செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

எஸ்.பி.ஐ வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ?

எஸ்.பி.ஐ வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, தனது ஏடிஎம் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு தொகை, டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. அதிலும் இவ்வங்கியின் இணைய சேவைகளான மொபைல் வங்கி பரிவர்த்தனைகளுக்கு இவ்வங்கி மாதாந்திர வரம்புகளை முற்றிலுமாக நீக்கியுள்ளது.இதன் மூலம் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் இனி வரம்பற்ற சேவையை பெற முடியும் என்றும், முந்தைய மாதத்தில் 25,000 இருப்பு தொகை வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்சம் 40 பரிமாற்றங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மாதத் சராசரியான இருப்பு தொகை 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 3,000 இருப்பு தொகையில் 50 சதவிகிதம் பராமரிக்காதவர்களுக்கு, 10 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியும், இதே 75 சதவிகிதம் இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு 15 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்…
Read More
மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி ? உள்ளாட்சி நிர்வாகங்கள் மும்முரம் !

மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி ? உள்ளாட்சி நிர்வாகங்கள் மும்முரம் !

'பேனர்' மற்றும், 'கட் அவுட்' கலாசாரத்திற்கு முடிவு காணும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம், கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்ததை ஒட்டி, மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது. 'தமிழகம் முழுவதும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, பேனர் மற்றும் கட் அவுட்டுகளை அகற்ற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும், பேனர் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது.சென்னை, பூந்தமல்லி பஸ் நிலையம், டிரங்க் சாலை, கரையான்சாவடி, குமணன் சாவடி, குன்றத்துார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள், பேனர் மற்றும் விளம்பர போர்டுகளை அகற்றினர். வேலுார் மாநகராட்சியில், அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த, 1,178 பேனர்கள் அகற்றப்பட்டன. ஈரோட்டில், 150க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத் தப்பட்டன. திருச்சியில், திருமண நிகழ்ச்சிக்கு, ஆர்டர் செய்திருந்த, பிளக்ஸ் பேனர்களை வாங்க கூட ஆட்கள் வரவில்லை. மேலும், திருச்சி நகரில், பேனர் வைத்தவர்களே, நேற்று அகற்றும் பணியில்…
Read More
பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

வைரச் சந்தையில் 25-30 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.சிறு நிறுவனங்கள் 20 சதவீதம் வரை பணியாட்களை குறைத்துவிட்டன.பொருளாதார மந்தநிலையின் பாதிப்பில் சிக்கியுள்ள மற்றொரு துறையான வைரச் சந்தை 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. சூரத்தைச் சேர்ந்த பெரிய வைர ஏற்றுமதி நிறுவனமான ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளன.தீபாவளி முன்னிட்டு நடக்கும் விற்பனையின்போதும் போதிய அளவு விற்பனையாவது கடினமாகவே இருக்கும் என்றும் நிலைமையை சமாளிக்க மிகவும் எளிதாக இருக்காது எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.இந்த மந்தநிலையை கருத்தில் கொண்டு சிறிய வைர வியாபார நிறுவனங்கள் பணியாட்களைக் குறைப்பது, பணி நேரத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. "25-30 சதவீதம் வைர சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் வைரங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் சீனாவும். இந்த இரு நாடுகளிடையே நிலவும் வர்த்தக மோதல், இறக்குமதி வரியில் நிலையற்ற தன்மையை தக்கவைக்கிறது"…
Read More
பால் விலையை அடுத்து தயிர், நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்…!

பால் விலையை அடுத்து தயிர், நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்…!

ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, தயிர், நெய், பால்கோவா போன்ற பால் உப பொருட்களுக்கான விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வானது கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் உப பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை 460 ரூபாயில் இருந்து 495 ரூபாயாகவும், ஒரு கிலோ பால் பவுடர் 270 ரூபாயில் இருந்து 320 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பனீர் இனி 450 ரூபாய்க்கு விற்கப்படும். 230…
Read More
மோடி தேநீர் விற்ற இடம்! சுற்றுலா தலமாக மாற்றம்!

மோடி தேநீர் விற்ற இடம்! சுற்றுலா தலமாக மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாழ்மையான தோற்றம் நன்கு அறியப்பட்டதோடு, இந்திய மக்களுடன் இணைவதற்கான முயற்சியில் அவரே தனது கடந்த காலத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் இளைய நாட்களிலிருந்து மிகவும் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று அவர் தேநீர் விற்றது. இந்நிலையில் தற்போது ​​பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தனது இளைமை காலத்தில் குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்டாலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதன் ஒருங்கிணைந்த சாராம்சத்தையோ அல்லது தோற்றத்தையோ மாற்றாமல் இந்த ஸ்டாலை ஒரு சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதே திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில சுற்றுலா அமைச்சர் பிரஹ்லாத் படேல் ஏற்கனவே இந்த ஸ்டாலை ஆய்வு செய்துள்ளார், மேலும் அதன்…
Read More
ஸ்விக்கி,ஸொமாட்டோ வேண்டாம்! விலகிய 1200 உணவகங்கள்?காரணம் இதுதானாம்?!

