26
Sep
கள ஆய்வு இன்றி, 1,200 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சிகளுக்கான, பொதுவான கட்டட விதிகள், பிப்ரவரி, 4ல் அறிவிக்கப் பட்டன.இதன் அடிப்படையில், 2,500 சதுர அடிக்கு மேற்படாத மனைகளில், 1,200 சதுர அடி வரை குடியிருப்பு கட்டுவதற்கு, கள ஆய்வு இன்றி, உடனடி ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.இதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகத் துறை, ஆகஸ்ட், 21ல் பிறப்பித்தது. அதன் அடிப்படையில், கட்டட அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை உருவாக்கி உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கை:● விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை, ஒப்புதல் வழங்கும் நடைமுறை என, மூன்று பிரிவுகள், இதில் இடம் பெற்றுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 10 வகை ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்● நில உரிமை தொடர்பாக, பத்திர நகல், சர்வே வரைபடம், வில்லங்க சான்று, முன்…
