நிதி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

வருமானவரித்துறை தாக்கல் செய்வதற்கான முக்கிய அம்சங்கள்!

வருமானவரித்துறை தாக்கல் செய்வதற்கான முக்கிய அம்சங்கள்!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கால நீட்டிப்பு கிடையாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரித்துறை தாக்கல் செய்வதற்கான சில முக்கிய அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறையின் முக்கிய அம்சங்கள்;- 1. நடப்பில் உள்ள வரி சட்டங்களின்படி, தனிநபர் வருமான வரி செலுத்துவோர் (இந்தியாவில் வசிப்பவர்கள் அதேபோல் உள்நாட்டில் வசிக்காதவர்கள்) ஆகியோர் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளனர். 1. 60 வயதுக்கு உள்பட்டவர்கள், 2. மூத்த குடிமக்கள் (60 முதல் 80 வயது வரை) 3. சூப்பர் சீனியர் சிட்டிசன்ஸ் (80 வயதுக்கு மேற்பட்டோர்). 2. முதல் பிரிவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இலலை. சீனியர் சிட்டிசன்ஸ் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையில் இருந்தால் அவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூப்பர்…
Read More
எல்.ஐ.சி-க்கு தலைவலி தரும் நிறுவனங்கள்! சிக்கலில் எல்.ஐ.சி ?

எல்.ஐ.சி-க்கு தலைவலி தரும் நிறுவனங்கள்! சிக்கலில் எல்.ஐ.சி ?

வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடிகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்திய நிதிச் சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனத்தில் தொடங்கிய இந்த நிதி நெருக்கடிப்புயல் டி.ஹெச்.எஃப்.எல் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் போன்ற இதர நிறுவனங்களையும் புரட்டிப் போட்டுள்ளது. முக்கியமாக, நம் நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் தலையாய நிறுவனம் எல்.ஐ.சி-தான். கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் கோடி அளவிலான முதலீட்டு போர்ட்ஃபோலியோவை கொண்ட எல்.ஐ.சி-யும்கூட இந்த நிதி நெருக்கடியிலிருந்து தப்பவில்லை. காரணம், மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எல்.ஐ.சி அதிக பங்கு மூலதனத்தைக் கொண்டிருப்பதுதான். மேலும், எல்.ஐ.சி நிறுவனம்தான் பங்கு மற்றும் கடன் பத்திரச் சந்தைகளில் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகத் திகழ்கிறது. நிதிச் சந்தைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது நமது நிதிச் சந்தைகளுக்கு ஒரு புதிய, இதுவரை கண்டிராத ஓர் அனுபவமாக உள்ளதால், இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட சிறிது காலம் பிடிக்கும். மேலும், அந்நிய…
Read More
பேடிஎம், போன் பே கணக்குகள் முடக்க ரிசர்வ் வங்கி புதிய சட்டம்

பேடிஎம், போன் பே கணக்குகள் முடக்க ரிசர்வ் வங்கி புதிய சட்டம்

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள் பலர் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற மொபைல் ஆன்லைன் பணம் செலுத்தும் அப்ளிகேசன்களையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்லைன் ஆப் மூலம் பணம் செலுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் நாளுக்குநாள் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவர பேமண்ட் ஆப்களும் புதிய புதிய சலுகைகளை வழங்கி வருகின்றன. பேடிஎம் நிறுவனம் தனது செயலியில் உள்ள பேடிஎம் மால் எனப்படும் பகுதியில் ஆஃபர்களில் பொருட்களை தருகிறார்கள். போன்பே போன்ற நிறுவனங்கள் தங்களோடு இணைப்பில் இருக்கும் கடைகளில் பொருள் வாங்கிவிட்டு போன்பே மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. கூகுள்பே ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் குறிப்பிட்ட அளவு பணத்தை கேஷ்பேக் ஆக வழங்குகிறது. தற்போது மேற்கண்ட வகையான வசதிகளை பல ஆன்லைன் பணபரிவர்த்தனை ஆப்களும் வழங்கி வருகின்றன. இப்படி…
Read More
இந்தியாவில் 3 வகையான வங்கிகளே செயல்பாட்டில் இருக்கும் ? நிதித்துறைச் செயலாளர் தடாலடி.

இந்தியாவில் 3 வகையான வங்கிகளே செயல்பாட்டில் இருக்கும் ? நிதித்துறைச் செயலாளர் தடாலடி.

