செந்தில் பாலாஜியை வளைக்கும் வழக்குகள் !

மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சரா இருந்தப்போ போயஸ் தோட்டத்துக்கு செல்லப்பிள்ளையா இருந்தவர் செந்தில் பாலாஜி. இப்போ தி.மு.க ஆட்சியிலும் வலுவான இடத்தைப் பிடிச்சிகிட்டாரு.இது தான் அவருக்கு பிரச்சினையாமாறியிருக்கு. அதனால தான் அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வந்துகிட்டே இருக்குது. தி.மு.க-வில் உள்ள சீனியர்களே கட்சித் தலைமையிடம், “எங்களுக்கு என்ன துறையை ஒதுக்கப்போறீங்கன்னு கேட்கத் தயங்கிய நேரத்தில், மின்சாரம் மதுவிலக்குத் துறைகளைப் போகிறபோக்கில் தட்டிச்சென்றவர் தான் செந்தில் பாலாஜி. இதனால், தி.மு.க சீனியர்களின் மனதிலேயே சீற்றத்தை ஏற்படுத்தியவர். இப்படி அரசியலில் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு, அமலாக்கப் பிரிவால் அச்சுறுத்தல் வந்திருப்பதுதான் தமிழக அரசியல்ல பரபரப்பாகப் பேசப்படுது.

2011 முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தப்போ அவருடைய துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக மூன்று வழக்குகளை தமிழகக் காவல்துறையினர் பதிவுசெஞ்சிருந்தாங்க. இதுல ஒரு வழக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தப்போ “எங்களுடைய பணத்தை செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார்”னு பாதிக்கப்பட்டவங்க தரப்பிலிருந்து பதில் மனு தாக்கலானது. செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசு தரப்பு எந்த எதிர்வாதமும் வைக்காததால, இந்த ஒரு வழக்கை மட்டும் முடித்துவைப்பதாக அறிவித்தது உயர் நீதிமன்றம். மீதமுள்ள இரண்டு பண முறைகேடு வழக்குகள் நிலுவையில்தான் இருக்குது. இந்த இரண்டு வழக்குகளையும் இப்போது அமலாக்கப் பிரிவு கையில் எடுத்திருப்பதுதான் பரபரப்புக்குக் காரணம். ‘லஞ்சம் கொடுப்பதும் தவறு. லஞ்சம் வாங்குவதும் தவறு’ன்னு அரசியல் சாசனம் சொல்லுது. ஆனால், ‘வாங்கிய லஞ்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டால், அது குற்றமாகாதா?’ அப்படீங்கிற விமர்சனங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை வைச்சு வந்தது. விமர்சனத்துக்கு பதில் சொல்லும் விதமாகத்தான் அமலாக்கப் பிரிவு, ‘சட்டவிரோதப் பணப்பரிமாற்ற’ வழக்கொன்றை செந்தில் பாலாஜி மீது பதிந்து ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறது. இதனாலத்தான் ஆடிப்போயிருக்கிறது ஆளும் தரப்பு.

டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமை அவரிடம் “தி.மு.க அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும்” என்கிற தகவலையும் சொன்னார்கள். அப்போது விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டுக்குப் பின்னாலிருந்து செயல்பட்டதே தற்போது தி.மு.க அரசில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிதான் என்று எடப்பாடி, பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். மேலும், செந்தில் பாலாஜி மீது ஏற்கெனவே இருக்கும் புகார்கள் குறித்த விவரங்களையும் அப்போது பிரதமரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறு தினம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பன்னீர் – பழனிசாமி தரப்பு சந்தித்துப் பேசினாங்க. இந்தச் சந்திப்பிலும் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துச் சொன்னாங்க. அவங்க இரண்டு பேரும் குறிப்பிட்டுச் சொன்ன ஒரு விவகாரமே இப்போது செந்தில் பாலாஜிக்குச் சிக்கலாக மாறியிருக்குது. செந்தில் பாலாஜி ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவாச்சு. இந்த வழக்கு விசாரணை கடந்த 8-ம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தப்போ, தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த எதிர்தரப்பு வாதமும் முன்வைக்கப்படலை. அதேபோல் பணம் கொடுத்தவர்களுக்குப் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு சொன்னதால் வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்தது.

