பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

வைரச் சந்தையில் 25-30 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.சிறு நிறுவனங்கள் 20 சதவீதம் வரை பணியாட்களை குறைத்துவிட்டன.பொருளாதார மந்தநிலையின் பாதிப்பில் சிக்கியுள்ள மற்றொரு துறையான வைரச் சந்தை 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. சூரத்தைச் சேர்ந்த பெரிய வைர ஏற்றுமதி நிறுவனமான ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளன.தீபாவளி முன்னிட்டு நடக்கும் விற்பனையின்போதும் போதிய அளவு விற்பனையாவது கடினமாகவே இருக்கும் என்றும் நிலைமையை சமாளிக்க மிகவும் எளிதாக இருக்காது எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.இந்த மந்தநிலையை கருத்தில் கொண்டு சிறிய வைர வியாபார நிறுவனங்கள் பணியாட்களைக் குறைப்பது, பணி நேரத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

“25-30 சதவீதம் வைர சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் வைரங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் சீனாவும். இந்த இரு நாடுகளிடையே நிலவும் வர்த்தக மோதல், இறக்குமதி வரியில் நிலையற்ற தன்மையை தக்கவைக்கிறது” என்று மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி கன்ஷ்யாம் தெரிவிக்கிறார்.சூரத்தைச் சேர்ந்த கோடீஸ்வரரான சாவஜி தோலாக்யாவின் சகோதரரான கன்ஷ்யாம், மும்பையில் ஹரி கிருஷ்ணா எஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் வைர வியாபாரத்தை கவனித்து வருகிறார். இவர் அகமதாபாத் மேலாண்மை கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.அப்போதும், கடந்த ஏழு – எட்டு மாதங்களில் சூரத்தில் உள்ள வைர வியாபார நிறுவனங்கள் பணி நேரத்தைக் குறைத்துள்ளன என்றும் ஊழியரகளையும் குறைத்துள்ளன என்றும் கூறியிருக்கிறார்.மேலும், “பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றாலும், சிறு நிறுவனங்கள் 10 முதல் 20 சதவீதம் வரை பணியாட்களை குறைத்துவிட்டன. இன்னும் சில நிறுவனங்கள் பணியாட்களைக் குறைப்பதற்குப் பதிலாக வேலை நேரத்தை 9 மணிநேரத்தில் இருந்து 6 மணிநேரமாகக் குறைத்துள்ளன. சிலவற்றில் சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

சூரத், வைரம் பட்டை தீட்டுதலுக்காக உலக அளவில் பிரபலமான நகரம் ஆகும். இங்கு உற்பத்தியாகும் 80 சதவீதம் வைரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுமார் 3,500 வைரம் பட்டை தீட்டும் மையங்கள் சூரத்தில் உள்ளன. ஹரி கிருஷ்ணா எஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக மும்பை மற்றும் சூரத்தில் உள்ள மையங்களில் ஏறத்தாழ 7,500 பேர் பணியாற்றுகிறார்கள்.தொழிலாளர்களுக்கு கார்கள், வீடுகள் போன்ற பெரிய பரிசுகளை வழங்குவதில் பெயர் பெற்றது ஹரி கிருஷ்ணா நிறுவனம். ஆனால், இந்த முறை விற்பனை மோசமாக இருப்பதால் அத்தகைய பரிசுகள் கிடையாது என்று கன்ஷ்யாம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

தொழில் சிறப்பான உயர்வை அடைய செய்யும் கன்டெனட் விளம்பரம்!

நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!

Indo National Limited (Nippo Batteries) Commemorates the 100th Birth Anniversary of Founder Shri P. Obul Reddy with Special Postal Stamp Release!

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இனி அதிரடி சலுகைகள் தொடருமா?

தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் - கண்காட்சி !

இந்தியா முழுவதும் மாபெரும் 'தேடல்', 'திறத்தல்' மற்றும் 'பதிவிறக்கம்' பொத்தான்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மர்மம் தீர்க்கப்பட்டது!

ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது ?

மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.!