செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக  மையத்தில் நடைபெற்றது !

டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது !

வாகன தொழில்துறையை மேம்படுத்த டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து 150 நிறுவனங்கள் அரங்கங்கள் அமைப்பு மொபிலிட்டி துறையில் இந்தியாவின் எதிர்காலம் என்னும் தலைப்பில் கருத்தரங்கு. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்றார்கள். டயர் மற்றும் வாகனத் தொழில் துறையில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை தொகுத்து வழங்கும் `டயர் எக்ஸ்போ`கேரேஜ் எக்ஸ்போ மற்றும் `ஆட்டோமோடிவ் ஆப்டர் மார்க்கெட் இந்தியா 2019 பதிப்பு துவக்க கண்காட்சி ஆகியவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. வாகன தொழில்துறைக்கான ஆதாரம், உற்பத்தி, தொழில் பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆய்வு, சான்றிதழ், லேபிளிங், உரிமம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உபகரணங்கள், சரக்கு தளவாடங்கள் கையாளுதல்,பட்டறை திட்டமிடல் மற்றும் ஆலோசனை என்னும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒரே கூரையின் கீழ் இந்த கண்காட்சி கொண்டு வருகிறது. இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து…
Read More
சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!

சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் சவுதி அரேபியா நாடு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. காரணம் சுற்றுலா துறை மூலமும் வருமானம் ஈட்டவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.நாளை முதல் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்க உள்ளது. மேலும், இதுபற்றி கூறுகையில் சவுதியில் 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேலும் இங்கு சுற்றி பார்க்க அதிக இடம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் அந்நாட்டு பெண்கள் எப்போதும் போல் உடல் முழுவதும் மூடியபடி பாரம்பரிய உடை அணிந்து வருவர். ஆனால், சுற்றுலா வரும் பெண்களுக்கு அந்த உடை கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஆடைஅணியும் முறையில் நாகரிகம் தேவை எனவும் குறிப்பிடபட்டுள்ளது.சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிய திரையரங்குகள், ஆண்…
Read More
சென்னையில்  கொரிய நாட்டு பாரம்பரிய இசை விழா !

சென்னையில் கொரிய நாட்டு பாரம்பரிய இசை விழா !

சென்னையில் வி.ஆர்.சென்னை, இன்கோ மையத்துடன் இணைந்து சோலோயிஸ்டுகள் நால்வரின் கொரிய நாட்டு பாரம்பரிய இசையை தனித்துவமான நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினர். பாரம்பரிய கொரிய இசையை பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் தனித்துவமான கலவையை தனது செயல்திறன் மூலம் வெளிப்படுத்தினர். பாரம்பரிய கருவி மற்றும் குரல்கள் ஒரு தனித்துவமாக இசையுடன் இணைந்து துல்லியமாக நடத்திய நிகழ்ச்சி பாராட்டுக்குரியது. இதில் விரல் பலகை இல்லாத இந்த இரண்டு சரங்களைக் கொண்ட பிடில் ஒரு வில்லுடன் செங்குத்தாக விளையாடப்பட்டு இடது முழங்காலில் வைக்கப்படுகிறது. இந்த கருவியின் டோனல் தரம் குறிப்பிடத்தக்க வகையில் நாசி மற்றும் ஒருமை கூர்மையானது மற்றும் துளையிடுகிறது. இந்த கருவி எப்போதும் கொரிய நீதிமன்றம், அறை மற்றும் நாட்டுப்புற இசைக் குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோல ஜங்கு, கயாஜியம்,சுல்ஹுன்ஜியம்,ககோக் போன்ற கருவிகளின் இசை மனதை வருடியது.
Read More
கேரிபேக் வழக்கில்  15,000 ரூபாய் கட்டிய ரிலையன்ஸ்!

கேரிபேக் வழக்கில் 15,000 ரூபாய் கட்டிய ரிலையன்ஸ்!

