செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எளிய மனிதர்கள் இரவு முழுக்க வெற்றுக் குடங்களோடு தெருவில் காத்துக் கிடக்கின்றனர்.நாளுக்கு நாள் தனியார் தண்ணீர் டேங்குகளில் விற்கப்படும் தண்ணீரின் விலை கூடிக் கொண்டே போகிறது. வியாழக்கிழமை மாலை பெய்த மழை தொடரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் , நேற்று சுத்தமாக மழை பெய்யவில்லை. இருக்கின்ற தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியாத நிலையில் இந்த சிக்கல்களில் இருந்து சென்னை எப்படி மீண்டெழும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த சிக்கல்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் என்ன, இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் காத்துக்கொள்ள அரசும் , மக்களும் செய்ய வேண்டிய முதன்மையான செயல்கள் என்னென்னெ போன்ற கேள்விகளோடு, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசியரும் நீரியல் நிபுணருமான ஜனகராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல் பின்வருமாறு. கடுமையான வறட்சியினை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். இது மழைப்பொழிவு இல்லாமல் ஏற்பட்ட…
Read More
நீர் நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்? மத்திய அரசுஅதிரடி !

நீர் நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்? மத்திய அரசுஅதிரடி !

வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நகரங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பது கட்டாயம்' என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு பிரிவை ஏற்படுத்தி கண்காணிப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல 'அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் குறைந்தபட்சம் ஒரு நீர் நிலையையாவது முறையாக பராமரிக்க வேண்டும்' என அறிவுரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை முடிந்த பின்னரும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த ஆண்டு குடிநீருக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாமல் குறைந்தது தான் இதற்கு காரணம். அதே நேரம் பெய்த மழை நீரை பாதுகாக்கத் தவறியதும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதுபோல 2001ம் ஆண்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட கட்டாய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கிடப்பில் போட்டதும் இப்போது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'மழை…
Read More
வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும்!

வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும்!

நாடு முழுவதும் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் அமலாகி உள்ள நிலையில், இச்சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது.வாடகை வீட்டு சிக்கல்களை தீர்க்க உதவும் புதிய சட்டம் தமிழக அளவில் 2011ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 24 சதவிகித மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த வருடம் வாடகை மசோதா சட்டத்தை நிறை வேற்றியது. அதுகுறித்த விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம், வாடகை தொடர்பான விதிமுறைகள், நடைமுறைகள் (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிப்ரவரி முன்றாம் வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. முந்தைய தமிழ்நாடு கட்டுமான வாடகை மற்றும் குத்தகை சட்டத்தின்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம்…
Read More
மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு ! பழனிசாமி அறிவிப்பு !!

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு ! பழனிசாமி அறிவிப்பு !!

'தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019'ஐ தமிழக அரசு வெளியிட்டது. மின்சார வாகனங்கள் தயாரிப்பை அதிகரிக்கவும் விலையை குறைக்கும் வகையிலும் பல்வேறு வரி சலுகைகள் புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக 'தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையை முதல்வர் பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். புதிய கொள்கையின்படி அனைத்து மின்சார இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பஸ்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு 100 சதவீதம் மோட்டார் வாகன வரி விலக்கு 2022ம் ஆண்டு வரை வழங்கப்படும். மின்சார…
Read More
எஸ்.பி.ஐ வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ?

எஸ்.பி.ஐ வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, தனது ஏடிஎம் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு தொகை, டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. அதிலும் இவ்வங்கியின் இணைய சேவைகளான மொபைல் வங்கி பரிவர்த்தனைகளுக்கு இவ்வங்கி மாதாந்திர வரம்புகளை முற்றிலுமாக நீக்கியுள்ளது.இதன் மூலம் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் இனி வரம்பற்ற சேவையை பெற முடியும் என்றும், முந்தைய மாதத்தில் 25,000 இருப்பு தொகை வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்சம் 40 பரிமாற்றங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மாதத் சராசரியான இருப்பு தொகை 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 3,000 இருப்பு தொகையில் 50 சதவிகிதம் பராமரிக்காதவர்களுக்கு, 10 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியும், இதே 75 சதவிகிதம் இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு 15 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்…
Read More
மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி ? உள்ளாட்சி நிர்வாகங்கள் மும்முரம் !

மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி ? உள்ளாட்சி நிர்வாகங்கள் மும்முரம் !

