19
Sep
எழுமின் - தி ரைஸ் அமைப்பு நடத்தும் மூன்றாம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு இவ்வாண்டு நவம்பர் 14,15,16 நாட்களில் சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்தவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது . மலேசியா , சிங்கப்பூர் மியன்மார் , ஆஸ்திரேலியா , அமெரிக்கா , கனடா , தென் ஆப்ரிக்கா பிரித்தானியா , ஜெர்மனி , நார்வே , பிரான்ஸ் , சுவிட்சர்லாந்து , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , ஒமான் , கத்தார் , குவைத் , பஹ்ரைன் , சிறிலங்கா , மொரிசியா ' உள்ளிட்ட 35 - க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து வரும் தமிழ்த் தொழிலதிபர்கள் - திறனாளர்களை சந்திக்கவும் , தொழில் வணிக உறவுகள் உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக இம்மாநாடு அமையும் என்று. எழுமின் அமைப்பினை நிறுவியவர் அருட்திரு தமிழ்ப்பணி ஜெகத் கஸ்பார் பேசினார் . இது குறித்து ஜெகத் கஸ்பர்…
