இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் ஆரம்பம் !

இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் ஆரம்பம் !

இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது . முதல் முறையாக சென்னைக்கு வந்திருக்கும் டைசன் டெமோ ஸ்டோரில் , டைசன் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் சோதனை செய்யலாம் . சென்னை அண்ணாநகர் வி ஆர் மாலில் டைசன் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது . டைசன் தொழில்நுட்பம் குறித்த முக்கிய தகவல்கள் டைசன் VII " கார்டு ப்ரீ வேக்கம் : டைசன் V111 - கார்டு ப்ரீ வேக்கம் தயாரிப்பு பணிகள் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வெற்றி கண்டுள்ளது . உங்களது இல்லங்களை சுத்தம் செய்யும் இந்த வேக்கம் , டைசனின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முக்கியமானது . டைசனின் பா மோட்டார் . 125 , 000rpm அளவில் சுழலும் தன்மை கொண்டது . முந்தைய வேக்கம் ப்ராடக்ட் டைசன் சைக்லோன் V10 - வேக்கமைவிட டைசன் VII " கார்டுயரி வேக்கம், 40 % அதிக பவர் கொண்டது…
Read More
தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.!

தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.!

முதலீடு நோக்கில் தங்கம் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தங்க முதலீட்டிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும்,அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகள்:தங்க சேமிப்பு பத்திரம், 8 ஆண்டு காலம் முதிர்வு கொண்டது. முதிர்வு காலம் வரை வைத்து இருந்தால், மூலதன ஆதாய வரி கிடையாது. முதிர்வு தொகைக்கு வரி கிடையாது.தங்க சேமிப்பு பத்திரங்கள் மீது கிடைக்கும் வருமான வரிச்சலுகை, தங்க ஈ.டி.எப்., மற்றும் தங்க மியூச்சுவல் பண்ட்களில் கிடையாது.தங்க நகைகள் மீது, 3 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் இல்லை.தங்க சேமிப்பு பத்திர முதலீட்டிற்கு ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இதற்கு டி.டீ.எஸ்., பிடித்தம் செய்யப்படுவதில்லை. வட்டி வருமானம், ஒருவரது வருமானத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். வேறு தங்க முதலீடுகள் எதுவும் வருமானம் அளிப்பதில்லை. தங்க சேமிப்பு பத்திரங்களில் இருந்து, 5 ஆண்டுக்கு பின்…
Read More
‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது.!

‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது.!

மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது. இதற்காக, தனியாக புதிய நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளது.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனைக்காக, ‘பிளிப்கார்ட் பார்மர்மார்ட்’ எனும் தனி நிறுவனம் ஒன்றை, துவக்கி பதிவு செய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.இந்த புதிய நிறுவனம், தனியாக உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனைக்கான உரிமம் கோரி விண்ணப்பிக்க தயாராகி வருகிறது. இந்த சில்லரை விலை விற்பனை, ‘ஆன்லைன்’ மூலமாகவும், ‘ஸ்டோர்’கள் மூலமாகவும் செய்யப்படும் என தெரிகிறது.இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம், 1,845 கோடி ரூபாய் என, நிறுவன பதிவாளர் அலுவலகத்துக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.கடந்த மாதம், சிங்கப்பூரில் நடைபெற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில், இந்த புதிய நிறுவனத்தை துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது.…
Read More
அமேசான்,பிளிப்கார்ட் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி சம்பாதித்துள்ளது!.

அமேசான்,பிளிப்கார்ட் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி சம்பாதித்துள்ளது!.

ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) நடத்திய பண்டிகை கால ஆன்லைன் சிறப்பு விற்பனையில் பல கோடிகளை சம்பாதித்துள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை ஆறு நாட்களில் மொத்தம் மூன்று பில்லியன் டாலர் (சுமார் ரூ. 19,000 கோடி) விற்பனை மூலம் பெற்றுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இதுக்குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் ஆன்லைன் விற்பனை ஆறு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.39,000 கோடி) வரை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ஸீர் கன்சல்டிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் கூறுகையில், "சவாலான பொருளாதார சூழ்நிலை இருந்தபோதிலும், பண்டிகை காலத்தின் முதல் சுற்றில் 3 பில்லியன் டாலர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கிய நுகர்வோர்கள் வருவதைக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.
Read More
தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் – கண்காட்சி !

தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் – கண்காட்சி !

உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது சென்னை மாநகரில் தியாகராய நகரில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நாகர்கோயில் ஷோரூமில் நடைபெற்றுவருகிறது . தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும் , அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 250 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது . தமிழ்நாட்டில் சென்னை , கோவை , மதுரை , நாகர்கோயில் , திருநெல்வேலி , சேலம் , ஈரோடு , தஞ்சாவூர் , இராமநாதபுரம் , தர்மபுரி , வேலூர் ஆகிய நகரங்களில் 13 கிளைகளை கொண்டுள்ளது . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க . அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும் .…
Read More
சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை.!

சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை.!

சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை. மற்ற பொருட்களில் நாம் கவனம் கொடுப்பதில்லை. உதாரணமாக நீங்கள் ஒரு ஆரஞ்சு ஜூஸ் வாங்குகிறீா்கள். அதற்கு சேதாரம் உண்டு. ஆரஞ்சு விலை கிலோ 50 தான். ஆனால் இரண்டு பழம் போட்ட ஜூஸ் ஏன் ஐம்பது ரூபாய் என்று கேட்பதில்லை. இட்லி மாவு அாிசி பருப்பு விலையுடன் இட்லி விலை பாா்த்தால் மிக அதிகமாக இரூக்கும். இதற்கு பெயா் மதிப்பு கூட்டுதல் என்று பெயா். பழமாக இருக்கும் போது ஒரூ விலை, அதே பழத்தை ஜூஸ் அல்லது சாசாக மாற்றும் போது அதன் விலை மாறு படுகிறது. அதன் விலை தரம் கடையின் புகழ் நீங்கள் குடிக்கும் இடத்தை பொறுத்து ஜூசின் விலை மாறும். இதைமதிப்பு கூட்டு விலை என்று பெயா். இரும்பும் அப்படித்தான் சாதாரனமாக கம்பி அல்லது தகரமாக வாங்கும் போது அதன் இன்றைய விலை 50 ரூபாய் தான்.…
Read More
எஸ்.பி.ஐ வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ?

எஸ்.பி.ஐ வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, தனது ஏடிஎம் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு தொகை, டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. அதிலும் இவ்வங்கியின் இணைய சேவைகளான மொபைல் வங்கி பரிவர்த்தனைகளுக்கு இவ்வங்கி மாதாந்திர வரம்புகளை முற்றிலுமாக நீக்கியுள்ளது.இதன் மூலம் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் இனி வரம்பற்ற சேவையை பெற முடியும் என்றும், முந்தைய மாதத்தில் 25,000 இருப்பு தொகை வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்சம் 40 பரிமாற்றங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மாதத் சராசரியான இருப்பு தொகை 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 3,000 இருப்பு தொகையில் 50 சதவிகிதம் பராமரிக்காதவர்களுக்கு, 10 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியும், இதே 75 சதவிகிதம் இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு 15 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்…
Read More
பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

வைரச் சந்தையில் 25-30 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.சிறு நிறுவனங்கள் 20 சதவீதம் வரை பணியாட்களை குறைத்துவிட்டன.பொருளாதார மந்தநிலையின் பாதிப்பில் சிக்கியுள்ள மற்றொரு துறையான வைரச் சந்தை 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. சூரத்தைச் சேர்ந்த பெரிய வைர ஏற்றுமதி நிறுவனமான ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளன.தீபாவளி முன்னிட்டு நடக்கும் விற்பனையின்போதும் போதிய அளவு விற்பனையாவது கடினமாகவே இருக்கும் என்றும் நிலைமையை சமாளிக்க மிகவும் எளிதாக இருக்காது எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.இந்த மந்தநிலையை கருத்தில் கொண்டு சிறிய வைர வியாபார நிறுவனங்கள் பணியாட்களைக் குறைப்பது, பணி நேரத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. "25-30 சதவீதம் வைர சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் வைரங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் சீனாவும். இந்த இரு நாடுகளிடையே நிலவும் வர்த்தக மோதல், இறக்குமதி வரியில் நிலையற்ற தன்மையை தக்கவைக்கிறது"…
Read More
ஸ்விக்கி,ஸொமாட்டோ வேண்டாம்! விலகிய 1200 உணவகங்கள்?காரணம் இதுதானாம்?!

ஸ்விக்கி,ஸொமாட்டோ வேண்டாம்! விலகிய 1200 உணவகங்கள்?காரணம் இதுதானாம்?!

சமீப காலத்தில் மதரீதியான சில சிக்கல்களை ஸொமாட்டோ, ஊபர் போன்ற உணவு ஆப் நிறுவனங்கள் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய தேசிய உணவு கழகத்தை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட உணவகங்கள் ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற உணவு டெலிவரி சேவைகளிலிருந்து  விலகியுள்ளன. உணவு அப்ளிகேசன்களினால் கஸ்டமர்களுக்கு சலுகைகள் நிறைய கிடைத்தாலும் உணவகங்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. உணவு சேவை அப்ளிகேசன்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல உருவானதால் பலரும் வெவ்வேறு அப்ளிகேசன்களை உபயோகிக்கின்றார்கள். அதனால் உணவகங்களும் பல்வேறு ஆப் நிறுவனங்களோடு தங்களை இணைத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி இணைத்து கொள்ளும்போது கஸ்டமர்களை ஈர்க்க பல்வேறு சலுகை விலைகளை வழங்க வேண்டியதிருக்கிறது. அதுவும் ஒவ்வொரு அப்ளிகேசனிலும் ஒவ்வொரு சலுகை. இதனால் உணவுப்பொருட்கள் சலுகை விலையில் மட்டுமே விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஸொமாட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் கோல்டு மெம்பர்ஷிப் என்னும் திட்டத்தை…
Read More

இந்தியப் பொருளாதார நெருக்கடி – விற்பனை சரிவு, ஆட்குறைப்பு பார்லே-ஜி கவலை ?

இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று தெரிய வருகிறது, ஜிஎஸ்டி வரி அமலாகும் முன்னால் இருந்த வரி விதிப்பில் கிலோவுக்கு 100 ரூபாய் பிஸ்கட்டுகளுக்கு 12-14% வரியே இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட பின், கிலோவுக்கு 100 ரூபாய் விலையுடைய பிஸ்கட் 18% ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ளது. குறைவான விலையுடைய பிஸ்கட்டுக்கு கலால் வரி இல்லாமல்,…
Read More