இந்தநிலையில்தான், ஏற்கெனவே குற்றப்பிரிவு காவல்துறை இந்த வழக்கில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் மத்திய அமலாக்கப் பிரிவு ஒரு புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. அதாவது தமிழக காவல்துறை முடித்து வைத்த ஒரு வழக்கை, மத்திய அரசு இப்போ கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்த விவரங்களையும் தமிழக குற்றப்பிரிவு காவல்துறையிடமிருந்து அமலாக்கப் பிரிவு கேட்டுப்பெற்றிருக்கிறது. இந்த வழக்கை வைத்து செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியைக் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதுன்னு சொல்றாங்க.
அடுத்தடுத்த விசாரணைல இது தெரிஞ்சிரும். குறிப்பா அ.தி.மு.க-வால் வளர்ந்த செந்தில் பாலாஜி இப்போ அ.தி.மு.க புள்ளிகளை தி.மு.க-வுக்குக் கொண்டுபோகும் வேலையை முன்னெடுத்திருக்கிறாரு அதோடு சேலம் மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக இருந்துகிட்டு எடப்பாடிக்கு எதிரான அரசியல் மூவ்களைச் செய்வது எடப்பாடிக்குக் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.. அதைப் பக்குவமாக பா.ஜ.க அரசிடம் விளக்கியிருகிறார்கள் எடப்பாடியும் பன்னீரும். அதன் விளைவுதான் அமலாக்கப் பிரிவு ஆக்‌ஷனில் இறங்கக் காரணம் என்கிறார்கள்.

அதாவது அ.தி.மு.க-வினர் மீது தி.மு.க அரசு அடுத்தடுத்த ஆக்‌ஷனில் இறங்கினால், தி.மு.க-வினர் மீது நாங்களும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குவோம் என்பதைக் காட்டத்தான் செந்தில் பாலாஜி மீதான வழக்குக்கான காரணம் என்கிறார்கள். மற்றொருபுறம் தங்களை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் அ.தி.மு.க தரப்பு இருந்தது. இப்போது செந்தில் பாலாஜி மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்திருப்பதால், “நாம் டெல்லியில் பற்றவைத்த நெருப்பு புகைய ஆரம்பித்திருக்கிறது’’ என்கிற மகிழ்ச்சியில் எடப்பாடி தரப்பு இருக்கிறது. கடந்த (11 ஆகஸ்ட் 2021) அமலாக்கப் பிரிவு முன்பாக செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாத கால அவகாசம் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்கவிருப்பதால் விலக்கு கோருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்ன சொல்றாங்கன்னா “டெல்லியிலிருந்து ஏற்கெனவே எங்களுக்கு வந்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீதான விவகாரங்களைத் தொடர்ந்து கண்காணித்தோம். பண மோசடி வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதும், டெல்லியிலிருந்து மற்றோர் உத்தரவு வந்தது. அதன் அடிப்படையில்தான் எங்கள் தரப்பிலிருந்து இந்த வழக்கு அவர்மீது பதியப்பட்டது.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கரூர் பகுதியில் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளில் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றில் செந்தில் பாலாஜி தரப்புக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிந்தது. அந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை, எங்களிடம் அளித்தது. அதன் அடிப்படையிலும் ஒரு வழக்கு எங்கள் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறது. இந்த வழக்குகளின் அடிப்படையில் முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் கிடைச்சிருக்குது. அடுத்த விசாரணையில், இந்தத் தொகையில் மாற்றங்கள் வரலாம்.