நாட்டின் 10 பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு 4 பெரிய பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்படும் என்ற அதிரடி அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மூலம் வேலையிழப்பு ஏற்படும் என சில தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுவது போல நடக்காது, மாறாக அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். வங்கிகளின் அளவு அதிகரிக்கும் போது அதன் வர்த்தகத்தின் அளவும் அதிகமாகும், இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஆட்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய ராஜீவ் குமார், கடந்த காலங்களில் பாரத வங்கி (sbi), பாங்க் ஆஃப் பரோடா போன்ற இணைப்பு நடவடிக்கைகளை உதாரணமாக பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு அழைத்துச் செல்லும். மிகவும் தெளிவான, பயனுள்ள ஒரு வங்கி அமைப்பிற்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.…
Read More
மினிமம் பேலன்ஸ் விதிகள் ரத்து? மறுபரிசீலனை செய்கிறது ரிசர்வ் வங்கி ?

மினிமம் பேலன்ஸ் விதிகள் ரத்து? மறுபரிசீலனை செய்கிறது ரிசர்வ் வங்கி ?

மினிமம் பேலன்ஸ் விதிகள் ரத்து? மறுபரிசீலனை செய்கிறது ரிசர்வ் வங்கி ஹைலைட்ஸ 3 ஆண்டுகளில் மினிமம் பேலன்ஸ் குறைவுக்கான அபராதமாக 10 ஆயிரம் கோடி வசூல்.மினிமம் பேலன்ஸ் விதிகளைத் தொடர்வதா என ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை. வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பேணுவது குறித்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்வதாக ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை வியாழக்கிழமை வெளியானது. இதில், வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (மினிமம் பேலன்ஸ்) பேணுவதன் அவசியத்தையும் அதன் பேரில் அபராதம் வசூலிப்பது குறித்தும் மறுபரிசீலனை செய்வதாகக் கூறியிருக்கிறது. மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும்? அதற்குக் குறைந்தால் வசூலிக்கப்படும் அபராதம் எவ்வளவு? போன்ற விவரங்களை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகள் 600 ரூபாய் வரை அபராதம் பெறுகின்றன. அதுவும் மெட்ரோ நகரங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் என கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இருப்பிடத்தைப் பொருத்தும், குறைந்தபட்ச இருப்புத்தொகை மற்றும் அபாரதம் மாறுகிறது. தற்போதைய…
Read More

இலவச ஏ.டி.எம்.பரிவர்த்தனை கணக்கில் சேராது! ஆர்.பி.ஐ.கண்டிப்பு!!

'வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை; தொழில்நுட்ப கோளாறுகளால் பணம் வரவில்லை எனில், அது போன்ற பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர்களின் இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனை கணக்கில் சேராது' என, இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து,  இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:தொழில்நுட்ப கோளாறு, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை உட்பட, பல்வேறு காரணங்களால், பணம் எடுக்காத பரிவர்த்தனைகளும், இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளுக்குள் உள்ளடக்கப்படுவதாக, தெரிய வந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு, தொடர்பு பிழைகள், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை, வங்கி மற்றும் சேவை வழங்குவோரால் ஏற்படும் தவறுகள், தவறான ரகசிய குறியீட்டு எண் உட்பட, பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் பரிவர்த்தனைகளை, வாடிக்கையாளர்களின் இலவச, பரிவர்த்தனை கணக்கில் சேர்க்க கூடாது. இதற்கான சேவைக் கட்டணமும் வசூலிக்க கூடாது.மேலும், வங்கி கணக்கில் இருப்பு தொகையை விசாரித்தல், காசோலை புத்தகம் கோரல், வரி செலுத்துதல், பண பரிமாற்றம் செய்தல் போன்ற, பணம் அல்லாத பரிவர்த்தனைகளும், இலவச…
Read More
5 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்..! ஆர்பிஐ அதிரடி!

5 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்..! ஆர்பிஐ அதிரடி!

பணமில்லா பரிவர்த்தனைகளான வங்கிக் கணக்கில் மீதமுள்ள தொகை பார்ப்பது, காசோலை புத்தகம் கோருவது, வரிகளை செலுத்துவது, நிதி பரிமாற்றம் செய்வது ஆகியவை இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் மாதந்தோறும் 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் 3 முறையும் கட்டணமில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கூடுதலாக செய்யும் நிதி பரிவர்த்தனைக்கு 17 ரூபாயும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ 6-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற விதி கடந்த ஜனவரி மாதம் முதல் விதிக்கப்பட்டது.இதை வாடிக்கையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். தங்கள் பணத்தை எடுப்பதற்கு கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இந்த…
Read More
தொடர்ந்து வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் !  உலக வங்கி கணிப்பு !!