ஸ்விக்கி,ஸொமாட்டோ வேண்டாம்! விலகிய 1200 உணவகங்கள்?காரணம் இதுதானாம்?!

சமீப காலத்தில் மதரீதியான சில சிக்கல்களை ஸொமாட்டோ, ஊபர் போன்ற உணவு ஆப் நிறுவனங்கள் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய தேசிய உணவு கழகத்தை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட உணவகங்கள் ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற உணவு டெலிவரி சேவைகளிலிருந்து  விலகியுள்ளன. உணவு அப்ளிகேசன்களினால் கஸ்டமர்களுக்கு சலுகைகள் நிறைய கிடைத்தாலும் உணவகங்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. உணவு சேவை அப்ளிகேசன்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல உருவானதால் பலரும் வெவ்வேறு அப்ளிகேசன்களை உபயோகிக்கின்றார்கள். அதனால் உணவகங்களும் பல்வேறு ஆப் நிறுவனங்களோடு தங்களை இணைத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி இணைத்து கொள்ளும்போது கஸ்டமர்களை ஈர்க்க பல்வேறு சலுகை விலைகளை வழங்க வேண்டியதிருக்கிறது. அதுவும் ஒவ்வொரு அப்ளிகேசனிலும் ஒவ்வொரு சலுகை. இதனால் உணவுப்பொருட்கள் சலுகை விலையில் மட்டுமே விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஸொமாட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் கோல்டு மெம்பர்ஷிப் என்னும் திட்டத்தை…
Read More

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் ? மோடி அமைச்சரவை ஒப்புதல் ?

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவையின் முடிவுகள் குறித்து தகவல் அளிக்கும் போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். இந்த மருத்துவக் கல்லூரிகள் 24 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படும் என்று ஜவடேகர் கூறினார். இந்த மருத்துவக் கல்லூரிகள் 2020-21க்குள் கட்டப்படும். மருத்துவக் கல்லூரிகள் இல்லாத இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும். அதேபோல கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். விவசாயிகளுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்படும். இந்த மானியம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குக்கு செல்லும் எனவும் தெரிவித்தார். பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை…
Read More

நீதிமன்றம் அனுமதித்தாலும் காவல்துறை அனுமதிக்க மாட்டேங்குது ? நடன கலைஞர்கள் குமுறல் ??

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டேன் என்கிறார் அதேபோலத்தான் நீதிமன்றம் அனுமதித்தாலும் காவல்துறை அனுமதிக்க மாட்டேங்குது.நாங்க போலீஸ் ! நாங்க சொல்றது தான் சட்டம்!! நீதிமன்றம் சொன்னால் எல்லாம் ஏத்துக்க மாட்டோம்.? தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குமுறல்? இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் தலைவர் சுஜாமுருகன் மற்றும் மல்டிபாஸ்கர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்த போது கூறியதாவது: எங்களது சங்கம் முறையான நடன கலைஞர்களை ஒன்றினைத்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சங்க கிளைகளை நிறுவியும் நடன கலைஞர்களின் வாழ்வாதாரம் காப்பதற்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமன்றி கடந்த 3 வருடங்களாக (ஆடல் பாடல்) நடன நிகழ்ச்சிகளிள் நடத்துவதற்கு (நீதிமன்றம் ஆணையம் இல்லாமல்) காவல்துறையின் மூலம் நேரடி அனுமதி வழங்கக் கோரி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இருக்கும் தருணத்தில் கடந்த 9 .4. 2019 ஆம்…
Read More

சீனாவில் இருந்து ஆப்பிள், கூகுள் வெளியேற டிரம்ப் உத்தரவு !

 ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது, இந்தியாவுக்கு நன்மை தரும் செய்தி என தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா-சீனா இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தக போரால் இரு நாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிள், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு இந்தியாவுக்கு நன்மை தரும் வகையில் முடியலாம் என்பதுதான் நல்ல சேதி. வர்த்தகப் போர் குறித்து தனது கருத்துகளை ட்விட்டரில் அழுத்தமாக பதிவு செய்துள்ள டிரம்ப், பல ஆண்டுகளாக அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை சீனாவிடம் இழந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை சீனா திருடி வருவதாகவும், இதைத் தொடர வேண்டும் என அந்நாடு நினைப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர்,…
Read More

இந்தியப் பொருளாதார நெருக்கடி – விற்பனை சரிவு, ஆட்குறைப்பு பார்லே-ஜி கவலை ?

இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று தெரிய வருகிறது, ஜிஎஸ்டி வரி அமலாகும் முன்னால் இருந்த வரி விதிப்பில் கிலோவுக்கு 100 ரூபாய் பிஸ்கட்டுகளுக்கு 12-14% வரியே இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட பின், கிலோவுக்கு 100 ரூபாய் விலையுடைய பிஸ்கட் 18% ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ளது. குறைவான விலையுடைய பிஸ்கட்டுக்கு கலால் வரி இல்லாமல்,…
Read More