தமிழக குற்றப்பிரிவுக் காவல்துறையிடம், செந்தில் பாலாஜி மீது நிலுவையிலிருக்கும் இரண்டு பண முறைகேடு வழக்கு தொடர்பான விவரங்களையும் கேட்டிருக்கிறோம். அமலாக்கப் பிரிவு மதுரை உதவி இயக்குநர் தலைமையில் இந்த விசாரணை நடக்குதுன்னு சொல்றாங்க. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், ஆகஸ்ட் 9-ம் தேதி செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவுசெய்தனர். அவரை ஆகஸ்ட் 11-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பினார்கள். ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதால் விசாரணைக்கு ஆஜராக, தனக்கு ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு அமலாக்கப் பிரிவிடம் அனுமதி கேட்டிருக்கிறது.

அமலாக்கப் பிரிவின் இந்த திடீர் ஆக்‌ஷன் குறித்து பா.ஜ.க வட்டாரத்தில என்ன சொல்றாங்கன்னா “அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், செந்தில் பாலாஜியின் அரசியல் எதிரியுமான எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் குறிவைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதை அ.தி.மு.க தலைமை ரசிக்கலை. ரெய்டு நடந்தவுடனேயே அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். அப்போது, ‘நமது கூட்டணி தமிழகத்தில் இன்னும் அதிகமான தொகுதிகளை வென்றிருக்கும். அது தடுக்கப்பட்டதில் செந்தில் பாலாஜி செய்த பசையான பணியும் ஒரு காரணம். மதுபான நிறுவனம் மூலம், செந்தில் பாலாஜி தி.மு.க தேர்தல் பட்டுவாடா விஷயங்களை கவனிச்சிக்கிட்டார். இதே பாணி தொடர்ந்தால் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நமது கூட்டணிக்குப் பெரும் சரிவு ஏற்படும்’னு நாசுக்காகச் சொல்லியிருக்காங்க இரண்டு பேரும்.. பிரதமரைப் பார்த்ததுக்கு அப்புறம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த இபிஎஸ்ஸூம் ஓபிஎஸ்ஸூம் செந்தில் பாலாஜி மீது நிலுவையிலிருக்கும் வழக்கு விவரங்கள் அடங்கிய ஃபைலைக் கொடுத்திருக்காங்க. அமித் ஷா மூலம் அந்த ஃபைல் அமலாக்கப் பிரிவுக்குப் போயிடுச்சு.ஏற்கெனவே குற்றப்பிரிவு காவல்துறை இந்த வழக்கில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் மத்திய அமலாக்கப் பிரிவு ஒரு புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. அதாவது தமிழக காவல்துறை முடித்து வைத்த ஒரு வழக்கை, மத்திய அரசு இப்போது கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்த விவரங்களையும் தமிழக குற்றப்பிரிவு காவல்துறையிடமிருந்து அமலாக்கப் பிரிவு கேட்டுப்பெற்றிருக்குது. இந்த வழக்கை வைத்து செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியைக் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதா சொல்றாங்க . குறிப்பாக, அ.தி.மு.க-வால் வளர்ந்த செந்தில் பாலாஜி இப்போ அ.தி.மு.க புள்ளிகளை தி.மு.க-வுக்குக் கொண்டுபோகும் வேலையை முன்னெடுத்திருக்கிறாரு.அதோட சேலம் மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக இருந்துகிட்டு எடப்பாடிக்கு எதிரான அரசியல் மூவ்களைச் செய்வது எடப்பாடிக்குக் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப் பக்குவமாக பா.ஜ.க அரசிடம் விளக்கியிருகிறார்கள் எடப்பாடியும் பன்னீரும். அதன் விளைவுதான் அமலாக்கப் பிரிவு ஆக்‌ஷனில் இறங்கக் காரணம்ங்கிறாங்க.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடப்பாடி தரப்பு இவ்வளவு சூடாகக் காரணம், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க -வை பலவீனப்படுத்தும் வேலையை செந்தில் பாலாஜி முன்னின்று செய்வதால்தான். தமிழக அரசியலில் கோலோச்சிய டெல்டா மாவட்டக் குடும்பத்தினருக்குச் சொந்தமான மதுபான ஆலையின் வழியாக, மூன்று இலக்கத்தில் ஸ்வீட் பாக்ஸ்கள் தி.மு.க தலைமைக்கு வந்தது. அந்த ஸ்வீட் பாக்ஸ்கள்தான் தி.மு.க-வின் 80 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் செலவைப் பார்த்துக்கிட்டதாம்.
இதற்குப் பிரதிபலனாகத்தான் மதுவிலக்குத்துறை செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கப்பட்டதுன்னு சொல்றாங்க.. தங்களுக்கு எதிராக கஜானாவை நிரப்பிக்கொடுத்து, தங்கள் கட்சி நிர்வாகிகளையும் தி.மு.க-வுக்குள் இழுக்கும் வேலையையும் செந்தில் பாலாஜி துணிந்து செய்வதால் எடப்பாடி தரப்பு கடும் ஆத்திரத்தில் இருக்கிறது” என்றார்கள்.செந்தில் பாலாஜிக்கு எடப்பாடி மேல் என்ன கோபம்னா பாலாஜி அதிமுகவிலேருந்து அமமுக போனப்போ செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரின்னு கடுமையான விமர்சனம் வைச்சிருந்தாரு.
அதுக்கு பழி வாங்கத்தான் எடப்பாடிக்கு தொடர்ந்து கொடைச்சல் கொடுத்திட்டு வர்றாரு செந்தில் பாலாஜி.