தொடர்ந்து வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் ! உலக வங்கி கணிப்பு !!

இந்திய பொருளாதாரம், 2018-19ல் தொடர்ந்து வேகமாக வளரும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்: இந்தியாவில், நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 7.3 சதவீத வளர்ச்சியில் இருக்கும். அடுத்த இரு நிதியாண்டுகளில் இது 7.5 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும். அதேநேரம், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக இருக்கும். ஊக்கம் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற இந்திய அரசின் சமீபகால நடவடிக்கைகள், அமைப்பு சாராமல் இருந்து வந்த துறைகளை, அமைப்புக்கு உள்ளே கொண்டுவர ஊக்கம் தரக்கூடியவை. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க முக்கிய காரணம், முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவையாகும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் தற்காலிகமாக மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இனி வேகம் பிடிக்கும். சீனா நிலை சீனா 2019-20ம் நிதியாண்டில், 6.2 சதவீதம் அளவுக்கான…
Read More
வரி ஏய்ப்பு செய்துவிட்டு தப்ப முடியாது! இன்று முதல் புதிய விதிகள் அமல்

வரி ஏய்ப்பு செய்துவிட்டு தப்ப முடியாது! இன்று முதல் புதிய விதிகள் அமல்

கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்கள் வைத்திருப்போருக்கு நெருக்கடி.13 விதமான வரி ஏய்ப்புகள் பற்றி மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கியுள்ளது.வரி ஏய்ப்பு செய்தவர்கள் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டாலும் அந்தப் பிரச்னையிலிருந்து தப்ப முடியாத அளவுக்கு கடுமையான புதிய விதிகள் இன்று அமலுக்கு வருகின்றன.வருமான வரித்துறை சார்பில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 17ஆம் தேதி முதல் வருமான வரி ஏய்ப்பு குறித்த புதிய விதிகள் அமலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி செலுத்தாமல் தாமதித்தவர்கள் வருமான வரித்துறையின் எச்சரிக்கைக்கு நோட்டீஸ் பெற்ற பின்பு, வரியை வட்டி மற்றும் அபராதத்துடன் செலுத்தினாலும் அத்துடன் சிக்கலிலிருந்து தப்ப முடியாது. இதற்காக புதிய விதிகளில் கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்கள் குறித்த முக்கியமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு பிரிவுகளில் 13 விதமான வரி ஏய்ப்புகளைச் சுட்டிக்காட்டி அவை தொடர்பான விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கியுள்ளது. முதல்…
Read More
பழைய வீடுகளை விற்று புது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம் ! வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவு !!

பழைய வீடுகளை விற்று புது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம் ! வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவு !!

ஒன்றுக்கும் மேற்பட்ட பழைய வீடுகளை விற்று புதிதாக ஒரு வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம் என்று வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட், பங்கு சந்தை அல்லது பங்கு சந்தை சார்ந்த முதலீட்டுகள் மூலமாக வரும் லாபத்திற்கு வரி விதிப்பதே நீண்ட கால மூலதன ஆதாய வரியாகும். இது ஒவ்வொரு முதலீடுகளுக்கு ஏற்றவாறு மாறும். ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரை நிலம், வீடு வாங்கப்பட்ட 2 ஆண்டுக்கு பிறகு அதை விற்றால் கிடைக்கும் லாபத்துக்கு 20 சதவீத நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். ஆனால், இந்த வரிவிதிப்பில் இருந்து தப்பிக்க, நிலம், வீடு விற்ற பணத்தை பயன்படுத்தி புதிதாக வீடு வாங்கினால்போதும் என்ற சலுகையும் உள்ளது. மும்பையை சேர்ந்த பிபின் சாகர் என்பவர் ஒரே கட்டிடத்தில் தனக்கு சொந்தமான 3 பிளாட் வீடுகளை விற்றார். அதில் கிடைத்த பணத்தை பயன்படுத்தி வேறொரு பகுதியில் அதிக பரப்பளவு கொண்ட…
Read More