சட்டத்தை மீறி நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்து முணுமுணுத்தபடியே கடந்துவிடுகிறோம். ஆரம்பத்தில் நமக்குள் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் அதையே காலப்போக்கில் வேறு வழியின்றி பழக்கப்படுத்திக் கொள்கிறோம். அதில் ஒன்றுதான், கேரிபேக்குகளுக்கு கொடுக்கப்படும் காசும். பெரிய நிறுவனங்களில், துணிகளையோ பொருள்களையோ வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, துணிப் பைகளை விலைக்கு வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இதை எதிர்த்துக் கேள்விகேட்டதன் பயனாகத்தான், திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மானுக்கு 15 ஆயிரம் ரூபாயை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `` எல்லோருக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றுதான் நீதிமன்றத்தை நாடினேன்" என்கிறார் அவர். அவரிடம் இதுதொடர்பாகப் பேசினோம். ``கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பண்டிகைக்காக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட் கடையில் துணி வாங்கச் சென்றோம். அந்த நிறுவனத்தில் துணி வாங்கி முடித்த பின், கேரிபேக்குக்கு தனியாக 7 ரூபாய் தரவேண்டும் என்று அந்தக் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். `இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி தவறு’…
Read More
உலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்

உலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம் ஒன்று, மிகவும் குறைவான விலையில், உலகின் அதிநவீன ஹெல்மெட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால், நீங்கள் உடனே இந்த ஹெல்மெட்டை வாங்கி விடுவீர்கள். சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இந்தியாவில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதே கிடையாது. ஹெல்மெட் அணிந்தால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், இதன் காரணமாகதான் ஹெல்மெட் அணிவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே டூவீலர் ஓட்டிகளின் அசௌகரியங்களை களையும் வகையில், புதிய அதிநவீன ஹெல்மெட் ஒன்று தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் மலிவான விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த ஹெல்மெட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் ஆச்சஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவின் ஸ்டீல்பேர்டு (Steelbird) தயாரித்துள்ள இந்த ஹெல்மெட்டிற்கு, எஸ்பிஏ-1…
Read More
ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது

ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது

சென்னை. 25 செப்டம்பர் 2019 : இது குறித்து பேசிய ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் கன்சியூமர் நோட்புக்ஸ் மற்றும் ROG வர்த்தகத்தின் தலைவர் அர்னால்ட் சு கூறியது, “இந்திய சந்தை மிகவும் முதன்மையானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது,நாங்கள் ஆசஸ் நிறுவனத்தில் இருந்து எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாட்டின் முக்கிய பகுதிகள் மட்டுமல்லாமல் அணைத்து வகையான உட்புற பகுதிகளுக்கும் எடுத்துச்செல்வதன் மூலம் எங்கள் பான்-இந்தியா இருப்பை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் ,பெருநகரங்களில் நாம் ஆசுஸ் இன் நல்ல இருப்பை பிரத்தியேக ஸ்டோர்கள் மற்றும் ROG கடைகள், பெரிய வடிவமைப்பு கடைகள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல் கூட்டாளர்கள் ஆகியவற்றின் மூலம் நன்கு அனுபவிக்கிறோம், இப்போது நங்கள் இந்தியாவின் அணைத்து விதமான உட்புற பகுதிகளிலும் எங்கள் இருப்பை வளர்ப்பதில் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம்."
Read More
களஆய்வு இன்றி கட்டட அனுமதி ! அறிவித்தது அரசு!

களஆய்வு இன்றி கட்டட அனுமதி ! அறிவித்தது அரசு!

கள ஆய்வு இன்றி, 1,200 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சிகளுக்கான, பொதுவான கட்டட விதிகள், பிப்ரவரி, 4ல் அறிவிக்கப் பட்டன.இதன் அடிப்படையில், 2,500 சதுர அடிக்கு மேற்படாத மனைகளில், 1,200 சதுர அடி வரை குடியிருப்பு கட்டுவதற்கு, கள ஆய்வு இன்றி, உடனடி ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.இதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகத் துறை, ஆகஸ்ட், 21ல் பிறப்பித்தது. அதன் அடிப்படையில், கட்டட அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை உருவாக்கி உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கை:● விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை, ஒப்புதல் வழங்கும் நடைமுறை என, மூன்று பிரிவுகள், இதில் இடம் பெற்றுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 10 வகை ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்● நில உரிமை தொடர்பாக, பத்திர நகல், சர்வே வரைபடம், வில்லங்க சான்று, முன்…
Read More
18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்களுக்கு அடல் பென்ஷன் திட்டம் !