எதிர்க்கட்சியின் சீற்றத்தையும் தாண்டி, ஆளுங்கட்சிக்குள்ளேயே செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்களாம் தி.மு.க சீனியர்கள். கட்சிக்குள் நுழைந்தவுடனேயே மாவட்டப் பொறுப்பாளர், ஆட்சி அமைந்தவுடன் இரண்டு வளமான துறைகளுக்கு அமைச்சர்னு தி.மு.க-வுக்குள் செந்தில் பாலாஜியின் கிராஃப் ராக்கெட் வேகத்தில் ஏறுவதை தி.மு.க-வின் சீனியர்களால ஜீரணிக்கவே முடியல. கட்சி சீனியர்கள் பலருக்கும் டம்மியான துறையை ஒதுக்கிய முதல்வர், செந்தில் பாலாஜிக்குக்கு மட்டும் கொடுத்த முக்கியத்துவம் பலரையும் வெறுப்படைய வைத்திருக்கிறதாம்.

“தி.மு.க தலைமையிடம் தன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளத் தீர்மானித்த செந்தில் பாலாஜி, ‘கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தணும்னா அ.தி.மு.க-வில் வலுவாக இருக்கும் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் போன்றவர்களை முடக்க வேண்டும். அவர்களுடைய நிதி ஆதாரங்களைக் கட்டுப்படுத்தி வழக்குகளைப் பாய்ச்சினால் அந்தப் பகுதியில் அ.தி.மு.க சோர்வடைந்துவிடும்”னுஆலோசனை கொடுத்திருக்கிறாராம். இந்த ஆலோசனைக்கு தி.மு.க தலைமையும் அசைந்து கொடுப்பது, கொங்குமண்டல தி.மு.க சீனியர்களான அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி இவுங்க இரண்டு பேருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்குது. குறிப்பா கோவையில் செந்தில் பாலாஜி ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை அமைச்சர் சக்கரபாணி கொஞ்சமும் விரும்பலை”ன்னு கொங்கு மண்டல தி.மு.க-காரங்க புலம்புறாங்க.

செந்தில் பாலாஜிக்கு முதல்வர் குடும்பம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கண்டு, கட்சிக்குள் பல சீனியர்கள் பொருமிக்கிட்டிருக்கிறாங்க. அதேபோல, செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஆரம்பித்தவுடன், அதைவைத்து அவரது பதவிக்கு நெருக்கடியை உண்டாக்கும் வேலையில் தி.மு.க-வுக்குள்ளேயே ஒரு டீம் மும்முரமாகியிருக்கிறதாம்.

“செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு ஆக்‌ஷனில் இறங்கியிருப்பது, முதல்வர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜியிடம் முதல்வர் இந்த வழக்கு விவகாரம் குறித்து நேரடியாகப் பேசியிருக்கிறாரு. அப்போது, ‘உங்கள் தரப்பில் இன்னும் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சொல்லிவிடுங்கள். ஆட்சிக்குச் சிறிதளவு கெட்ட பெயர் வருவதையும் நான் ஏற்க மாட்டேன்’ என்றாராம் முதல்வர்.அதத்தான் ஸ்டாலின் கரூர் தேர்தல் பிரச்சாரத் தில் தெளிவா சொல்லிட்டாரே. நம்பிக்கையூட்டுகிறாரா, இல்லை எச்சரிக்கிறாரான்னு புரியாம முழிச்சிருக்கிறாரு செந்தில் பாலாஜி”ங்கிறாங்க அறிவாலயத்துக்கு நெருக்கமானவங்க.

சில மாதங்களுக்கு முன்பாக, தமிழக அமலாக்கப் பிரிவில், காலியாக இருந்த பணியிடங்களை வேகமாக நிரப்பியிருக்கிறது மத்திய அரசு. அதேபோல, வருமான வரித் துறையிலுள்ள சில அதிகாரிகளைக் கூடுதல் பொறுப்பாக அமலாக்கப் பிரிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து தமிழர்கள் அல்லாத அதிகாரிகளைத் தமிழக அமலாக்கப் பிரிவின் மூன்று மண்டலங்களுக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். ஏற்கெனவே நீதிமன்றங்களில் பல மூத்த தி.மு.க அமைச்சர்கள்மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமைக் குடும்பம் தொடர்பான வழக்குகளும் மத்திய அரசின் கையில் இருப்பதால், அமலாக்கப் பிரிவு விவகாரத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று முதல்வரிடம் அறிவுறுத்தியிருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள். ‘அமலாக்கப் பிரிவின் வழக்கு வளையத்திலிருந்து செந்தில் பாலாஜி மீள்வது அவ்வளவு லேசுபட்ட விஷயமல்ல’ என்பதே முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கும் செய்தி.

“அ.தி.மு.க-வில் இருந்தபோதே பல சர்ச்சைகளில் சிக்கிய ஒருவருக்கு, தி.மு.க தலைமை இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன? என்ற தி.மு.க சீனியர்களின் கேள்விக்கே விடை இல்லை!” என்று புன்னகைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தி.மு.க வீக்காக உள்ள கொங்குமண்டலத்தில் அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி, பா.ஜ.க-வைக் காலூன்றவைக்க முனைப்பு காட்டுகிறார். அதேநேரம் அங்கு தி.மு.க-வை வலுப்படுத்த செந்தில் பாலாஜி காய்நகர்த்துகிறார். அதற்காக, கோவையில் ஒரு வீட்டையும் பார்த்திருக்கிறாராம் செந்தில் பாலாஜி. தேர்தல் நேரத்திலேயே இவர்கள் இருவருக்குள்ளும் வெடித்த மோதல், இப்போது அதிகார எல்லை மோதலாகத் தொடர்கிறது. இந்தநிலையில் செந்தில் பாலாஜி விஷயத்தில், அண்ணாமலையும் தன் பங்குக்கு டெல்லியில் அழுத்தம் கொடுப்பதாகக் கூறுகிறது பா.ஜ.க வட்டாரம்! அதிமுக சொல்ற மாதிரி இது மத்திய. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை ன்னு சொல்வார்களா இல்லை வழக்கிலிருந்து சட்டப்படி விடுதலையாவாங்களாங்கிறது வழக்கு போற போக்கை வைச்சுத்தான் சொல்லமுடியும்.அமலாக்கப் பிரிவின் வழக்கு வளையத்திலிருந்து செந்தில் பாலாஜி மீள்வது அவ்வளவு லேசுபட்ட விஷயமல்ல’ என்பதே முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கும் செய்தி.