சினிமா

பிளே ஸ்டோரில் 85 ஆப்கள் நீக்கம்!  கூகுள் அதிரடி!

பிளே ஸ்டோரில் 85 ஆப்கள் நீக்கம்! கூகுள் அதிரடி!

ஆண்டிராய்டு போன்களுக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான செயலிகளை தருவதற்காக அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கூகுள் பிளே ஸ்டார் கண்டிப்பாக இருக்கும். இதில் பயனர்களின் பாதுகாப்பை மீறும் ஆப்கள் அவ்வப்போது நீக்கப்படும். அதன் படி தற்போது 85 ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவது. தேவையற்ற ஆப்களை பயனரின் அனுமதியின்றி பதிவிறக்கம் செய்துவிடுவது. அதிகமான விளம்பரங்களை பயனர்களுக்கு அளிப்பது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் செல்ஃபீ கேமிரா ஆப்கள்தான் அதிகம் நீக்கப்பட்டுள்ளன.
Read More
உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி வைக்கிறது ஜியோ !

உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி வைக்கிறது ஜியோ !

உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மூலமாகவே மக்கள் அதிகத் துல்லியமான சர்வதேச சேனல்கள் வரையில் உங்கள் டிவியில் பார்க்க வசதி செய்யப்படும்.அதிகத் துல்லியமான டிவி சேனல் சேவையை வழங்க உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் உடன் இணைந்து செட்-டாப் பாக்ஸ் சேவையை வழங்க ஜியோ முடிவெடுத்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 42-வது வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜியோவின் பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். முகேஷ் அம்பானி கூறுகையில், “இந்தியாவில் இன்றும் செயல்பாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு டிடிஹெச் சேவை என்பதை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு அபாயமான போட்டியாகவே உள்ளது. இதைத்தவிர்க்கவும் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் உள்ளூர் பணியைத் தொடரவும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஜியோ முடிவு செய்துள்ளது. இந்தாண்டின் துவக்கத்திலேயே நாட்டின் முக்கிய ஆப்ரேட்டர்களான ஹேத்வே (Hathway), டென் (Den), ஜிடிபிஎல் ஆகிய நிறுவனங்களை ஜியோ வாங்கியுள்ளது. இந்நிறுவனங்கள்நாட்டின் 30ஆயிரம்…
Read More
அரசு பயிற்சி நிலையங்களில் சேருவோருக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி!

அரசு பயிற்சி நிலையங்களில் சேருவோருக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி!

இந்திய அளவிலான தொழிற்பயிற்சி நிலையங்களின் தரத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அகில இந்திய அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்பட்ட தர நிர்ணயத்திட்டத்தில் சிறந்த தரமுடைய தொழிற்பயிற்சி நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட 120 தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 40 தொழிற்பயிற்சி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் பெற்றுள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த தொழில் நிறுவனங்களில் ரூ. 15 ஆயிரத்துக்கும் அதிகமாக ஊதியம் பெற்று வருகின்றனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவடையும் தருவாயில் தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப்பின் அதே தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்கள், அரசு…
Read More
ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது !

ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது !

ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.ஸ்கிம்மர் பொருத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் கிளையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண் அமைந்துள்ள கீபேட் மேலே சிறிய அளவில் கேமரா போன்று தெரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அயனாவரம் போலீசார் ஏ.டி.எம்மில் சோதனை செய்ததில் ஸ்கிம்மர் கருவி ஒன்றும் ஏடிஎம் பின் நம்பர் கீபேட் மேல பொருத்தப்பட்டு இருந்த சிறிய ரகசிய கேமரா இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகிகளுக்கு போலிசார் தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருடும் நபர் குறித்த…
Read More
ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு தங்குமிடத்துடன்  இலவச பயிற்சி !

ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு தங்குமிடத்துடன் இலவச பயிற்சி !

யுபிஎஸ்சி-ன் கீழ் நடக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு பயிற்சிபெறும் மாணவர்கள் முதன்மைத் தேர்விற்கு பயிற்சிப்பெற அரசு சார்பில் தங்குமிடத்துடன் கூடிய இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது, இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு வருமாறு: சென்னையில் பசுமைவழிச் சாலையில் (கிரீன்வேஸ் சாலை) இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்களுக்கு குடிமைப் பணித் தேர்வுகளை எழுத பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சி மையம் வகுப்பறைகள், தங்கும் வசதி, உணவு விடுதி, நூலகம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. மாணவர்கள் கட்டணம் ஏதுமின்றி உணவருந்தவும், தங்கிப் படிக்கவும் இங்கு வசதிகள் இருப்பதோடு தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
Read More
வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி !

வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி !

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.புதிய அம்சம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுக்கிறது. இத்துடன் மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும். புதிய அப்டேட் க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என அழைக்கப்படுகிறது. உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் அதிக பிரபலமாக இருக்கிறது. இந்நிலையில் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் அதில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறான புதிய அம்சமாக க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என்ற பெயரில் உருவாகிறது.புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது என்றும், விரைவில் இது வழங்கப்படலாம்…
Read More
முத்ரா திட்டத்தில் 11,000 கோடி வாராக்கடன்? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

முத்ரா திட்டத்தில் 11,000 கோடி வாராக்கடன்? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட முத்ரா கடன் திட்டத்தில் வழங்கப்பட்ட கடன்களீல் ரூ. 11,000 கோடி வாராக்கடனாகியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2015 ஏப்ரலில் அறிமுகப்படுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனாதிட்டம் சிறு, குறு தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்துக்காகக் கடன் வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் முதல்- 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகின்றன. 2017-18 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டபடி இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2.46 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவீதம் பெண்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனில்இதுவரை ரூ. 11,000 கோடி வாராக்கடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதைக் குறிப்பிட்டுள்ள ரிசர்வ்வங்கி இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன்களை மேலாண்மை செய்வதில் மிகுந்தகவனம் அவசியம். இல்லையெனில் பெருமளவிலான கடன்கள் வாராக்கடன்களாக வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.
Read More
ஜிஎஸ்டி ரிட்டர்னை  6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால்  இ-வே பில் தயார் தடை ? மத்திய அரசு திட்டம் !

ஜிஎஸ்டி ரிட்டர்னை 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் தயார் தடை ? மத்திய அரசு திட்டம் !

ஜிஎஸ்டி ரிட்டர்னை ஒருவர் தொடர்ந்து 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால், அவர் இ-வே பில் தயார் செய்வதில் இருந்து தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக ஜிஎஸ்டிஎன் தனது வலைதளத்தில் புதிய அம்சத்தைச் சேர்க்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதன்படி 6 மாதங்களாக ஒருவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால், தானாகவே இ-வே பில் உருவாக்கத்தில் இருந்து அவர் தடை செய்யப்படுவார். 1இது குறித்து ஜிஎஸ்டி வரி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாங்கள் உருவாக்கும் புதிய முறை மூலம் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யத் தகுதியுடைய ஒருவர், தொடர்ந்து இரு சுற்றுகள்(இரு 3 மாதங்கள்) ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாமல் இருந்தால், அவர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் இ-வே பில் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள். இதன் மூலம், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதும் தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து…
Read More
எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

AnyDesk என்ற செயலி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதுக்குறித்து RBI வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி இருக்கிறது. இந்தச் செயலியை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்தால், உங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வாலட் மற்றும் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை யுபிஐ (UPI) மூலம் திருடலாம் எனத்தெரிவித்துள்ளது. இந்த செயலியை தரவிறக்கம் செய்யும் போது 9 இலக்க கோடு உருவாக்கப்படும். அதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து விவரங்களும் அவர்களால் திருட முடியும். எனவே இந்த செயலியை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த செயலியை பயன்படுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
Read More
இலவச மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தில் தனியாரை ஈர்க்க ஒப்பந்தம் ?

இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியாரை ஈர்க்க ஒப்பந்தம் ?

ஆயுஷ்மான் பாரத்' என்ற, இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்த, 'நாட்ஹெல்த்' எனப்படும், இந்திய மருத்துவ சேவை கூட்டமைப்புடன், மத்திய அரசு அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.நாடு முழுவதும் உள்ள, ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம், கடந்தாண்டு, செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள,10 கோடி ஏழை எளிய குடும்பங்களுக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனை களில், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தோர், எவ்வித கட்டணமும் செலுத்தாமல், சிகிச்சை பெறலாம். மத்திய அரசின் புள்ளி விபரங்களின்படி, இதுவரை, 10 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த வும், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனால், 'நாட்ஹெல்த்' எனப்படும்,…
Read More