02
Apr
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன் பிரிவில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இப்புதிய திட்டத்தின் படி மக்களை ஏமாற்றும் பில்டர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது. இப்புதிய திட்டம் அடுத்தச் சில மாதங்களில் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.பில்டர்கள் பொதுவாகப் பில்டர்கள் மக்களிடம் தங்களது வீடுகளை வேகமாக விற்பனை செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகப் பல பொய்களைக் கூறி விற்பனை செய்வார்கள். இதில் முக்கியமான ஒன்று டெலிவரி டைம். டெலிவரி டைம் என்பது குறித்த நாளுக்குள் பில்டர்கள் கூறிய படி வீட்டின் கட்டுமான பணிகளை முடித்து வாடிக்கையாளர்கள் கையில் சாவியைக் கொடுக்க வேண்டும். பில்டர்கள் காலந்தாழ்த்துவது தற்போது மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பில்டர்களுக்குப் பெரிய விஷயமாக…