'பேனர்' மற்றும், 'கட் அவுட்' கலாசாரத்திற்கு முடிவு காணும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம், கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்ததை ஒட்டி, மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது. 'தமிழகம் முழுவதும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, பேனர் மற்றும் கட் அவுட்டுகளை அகற்ற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும், பேனர் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது.சென்னை, பூந்தமல்லி பஸ் நிலையம், டிரங்க் சாலை, கரையான்சாவடி, குமணன் சாவடி, குன்றத்துார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள், பேனர் மற்றும் விளம்பர போர்டுகளை அகற்றினர். வேலுார் மாநகராட்சியில், அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த, 1,178 பேனர்கள் அகற்றப்பட்டன. ஈரோட்டில், 150க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத் தப்பட்டன. திருச்சியில், திருமண நிகழ்ச்சிக்கு, ஆர்டர் செய்திருந்த, பிளக்ஸ் பேனர்களை வாங்க கூட ஆட்கள் வரவில்லை. மேலும், திருச்சி நகரில், பேனர் வைத்தவர்களே, நேற்று அகற்றும் பணியில்…
Read More
பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

வைரச் சந்தையில் 25-30 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.சிறு நிறுவனங்கள் 20 சதவீதம் வரை பணியாட்களை குறைத்துவிட்டன.பொருளாதார மந்தநிலையின் பாதிப்பில் சிக்கியுள்ள மற்றொரு துறையான வைரச் சந்தை 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. சூரத்தைச் சேர்ந்த பெரிய வைர ஏற்றுமதி நிறுவனமான ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளன.தீபாவளி முன்னிட்டு நடக்கும் விற்பனையின்போதும் போதிய அளவு விற்பனையாவது கடினமாகவே இருக்கும் என்றும் நிலைமையை சமாளிக்க மிகவும் எளிதாக இருக்காது எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.இந்த மந்தநிலையை கருத்தில் கொண்டு சிறிய வைர வியாபார நிறுவனங்கள் பணியாட்களைக் குறைப்பது, பணி நேரத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. "25-30 சதவீதம் வைர சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் வைரங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் சீனாவும். இந்த இரு நாடுகளிடையே நிலவும் வர்த்தக மோதல், இறக்குமதி வரியில் நிலையற்ற தன்மையை தக்கவைக்கிறது"…
Read More
பால் விலையை அடுத்து தயிர், நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்…!

பால் விலையை அடுத்து தயிர், நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்…!

ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, தயிர், நெய், பால்கோவா போன்ற பால் உப பொருட்களுக்கான விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வானது கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் உப பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை 460 ரூபாயில் இருந்து 495 ரூபாயாகவும், ஒரு கிலோ பால் பவுடர் 270 ரூபாயில் இருந்து 320 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பனீர் இனி 450 ரூபாய்க்கு விற்கப்படும். 230…
Read More
மோடி தேநீர் விற்ற இடம்! சுற்றுலா தலமாக மாற்றம்!

மோடி தேநீர் விற்ற இடம்! சுற்றுலா தலமாக மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாழ்மையான தோற்றம் நன்கு அறியப்பட்டதோடு, இந்திய மக்களுடன் இணைவதற்கான முயற்சியில் அவரே தனது கடந்த காலத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் இளைய நாட்களிலிருந்து மிகவும் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று அவர் தேநீர் விற்றது. இந்நிலையில் தற்போது ​​பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தனது இளைமை காலத்தில் குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்டாலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதன் ஒருங்கிணைந்த சாராம்சத்தையோ அல்லது தோற்றத்தையோ மாற்றாமல் இந்த ஸ்டாலை ஒரு சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதே திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில சுற்றுலா அமைச்சர் பிரஹ்லாத் படேல் ஏற்கனவே இந்த ஸ்டாலை ஆய்வு செய்துள்ளார், மேலும் அதன்…
Read More
ஸ்விக்கி,ஸொமாட்டோ வேண்டாம்! விலகிய 1200 உணவகங்கள்?காரணம் இதுதானாம்?!

ஸ்விக்கி,ஸொமாட்டோ வேண்டாம்! விலகிய 1200 உணவகங்கள்?காரணம் இதுதானாம்?!

சமீப காலத்தில் மதரீதியான சில சிக்கல்களை ஸொமாட்டோ, ஊபர் போன்ற உணவு ஆப் நிறுவனங்கள் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய தேசிய உணவு கழகத்தை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட உணவகங்கள் ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற உணவு டெலிவரி சேவைகளிலிருந்து  விலகியுள்ளன. உணவு அப்ளிகேசன்களினால் கஸ்டமர்களுக்கு சலுகைகள் நிறைய கிடைத்தாலும் உணவகங்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. உணவு சேவை அப்ளிகேசன்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல உருவானதால் பலரும் வெவ்வேறு அப்ளிகேசன்களை உபயோகிக்கின்றார்கள். அதனால் உணவகங்களும் பல்வேறு ஆப் நிறுவனங்களோடு தங்களை இணைத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி இணைத்து கொள்ளும்போது கஸ்டமர்களை ஈர்க்க பல்வேறு சலுகை விலைகளை வழங்க வேண்டியதிருக்கிறது. அதுவும் ஒவ்வொரு அப்ளிகேசனிலும் ஒவ்வொரு சலுகை. இதனால் உணவுப்பொருட்கள் சலுகை விலையில் மட்டுமே விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஸொமாட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் கோல்டு மெம்பர்ஷிப் என்னும் திட்டத்தை…
Read More