செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

களஆய்வு இன்றி கட்டட அனுமதி ! அறிவித்தது அரசு!

களஆய்வு இன்றி கட்டட அனுமதி ! அறிவித்தது அரசு!

கள ஆய்வு இன்றி, 1,200 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சிகளுக்கான, பொதுவான கட்டட விதிகள், பிப்ரவரி, 4ல் அறிவிக்கப் பட்டன.இதன் அடிப்படையில், 2,500 சதுர அடிக்கு மேற்படாத மனைகளில், 1,200 சதுர அடி வரை குடியிருப்பு கட்டுவதற்கு, கள ஆய்வு இன்றி, உடனடி ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.இதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகத் துறை, ஆகஸ்ட், 21ல் பிறப்பித்தது. அதன் அடிப்படையில், கட்டட அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை உருவாக்கி உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கை:● விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை, ஒப்புதல் வழங்கும் நடைமுறை என, மூன்று பிரிவுகள், இதில் இடம் பெற்றுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 10 வகை ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்● நில உரிமை தொடர்பாக, பத்திர நகல், சர்வே வரைபடம், வில்லங்க சான்று, முன்…
Read More
18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்களுக்கு அடல் பென்ஷன் திட்டம் !

18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்களுக்கு அடல் பென்ஷன் திட்டம் !

18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். அடிப்படைத் தேவை வங்கி அல்லது தபால் நிலையத்தில் ஒரு சேமிப்புக் கணக்கு மட்டுமே. 60 வயதுக்குப் பின் மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெற அடல் பென்ஷன் திட்டம்.இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வரிச்சலுகை உண்டு.அடல் பென்ஷன் திட்டம் அதற்கு முன் இருந்த சுவவலம்பன் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. டிரைவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம். 18 வயதில் இத்திட்டத்தில் இணைபவர் மாதம் தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை 42 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். ரூ.42 செலுத்தி வந்தால் 60 வயதுக்குப்பின் மாதம்…
Read More
எதற்கும் பயனில்லாத மனித சிறுநீரிலிருந்து உரம்!

எதற்கும் பயனில்லாத மனித சிறுநீரிலிருந்து உரம்!

எதற்கும் பயனில்லாத கழிவாகத் தான், இன்றும் மனித சிறுநீரை உலகம் பார்க்கிறது. ஆனால், சிறுநீரில் இருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற செறிவான சத்துக்கள், நல்ல உரமாக இருக்க முடியும் என்கிறது, அறிவியல். இதை நடைமுறைப்படுத்த, ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு (இ.ஓ.ஓ.எஸ்.,) குளியலறை கலன்களை தயாரிக்கும் லாபென், சுவிட்சர்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி.,) ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக ஆராய்ந்தன. இறுதியில், கழிப்பிடங்களில் சிறுநீரை மட்டும் பிரித்து, மடைமாற்றிவிடும் கலனை லாபென் மற்றும் இ.ஓ.ஓ.எஸ்., ஆகியவை வடிவமைத்தன. ஒருவர் சிறுநீர் கழித்ததும், கலனை சுத்திகரிக்க வெறும், 1.5 லிட்டர் தண்ணீரே போதும். கலனிலிருந்து பிரித்தெடுத்த சிறுநீரை, கிருமிகள் இன்றி சுத்திகரித்து, உரத்திற்கு தேவையான சத்துக்களை வடிகட்டும் கார்பன் வடிகட்டிகளை இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி., உருவாக்கியது.இந்த முறையில் தயாரிக்கப்படும் உரத்திற்கு, 'ஆரின்' என, பெயரிட்டுள்ளனர். ஆரின் உரத்தை எல்லா வகை செடிகளுக்கும் போடலாம் என, சுவிஸ் அரசின் வேளாண்மைத் துறை, சான்று வழங்கியிருக்கிறது.…
Read More
எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கங்கள் மறந்துவிட்டது? நடிகர் ராதாரவி குற்றச்சாட்டு !

எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கங்கள் மறந்துவிட்டது? நடிகர் ராதாரவி குற்றச்சாட்டு !

தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதா 40-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசிய போது,”தமிழகத்தின் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும் தூணாக இருப்பது தெலுங்கு இனம்தான். தேனி முதல் திண்டுக்கல் விருதுநகர், சிவகாசி வரை தெலுங்கு மக்கள் தான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள்தான் இதுவரை தமிழகத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை நகரம் வளர்ந்திருக்காது.நாங்கள் எங்களை திராவிடம் என சொல்கிறோம். நீங்கள் வேறு இனம் என சொல்கிறீர்கள். நான் திராவிட தெலுங்கன் எல்லோரும் ஒர் இனம். ஆந்திரா தெலுங்கான என இரு மாநில தெலுங்கு முதல்வர்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக இருக்கும்போது நமக்கு மோடியிடம் நல்ல ஆதரவு இருக்கும். தமிழகத்தில் கல்லூரிகள், தொழிற்சாலை உரிமையாளர்களாக அதிகம் தெலுங்கு பேசும் மக்கள்தான் இருக்கிறார்கள். கருணாநிதிக்கு கலைஞர்…
Read More

வீட்டுக்கு ஒரு தொழில்முனைவர் ! எழுமின் அமைப்பின் இலட்சிய முழக்கம் !!ஜெகத் கஸ்பர் பேச்சு !!!

எழுமின் - தி ரைஸ் அமைப்பு நடத்தும் மூன்றாம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு இவ்வாண்டு நவம்பர் 14,15,16 நாட்களில் சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்தவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது . மலேசியா , சிங்கப்பூர் மியன்மார் , ஆஸ்திரேலியா , அமெரிக்கா , கனடா , தென் ஆப்ரிக்கா பிரித்தானியா , ஜெர்மனி , நார்வே , பிரான்ஸ் , சுவிட்சர்லாந்து , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , ஒமான் , கத்தார் , குவைத் , பஹ்ரைன் , சிறிலங்கா , மொரிசியா ' உள்ளிட்ட 35 - க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து வரும் தமிழ்த் தொழிலதிபர்கள் - திறனாளர்களை சந்திக்கவும் , தொழில் வணிக உறவுகள் உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக இம்மாநாடு அமையும் என்று. எழுமின் அமைப்பினை நிறுவியவர் அருட்திரு தமிழ்ப்பணி ஜெகத் கஸ்பார் பேசினார் . இது குறித்து ஜெகத் கஸ்பர்…
Read More
சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு ?

சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு ?

சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமான பேனரை வைப்பதற்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ. 1,000 லஞ்சம் வழங்கியதாக ஆடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது 304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான 308-ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபஸ்ரீயின் மரணத்திற்கு லஞ்சம் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.வெளியான ஆடியோவில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் ஆகியோர் பேசியுள்ளனர். அதில்,…
Read More
மின் சாதனங்களில், ‘போஸ்டர்’ ஒட்டுவதை தடுக்க தனி சட்டம்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு ?

மின் சாதனங்களில், ‘போஸ்டர்’ ஒட்டுவதை தடுக்க தனி சட்டம்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு ?

மின் வினியோக சாதனங்களில், சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க, தமிழக அரசு, தனி சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியம், மின் வினியோகம் செய்வதற்கு, மின் கம்பங்கள், 'பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துகிறது. இவற்றில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி, அந்த சாதனங்களை, மின் ஊழியர்கள் தவிர, வேறு யாரும் தொடக் கூடாது. இருப்பினும், அவற்றில், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், விளம்பர போஸ்டர்களை ஒட்டுகின்றனர். அதை தடுக்க, மின் வாரிய அதிகாரிகளும், எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், பல கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் சாதனங்கள், விரைவில் பாழாவதுடன், மின் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.சென்னையில், சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த, பேனர் சரிந்து விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற, பல்லாவரத்தை சேர்ந்த தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ, 27,சமீபத்தில் உயிரிழந்தார். சாலையை ஆக்கிரமித்து, அரசியல் கட்சியினர் கட்டிய பேனரால், இளம்பெண்…
Read More
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி… தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம். !