18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்களுக்கு அடல் பென்ஷன் திட்டம் !

18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். அடிப்படைத் தேவை வங்கி அல்லது தபால் நிலையத்தில் ஒரு சேமிப்புக் கணக்கு மட்டுமே. 60 வயதுக்குப் பின் மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெற அடல் பென்ஷன் திட்டம்.இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வரிச்சலுகை உண்டு.அடல் பென்ஷன் திட்டம் அதற்கு முன் இருந்த சுவவலம்பன் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. டிரைவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம். 18 வயதில் இத்திட்டத்தில் இணைபவர் மாதம் தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை 42 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். ரூ.42 செலுத்தி வந்தால் 60 வயதுக்குப்பின் மாதம்…
Read More
எதற்கும் பயனில்லாத மனித சிறுநீரிலிருந்து உரம்!

எதற்கும் பயனில்லாத மனித சிறுநீரிலிருந்து உரம்!

எதற்கும் பயனில்லாத கழிவாகத் தான், இன்றும் மனித சிறுநீரை உலகம் பார்க்கிறது. ஆனால், சிறுநீரில் இருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற செறிவான சத்துக்கள், நல்ல உரமாக இருக்க முடியும் என்கிறது, அறிவியல். இதை நடைமுறைப்படுத்த, ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு (இ.ஓ.ஓ.எஸ்.,) குளியலறை கலன்களை தயாரிக்கும் லாபென், சுவிட்சர்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி.,) ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக ஆராய்ந்தன. இறுதியில், கழிப்பிடங்களில் சிறுநீரை மட்டும் பிரித்து, மடைமாற்றிவிடும் கலனை லாபென் மற்றும் இ.ஓ.ஓ.எஸ்., ஆகியவை வடிவமைத்தன. ஒருவர் சிறுநீர் கழித்ததும், கலனை சுத்திகரிக்க வெறும், 1.5 லிட்டர் தண்ணீரே போதும். கலனிலிருந்து பிரித்தெடுத்த சிறுநீரை, கிருமிகள் இன்றி சுத்திகரித்து, உரத்திற்கு தேவையான சத்துக்களை வடிகட்டும் கார்பன் வடிகட்டிகளை இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி., உருவாக்கியது.இந்த முறையில் தயாரிக்கப்படும் உரத்திற்கு, 'ஆரின்' என, பெயரிட்டுள்ளனர். ஆரின் உரத்தை எல்லா வகை செடிகளுக்கும் போடலாம் என, சுவிஸ் அரசின் வேளாண்மைத் துறை, சான்று வழங்கியிருக்கிறது.…
Read More
எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கங்கள் மறந்துவிட்டது? நடிகர் ராதாரவி குற்றச்சாட்டு !

எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கங்கள் மறந்துவிட்டது? நடிகர் ராதாரவி குற்றச்சாட்டு !

தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதா 40-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசிய போது,”தமிழகத்தின் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும் தூணாக இருப்பது தெலுங்கு இனம்தான். தேனி முதல் திண்டுக்கல் விருதுநகர், சிவகாசி வரை தெலுங்கு மக்கள் தான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள்தான் இதுவரை தமிழகத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை நகரம் வளர்ந்திருக்காது.நாங்கள் எங்களை திராவிடம் என சொல்கிறோம். நீங்கள் வேறு இனம் என சொல்கிறீர்கள். நான் திராவிட தெலுங்கன் எல்லோரும் ஒர் இனம். ஆந்திரா தெலுங்கான என இரு மாநில தெலுங்கு முதல்வர்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக இருக்கும்போது நமக்கு மோடியிடம் நல்ல ஆதரவு இருக்கும். தமிழகத்தில் கல்லூரிகள், தொழிற்சாலை உரிமையாளர்களாக அதிகம் தெலுங்கு பேசும் மக்கள்தான் இருக்கிறார்கள். கருணாநிதிக்கு கலைஞர்…
Read More