின் மனங்களை அள்ளியுள்ளார். பாண்டிராஜ் தனது பாணியில் புகுந்து விளையாடியுள்ளார். சிவகார்த்திக்கேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கை பாசத்தை கொடுத்து அனைவரையும் சிரிக்க ரசிக்க மட்டுமல்லாது சிலிர்க்கவும் வைத்திருக்கிறார். காமெடி வசனங்கள் கலகலப்பை ஏற்படுத்தினாலும் நம்ம வீட்டு பிள்ளை கிளைமாக்ஸ் பலரது கண்களை குளமாக்கிவிடும். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய குதூகலமான படம் என்று ரசிகர்கள் பாராட்டும் வகையில் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி ஆகியோர் நடித்துள்ள படம் நம்ம வீட்டுப்பிள்ளை. சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்த பாண்டிராஜ். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார். இந்த படம் மூலம் பாண்டிராஜின் மகன் மாஸ்டர் அன்புக்கரசு பல கவுண்டர் டயலாக் சொல்லி காமெடி சுட்டி பையனாக கலக்கியுள்ளார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸ்ஸான க்ளாஸ்ஸான சிவகார்த்திகேயனின்…
Read More