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி… தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம். !

தமிழகத்தில் அபராதம் குறைகிறது, முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... டாப்-10 செய்திகள்! 1. மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை! வெளிநாடுகளில் சுஸுகி விற்பனை செய்து வரும் ஜிம்னி எஸ்யூவி கார், ஜிப்ஸிக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில் ஆவலை தூண்டியிருந்த மாருதி சுஸுகி ஜிம்னி அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அபராதம் குறைகிறது, முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... டாப்-10 செய்திகள்! 2. சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் நம்ப முடியாத மிக குறைவான விலையில் சீனாவில் லான்ச் ஆகியுள்ளது. அடுத்ததாக இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 3. முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்! மாதச் சந்தா திட்டத்தில்…
Read More
சென்னையில் 24,000 சதுர அடியில் அமேசான்.இன் விநியோக நிலையம் !

சென்னையில் 24,000 சதுர அடியில் அமேசான்.இன் விநியோக நிலையம் !

அமேசான்.இன் தனது மிகப்பெரிய விநியோக நிலையத்தை தமிழகத்தில் தொடங்குவதாக  அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள புதிய நிலையம் அமேசானுக்கு அதன் கடைசி மைல் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், நகரம் முழுவதும் விரைவான விநியோகங்களை உறுதி செய்யவும் உதவும். டெலிவரி நிலையங்கள் அமேசான் லாஜிஸ்டிக்ஸை திறனை நிரப்பவும், வாடிக்கையாளர் ஆர்டர்களின் வளர்ந்து வரும் அளவை ஆதரிக்க அமேசானின் விநியோக திறன்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கவும் உதவுகின்றன. நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்களில் தனது விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதாக நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், அமேசான்.இன் 120 க்கும் மேற்பட்ட பிரபலமான மற்றும் விநியோக சேவை கூட்டாளர் நிலையங்களையும், மாநிலம் முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட ‘எனக்கு இடம் உள்ளது’ கூட்டாளர்களையும் கொண்டிருக்கும். டெலிவரி நெட்வொர்க்கின் இந்த 2x வளர்ச்சியானது அமேசான் தமிழ்நாடு முழுவதும் சிறிய நகரங்களுக்குள் மேலும் ஊடுருவி, மாநிலத்தின் 1200…
Read More
வி ஐ டிக்கு மத்திய அரசாங்கம் ” சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் வழங்கியுள்ளது !

வி ஐ டிக்கு மத்திய அரசாங்கம் ” சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் வழங்கியுள்ளது !

வி ஐ டிக்கு மத்திய அரசாங்கம் " சீர்மிகு நிறுவனம் " அங்கீகாரம் வழங்கியுள்ளது - சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஆராய்ச்சியில் இணைந்து வி ஐ டி உலக தரவரிசை பட்டியலில் முன்னேறும். வி ஐ டி க்கு மத்திய அரசாங்கம் " சீர்மிகு நிறுவனம் " அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய அரசு தேர்வு செய்யப்பட்ட தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கு " சீர்மிகு நிறுவன " அங்கீகாரம் வழங்கியுள்ளது . இதனால் அந்தந்த கல்வி நிறுவனங்கள் தரமான முயற்சிகளை எடுத்து கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு உலக அளவில் ( கல்வி நிறுவனங்கள் ) தரவரிசை பட்டியலில் இடம் பெற வாய்ப்புள்ளது. வி ஐ டி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் கூறுகையில் இன்னும் 3 வருடங்களில் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் வி ஐ டி இடம் பெற போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஏற்கனவே வி ஐ டி…
Read More